ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
| தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், விசிக
தலைவர் தொல்..திருமாவளவன் தனது பேச்சில், “கூட்டணி ஆட்சிக்கு திமுக தயார் என்று அறிவித்திருந்தால், கூட்டணி கட்சிகளின் உணர்வுகளை மதித்து அவர்கள் விரும்பிய எண்ணிக்கையை ஓரளவிற்காவது திருப்திகரமான முறையிலேயே தந்திருந்தால் இவ்வளவு பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தோழமைக் கட்சிகள் விரும்பிய தொகுதிகளைத் தந்திருந்தால், அவர்கள் இவ்வளவு வேகமாக கூட்டணியை விட்டு வெளியேறியிருக்க மாட்டார்கள் என்றும், அவர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.விசிகவின் இந்த அரசியல் நகர்வை “துரோகம்” என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அவர், இதில் துரோகம் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார். #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்