Makkal Mugam
526 views • 1 days ago
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ள பிரபல வழக்கறிஞர் ஏ.பி.கணேஷ்குமார் அவர்களை ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் - (இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ) சு.வடிவேல் தலைமையில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் பி.காளிமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் ந.வேலுச்சாமி, ஜெ.ராஜவளவன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
10 likes
18 shares