ரவிசங்கர் ராஜா, ஆரணி
741 views • 2 months ago •
திருமுறைகள் - பகுதி 7
உமாபதி சிவாச்சாரியார் சேக்கிழார் புராணம் எனும் நூலையும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலையும் சேக்கிழாரை வைத்து இயற்றப்பட்டுள்ளது
சேக்கிழார் வாழ்ந்த காலத்தில் சைவ சமயத்தை சேர்ந்த மக்களில் பலர் வேற்றுச் சமய இலக்கியங்களில் சுவை கண்டு மூழ்கிப் போய் இருந்தனர்.
இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினைச் செலுத்தினார்.
சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலைப் படித்து இன்புற்றார்.
சீவகசிந்தாமணி களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதை எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.
மறுமைக்குத் துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றைச் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்குச் சேக்கிழார் எடுத்துரைத்தார்.
அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார்.
அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கும்படி சேக்கிழாரை வேண்டினார்.
அதன் காரணமாகச் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபது சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை சடையனார்,
தாயார் இசைஞானியார் மற்றும் அனைவரின் வரலாற்றையும் ஊர் ஊராகச் சென்று தகவல்களைத் திரட்டினார்.
எழுதா இலக்கியம் எனும் நாட்டுப்புற பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள் கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்தார்.
குலோத்துங்க சோழன்
நாயன்மார்களின் வரலாற்றை சிதம்பரத்தில் இருந்து படைக்க வேண்டினார்.
அரசனது வேண்டுகோளை ஏற்றுச் சேக்கிழார் தில்லை எனும் சிதம்பரத்தை அடைந்தார் ..
சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார்.
தொடருவோம்.. 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #பன்னிரு திருமுறை #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #🙏ஆன்மீகம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
12 likes
16 shares