Savittri Raju
ShareChat
click to see wallet page
@1146601529ke
1146601529ke
Savittri Raju
@1146601529ke
வாழ்வில் உயர உழைப்பு வேண்டும்
மனமே ரிலாக்ஸ் ஒருவர் நல்ல மனநிலையில் உள்ள போது அவர்கள் மூப்பு நிலை அடைந்தாலும் அவர்களின் செயல்களிலும் வேலைகளிலும் சுறுசுறுப்பு காணப்படும் . எப்பேர் பட்ட கடின வேலைகளை கூட ஈஸியாக மேற்கொள்வார்கள்,. உடலில் ஏன் முகத்தில் கூட முதுமையின் அடையாளம் பார்க்க முடியாது. புன்சிரிப்பில் கூட சோர்வை துக்கத்தை பார்க்க முடியாது. நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை அடைவர். அவர்களின் நடைகளில் உற்ச்சாகம் தெரியும் பேச்சுகளில் தெளிவு இருக்கும். உடல் ஆரோக்யம் இருக்கும். இவர்களின் இந்த நிலைக்கு காரணம் சூழ் நிலைகள், சுற்றி இருக்கும் மனிதர்கள் காணும் காட்சிகள் வீட்டில் இருப்பவர்களின் செயல்களும் அணுகுமுறைகளுமே காரணம் . அடுத்து முக்கிய காரணம் கஷ்டமோ நஷ்ட்டமோ சுகமோ துக்கமோ வலிகளோ இவைகளை நாம் புன்சிரிப்போடு ஏற்றுகொள்ள நம் மனதை பழக்கப்படுத்த வேண்டும். ஆம் எப்போது நம் உடல் நம் பேச்சை கேட்க மறுக்கிறதோ எப்போது எதிரில உள்ளவர்களின் செயல்களில் பேச்சில் எதிர் மறை தெரிகிறதோ அப்போது தான் கவனமாக இருக்க வேண்டும். சுற்றுபுறம் மற்றவர்கள் செய்கையும் சோர்வுக்கு காரணமாக மனதிற்கு பட்டால் அந்த சூழலில் இருந்து விலகி இயற்கையோடு நேரம் செலவிட வேண்டும் ஆம் இயற்கை மனதிற்கும் உடலுக்கும் நல்ல மருந்தாக மாறி நம் மனதை உற்ச்சாகமாக வைத்து கொள்ளும் தவிர மழையின் சப்தமும் அதனால் ஏற்பட்ட மண் கவாசனை கூட நமக்கு உற்சாகத்தை வர வழைக்கும். ஜோதிடர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க ஒருவருடைய ஜாதகத்தில் கோள்களின் நிலைபாடுகளை எதிர்மறையாக உதாரணத்திற்கு உங்களுக்கு இப்போது தசாபுத்தி சரியில்லை நேரம் சரியில்லை என்று உணர்த்தும் போது அவர் சொல்லும் சில நேர் மறைகளை கூட மூளை ஏற்க்காது. அவர் சொன்ன எதிர்மறை சொற்களையே சிந்திப்பதால் அப்படியே அந்த வார்த்தைகள் உயிர் பெற்றுவிடும் . அதே மருத்துவர்கள் ஒருவர் உயிர் போகும் நிலையில் இருந்தால் அவர்கள் கடவுளை வேண்டுங்கள் குணமடைவீர்கள் என்ற அந்த நேர்மறை மனதில் பதிந்து அவரை உயிர் பெற்றுவர செய்யும் . நம் வார்த்தைகள் நினைவுகள் தான் நம்மை காப்பாற்றும். எப்போது எல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறதோ உடனே அந்த இடத்தை விட்டு இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு சென்று அமரவேண்டும் ,. கன்களை மூடி மூச்சை இழுத்து விடுங்கள் 10 முறை. அடுத்து உங்கள் சிறந்த உண்மையான நண்பன் யார் தெரியுமா? அவர் உங்களோடே இருக்கிறார். உங்கள் மனதை லேசாக்கி உங்களின் கஷ்டங்களை குறைப்பவர் . அவர் எல்லோரிடமும் இருக்கிறார் . ஆம் அவர் யார் ? பேனாவும் காகிதமும் தான். உங்கள் குறை நிறைகளை எழுதும் போது வெளியில் சொல்லமுடியாத விஷயங்கள் கூட இவர்களிடம் தெரிவித்தால் போதும் மனம் லேசாகிவிடுவதை உணர்வீர்கள் . ஆனால் இப்போது அதை ஒதுக்கி கைபேசியில் மூழ்கிவிட்டதால் உங்கள் மனதை Rolex செய்ய முடியாது . காலத்தோடு நடைபயில கற்றுகொள்ளுங்கள் மாற்றங்கள் ஏற்படும் இயற்கையோடு நட்புகொள்ளுங்கள் இதுதான் இளமையின் ரகசியம் . Savithri Raju🙏 #👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - 12.46 pm 12.46 pm - ShareChat
#தாத்தா பேத்தி பாசம்
தாத்தா பேத்தி பாசம் - பேத்தியின் விடுமுறை இல்லாமல் கிடைத்த வரம் நீ தவமே குல தெய்வமும் நீ. @wou| என் நோய் தீர்க்கும் மருத்துவச்சி நீ தொலைந்த புன்னகையை பரிசாக தந்தவள் நீ... தடுமாறும் என்னை பிஞ்சு விரல் பிடித்து  பாதுகாத்தவள் நீ. ஒவ்வொரு விடுமுறையும்  வருகையால்  உன் குற்றாலமாக்கியவள் நீ. கோடை காலத்தையும் குளிராய் மாற்றியவள் நீ.. வெறுமையான மனதிற்கு என வண்ணம் தீட்டியவள் நீ இழந்த என் இளமையை திருப்பி தந்தவள் நீ. தூரத்தில் என் தெரிந்தால்  @ಹl' பூச்சியாய் பறந்து வந்து  பட்டாம் முதிர்ந்த கன்னத்தில்  என ரோஜா இதழால் முத்தம் பதிக்கும் நீ. நீ சென்றதும் ணர்கிறேன் முதுமையின் வலிகளை  6T6uT' என் உள்ளம் கொள்ளை போகச்செய்தாய் நீ. மறுபடியும்  விடுமுறை நாளை எண்ண தொடங்குகிறேன்  நீ வருவாய் என Savittri Roju பேத்தியின் விடுமுறை இல்லாமல் கிடைத்த வரம் நீ தவமே குல தெய்வமும் நீ. @wou| என் நோய் தீர்க்கும் மருத்துவச்சி நீ தொலைந்த புன்னகையை பரிசாக தந்தவள் நீ... தடுமாறும் என்னை பிஞ்சு விரல் பிடித்து  பாதுகாத்தவள் நீ. ஒவ்வொரு விடுமுறையும்  வருகையால்  உன் குற்றாலமாக்கியவள் நீ. கோடை காலத்தையும் குளிராய் மாற்றியவள் நீ.. வெறுமையான மனதிற்கு என வண்ணம் தீட்டியவள் நீ இழந்த என் இளமையை திருப்பி தந்தவள் நீ. தூரத்தில் என் தெரிந்தால்  @ಹl' பூச்சியாய் பறந்து வந்து  பட்டாம் முதிர்ந்த கன்னத்தில்  என ரோஜா இதழால் முத்தம் பதிக்கும் நீ. நீ சென்றதும் ணர்கிறேன் முதுமையின் வலிகளை  6T6uT' என் உள்ளம் கொள்ளை போகச்செய்தாய் நீ. மறுபடியும்  விடுமுறை நாளை எண்ண தொடங்குகிறேன்  நீ வருவாய் என Savittri Roju - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - நான் விடும் கண்ணீர் யாருக்கும் தெரிவதில்லை . கண்ணீர் சத்தம் போடுவதில்லை ஆனால் அதற்கும் ஒரு பாஷை உண்டு . மௌனமாய் அழுவது இதயத்தின் வலி. சத்தமிட்டு அழுவது இழப்பின் வலி . தலை குனிந்து அழுவது இயலாமைமின் வலி தேம்பி அழுவது பிரிவின் வலி . புரியும் இதயம் இருந்தால் கண்ணீரை வலிகளை தோற்கடிக்கலாம் GRaju Sattthhi நான் விடும் கண்ணீர் யாருக்கும் தெரிவதில்லை . கண்ணீர் சத்தம் போடுவதில்லை ஆனால் அதற்கும் ஒரு பாஷை உண்டு . மௌனமாய் அழுவது இதயத்தின் வலி. சத்தமிட்டு அழுவது இழப்பின் வலி . தலை குனிந்து அழுவது இயலாமைமின் வலி தேம்பி அழுவது பிரிவின் வலி . புரியும் இதயம் இருந்தால் கண்ணீரை வலிகளை தோற்கடிக்கலாம் GRaju Sattthhi - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - நிதர்சனம் குறை சொல்லிப் பழகியவர்களுக்கு பாராட்டத் தெரியாது  . காதலில் மூழ்கியவர்களுக்கு எதிர்காலம் தெரியாது  . போது பணம் இருக்கும் உறவுகளின் மதிப்பு தெரியாது  பெற்றோர் இருக்கும் போது  அவர்களின் அருமை தெரியாது . Savitbu Raju] மதிப்போம்  உறவுகளை நன்றி நேரம் இருக்கும் ` மரியனதை | ன்று போதே  மதிப்போம் ன்பே வாழ்க்கை நாளை வருத்தப்படாதீர்கள் . செலவம்  உறவே பெருமை றோர் பெற் நிதர்சனம் குறை சொல்லிப் பழகியவர்களுக்கு பாராட்டத் தெரியாது  . காதலில் மூழ்கியவர்களுக்கு எதிர்காலம் தெரியாது  . போது பணம் இருக்கும் உறவுகளின் மதிப்பு தெரியாது  பெற்றோர் இருக்கும் போது  அவர்களின் அருமை தெரியாது . Savitbu Raju] மதிப்போம்  உறவுகளை நன்றி நேரம் இருக்கும் ` மரியனதை | ன்று போதே  மதிப்போம் ன்பே வாழ்க்கை நாளை வருத்தப்படாதீர்கள் . செலவம்  உறவே பெருமை றோர் பெற் - ShareChat
பொக்கிஷம் நம்மை பெற்றவர்கள், நம் தவறான செயல்களை சுட்டிக்காட்டும் போது, சில நேரங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகத் தோன்றுவார்கள். சில உண்மைகளை உணர்த்தும் போது கூட, நாம் அவர்களைத் தள்ளி வைக்கிறோம். அவர்களின் அன்பான கோரிக்கைகளும், நமக்கு திருமணம் ஆன பிறகு தொந்தரவாக மாறக்கூடும். சிறுவயதில் நாம் கேட்டதெல்லாம் உடனே வாங்கித் தந்தவர்கள், முதுமை பருவத்தில் தங்களுக்கு தேவையான சிறிய விஷயங்களுக்கே மாதக்கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது. “இன்று கிடைக்கும்… நாளை கிடைக்கும்…” என்று நம்பிக்கையுடன் நம் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். சில சமயம் அவர்கள் கேட்டதே நாமே மறந்துவிடுகிறோம். சிறுவயதில் எது உகந்த உணவு, எது வேண்டாம் என்று பார்த்து பார்த்து நமக்கு உணவு கொடுத்தவர்கள், இன்று அவர்களே குழந்தை போல ஆகி, பல உணவுகளை உடல் ஏற்காமல் தவிக்கிறார்கள். முதுமையின் பிடியில், தரையில் அமரவும், பேருந்தில் ஏறவும் கூட சிரமப்படும் நிலையில் இருப்பார்கள். அவர்களின் நிலையை உணராமல் நாம் கோபப்படவும் செய்கிறோம். சிறுவயதில் பெற்றோருடன் ஒட்டிக் கொண்டு வாழ்ந்த நாம், திருமணத்திற்குப் பிறகு அவர்களிடமிருந்து விலகி வாழத் தொடங்குகிறோம். ஆனால் அப்போது கூட, தாய் தந்தையின் மனம் நம்மை கருணையுடன் தான் பார்க்கும். அவர்களுடன் பேசுவதற்குக் கூட சிறிது நேரம் ஒதுக்காதது மிகப் பெரிய கொடுமை. இழப்புகள் இருக்கும் போது உணரப்படுவதில்லை — இழந்த பின்பு தான் அதன் மதிப்பு தெரியும். இந்த உறவு ஒரு சங்கிலி போன்றது. நாம் எப்படி நடத்துகிறோமோ, அது நம் சந்ததியினரிடமும் தொடரும். அவர்கள் இருக்கும் போதே, அவர்களுக்காகவும் வாழ கற்றுக்கொள்ளுங்கள். அவர்களின் தேவைகள் பெரியதாக இருக்காது — நம்முடைய அன்பும், அரவணைப்பும் தான். முதுமையில் அவர்கள் அதிகம் சாப்பிட முடியாது. ஆனால் குழந்தையைப் போல அடிக்கடி பசி வரும். அதை புரிந்து கொண்டு, எளிதாக செரிமானமாகும் சத்தான உணவுகளை கொடுங்கள். உங்களுக்குப் பிடித்த உணவு, அவர்களுக்கு ஏற்றதாக இருக்காமல் இருக்கலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப, அவர்களை இயற்கை சூழலுக்கும், ஆலயங்களுக்கும் அழைத்து செல்லுங்கள். உங்கள் குழந்தைகளை அவர்களுடன் நெருக்கமாக இருக்க அனுமதியுங்கள். அவர்கள் ஒரு பொக்கிஷம் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்களை இழந்து விடாதீர்கள். நீங்கள் அவர்களாக மாறும் முன்பே — மாற்றிக் கொள்ளுங்கள். அப்போது கால சக்கரத்தின் தண்டனையிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். #பொக்கிஷம் – Savittri Raju
பொக்கிஷம் - Savittri Raju Savittri Raju - ShareChat