*இன்று 13.5.2026 திருவண்ணாமலை*
*பகவான் ஸ்ரீரமண*
*மகரிஷி ஆராதனை!*
***********************************
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் ஆராதனை என்பது அவர் மகாசமாதி அடைந்த நாளை நினைவு கூரும் ஒரு புனிதமான நிகழ்வாகும்.
ஸ்ரீ ரமண ஆராதனை திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகவான் சந்நதியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஸ்ரீ ரமண மகரிஷிகள் அருளிய ‘‘அருணாசல அட்சரமணமாலை” மற்றும் ‘‘உள்ளது நாற்பது” போன்ற நூல்கள் பக்தர்களால் கூட்டாகப் பாராயணம் செய்யப்படும்.
பகவான் ரமணர் வாழ்ந்த காலத்தில் அன்னதானத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். அதைப் பின்பற்றி, ஆராதனை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் உணவு வழங்கப்படும்.
*ஸ்ரீ ரமண மகரிஷி*
*திருவடிகள் போற்றி!*
➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #ஆன்மீகம் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி



