saravanan.
600 views 8 days ago
#theiveega kathay. யானைகளும் குதிரைகளும் பூட்டப்பட்ட தேரில் எப்படி வந்தார்? - திருக்குடந்தை உ.வே.வெங்கடேஷ் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளில் சத்துவ குணம் யாருக்கு உள்ளது என அறிந்துகொள்ள விரும்பிய பிருகு மகரிஷி, ஒவ்வொரு தெய்வத்தையும் பரிசோதிக்கச் சென்றார். திருமாலைப் பரிசோதிக்கச் சென்றபோது, திருமாலின் திருமார்பிலேயே உதைத்தார் தன் மார்பில் பிருகு உதைத்த போதும், திருமால் பிருகு மேல் கோபம் கொள்ளாமல், அவரது பாதங்களை வருடி விட்டதால் திருமாலுக்கே சத்துவ குணமுண்டு எனத் தெளிந்தார் பிருகு மகரிஷி ஆனால் அத்திருமார்பில் வீற்றிருக்கும் மகாலட்சுமி, “ஸ்வாமி! உங்கள் மனைவியின் இருப்பிடத்தை உதைப்பவர் மேல் உங்களுக்குக் கோபம் வரவில்லை. இதிலிருந்தே என்மேல் உங்களுக்கு அன்பு இல்லை என்று தெரிகிறது. இனி இந்தத் திருமார்பில் இருக்க நான் விரும்பவில்லை!” எனச் சொல்லித் திருமாலின் திருமார்பை விட்டுப் பிரிந்து கொல்லாபுரம் சென்றாள். பின் திருமால் திருமலையில் ஸ்ரீநிவாசனாகத் திருவவதாரம் செய்து மீண்டும் திருமகளை அடைந்தார். ஸ்ரீநிவாச கல்யாணம் நிறைவடைந்த பின், பிருகு மகரிஷி, “திருமகள் உறையும் திருமார்பை உதைத்து விட்டோமே! அது பெரிய குற்றமாயிற்றே! திருமகளிடம் நாம் இழைத்த பிழைக்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்திட வேண்டும்!” எனத் தீர்மானித்தார். அதனால் ஹேமரிஷி என்ற பெயருடன் கும்பகோணத்தில் பிருகு மகரிஷி அவதரித்தார். தான் செய்த தவறை மன்னித்தருளும்படி மகாலட்சுமியிடம் வேண்டித் தவம் புரிந்தார். மேலும் தன்னை ஏற்று அங்கீகரித்ததற்கு அடையாளமாக மகாலட்சுமியே தனக்கு மகளாக வந்து அவதரிக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தார். அவரது தவத்துக்கும் பிரார்த்தனைக்கும் திருவுள்ளம் உகந்த மகாலட்சுமி, கும்பகோணத்திலுள்ள பொற்றாமரைக் குளத்தில் ஒரு தங்கத் தாமரையின் மேல் அவதரித்தாள். வடமொழியில் கோமளம் என்றால் தங்கம் என்று பொருள். தங்கத் தாமரையில் அவதரித்தபடியால் கோமளவல்லி என்று அவளுக்குப் பெயர் சூட்டினார் ஹேமரிஷி. மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியைத் திருவரங்கநாதனுக்கே திருக்கல்யாணம் செய்து வைக்க விழைந்த ஹேமரிஷி திருமாலைக் குறித்துத் தவம்புரிந்தார். கோமளவல்லியும் இணைந்து தவம் புரிந்தாள். திருவரங்கத்திலுள்ள பிரணவாகார விமானத்திலிருந்தே ஒரு தேரை உருவாக்கிய அரங்கநாதன், யானைகளும் குதிரைகளும் பூட்டப்பட்ட அந்தத் தேரில் கும்பகோணத்துக்கு வந்து கோமளவல்லியை மணம்புரிந்தான். இன்றும் சார்ங்கபாணி என்ற திருநாமத்துடன் கோமளவல்லி மணவாளனாகக் கும்பகோணத்தில் குதிரைகளும் யானைகளும் பூட்டிய தேர் வடிவிலுள்ள கர்ப்பக்கிரகத்திலே எழுந்தருளியுள்ளான். சார்ங்கபாணிப் பெருமாள் - கோமளவல்லித் தாயாரின் திருக்கல்யாணத்தைக் கண்டு மன நிறைவடைந்த ஹேமரிஷி, பத்ரிநாத்தை அடைந்தார். அங்கே வியாசரைச் சந்தித்துத் திருமால் தனக்குச் செய்த அனுக்கிரகத்தை விவரித்து மகிழ்ந்தார். மேலும், “வேத வியாசரே, எனக்கொரு சந்தேகம். அதை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்!” என வேண்டினார். “என்ன சந்தேகம்?” என்று கேட்டார் வியாசர். “திருமால் திருவரங்கத்திலிருந்து குடந்தைக்கு வருகையில், யானைகளும் குதிரைகளும் பூட்டப்பட்ட தேரில் வந்தார். அதெப்படி ஒரே தேரில் மெதுவாக நடக்கும் யானையையும் விரைந்து ஓடும் குதிரையையும் பூட்ட முடியும்? அவ்வாறு பூட்டினால் தேர் சீராக ஓடுமா?” என்று கேட்டார் பிருகு மகரிஷி. அதற்கு வியாசர், “வேதத்தில் சம்ஹிதை, சாகை என இரு பாகங்கள் உண்டு. சம்ஹிதை பாகத்தை ஓதினால் அது குதிரையின் ஓட்டத்தால் உண்டாகும் ஒலி போலத் தோன்றும். சாகை பாகத்தை ஓதினால் அது யானையின் நடையோசையைப் போலத் தோன்றும். இந்த ஒலிகளின் வடிவிலுள்ள வேதத்தையே திருமால் தனக்கு வாகனமாகக் கொண்டிருப்பதை உருவகப்படுத்திக் காட்டவே குதிரை, யானை இரண்டும் பூட்டப்பட்ட தேரோடு குடந்தைக்கு வந்து உமக்கு அருள்புரிந்தார்!” என விளக்கினார். கருடனும் வேத ஸ்வரூபியாகவே விளங்குகிறார். காயத்ரி மந்திரம் அவரது கண்கள், த்ரிவ்ருத் அவரது தலை, யஜுர்வேதம் அவரது திருநாமம், வேதசந்தங்கள் அவரது அங்கங்கள், திஷ்ண்யம் எனும் வேதப்பகுதி அவரது நகங்கள், வாமதேவ்யம் அவரது உடல், ஸ்தோமம் அவரது ஆத்மா, பிருஹத், ரதந்தரம் ஆகியவை அவரது இறக்கைகள், யஜ்ஞாயஜ்ஞம் அவரது வால். வேதமே தனக்கு வாகனமாக உள்ளதை உணர்த்தவே, வேத ஸ்வரூபியான கருடன் மீதேறி, கருடவாகனத்தில் திருமால் காட்சியளிக்கிறார். ‘வி’ என்றால் வடமொழியில் பறவை என்று பொருள். வேதஸ்வரூபியான கருடன் என்னும் பறவையைத் தனக்கு வாகனமாய்க் கொண்டபடியால் திருமால் ‘வி-க்ரம:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 79-வது திருநாமம்.“விக்ரமாய நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்களுடைய அனைத்துப் பயணங்களிலும் திருமால் வழித்துணையாக உடன்வந்துக் காத்தருள்வார். ஆயிரம் நாமங்களால் அனந்தனைப் பணிவோம் 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.
13 likes
13 shares

More like this