D Muthu Prakash, Kanchipuram 💐
641 views 7 days ago
#அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 13ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 25.07.2026. அய்யா துணை தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம்: ======== மன்னன் கலியுரைத்த வாக்கின் படியெழுதி ஒப்பமிடச் சொன்னார் உலகளிந்த பெம்மானை செப்பமுடன் நாரணரும் சிரித்து மனமகிழ்ந்து நம்மாலே சொல்லி நகட்டப் படாதெனவே சும்மா அவன்வாயால் சொல்லிச் சுமைசுமந்தான் . விளக்கம்: ========== சேவகன் ஒருவன் கலியரசன் சொன்ன வாக்குப்படி வைகுண்டரை எழுதி ஒப்பம் இடச்சொன்னான். வைகுண்டர் சிரித்து மனம் மகிழ்ந்து நாம் ஏதாவது சொல்லி விடுதலையை நழுவ வைக்க வேண்டாம். அரசன் தன்னுடைய வார்த்தையால் தானே உரைத்து அதன் பாவத்தைத் தானே சுமந்து கொண்டான். . . அகிலம்: ======== இதல்லோ நல்ல இயல்கா ரியமெனவே அதல்லோ வென்று அரிமா லகமகிழ்ந்து கைச்சீட்டை சுவாமி கைகொண்டு தான்கீறி வச்சுக்கோ வென்று மண்ணில் மிகப்போட்டார் கீறிவிட்ட ஓலைதனைக் கெடுநீசன் தானெடுத்து மாறிக் கொருத்து வைத்தான்கா ணம்மானை . விளக்கம்: ========== இது அல்லவா எனக்குத் தேவையானதும் மகிழ்ச்சியானதுமான வாக்குறுதி என்று மனதில் எண்ணி மகிழ்ந்து, அவன் கொடுத்த கைச்சீட்டை வாங்கிக் கையாலேயே எல்லா நிபந்தனைகளையும் எழுதி ஒப்பம் இட்டு இதை வைத்துக் கொள் என்று கூறி அச்சீட்டை அமைதியாக வைகுண்டர் மண்ணின் மேல் போட்டார். அவ்வாறு எழுதி ஒப்பம் இட்டு வைத்த ஓலையை சேவகன் எடுத்து கோத்து வைத்தான். . . அகிலம்: ======== உன்னில் லிடத்தில் உடனேநீ போவெனவே குன்னுடைய நீசன் கூறினா னம்மானை அப்போது மாயவனார் அகட்டென வுறுக்கி இப்போது நீநினைத்த இலக்கதிலே போவேனோ தேவ னினைத்தத் தேதியுண் டவ்வேளைப் போவே னெனச்சொல்லிப் பெரியோ னகமகிழ்ந்து . விளக்கம் ========== பிறகு சுவாமியை நோக்கி, இனி உன் இடத்திற்கு இப்போதே நீ போகலாம் என்று மலைகள் உடையும்படியாகச் சத்தம் இட்டு கூறி விட்டு போனான். உடனே வைகுண்டர் ஆகட்டும் பார்ப்போம் என்று நினைத்து இப்போது நீ நினைத்தபடி நினைத்த சமயத்தில் நான் போவேனோ? என்று என்னி தேவனாகிய நான் நினைத்த தேதியும் வேளையும் உண்டு. அவ்வேளையில் அங்குப் போவேன் என்று எண்ணி மனம் மகிழ்ந்தார்.. . . அகிலம் ======== நல்லவரே மக்காள் நாம்நினைத்தத் தேதியது வல்லவரே வருகு மாசிபத் தொன்பதிலே கிழக்குநாம் போவோம் கிரணமாய் நீங்களெல்லாம் விளக்கொளி போலே வீரம தாயிருங்கோ என்றுரைக்க நாதன் இசைந்தமக்க ளெல்லோரும் நன்று நன்றென்று நாதன் பதந்தொழுது தொழுது அவரிருக்கத் தூயத் திருமாலும் . விளக்கம் ========= பிறகு சிலபொழுது கழித்து வைகுண்டர் சான்றோர்களை நோக்கி, குழந்தைகளே, நல்லவர்களே. நாம் நினைத்த தேதி வரவிருக்கும் மாசி மாதம் பத்தொன்பதாம் தேதி ஆகும். அன்று நம்மை எதிர்த்த கலி நீசனைக் கேடுடையவன் ஆக்கி விட்டு நாம் கிழக்கு திசை நோக்கிப் பயணம் புறப்படப் போகிறோம். எனவே, நீங்கள் எல்லாரும் விளக்கு ஒளிபோல் பிரகாசமான வீரம் பொருந்தியவர்களாகத் தயாராக இருங்கள் என்று சொன்னார். அதற்கு சம்மதித்த மக்கள் எல்லாரும் நன்று நன்று என்று சொல்லி வைகுண்டர் பாதங்களில் விழுந்து தொழுதனர். . . தொடரும்... அய்யா உண்டு.
20 shares

More like this