P.Marimuthu
ShareChat
click to see wallet page
@1018031453
1018031453
P.Marimuthu
@1018031453
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - aeChat $ @ా -asir poulosir பொறுமையும், துணிவும், தன்னம்பிக்கையும் இருந்தால்  அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம்  வணக்கம் காலை aeChat $ @ా -asir poulosir பொறுமையும், துணிவும், தன்னம்பிக்கையும் இருந்தால்  அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம்  வணக்கம் காலை - ShareChat
வீட்டுக்கு தூண் இல்லாம கூட இருக்கலாம்.. ஆனால் ஒரு பெண்ணுக்கு துணை இல்லாமல் இருக்க கூடாது.. ஆண்களுக்கு எப்படி என்று தெரியாது ஆனால் பெண்களுக்கு கண்டிப்பாக ஒரு #ஆண் துணை வேண்டும்... நம் ஆதரவற்று இருக்கும்போது அண்ணன் தம்பி நான் இருக்கிறேன் என்று சொல்வார்கள் ஆனால் அவர்களின் மனைவியின் பிடியில் அண்ணன் தம்பி இருப்பார்கள் மனைவி என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அவர்களும் கேட்பார்கள். எனக்கு வேலை எதுவும் இல்லை நியூஸ் பேப்பரில் வரும் வேலை வாய்ப்புகளை பார்த்து எழுதி போடுவேன்.. எனக்கு பதில் லெட்டர் வரும் போஸ்ட் மேன் தருவார்.. நான் நிறைய வேலைவாய்ப்புகளை பார்த்து எழுதி போட்டு இருந்ததால் எனக்கு அடிக்கடி லெட்டர் வரும்.. போஸ்ட் மேன் வந்து தருவார். இதை பார்த்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள். போஸ்ட்மனுக்கும் எனக்கும் தகாத உறவு இருக்கு என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்.. உள்ளூர்கார்கள் தானே என்று எதார்த்தமாக பேசினால் கூட இரவு எத்தனை மணிக்கு தூங்குவாய் என்று கேட்கிறார்கள். பாதையில் போறவர்கள் வாரவர்கள் எல்லாம் வீட்டில் கதவு திறந்து இருக்கா என்று பார்த்துக் கொண்டு போவார்கள்... வயது வித்தியாசம் இல்லாமல்.. எல்லா இடங்களிலும் வேகமாக செல்லும் வண்டிகள் என் வீட்டு அருகில் வரும் போதும் மட்டும் மெதுவாக செல்லும். வேகத்தடையும்மில்லை.. மளிகை கடைக்கு போனா கூட நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்கிக்கோங்க என்று சொல்வார்கள்... அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்று. வெளியூர் போக வேண்டும் என்று பஸ்க்காக காத்திருந்தேன் நானும் அங்கதான் போறேன் உங்களை அந்த இடத்தில் இறக்கி விடுகிறேன் என்று ஆட்டோ அருகில் வந்து நிற்கிறது.. இன்னும் வெளியே சொல்ல முடியாது நிறைய இருக்கிறது அது அப்படியே இருக்கட்டும்... எல்லா பெண்களுக்கும் நான் சொல்வது ஒன்று கண்டிப்பாக ஒரு துணையுடன் இருங்கள் அவர் கருப்போ சிகப்போ உயரமோ குட்டையோ பரவாயில்லை ஆனால் ஒரு ஆண் #துணை கண்டிப்பாக அவசியம்..... #😔தனிமை வாழ்க்கை 😓
😔தனிமை வாழ்க்கை 😓 - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - 5) அடுத்த வீட்டில் யாராவது இறந்தால் அது பேய் . !! வீட்டில் யாராவது நம் ந்தால் அது சாமி !! அடுத்த வீட்டில் கஷ்டங்கள் செய்த அது அவர்கள் வந்தால் பாவம் வீட்டில் கஷ்டங்கள் நம் வந்தால் அது கடவுளின் சோதனை W மனித இதுதான் சமகக்கின் கூற்று 100 5) அடுத்த வீட்டில் யாராவது இறந்தால் அது பேய் . !! வீட்டில் யாராவது நம் ந்தால் அது சாமி !! அடுத்த வீட்டில் கஷ்டங்கள் செய்த அது அவர்கள் வந்தால் பாவம் வீட்டில் கஷ்டங்கள் நம் வந்தால் அது கடவுளின் சோதனை W மனித இதுதான் சமகக்கின் கூற்று 100 - ShareChat
பற்றற்று போவதால் பசியற்றுப் போகுமோ..? இறைத் தேடல் என்றாலும் பசி வந்தால் இரையைத் தேடித் தான் ஆக வேண்டும்... ஞான நிலை அடைந்து விடுவதால் பசி இல்லாமல் போவதில்லை.. பக்குவம் வேறு பசி வேறு. ஞானம் பற்றற்று இருக்கணும்.. பசி ருசியற்று இருக்கணும்... அவ்வளவுதான்.. இரண்டையும் தனித்தனியாக பார்ப்பவர்களுக்கு முரண்பாடாகத் தான் தெரியும்... நீ பசி என்றால் உலகம் தான் உணவு... பற்றற்று ருசித்திரு..(அனுபவித்திரு).. --பெ.மாரிமுத்து-- #💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - பழகிவட்டு 6U08 பலர் வருவார்கள் பாசம் காட்ட ஒருவர் மட்டுமே இருப்பார் .   இழிவுபடுத்த இழந்து விடாதீர்கள் பழகிவட்டு 6U08 பலர் வருவார்கள் பாசம் காட்ட ஒருவர் மட்டுமே இருப்பார் .   இழிவுபடுத்த இழந்து விடாதீர்கள் - ShareChat
#😔தனிமை வாழ்க்கை 😓
😔தனிமை வாழ்க்கை 😓 - 9-0৩ UUIT6U நாய்க்கும் ஜால்ரா போடும் வாய்க்கும் எதிரிகள் இருக்க வாய்ப்பே இல்லை ! 9-0৩ UUIT6U நாய்க்கும் ஜால்ரா போடும் வாய்க்கும் எதிரிகள் இருக்க வாய்ப்பே இல்லை ! - ShareChat
இது ஜப்பானின் இச்சிகாவா உயிரியல் பூங்காவில் வாழும் 'பஞ்ச்' என்ற குட்டி குரங்கின் உண்மைக்கதை. 🇯🇵 ​தன் தாயால் நிராகரிக்கப்பட்ட அந்தப் பிஞ்சு உயிர், ஒரு சாதாரண பொம்மையைக் கட்டியணைத்துத் தன் துயரத்தை மறந்தது. இன்று அந்தப் பொம்மையின் தைரியத்தில் மற்ற குரங்குகளுடன் பழகத் தொடங்கியிருக்கிறது. 🌟 ​கஷ்டத்தில் இருப்பவர்களுக்குப் பாடமெடுக்காதீர்கள்... ஒரு சிறிய அன்பைக் கொடுங்கள், அது அவர்களை மாற்றும்! 🤝❤️ #😔தனிமை வாழ்க்கை 😓
😔தனிமை வாழ்க்கை 😓 - நேரங்களில் ర6u தேவைப்படுவது 9|6060 அறிவுரை அரவணைப்பின் ஆறுதல் . அமைதியான மாரிமுத்து 69. நேரங்களில் ర6u தேவைப்படுவது 9|6060 அறிவுரை அரவணைப்பின் ஆறுதல் . அமைதியான மாரிமுத்து 69. - ShareChat
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ஓற்ப்பசு 08ಹ கடினம் 66iflgl செலவு செய்வது மிக பணம் மட்டும் 8|6060 அடுத்தவர் உள்ளத்தில் சேர்த்து வைக்கும் நாம் நல்லெண்ணம் கூட! னியகாலை வணக்கம் ! ஓற்ப்பசு 08ಹ கடினம் 66iflgl செலவு செய்வது மிக பணம் மட்டும் 8|6060 அடுத்தவர் உள்ளத்தில் சேர்த்து வைக்கும் நாம் நல்லெண்ணம் கூட! னியகாலை வணக்கம் ! - ShareChat
ஆரிய ஆதிக்கம் நிறைந்த அந்த காலத்தில் இப்படி சிந்திக்க தந்தை பெரியாரால் மட்டுமே முடியும். திராவிடக் கொள்கை – 👇 1️⃣ சமூக நீதி சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சம வாய்ப்பு ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் முன்னேற்றம் 2️⃣ சுயமரியாதை பிறப்பால் யாரும் உயர்ந்தோ, தாழ்ந்தோ இல்லை யாரிடமும் அடிமையாகாமல் தன்மானத்துடன் வாழ வேண்டும் 3️⃣ பகுத்தறிவு எதையும் கேள்வி கேட்டு சிந்தித்து ஏற்க வேண்டும் மூடநம்பிக்கைகளை தவிர்க்க வேண்டும் 4️⃣ பெண் உரிமை பெண்களுக்கு கல்வி, வேலை, சொத்து – சம உரிமை பெண்களை கட்டுப்படுத்தும் பழக்கங்களை மாற்ற வேண்டும் 5️⃣ மாநில உரிமை மாநிலத்துக்கு அதிக அதிகாரம் வேண்டும் தமிழ் மொழி, கலாச்சாரம் பாதுகாக்க வேண்டும் சாதி ஒழிப்பு + சமத்துவம் + அறிவு சிந்தனை + பெண் விடுதலை = திராவிட சிந்தனை. எந்த கடப்பாரை கொண்டும் வீழ்த்த முடியாத தூண்கள்.. #பெரியார் #தமிழ் #அரசியல் #💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - மாநில சுய பகுத்தறிவு சமூக நீதி மரியாதை ரிமை பெண் உ உரிமை மாநில சுய பகுத்தறிவு சமூக நீதி மரியாதை ரிமை பெண் உ உரிமை - ShareChat
(தோழர் நல்லகண்ணு அவரது மனைவியை பற்றி கூறியது.} 💙❤💚🚩 என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அவளோட இழப்பை என்னால ஜீரணிக்க முடியல. போராட்டம், பொதுக்கூட்டம்னு என் உடல் எங்கெங்கயோ அலஞ்சுட்டு இருந்தாலும், மனசு அவளை நினைச்சுட்டேதான் இருக்கு. அந்த வேதனையைச் சுமந்துட்டேதான் திரியுறேன். என்னை, என்னைவிட முழுசா புரிஞ்சிகிட்டவ என் மனைவி. என் வாழ்க்கையில எல்லா வகையிலும் அவளோட பங்களிப்பு இருந்துச்சு. அவ அப்பாவும் கம்யூனிஸ்ட் கட்சிகாரர்தான். அதனால என்னை ஏத்துக்கிறது அவளுக்கு சுலபமா இருந்திச்சி. டீச்சரா வேலை பாத்தா. காசி பாரதி, ஆண்டாள்னு எங்களோட ரெண்டு பொம்பளப் புள்ளைகள வளர்த்து படிக்க வெச்சது, ஆளாக்குனது அவங்களோட எல்லா தேவைகளையும் என்னை எதிர்பார்க்காம அவளே செஞ்சிருவா. அரசியல் வாழ்க்கை, போராட்டம், காசு பணம் சேர்க்கத் துடிக்காத மனசுனு என் போக்குக்கு என்னை விட்டவ என் மனைவி. கட்சி வேலைகள்ல திரிஞ்சிட்டு வீட்டுக்குப் போகும்போது, கூடடைஞ்ச திருப்தி கிடைக்குற விதமா அந்த வீட்டை எனக்கானதா வெச்சிருப்பா. இப்போ வீட்டுக்குப் போனா, அவ இல்லாத அந்த வெறுமையும் தனிமையும் ரொம்ப கொல்லுது. தாங்கவே முடியாம வருது. சுத்தி எத்தனையோ பேர் இருந்தாலும், எனக்குனு யாரும் இல்லைங்கிறதை உணரவெச்சிட்டே இருக்கு அவளோட பிரிவு. எந்த ராத்திரி வீட்டைக் விட்டுக் கிளம்புவேன், எந்த ராத்திரி வீடு திரும்புவேன்னு தெரியாத ஒரு வாழ்க்கை என்னோடது. உண்ணாவிரதம் இருக்கக் கெளம்புனாலும், ஜெயில்ல இருக்க வேண்டி வந்தாலும் ஒரு வார்த்தை வருத்தமாவோ, மறுப்பாவோ சொல்லாம அனுப்பிவைப்பா. என் புள்ளைங்க, 'அப்பா உங்களுக்கு வயசாயிருச்சு... அரசியல் வேலைகளையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கோங்கங்க'னு சொன்னப்போகூட, என் மனைவி அப்படி ஒருநாளும் எங்கிட்ட சொன்னதே கிடையாது. ஏன்னா, கட்சிப் பணிகள் இல்லாம என்னால இருக்க முடியாதுனு அவளுக்குத் தெரியும். ஆனா, 'நான் இல்லாமயும் உங்களால இருக்க முடியாது'ங்கிறதை இப்படிப் பிரிவுல உணர்த்திட்டுப் போயிட்டா. எங்க கிளம்பினாலும், 'போய் சேந்துட்டீங்களா?'னு ஒரு போன் பண்ணுவா. 'சாப்புட்டீங்களா?'னு கேட்பா. 'எங்க இருக்கீங்க?'னு ஒரு போன் வரும். இப்போ எதுவுமே இல்ல. கண்ண மூடுனா முழுக்க ரஞ்சிதம் நெனப்பாதான் இருக்கு. முன்னாடி நான் அசைவம் சாப்பிடுவேன். இப்ப அஞ்சு வருசமா சைவம்தான். அவ வைக்கிற மீன் குழம்புல சோத்தை ஒரு பிடி பிடிப்பேன். அவ வைக்கிற ரசம் ரொம்ப நல்லா இருக்கும். எனக்குப் பிடிக்கும்னு அடிக்கடி ரவா லட்டு செய்வா. 'என்னை நீ எதிர்பார்த்து இருக்கக் கூடாது, உனக்கு பசிச்சா சாப்பிடு'னு என் கல்யாணத்தை ஒட்டியே சொல்லிட்டேன். அதனால நாங்க சேர்ந்து சாப்பிடுவதே குறைவுதான். ஆனாலும் நான் சாப்பிடும்போது கூட உட்கார்ந்து பேசிட்டு இருப்பா. ஒரு சுவாரசியம் என்னனா நான் ஜெயில்ல இருந்து வந்த பிறகுதான் எங்களுக்கு கல்யாணமே நடந்திச்சி. புதுமணத் தம்பதியா நாங்க பேசிக்கிட்ட விஷயங்கள்லாம், என்னோட ஜெயில் அனுபவங்களாதான் இருந்துச்சு. நிறைய கல்யாணத்தை தலைமை தாங்கி நடத்திருக்கேன். அப்போவெல்லாம், 'மனைவியை அதிகாரமா மிரட்டக் கூடாது. அன்பா இருக்கணும், சமமா நடத்தணும்'னு சொல்லித்தான் ஆசிர்வதிப்பேன். என் வாழ்க்கையில ரஞ்சிதத்துக்கு அப்படி ஒரு சமத்துவத்தை நான் கொடுத்தாலும், அவ எனக்காக ரொம்ப விட்டுக்கொடுத்து போயிருக்கா. என்னைத் தேடி வர்றவங்களைப் பத்தி அவளுக்குத் தெரியும். என் மனசு நினைக்கிற மாதிரியே அவங்களை உபசரிப்பா. ரஞ்சிதம் நிறைய புத்தகங்க படிப்பா, பேப்பர் படிப்பா. ஜெயகாந்தன் சிறுகதைகள் பத்தி பேசுவா. நான் எதையாவது படிக்காம விட்டுட்டாலும், 'இதப் படிக்கலையா நீங்க?'னு கேட்பா. திடீர்னு எதாவது செய்தியைக் காட்டி, 'இதப் பாத்தியளா?'னு கேட்பா. 'இல்லையே...'னு சொன்னா, 'இதக்கூடப் பாக்காம என்ன படிக்கிய?'னு கேட்பா. இப்போவெல்லாம் பேப்பர், புத்தகம் படிக்கும்போது, 'எதையாச்சும் படிக்காம விட்டுட்டா அதை எடுத்துக்காட்ட அவ இல்லையே'னு ரஞ்சிதத்தோட நினைவுகள் நான் படிக்கிற ஒவ்வொரு எழுத்துலயும் பின்னிக்குது. நான் சம்பாதிச்சுது என்னனு எல்லாருக்கும் தெரியும். வெளியே போகும்போது செலவுக்கு அவகிட்டதான் காசு வாங்கிட்டுப் போவேன். கொஞ்சம் நிலம் இருந்து அதுல அரிசி வரும். மத்தபடி 'அது இல்ல இது இல்ல'னு எதுவும் எங்கிட்ட சொல்லாம, அவளே சமாளிச்சு குடும்பத்தக் கொண்டு போனா. என் பிறந்தநாளுக்கு துணிமணி எடுத்துக் கொடுப்பா. அவளுக்கு, நான் வீட்டுல இருந்தாலே பரிசுதான்னு சொல்லுவா. எப்பவாச்சும் டெல்லிக்குப் போனா அவளுக்கு சேலை எடுத்துட்டு வருவேன். ரொம்ப சந்தோசப்படுவா. வெளிய போயிட்டு நேரடியா வீட்டுக்கு வர்றதா இருந்தா எதாவது பண்டம் வாங்கிட்டு வந்து கொடுப்பேன். எங்க அப்பா, என் கூடப் பொறந்தவங்களுக்கு எல்லாம் அவங்கவங்க பேருல வீட்டை எழுதிவெச்சாரு. என் பங்கு வீட்டை மட்டும் என் மனைவி பேருலதான் எழுதி வெச்சிருக்காரு. பொது வாழ்க்கையில இருக்கேன், வீட்டையும் வித்து செலவு பண்ணிடுவேனோனு பயம் அவருக்கு என்கிறார் நல்லக்கண்ணு. சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு தொடர்ந்தார். ரஞ்சிதம் கிறிஸ்டியன். அதனால பைபிள் கதைகளை அடிக்கடி சொல்லுவா. எல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும், எல்லாரையும் சமமா நடத்தணும்னு சொல்லுவா. 'நான் செத்துப் போயிட்டேன்னா, நம்ம சொந்த ஊருலதான் அடக்கம் பண்ணனும்னு'னு சொன்னா. அவ ஆசைப்படியே செய்தேன். அவ இறக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே, அவ இனி நாள்கணக்குலதான் என்கூட இருக்கப்போறானு தெரிஞ்சுபோச்சு. அந்த நாட்கள்ல ஆஸ்பத்திரியும் வீடுமாதான் இருந்தேன். அவ இறந்த அன்னைக்கு, என்னுல இருந்து பாதி உசுரு கழண்டுபோன மாதிரி இருந்துச்சு. இப்பக்கூட அப்படியேதான் இருக்கேன். வயசான காலத்துல, பொண்டாட்டி போனதுக்கு அப்புறம் புருஷன் இருக்குறது கொடுமையினு சொல்லுவாங்க. இப்பதான் எனக்கும் புரியுது இந்தப் பிரிவு எவ்வளவு துயரமானதுனு. என் மனசு அவளுக்குத் தெரியும்னாலும், 'எனக்கு எல்லாமே நீதான்'ங்கிறதை இருக்கும்போது அவகிட்ட எத்தனை தடவை வார்த்தையில சொல்லியிருக்கேன்னு தெரியல. வருசா வருசம் காதலர் தினக் கொண்டாட்டங்களை செய்தியாதான் பேப்பர்ல படிப்பேன். இந்த வருஷம் படிக்கும்போது, ரஞ்சிதம் முகம்தான் வந்துபோகுது. அவ நெனப்பை என்ன செய்ய?"" நான் படித்ததில் வலித்தது..... உங்கள் அனைவரின் பார்வைக்கு...🙏 #💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - வெளிச்சம் மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடல் அவரது விருப்பப்படியே மருத்துவ சென்னை மருத்துவக் மாணவர்களின் கல்விக்காக ஒப்படைக்கப்படுகிறது கல்லூரிக்கு தானமாக 25-02-2026 .velichumfv.org Xஅo : Velicham1v WWW. வெளிச்சம் மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடல் அவரது விருப்பப்படியே மருத்துவ சென்னை மருத்துவக் மாணவர்களின் கல்விக்காக ஒப்படைக்கப்படுகிறது கல்லூரிக்கு தானமாக 25-02-2026 .velichumfv.org Xஅo : Velicham1v WWW. - ShareChat