Salem Crime News : சேலம் அரிசிபாளையம் குணபலராமசாமி தெருவில் கோவில் பூசாரியான ரமேஷ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.... இவரது வீட்டில் இருந்த டேங்கில் இருந்த வந்த தண்ணீரில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அவரது தனது மகனை அழைத்துக்கொண்டு வீட்டின் மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் சாக்குப்பை ஒன்று கிடந்தது. அதனை வெளியே எடுத்து திறந்து பார்த்தபோது அதில் மனித கை மற்றும் கால்கள் கிடந்தது. பதறிப் போய் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது அதற்குள்ளும் ஒரு மூட்டை கிடந்தது.இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக பள்ளப்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த வீட்டின் மேல்பகுதியில் இன்னொரு மூட்டையும் கிடந்தன. இந்த மூட்டைகளில் பெண்ணின் உடல் 7 துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது..... கொலை செய்யப்பட்ட பெண் யார்? அவரை யார் கொலை செய்திருப்பார்கள்? உடல் பாகங்களை ஏன் தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்றனர்? என போலீசார் விசாரித்து வந்தனர். அந்தப்பெண்ணின் கையில் ராஜேந்திரன், கணபதி என பெயர்கள் பச்சைக் குத்தப்பட்டிருந்தது. பெண்ணின் உடல் பாகங்களில் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் மாயமானவர்களின் பட்டியலை எடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் சேலம் அஸ்தம்பட்டி போலீசில் மேட்டுப்பட்டி தாதனூர் பாலாஜி காலனியை சேர்ந்த தங்கமணி (50) என்பவர் கடந்த 22-ந்தேதி மாயமானதாக அவரது கணவன் ஜீவானந்தம் புகார் கொடுத்திருந்தார். இதனால் கொலையான பெண் தங்கமணியாக இருக்குமோ என்ற அடிப்படையில் போலீசார் நடத்தினார்.... இதனையடுத்து ஜீவானந்தம் மற்றும் அவரது இரண்டு மகள்களை போலீசார் அழைத்து வந்து அந்தப் பெண்ணின் உடல் பாகங்களை காட்டினர். ஜீவானந்தம் அது தனது மனைவி எனக்கூறி அடையாளம் காட்டினார். அவரது 2 மகள்களும் அந்த பெயர்களை பார்த்து உறுதி செய்தனர். அவர்கள் கூறுகையில், தாய் தங்கமணியின் கையில் அவரது தந்தை கணபதி மற்றும் முதல் கணவர் ராஜேந்திரன் பெயரை பச்சை குத்தியிருந்தார் எனக் கூறினர். ஜீவானந்தம், தங்கமணிக்கு 2வது கணவராவார்.. தங்கமணி குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சங்கர்நகரில் உள்ள ஒரு மருத்துவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 28ம் தேதி அங்கு வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை, எனக்கூறினார். தங்கமணி கொலை செய்யப்பட்டு கிடந்த வீட்டின் அருகில் வசிக்கும் சமையலர் ஒருவர், கல்லூரி மாணவர்கள் 2 பேர் என 3 பேரை போலீசார் சந்தேகத்தி... பெண் கொலையில் சிக்கிய காதல் ஜோடி: தங்கமணியின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். அதில் நந்தினி என்ற இளம்பெண்ணுடன் தங்கமணி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நந்தினியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது காதலனுடன் சேர்ந்த தங்கமணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அந்தப்பெண் மற்றும் அவரது காதலன் மாலிக் பாட்ஷா, நண்பர் சிவராமன் ஆகிய மூன்று பேரையில் கைது செய்தனர்.... இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், " சங்கர் நகரில் உள்ள மருத்துவர் ஒருவர் வீட்டில் தங்கமணி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அந்தக் குடியிருப்பு பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் நந்தினி வேலை செய்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நந்தினி - மாலில் பாட்ஷா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். பாட்ஷா தனது காதலியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். தங்கமணி கழுத்தில் இருந்த நகைகள் நந்தினியின் கண்களை உறுத்தியுள்ளது. அந்த நகை கொள்ளையடித்து தனது காதலனிடம் கொடுத்து விடலாம் என முடிவு செய்துள்ளனர். இதற்காக திட்டம் தீட்டியுள்ளார். சம்பவத்தன்று வேறு ஒரு இடத்தில் வேலை இருக்கு. நல்ல சம்பளம் கிடைக்கும் எனக் கூறி தங்கமணியை நந்தினி தனது சித்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நந்தினியின் சித்தி வீட்டில் அனைவரும் வெளியூர் சென்று இருந்தனர். நந்தினியின் காதலன் மற்றும் அவரது நண்பர் அங்கு இருந்தவர். மூவரும் சேர்ந்து தங்கமணியை கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை 7 துண்டுளாக வெட்டி அதனை மூன்று மூட்டைகளில் அடைத்து பக்கத்து வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் வீசி உள்ளனர். தங்க மணி அணிந்திருந்த 3 சவரன் நகையை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். கைதானவர்களிடம் இருந்து 3 பவுன் நகை மற்றும் இறைச்சி வெட்டும் கத்தி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. #கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
9 shares

More like this