ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இந்த கொடூரம் நடந்துள்ளது.. 40 வருட நண்பன் என்றுகூட பார்க்காமல், அவரது மனைவியுடனேயே நெருங்கி பழகியிருக்கிறார் பாக்குமட்டை வியாபாரி நாகராஜ்......
கடைசியில் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டு, கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. கோவை மாவட்டத்தில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நடந்த 10வது கொலை இதுவாகும்.!!!
சம்பவ இடத்திலேயே நாகராஜ் உயிரிழந்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற கொலையாளியைக் காவல்துறையினர் கைது செய்து கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ளது வெள்ளிமலைப்பட்டினம்.. இங்கு வசித்து வருபவர் நாகராஜ்.. 62 வயதாகிறது.. பாக்கு மட்டை வியாபாரியான இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி லதா ஏற்கனவே விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (65). மார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் இவரது மனைவி பாக்கியா (58). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். நாகராஜும் கந்தசாமியும் கடந்த 40 ஆண்டுகளாக மிகவும் நெருங்கிய நண்பர்கள்.. ஒருவர் இல்லாமல் மற்றொருவர் குடும்ப நிகழ்வு நடக்காது.. அந்த அளவுக்கு நெருக்கமானவர்கள்.
40 வருட நண்பன்
இந்நிலையில், மனைவியை இழந்து தனியாக வசித்து வந்த நாகராஜுக்கும், தன்னுடைய மனைவிக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக கந்தசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அது உறுதியாகியும் விட்டது. இந்த தவறான உறவால் நொந்து போன கந்தசாமி, நாகராஜை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவர் அதைக் பொருட்படுத்தவில்லை...
இதனால் நண்பர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல்களும் தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளன... ஊர் பொதுமக்கள் பலமுறை இவர்களை சமாதானம் செய்து வைத்தும், கந்தசாமிக்கு நண்பர் மீது இருந்த ஆத்திரம் குறையவில்லை.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நாகராஜ் தனது பைக்கில் டீ வாங்குவதற்காக நரசீபுரம் தெற்கு ரத வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கந்தசாமி, தனது நண்பர் நாகராஜை திடீரென வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போதும் கள்ளக்காதலை கைவிட முடியாது என்று கறாராக சொன்னார்..
மிளகாய்ப்பொடி - கத்திக்குத்து
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே போன கந்தசாமி, கையோடு சென்று சென்றிருந்த மிளகாய்ப் பொடியை நாகராஜின் முகத்தில் வீசினார். இதனால் கண் எரிச்சலால் நாகராஜ் அலறினார்.. அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார் கந்தசாமி.. இதில் நாகராஜ், ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
கொலையை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார் கந்தசாமி.. அதற்குள் தகவலறிந்து வந்த ஆலந்துறை போலீசார் நாகராஜின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். .. பிறகு தப்பியோடிய கொலையாளி கந்தசாமியையும் வலைவீசி தேடினார்கள். இறுதியில் அவர் பதுங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்தனர்....
திமுக பிரமுகர் , பாக்குமட்டை வியாபாரி
போலீசாரிடம் சிக்கி கொள்ளக்கூடாது என்பதற்காக கந்தசாமி உடனே, மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது வலது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் போலீசார் கந்தசாமியை மீட்டு கைது செய்தனர். உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அவரை அனுமதித்தனர்.. இப்போது ஆலந்துறை போலீசார் இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
பாக்குமட்டை வியாபாரியான நாகராஜ், திமுக பிரமுகராகவும் இருந்து வந்தாராம்.. தகாத உறவில் ஈடுபட்டு கழுத்து, தலையின் பின்பகுதி மற்றும் வயிறு உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்தாராம் நாகராஜ்..
தகாத உறவில் சிக்கி, தன் குடும்பத்தையே நாசம் செய்த 40 ஆண்டு கால நண்பனை, தீர்த்துக்கட்டிய இந்தச் சம்பவம் கோவை மாவட்டத்தில்அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
10 கொலைகள்
ஆனால், கோவை மாவட்டத்தில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து 10 படுகொலைகள் நடந்துள்ளன.. இதனால் பொதுமக்கள் பீதியிலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.. குற்றவாளிகள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றாலும், ரோந்து பணியை தீவிரப்படுத்தி சட்டம்-ஒழுங்கை முழுமையாகக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴