D Muthu Prakash, Kanchipuram 💐
842 views • 19 days ago
#அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 13ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 17.07.2026.
அய்யா துணை
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
========
நீசக் குலமிருக்கும் நெடுந்தெருக்க ளூர்வழியே
பாசக் கயிறோடு பகற்கள்ள னைப்போலே
தெருவுக்குத் தெருவு சிறுகுழந்தை நீசர்குலம்
வருகின்ற மாயவரை மண்கட்டி பேர்த்தெறிவார்
தலையைப் பிடித்திழுப்பார் சடைப்பேயன் பேயனென்பார்
.
விளக்கம்:
=========
நீசக்குல மக்கள் வாழ்ந்து வந்த நீண்ட தெருக்கள் அமைந்த ஊர் வழியாகக் கட்டப்பட்ட பாசக் கயிற்றோடு வைகுண்டரைக் கொண்டு சென்றனர். பகல் கள்ளனைப் போல் அவரைத் துன்புறுத்தி அவ்வூர்த் தெருவுக்குத் தெரு அழைத்துச் சென்றபொழுது நீசக் குல மக்களுடைய சின்னஞ் சிறு குழந்தைகள் எல்லாரும் மண் கட்டியினைப் பெயர்த்து அவரை நோக்கி எறிந்தனர். சிலர் அவரது தலையைப் பிடித்து இழுத்தனர். சிலர் சடையையுடைய பேயன் என்று அவரை ஏசினர்.
.
.
அகிலம்:
========
இலைசருகு போலே எரியுகின்ற சாதியெல்லாம்
குண்டியிலே யொருவன் கோல்கொண்டு குத்திடுவான்
நொண்டியோ வென்று நெளியிலே குத்திடுவான்
நம்மள் குலத்தை நாணங் கெடுக்கவந்த
பம்பக் குறும்பேயன் பம்பைதனைப் பின்னுமென்பார்
.
விளக்கம்:
=========
இவ்வாறாக இலைச் சருகுகள் போன்று எரிந்து அழியப் போகும் நீசக்குலச்சாதியினர் எல்லாரும் வைகுண்டரைத் துன்புறுத்தினர். ஒருவன் தன் கையில் இருந்த கம்பினால் அவருடைய குண்டியில் குத்தினான். ஒருவன் இவன் என்ன நொண்டியா? என்று கூறி நெளியில் குத்தி வேதனை உருவாக்கினான். சிலர் தம் குலத்தை நாணச் செய்த பம்பைமுடி குறும்புப் பேயனின் பம்பைத் தலையைப் பின்னிவிடுங்கள் என்றனர்.
.
.
அகிலம்:
========
அதிலுஞ் சிலபேர் அடடாபோ என்றிடுவார்
மதிலேறி வந்து மாமட வார்சிலர்கள்
இவன்தா னடியோ என்னையுமே ஆடவைத்துச்
சவந்தனையே சுட்டதுபோல் தான்சுட்டப் பேயனிவன்
தலைமயிரைப் பனையில் தான்பங்கு வைத்திறுக்கிக்
குலையக் குலையக் கொன்னகொடும் பாவியிவன்
என்று எறிவாள் இவள்சிலர்க ளம்மானை
.
விளக்கம்:
=========
சிலர் அடடா இவ்வளவு கொடுமைப் படுத்துகின்றீரே என்று இரங்கினர். பெண்டிர் சிலர் தமது வீட்டு மதிலில் ஏறிக் குதித்து வந்து வைகுண்டரைப் பார்த்து அடியே இவன்தான் என்னை ஆட வைத்துப் பேயைப் போக்குவதாகச் சொல்லிப் பிரேதத்தைச் சுடுவதைப் போன்று என்னைச் சுட்ட பேயன் என் தலை மயிரை இரண்டாகப் பிரித்துப் பனையில் வைத்து இறுக்கிக் கட்டி என்னை அழகு குலையும்படி துன்புறுத்திய கொடும் பாவி இவன்தான் என்று கூறிக் கல்லால் எறிந்தனர்.
.
.
அகிலம்:
========
அன்றுதுகள் கண்டு அதிலுஞ் சிலமடவார்
ஆமடியோவுங்களையும் அழைத்தானோ வீட்டில்வந்து
ஓமடியோ இந்த இறுமாப்புப் பேசாதுங்கோ
அன்றைக் கவனை அடிபணிந்து நின்றுகொண்டு
இன்றைக் கவனை எறியத் தொடர்ந்தாயோ
என்று சிலபேர் எறியாதே யென்றுரைப்பார்
.
விளக்கம்:
=========
அதைக் கண்ட வேறு சில பெண்டிர் அடியே ஆமாம் இவன் உங்களை உங்கள் வீட்டில் வந்து அழைத்துச் சென்றானோ? இது பாவமடி இந்த ஆணவப் பேச்சுக்களை நீங்கள் பேசாதீர்கள். அன்றைக்கு இவனைக் கண்டு பாதங்களை வணங்கி நின்று கொண்டு இன்றைக்கு இவனைக் கல்லால் எறிகின்றீர்களே, இனி எறியாதீர்கள் என்று தடுத்தனர்.
.
.
அகிலம்:
========
நன்று நன்றென்று நாரணரு முள்ளடக்கி
ஒருதிக் கொருதி உரைத்திடுகோவெனவே
கருதிமுகம் பாராமல் கண்ணர் மிகநடந்தார்
பாவிக் குலங்கள் பச்சைமால் நாரணரை
தாவிச் சுசீந்திரத் தலம்நோக்கிக் கொண்டுசென்றார்
.
விளக்கம்:
=========
இவற்றை எல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டு வந்த வைகுண்டர் நன்று நன்று என்று மனதுக்குள்ளே சொல்லி எந்த உணர்ச்சிகளையும் வெளியே காட்டாது உள் அடக்கி நீங்கள் ஒருத்திக்கு ஒருத்தி இவ்வாறு பேசியே தீர்த்துக் கொள்ளுங்கள் என்று நினைத்துக் கொண்டு ஒருவரது முகத்தையும் பாராமல் நடந்து கொண்டிருந்தார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
7 likes
6 shares