
P.Marimuthu
@1018031453
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில், இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.
ஆனால்,
#தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.
#💝இதயத்தின் துடிப்பு நீ
வீட்டுக்கு தூண் இல்லாம கூட இருக்கலாம்.. ஆனால் ஒரு பெண்ணுக்கு துணை இல்லாமல் இருக்க கூடாது..
ஆண்களுக்கு எப்படி என்று தெரியாது ஆனால் பெண்களுக்கு கண்டிப்பாக ஒரு #ஆண் துணை வேண்டும்...
நம் ஆதரவற்று இருக்கும்போது அண்ணன் தம்பி நான் இருக்கிறேன் என்று சொல்வார்கள் ஆனால் அவர்களின் மனைவியின் பிடியில் அண்ணன் தம்பி இருப்பார்கள் மனைவி என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அவர்களும் கேட்பார்கள்.
எனக்கு வேலை எதுவும் இல்லை நியூஸ் பேப்பரில் வரும் வேலை வாய்ப்புகளை பார்த்து எழுதி போடுவேன்.. எனக்கு பதில் லெட்டர் வரும் போஸ்ட் மேன் தருவார்..
நான் நிறைய வேலைவாய்ப்புகளை பார்த்து எழுதி போட்டு இருந்ததால் எனக்கு அடிக்கடி லெட்டர் வரும்.. போஸ்ட் மேன் வந்து தருவார். இதை பார்த்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள்.
போஸ்ட்மனுக்கும் எனக்கும் தகாத உறவு இருக்கு என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்..
உள்ளூர்கார்கள் தானே என்று எதார்த்தமாக பேசினால் கூட இரவு எத்தனை மணிக்கு தூங்குவாய் என்று கேட்கிறார்கள்.
பாதையில் போறவர்கள் வாரவர்கள் எல்லாம் வீட்டில் கதவு திறந்து இருக்கா என்று பார்த்துக் கொண்டு போவார்கள்...
வயது வித்தியாசம் இல்லாமல்..
எல்லா இடங்களிலும் வேகமாக செல்லும் வண்டிகள் என் வீட்டு அருகில் வரும் போதும் மட்டும் மெதுவாக செல்லும். வேகத்தடையும்மில்லை..
மளிகை கடைக்கு போனா கூட நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கோங்க என்று சொல்வார்கள்...
அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்று.
வெளியூர் போக வேண்டும் என்று பஸ்க்காக காத்திருந்தேன் நானும் அங்கதான் போறேன் உங்களை அந்த இடத்தில் இறக்கி விடுகிறேன் என்று ஆட்டோ அருகில் வந்து நிற்கிறது..
இன்னும் வெளியே சொல்ல முடியாது நிறைய இருக்கிறது அது அப்படியே இருக்கட்டும்...
எல்லா பெண்களுக்கும் நான் சொல்வது ஒன்று கண்டிப்பாக ஒரு துணையுடன் இருங்கள் அவர் கருப்போ சிகப்போ உயரமோ குட்டையோ பரவாயில்லை ஆனால் ஒரு ஆண் #துணை கண்டிப்பாக அவசியம்.....
#😔தனிமை வாழ்க்கை 😓
பற்றற்று போவதால்
பசியற்றுப் போகுமோ..?
இறைத் தேடல்
என்றாலும்
பசி வந்தால்
இரையைத் தேடித் தான்
ஆக வேண்டும்...
ஞான நிலை
அடைந்து விடுவதால்
பசி இல்லாமல்
போவதில்லை..
பக்குவம் வேறு
பசி வேறு.
ஞானம்
பற்றற்று இருக்கணும்..
பசி
ருசியற்று இருக்கணும்...
அவ்வளவுதான்..
இரண்டையும்
தனித்தனியாக
பார்ப்பவர்களுக்கு
முரண்பாடாகத் தான்
தெரியும்...
நீ பசி என்றால்
உலகம் தான் உணவு...
பற்றற்று ருசித்திரு..(அனுபவித்திரு)..
--பெ.மாரிமுத்து--
#💝இதயத்தின் துடிப்பு நீ
இது ஜப்பானின் இச்சிகாவா உயிரியல் பூங்காவில் வாழும் 'பஞ்ச்' என்ற குட்டி குரங்கின் உண்மைக்கதை. 🇯🇵
தன் தாயால் நிராகரிக்கப்பட்ட அந்தப் பிஞ்சு உயிர், ஒரு சாதாரண பொம்மையைக் கட்டியணைத்துத் தன் துயரத்தை மறந்தது. இன்று அந்தப் பொம்மையின் தைரியத்தில் மற்ற குரங்குகளுடன் பழகத் தொடங்கியிருக்கிறது. 🌟
கஷ்டத்தில் இருப்பவர்களுக்குப் பாடமெடுக்காதீர்கள்... ஒரு சிறிய அன்பைக் கொடுங்கள், அது அவர்களை மாற்றும்! 🤝❤️
#😔தனிமை வாழ்க்கை 😓












