Babu Babuji
759 views • 8 days ago
"விபத்தில்லா குமரி" - ஒரு அதிகாரியின் உறுதி, ஒரு மாவட்டத்தின் மூச்சு
கன்னியாகுமரி... மக்கள் தொகை அதிகம். ஆனா சாலைகளோ குறுகியவை. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என காலையில் இருந்து இரவு வரை பரபரப்பு.
குறிப்பா நாகர்கோவில் - திருவனந்தபுரம் மெயின் ரோட்... மூச்சு விட கூட இடமில்லாம ஓடுது.
இந்த நெருக்கடியான சாலையில் தான் 10, 12, 16, 18 டயர் கனிமவள கனரக லாரிகள் புகுந்து விளையாட ஆரம்பிச்சது.
ஓவர்டேக், புழுதி மண்டலம், தாறுமாறு பார்க்கிங்...
முட்டைக்காடு, குலசேகரம், சுருளகோடு, சித்திரங்கோடு பகுதிகளில் பொதுமக்கள் நடக்கவே பயந்தாங்க.
குவாரியிலிருந்து வர்ற தூசிக்குள்ள உயிரை கையில் பிடிச்சிக்கிட்டு தான் ஒவ்வொருவரும் போயிட்டு வந்தாங்க.
பண முதலாளிகளின் வயிறு நிரம்ப, அப்பாவி மக்களின் உயிர் ஏன் பலியாகணும்?
இந்த கேள்வியோட தான் களத்தில் இறங்கினார் நம்ம மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. R. ஸ்டாலின் IPS.
"ZERO ACCIDENT KUMARI" - ஒரு கனவு பயணம் ஆரம்பமானது
முதல்ல குறிப்பிட்ட நேரத்தில் லாரிகளுக்கு தடை விதிச்சாரு.
ஆனா லாப வெறியில், அந்த நேரத்துக்குள்ள அதிக டிரிப் அடிக்க லாரிகள் போட்டி போட்டு ஓடின.
விளைவு? பைக்ல போன அண்ணனும் அக்காவும் உரசி விழுந்து, கை கால் இழந்து வாழ்நாள் முழுக்க கதற வேண்டிய நிலை.
அதுக்கு அப்புறம் தான் காவல்துறையே நேரா களத்தில் நின்னது.
ஹெல்மெட் இல்லாதவங்க மேல பாரபட்சமில்லாத நடவடிக்கை. சிறுவர்கள் ஓட்டுனா பெற்றோர் மேல கேஸ். ஓவர்ஸ்பீட், சீட் பெல்ட், குடிபோதை... எல்லாம் கறார்.
ஓரளவு விபத்து குறைஞ்சுது. ஆனா கனிமவள லாரிகளின் கோர தாண்டவம் மட்டும் நிக்கல.
"09/04/2026 - குமரியே குலுங்கிய நாள்"
தக்கலையில் தந்தையின் கண் முன்னாடியே 19 வயது தங்கை ஹாட்லின் அபினா கனிமவள லாரி மோதி உயிரிழந்தாங்க.
அந்த சடலத்தின் அருகே அமர்ந்து கண்ணீரோடும் கோபத்தோடும் மக்கள் நடத்திய போராட்டம்... குமரியின் மனசாட்சியை உலுக்கியது.
செய்தி கேள்விப்பட்டு மின்னல் வேகத்தில் வந்தாரு Dr.R.Stalin IPS
போராடுன மக்கள் கிட்ட சொன்ன வார்த்தை "பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நானிருப்பேன். இனி எந்த தங்கையின் உயிரும் போகாது."
சொன்னபடியே மறுநாள் மாவட்ட ஆட்சியர் மதிப்பிற்குரிய அழகுமீனா அவர்களுடன் பேசி,
நால்வழி சாலை வரும் வரை கனிமவள லாரிகளுக்கு குமரி மாவட்டத்தில் முழு தடை என அறிவிச்சாரு.
"சட்ட போராட்டமும், மக்கள் சக்தியும்"
தடையை உடைக்க கோர்டுக்கு போனாங்க லாரி முதலாளிகள்.
ஆனா அங்கேயும் ட்விஸ்ட்.. நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரோடு இப்போது தேசிய சாலை இல்ல, மாநில சாலை, அதனால் தடை விதிக்கும் முழு அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு இருக்கு. மீண்டும் தடை.
ஆளும் கட்சி, எதிர்கட்சி, அனைத்து இயக்கங்களும் ஒரே குரலில் SP-யின் துணிச்சலை பாராட்டினார்கள். மக்களும் வானுயர புகழ்ந்தார்கள்.
ஆனா சுரண்டல் கும்பலுக்கு மட்டும் வயிறு எரிஞ்சது. அவதூறு, மாற்றல் முயற்சி, போஸ்டர் போராட்டம்...
எல்லாம் செஞ்சு பார்த்தாங்க. கடைசியில் குமரி எல்லைக்குள்ளே கூட நுழைய முடியாம ஓடினாங்க.
முடிவு? மக்கள் வென்றார்கள்.
SP ஸ்டாலின் இந்த சீரமைப்பு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கும் சென்றது.
அதன் விளைவு - 3 மாதங்களுக்கு M-Sand, ஜல்லி உட்பட கனிமவளங்கள் தமிழகத்தை விட்டு வெளியேற தடை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு.
"மக்களின் எஸ்பி - மக்களோடு வாழும் எஸ்பி"
இவர் குமரியில் தொடங்கிய இந்த மக்கள் நல பயணம், விரைவில் தமிழகம் முழுவதும் பரவும் என்ற நம்பிக்கை இன்று முளைத்துள்ளது.
குமரி மாவட்ட எஸ்பியாக பலர் வந்துள்ளனர்.
ஆனால் ஒட்டுமொத்த மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஸ்டாலின் சார் மட்டுமே.
இதுவே அவருக்கு கிடைத்த உயரிய விருது.
சட்ட ஒழுங்கு பிரச்சனை முதல் சாதாரண புகார் வரை... எந்த பிரச்சனை என்றாலும் எஸ்பி சாரின் வாட்சப்பிற்கு மெசேஜ் அனுப்பினால் நன்பகல் மட்டுமல்ல, விடியற்காலை 2 மணிக்கு கூட உடனே ரிப்ளை வரும்.
இந்த இளைஞருக்கு உறக்கமே இல்லையா? இல்லை... மாவட்டம் முழுவதும் சுற்றி வரும் அவரது வாகனத்தில் தான் அவரது உறக்கம் இருக்கும் போல
மக்கள் பிரச்சனைக்கு மக்களோடு நிற்கும் இந்த அர்ப்பணிப்பு தான் அவரை மக்கள் தலைவராக மாற்றியுள்ளது.
ஒரு அதிகாரி நினைத்தால், ஒரு மாவட்டத்தின் விதியை மாற்ற முடியும் என்பதற்கு குமரியே சாட்சி. #🙏என் தேசப்பற்று #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰
12 likes
9 shares