SHEIK 🌺KSN🌺
3K views 12 days ago
அல்லாஹ் நம் செயல்களை மலக்குமார்கள் மூலம் பதிவு செய்கிறான். ஆனால் இந்த மூவரின் நிலைமையில் உள்ளவர்களின் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். தூக்கத்தில் பேசினாலோ, நடந்தாலோ பாவம் இல்லை. விழித்த பிறகு தான் பொறுப்பு. பருவம் அடையும் வரை செய்யும் தவறுகளுக்கு கணக்கு இல்லை. ஆனால் பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: குழந்தைகள் ஏழு வயதை அடையும் போது, அவர்களுக்குத் தொழுகையை முறையாகக் கற்றுக்கொடுத்து, அதனைத் தொடங்குமாறு ஊக்கப்படுத்துங்கள். அபூ தாவூத் 495 மனநிலை சரியில்லாதவர் புத்தி சுவாதீனம் இல்லாதவரை அல்லாஹ் நிர்பந்திக்க மாட்டான். புத்தி வந்த பிறகு தான் பொறுப்பு. அல்லாஹ் எவ்வளவு கருணையானவன் பாருங்க. புரிந்து கொள்ளும் சக்தி இல்லாதவர்களை அவன் தண்டிப்பதில்லை. ஆனால் நமக்கு புத்தியும், விழிப்பும், பருவமும் இருக்கு. அதனால் நம்முடைய ஒவ்வொரு செயலும் எழுதப்படுகிறது. "அணுவளவு நன்மை செய்தாலும் அதை காண்பான்" — அல்குர்ஆன் _அஸ்-ஸில்ஸால் 99:7 அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து, நன்மைகளை அதிகப்படுத்தட்டும். ஆமீன்.! 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
80 shares

More like this