#குரு_பெயர்ச்சி_பலன்கள்
#கும்பம்
வாழ்க்கை ஒரு புத்தகம்...
கடவுள் எழுதிய
முதல் பக்கம் பிறப்பு
இறுதி பக்கம் இறப்பு
நடுவில் இருக்கும்
காலி பக்கங்கள்
நமக்கு...
ஆகவே
நடுப்பக்கங்களை
அன்பு கொண்டு
எழுதுங்கள் 🥰
ஒவ்வொரு விடியலும்
சூரியனின் வருகை மட்டுமல்ல,
நேற்று உடைந்துபோன நம்பிக்கைகள்
மீண்டும் மெதுவாக
தங்களைத் தாங்களே ஒட்டிக்கொள்ளும் நேரம்.
கும்ப ராசிக்கு கடகத்தில் குரு பகவான் உச்சம் பெறுகிறார்.
இரண்டாம் அதிபதி மற்றும் லாபாதிபதி ஆறாம் இடத்தில் மறைவது சுபமான பலன்களை தராது.
எனினும் அவர் உச்சம் பெறக்கூடிய காரணத்தினால் சில நன்மைகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
குடும்பத்திற்காக சுப செலவுகள் செய்வீர்கள்.
குழந்தைகளின் கல்விக்காகவும், குடும்பத்தினுடைய அத்தியாவசிய தேவைக்காகவும், பல செலவுகள் நடக்கும்.
இரண்டாம் இடத்தை குருபகவான் பார்க்கக் கூடிய காரணத்தினால்,
குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கவலைகள், மனக்குழப்பங்கள், மனப்பிரச்சனைகள் இவை நிவர்த்தியாகும்.
ஆறாம் இடத்தில் குரு பகவான் உச்சம் பெறக்கூடிய காரணத்தினால் நோய், நொடி உடல் ரீதியான சில உபாதைகள் ஏற்படும்.
மருத்துவ செலவுகள் ஏற்படும்.
குரு பகவான் பத்தாம் இடத்தை பார்க்கக்கூடிய காரணத்தினாலே தொழில் நல்ல முறையில் வரும்.
புதிதாக புதிய பணி இட மாற்றம், பதவி உயர்வுகள் ஆகியவை கிடைக்கும்.
தொழில் நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்பவர்களுக்கு இது ஒரு ஏற்ற காலமாக அமைகிறது.
குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.
பெண்களுக்கு இது ஒரு அருமையான காலகட்டம்.
பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
எனினும் செரிமான கோளாறு பிரச்சனை, அடிவயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
மாணவர்களுக்கு இது ஒரு நல்ல காலகட்டமாக அமைகிறது.
கல்விக்கு உதவி வேண்டுகோளுக்கு கல்வி உதவி ஆனது கிடைக்கும்.
கல்விக்காக வெளியூர் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்போருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு ஆறாம் இடத்தில் குரு பகவான் மறைந்து இருக்கக்கூடிய காரணத்தினால் எந்த ஒரு முடிவுகளையும் யோசித்து, கலந்து ஆலோசனை செய்து பிறகு எடுப்பது நல்லது.
புதிய முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம்.
கலைத்துறையினருக்கு இது ஒரு அற்புதமான காலகட்டம்.
தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலகட்டம்.
எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
நம்மிடம் இல்லாததை,
இல்லை என்று,
ஏற்று கொண்டால்,
இருப்பதெல்லாம்,
நமக்கு இன்பம்,
தானென்பதை,
எல்லோருக்கும்,
எப்போது புரியுமோ.?
#பரிகாரம் :
திருச்சிற்றம்பலம்
காய்ந்தா யனங்க னுடலம் பொடிபடக் காலனைமுன்
பாய்ந்தா யுயிர்செகப் பாதம் பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தாய்ந் தறுப்பா யடியேற் கருளாயுன் னன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம் - நான்காம் திருமுறை, திருச்சத்திமுற்றம்.
ஒருபோதும் அமைதி இல்லை,
ஒருபோதும் சாந்தி இல்லை—
ஆனால் எப்போதும்
ஏதோ ஒன்றில்
மூழ்கியிருப்பது- அதுவே நம் வாழ்க்கை: நம் அன்றாட, ஒரே மாதிரியான, சற்றே தனிமையான, போதாமையால் நிரம்பிய வாழ்க்கை.
அதிலிருந்து தப்பிக்க
மதத்தையும்,
பலவிதமான
பொழுதுபோக்குகளையும்
நாம் நாடுகிறோம்.
ஆனால் நாளின் முடிவில்,
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
எங்கு இருந்தோமோ
அங்கேயே
இன்னும் இருக்கிறோம்.
நாம் பெரிதாக
மாறவில்லை.
உளவியல் ரீதியாக, நம் பிரச்சினைகள்
அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
மேலும் எப்போதும் முதுமை பற்றிய பயம், நோய் பற்றிய பயம், ஏதோ ஒரு விபத்து நம்மை முடக்கிவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது.
குழந்தைப் பருவத்திலிருந்து
நாம் இறக்கும் வரை,
தன்னிச்சையாகவோ
அல்லது
தன்னிச்சையின்றியோ.
நாம் தீர்க்க முடியாத
ஒரு பிரச்சினை
இருப்பதாகத் தோன்றுகிறது:
மரணம் என்ற பிரச்சினை.
குறிப்பாக வயது கூடும்போது, இன்பத்தின் தருணங்களை, வேதனையின் நேரங்களை, துக்கத்தையும், கண்ணீரையும் ஒருவர் நினைவு கூறுகிறார்.
ஆனால் எப்போதும்
அறியப்படாத ஒன்றாக இருக்கிறது—
மரணம் என்று அழைக்கப்படுவது.
அதற்கே நம்மில் பெரும்பாலோர் பயப்படுகிறோம்.
ஆகவே, பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கும் இரு நண்பர்களைப் போல,
இலைகள் வழியே சூரிய ஒளி சிதறி விழும் வெளிச்சத்தில்,
ஓடையில் நீந்தும் வாத்துகளுடன், பூமியின் அழகோடு அமர்ந்து, இதைப் பற்றி நாம் ஒன்றாகப் பேசுலாம்.
—
திருச்சிற்றம்பலம்
குருவித்துறை திருக்கோவிலுக்கு சென்று பிரகஸ்பதிக்கும் மூலவருக்கும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யவும். 🚩🕉🪷🙏🏼 #குரு பெயர்ச்சி #ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️ராசிபலன்



