தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிப் போட்டிருக்கிறது... குடும்ப விவகாரத்தில் தட்டிக் கேட்ட ஒரு பெண்ணின் உயிரைக் கள்ளக்காதல் வெறி பறித்துள்ள சோகம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணி (டிரைவர்). இவரது மனைவி பிரியா (வயது 40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா அதே ஊரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். கணவனை இழந்த பிரியாவின் அக்கா லட்சுமி (42), பிரியா வீட்டில்தான் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், லட்சுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் (33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர்பு குறித்துத் தெரியவந்ததும், பிரியா தனது அக்காவைக் கண்டித்துள்ளார். இந்தத் தகவலை லட்சுமி முத்துக்குமாரிடம் கூறவே, பிரியா மீது முத்துக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.... நேற்று இரவு பிரியா தனது ஜெராக்ஸ் கடையைப் பூட்டிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த முத்துக்குமார் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற முத்துக்குமார், அருகில் கிடந்த இரும்பு கம்பியால் பிரியாவின் தலையிலும் முகத்திலும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் முகம் சிதைந்து பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து, பிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் தப்பியோடிய முத்துக்குமாரைப் புதுக்கோட்டை போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விசாரணையில் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்ட முத்துக்குமார் சாதாரண நபர் அல்ல; அவர் தட்டாரமடம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.... மேலும், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவர், ஏற்கனவே தனது மாமனார் உள்ளிட்ட 2 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே வந்திருந்த நிலையில், இந்தத் துணிகரக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காக்கிச் சட்டை அணிந்தவரே இப்படிப்பட்ட கொடூரக் செயலில் ஈடுபட்டது பொதுமக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
14 shares

More like this