ரவிசங்கர் ராஜா, ஆரணி
890 views 2 months ago AI indicator
திருமுறைகள் - பகுதி 3 திருமுறைகளை கோர்த்த நம்பி என்கிற நம்பியாண்டார் நம்பியை தெரிந்து கொள்ளும் முன் பொள்ளா பிள்ளையாரை தெரிந்து கொள்ள வேண்டும். பொள்ளா பிள்ளையார் பொல்லாத பிள்ளையார் இவர் திருநாரையூரில் உள்ள சௌந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள பிள்ளையார். ‘பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாத எனப் பொருள். இவருக்கு தினம் அபிஷேகம் செய்து நைவேத்தியம் படைப்பதை அனந்தேச சிவாச்சாரியார் செய்து வந்தார். இவர் ஆதிசைவர் மரபை சேர்ந்தவர். இவரின் மனைவி பெயர் கல்யாணி அம்மையார். இவர்களின் மகனே நம்பி. அனந்தேச சிவாச்சாரியார் தினமும் கோவிலுக்கு சென்று இறைவனுக்கு அபிஷேகம் செய்து பிரசாதத்தை நைவேத்தியம் வைத்து அதனை தானமாக பக்தர்களுக்கு அளித்துவிட்டு வீடு திரும்புவார். வீட்டிற்கு வந்த தந்தையிடம், சிறுவன் நம்பி எங்கே பிரசாதம் என்று கேட்கும் போது, விநாயகர் சாப்பிட்டு விட்டார் என்று அனந்தேசர் கூறுவார். இதை சிறுவதிலேயே நம்பியாண்டார் நம்பி உண்மை என கருதினார். ஓர் நாள் அனந்தேச சிவாச்சாரியார் பணி நிமித்தமாக வெளியூர் சென்ற போது அவரது மகன் நம்பியாண்டார் நம்பியை விநாயகருக்கு பிரசாதத்தை நைவேத்தியம் செய்ய சொன்னார். சிறு குழந்தையான நம்பி விநாயகருக்கு பிரசாதத்தை நைவேத்தியம் செய்து விநாயகர் சாப்பிடுவார் என எண்ணி நம்பி காத்திருந்தான். விநாயகர் சாப்பிடாமல் இருப்பதை கண்ட நம்பி அழுதபடி எனது தந்தை கொடுக்கும் போது சாப்பிட்டாய் நான் சாப்பிட இன்று கொண்டு வந்த போது அதனை சாப்பிடாமல் இருக்கலாமா? நீ சாப்பிடாவிட்டால் நான் எனது தலையை இங்கே கல்லில் இடித்து இறப்பேன் என செயலிலும் இறங்கினான் சிறுவன் நம்பி. விநாயகர் நம்பியை தடுத்து, அவர் கொணர்ந்த பிரசாதங்களை உண்டார். நம்பி வெற்று பாத்திரத்தோடு வருவதை கண்ட பக்தர்கள் பிரசாதம் எங்கே எனக் கேட்டனர். வீட்டிற்கு சென்ற நம்பியை பார்த்து பிரசாதத்தை என்ன செய்தாய் என கேட்டார் அவரது தாயார். அனைவரிடமும் நம்பி பிரசாதத்தை விநாயகர் சாப்பிட்டு விட்டார் என்று கூறினான். வெளியூர் சென்று திரும்பிய அனந்தேச சிவாச்சாரியாரிடம் அவரது மனைவி கல்யாணி வர வர நம்பி பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டான், இன்று கோவிலுக்கு நைவேத்தியம் எடுத்து சென்றவன் நைவேத்தியத்தை என்ன செய்தாய் என கேட்டேன் அதற்கு அந்த விநாயகர் சாப்பிட்டுவிட்டார் என கூறுகிறான். என்ன என கண்டித்து கேளுங்க என்றார். மகனை கூப்பிட்டு கேட்டார்? நம்பியோ விநாயகர் சாப்பிட்டு விட்டார் என்றான். அடித்து கேட்டார் பொய் சொல்லாதே என மறுபடி அடித்து கேட்டார், அதே பதிலே வந்தது. அந்த தெருவில் இருந்த சிறுவர்கள் இன்று நம்பி விநாயகருக்கு நைவேத்திய பிரசாதம் எடுத்து சென்றவன் நீண்ட நேரம் விநாயகரோடு கதவை சாத்தியபடி இருந்தான். உள்ளே அவன் மட்டும் அந்த பிரசாதத்தை தின்று விட்டு வந்துவிட்டான் என சொன்னவுடன் மறுபடியும் நம்பியை அடித்து கேட்டார். விநாயகர் சாப்பிட்டுவிட்டார் என்ற பதிலே வந்தது. மறுநாள் காலை நம்பியிடம் பிரசாதத்தை கொடுத்து அனுப்பிய அவரது தந்தை நம்பி என்ன செய்கிறான் என பார்க்க அவனது பின்னேயே அவனுக்கு தெரியாமல் சென்றார். தொடருவோம்.... 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #பன்னிரு திருமுறை #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #🙏ஆன்மீகம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
15 likes
8 shares

More like this