Makkal Mugam
439 views • 10 hours ago
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
கமுதியில் தமிழக வெற்றிக் கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வீட்டில் தாக்குதல் – தாயார், மனைவி காயம்; 14 பேர் மீது வழக்குப் பதிவு
இராமநாதபுரம், ஜூலை 21:
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், சின்ன உடப்பங்குளம் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் வீட்டில் தாக்குதல் நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெக மாவட்ட செயலாளர்
மதன் அளித்துள்ள புகாரில்,தனது வீட்டிற்குல் புகுந்து கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தூண்டுதலின் பேரில், அவரது மகன் வசந்த மோகன் உள்ளிட்ட 13 பேர் வந்து, அங்கு இருந்த அவரது தாயார் மற்றும் மனைவியை இரும்புக் கம்பி, கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கியதுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த மாவட்ட செயலாளர் மதனின் தாயாரும், மனைவியும் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மதன் அளித்த புகாரின் அடிப்படையில் Cr. No. 50/2026 என்ற எண்ணில் BNS பிரிவுகள் 189(2), 296(b), 115(2), 118(1), 324(2), 351(3) ஆகியவற்றின் கீழ் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
11 likes
16 shares