D Muthu Prakash, Kanchipuram 💐
962 views 23 days ago
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 13ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 16.07.2026. அய்யா துணை தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம்: ======== தன்மமது நிச்சத்துத் தாரணியில் வந்துண்டால் நன்மைக் கடைப்பிடித்து நான்வருவேன் நானிலத்தில் ஒன்றுக்கு மலைய வேண்டாங்கா ணுத்தமரே என்றைக்கும் நானிருப்பேன் என்மக்கள் தங்களிடம் ஆளுவே னோர்குடைக்குள் ஆனவை குண்டமனாய் ஆளுவோம் மக்கா வையகத்தை நாமாக . விளக்கம்: ========= நான் செய்த தருமம் உண்மையாக இருந்தால் இப்பூமிக்கு மீண்டும் வருவேன். அப்போது இன்னும் பல நன்மைகளை உங்களுக்குச் செய்வதற்காக அவற்றைக் கடைப்பிடிப்பேன். நிச்சயமாக இங்கு மீண்டும் வருவேன். இந்த நானிலப் பூமியில் நீங்கள் எதற்காகவும் அலைய வேண்டாம். என் உத்தம குழந்தைகளே, என்றைக்கும் நான் உங்களுடனேயே இருந்து ஒரு குடைக்குள் சிறந்த ஆட்சி புரிவேன். நான் சிறப்பான வாழ்வை வாழ்ந்து காட்டுவோம். நம்மை நாமே ஆட்சி செய்து சிறப்பாக வாழுவோம். , . அகிலம்: ======== ஒன்றுக்கு மலைய வேண்டாம் உகபர நாத னாணை என்றுக்கு மலையின் மீதில் ஏற்றின தீபம் போலே கன்றுக்குப் பாலு போலும் கண்ணுக்குப் புருவம் போலும் என்றுக்கு மக்கா வுங்கள் இடமிருந் தரசு ஆள்வேன் . விளக்கம்: ========= என் குழந்தைகளே நீங்கள் எதற்கும் மனம் கலங்கி அலைய வேண்டாம். மலையின் மீது ஏற்றிய தீபத்தைப் போன்று என்றைக்கும் நீங்கள் சுதந்திரமாக வாழுங்கள். கன்றுக் குட்டிக்குத் தேவையான பாலைப் போன்றும், கண்னைப் பாதுகாக்கும் புருவம் போன்றும் உங்களை என்றைக்கும் காத்து எல்லாரையும் என் வலப்புறம் இருத்தி நான் உங்கள் இடப்பக்கம் இருந்து ஆட்சி புரிவேன். இது சத்தியம். இம்மை மலுமைக்கும் நாதனாகிய இறைவன் மேல் ஆணை. . . அகிலம்: ======== முன்முறை விதியா லிந்த முழுநீசப் பாவி கையால் என்விதிப் படவே வுண்டு இறப்பொன் றனக் கென்றதாலே பின்விதி யெனக்கு நன்றாம் பெரும்புவி யாள்வோ மக்கா உன்விதி நல்ல தாகும் ஒளிவறா வாழ்வீர் தாமே . . விளக்கம்: ========= முன்பிறவி வினையின் விதியால் இந்த முழு நீசப்பாவியின் கைகளினால் அடி படுவதற்கு என் விதி அமைந்து விட்டது. இறப்பு எய்தி அழிவை அடைவது கலிநீசப் பாவிதான் என்னும் காரணத்தினால் இனி வருகின்ற காலம் எனக்குத்தான் நன்மை பயப்பதாக அமையும். கலியை வெற்றி கொண்டு தர்மபூமியை நாம் ஆட்சி புரிவோம் என் குழந்தைகளே. உங்கள் விதி நிச்சயமாக நன்மை பயப்பதாக அமையும். எந்த வகையிலும் நீங்கள் தாழ்வு அடையாமல் சிறப்புடன் வாழ்வீர்கள் இது சத்தியம். . . அகிலம்: ======== என்று மகிழ்ந்து எம்பெருமா ளுள்ளடக்கி மன்று தனையளந்த மாலோன் நடக்கலுற்றார் கெட்டினக் கெட்டைக் கிறுக்க முடனிறுக்கிக் கட்டினக் கட்டோடே கடுநீசன் தானடத்தி ஏசுவார் மாயவரை எறிவார்காண் மாயவரைப் பேசுவார் மாயவரைப் பேயனென்பார் மாயவரை இப்படியே நீசக் குலங்களெல்லா மாயவரை அப்படியே பேசி அடித்து மிகநடத்தி . விளக்கம்: ========= இவ்வாறாக மனிதல் நினைத்து மகிழ்ந்து அகமகிழ்ச்சியைத் தம்முள் அடக்கிக் கொண்டு இவ்வுலகை அளந்த திருமாலாகிய வைகுண்டர் மீண்டும் நடக்கலானார். வைகுண்டரை அழைத்து வந்த காவலர்கள் பாசக் கயிற்றால் கட்டிய கட்டை மீண்டும் இறுக்கிக் கட்டி அக்கட்டுடன் நீசன் அவரை நடத்திச் சென்றான். வைகுண்டரை வசை சொல்லி ஏதுவாரும் கல் எடுத்து எறிவாரும் வம்பாகப் பேசுவாரும் பேயன் என்று திட்டுவாரும், இப்படியே பல வகையாக நீசக் குல மக்கள் எல்லாரும் வைகுண்டரைப் புண்படுத்திப் பேசி உடம்பு முழுவதும் அடித்து வேதனைப் படும்படியாக நடத்திச் சென்றனர். . . தொடரும்... அய்யா உண்டு.
14 likes
14 shares

More like this