Jayakannan
ShareChat
click to see wallet page
@2687067730
2687067730
Jayakannan
@2687067730
I Love Sharechat :)
துலாம் லக்னம் துலாம் ராசியில் பிறந்தவர்கள்... லட்சுமி கடாட்சம் பொருந்தியவர்கள். ஏன்.?எனில்.? துலாம் என்பது. சுக்கிர பகவானின் மூலத்திரிகோண வீடு ஆகும். மேலும் ... சுக்கிரனின் அதி தேவதையான.... அதாவது.. அழகிய தங்க ஆபரணங்கள் வெள்ளி பொருட்கள் ஆடம்பரமான வீடு புத்தம் புதிய சொகுசான வாகனம் மகிழ்ச்சியான இல்லறம். இது போன்று .. அமைதி ஆடம்பரம் அழகு போன்ற அனைத்திற்கும். மேலும் செழிப்பு மகிழ்ச்சி இன்பம் மிகுந்த வாழ்க்கையையும் அள்ளித் தரக்கூடியவர் சுக்கிரனின் அதி தேவதையான ஸ்ரீ மகாலட்சுமி தாயார் ஆவார்.. அந்த வகையில்.. துலாம் லக்னம் துலாம் ராசியில் பிறந்த இவர்கள் லட்சுமி கடாட்சம் நிரம்ப பெற்றவர்கள்.. எனவே.... இவர்கள் இருக்கக்கூடிய இடமும் லட்சுமி கடாட்சமாக மாறும்... மேலும்... குறிப்பாக.. துலா லக்னம், அல்லது துலாம் ராசியில் பிறந்த ஒருவருக்கு... அவரின் ஜாதகத்தில் ... சுக்கிரன் நீச்சம் அஸ்தங்கம் கிரகணம் போன்ற வலுவிலந்த நிலையிலும். லக்னத்திற்கு 3,8 ஆகிய இடங்களில் மறைந்த நிலையிலும்.. இருக்கும் பட்சத்தில்.... வாழ்நாள் முழுவதும் மேற்சொன்ன சுக்கிரனின் காரகத்துவங்களையும். சுக்கிர திசா புத்தி காலத்தில்... சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் துலாத்திற்க்குறிய ஆதி பத்திய காரகத்துவங்களின் மூலம் கிடைக்கக்கூடிய நற்பலன்களை அனுபவிக்க விடாமல் தடுக்கும். அதாவது ... தலையைத் தேடிய உடலாகவும். உடலை தேடுகின்ற தலையாகவும் இருக்க வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கும். இந்த அமைப்பில் உள்ள இவர்கள்... வேறு லக்னம் வேறு ராசியில் பிறந்த .... அதேசமயம்... சுக்கிரன் திக் பலம் , ஆட்சி பலம், உச்சபலம், வர்க்கோத்தமம் எனும் அமைப்பில். இருக்கும் நபரை அருகில் வைத்துக் கொள்ளும்போது... சுக்கிரனின் காரகத்துவங்கள் துலாம் லக்னம் துலாம் ராசியில் பிறந்தவர்களிடம் தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும்.. அதன் மூலம் பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பதைப் போல இருக்க வைக்கும். அதே சமயம் வேறு லக்கினத்தில் பிறந்த ஒருவருக்கு ... என்ன தான்... சுக்கிரன் .. ஆட்சி உச்சம் போன்ற நிலையில் இருந்தாலும்.. துலாம் லக்னம் துலாம் ராசியில் பிறந்தவர்களின் ஆலோசனைகளின் படி செயல்படும் போதும்... சுக்கிரன் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர்களால் நூறு சதவீதம் முழுமையாக அனுபவிக்க முடியும் ... இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்.... பணம் வைத்திருக்கக்கூடிய யார் வேண்டுமானாலும் அதிநவீன விலை உயர்ந்த கார் வாங்கி விடலாம்.. அதை திறம்பட ஓட்டுவதற்கும் அந்த காரின் சொகுசை முழுமையாக அனுபவிக்க வைப்பதற்கும்.. அதி நவீன சொகுசு காரை திறமையாக இயக்கக்கூடிய டிரைவரிடமே உள்ளது.. சுருக்கமாக... துலாம் லக்னம் துலாம் ராசி பிறந்தவர்கள் அனுபவிப்பதற்கு என்றே பிறந்தவர்கள்.. இவர்கள் பசியை கூட தாங்கிக் கொள்வார்கள்.. ஆனால் உணவில் ருசி இல்லை என்றால் இவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.. அந்த அளவிற்கு சொகுசான லக்னம் மற்றும் ராசி துலாம். குறிப்பாக இவர்களுக்கு.. ஜாதகத்தில் சரியான கிரக அடைவும். தொடர் யோக தசையும் அமைந்துவிட்டால்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது... மேலும் இவர்கள் அனுபவிப்பதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்கிற நியாய உள்ளம் படைத்தவர்கள். உங்கள் ஜாதக #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் நிலைப்பாட்டை அறிய Astrologer Jaya Kannan WhatsApp 78100 226 28
🔍ஜோதிட உலகம் 🌍 - ShareChat
ஜாதகத்தில் யோகம் இல்லாதவர்கள் நின்றால் குற்றம் நடந்தால் குற்றம். ஜாதகத்தில் யோகம் உள்ளவர்கள் எது செய்தாலும் சரி. லக்னாதிபதி வலுவாக உள்ளவர்கள் இன்பத்தையும் அனுபவிப்பார்கள் துன்பத்தையும் அனுபவிப்பார்கள் ஆனால் கண் கலங்க மாட்டார்கள். லக்னாதிபதி வலு இல்லாமல இருப்பவர்கள் இன்பத்தையும் அனுபவிப்பார்கள் துன்பத்தையும் அனுபவிப்பார்கள் ஆனால் எளிதில் கண் கலங்கி விடுவார்கள். லக்னாதிபதி சுபத்துவம் வாழ்நாள் முழுவதும் ஜாதகரை பாதுகாக்கும். #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் அதே சமயம் தசாநாதன் சுபத்துவம் அந்த காலகட்டத்தில் மட்டும் ஜாதகரை பாதுகாக்கும். என்கிற பொது விதி இருந்தாலும்.. பஞ்சமாதிபதி சுபத்துவம் மட்டுமே ஒருவரை பாதுகாக்கும். அதேசமயம்... பாக்யாதிபதி சுபத்துவம் மட்டுமே ஒருவரை பரம்பரை பரம்பரையாக பாதுகாக்கும்.. உங்கள் ஜாதக சூட்சம பலனை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628 #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍
✡️ஜோதிட பரிகாரங்கள் - 3d 3d - ShareChat
https://youtube.com/shorts/0-vS8RPIcEw?si=bA3lJC77zENluVaW #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
ராகு கொடுத்தால் கேது தடுப்பார். கேது தடுத்தால் ராகு கொடுப்பார்.. உதாரணமாக.. உபஜெய ஸ்தானத்தில்... ராகு கேது இருந்து... 3,6,10,11 இல் ராகு இருந்தால்.? 9,12,4,5 இல் கேது இருப்பார். 3,6,10,11 இல் கேது இருந்தால்.? 9,12,4,5 இல் ராகு இருப்பார். அதாவது.... 9 இல் அமர்ந்த கேது தந்தை வழியில் கிடைக்கக்கூடிய பூர்வீக சொத்து அதிர்ஷ்டம் போன்றவற்றை தடுத்தாலும். 3 இல் அமர்ந்த ராகு தன்னுடைய சுய முயற்சியினால் சொத்துக்களை உண்டாக்கி கொண்டும். முரட்டுத்தனமான முயற்சிகளால் அதிர்ஷ்டம் நிறைந்த நபராக தன்னை மாற்றிக் கொள்ள வைப்பார். அதேபோல.... 3 இல் அமர்ந்த கேது சாதாரண முயற்சிகளுக்கே முட்டுக்கட்டை போட்டு அடுத்த கட்ட நகர்விற்க்கு முன்னேறவிடாமல் தடுத்தாலும். 9 இல் அமர்ந்த ராகு தந்தை வழி சொத்துக்களின் மூலம் அதிர்ஷ்டத்தை தந்து சமுதாயத்தில் தன்னையும் ஒரு மிகச் சிறந்த மனிதனாக வலம் வரச் செய்யும். அதேபோல... ஒருவருக்கு ஏதேனும் ஒரு யோகதசை அல்லது அவயோக தசை நடந்து கொண்டிருக்கும் பட்சத்தில்... கேது தான் இருக்கும் இடத்திலிருந்து மூன்று பதினொன்றாம் பார்வையாக தசா நாதனை பார்த்தால்.? யோக தசையாக இருந்தால் யோகங்களை அனுபவிக்க விடாமல் தடுக்கும். அவ யோகதசையாக இருந்தால் அவயோகங்களையும் அனுபவிக்க விடாமல் தடுக்கும். ராகு தான் இருக்கும் இடத்திலிருந்து மூன்று பதினொன்றாம் பார்வையாக தசாநாதனை பார்த்தால்.? அவயோக தசையாக இருந்தால் அவ யோகங்களை மேலும் அதிகப்படுத்துவார். யோக தசையாக இருந்தால் யோகங்களையும் அதிகப்படுத்துவார். உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக அடைவு தசா புக்தி சூட்சுமங்களை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
✡️ஜோதிட பரிகாரங்கள் - ShareChat
குரு...சுக்கிரனின் நட்சத்திர சாரத்திலும். சுக்கிரன்... குருவின் நட்சத்திர சாரத்திலும். இருந்தால் என்ன பலன்.. குரு... சுக்கிரனின் பரணி பூரம் பூராடம் போன்ற நட்சத்திர சாரத்தில் இருந்தால் .? குழந்தைகளுக்கு : விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் நவநாகரீக ஆடைகள் விதவிதமான தின்பண்டங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு : ஆடம்பரமான கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். இளைஞர்களுக்கு: சொகுசான வேலை கிடைக்கும் அல்லது சொகுசான தொழில் அமையும். மேலும் அந்த இளைஞரை காதல் எனும் வலையிலும் விழ வைக்கும். முதியவர்களுக்கு: அழகான ரம்யமான சூழ்நிலையில் வாழ்வதற்கு உரிய வாய்ப்பு கிடைக்கும். நோயாளிகளுக்கு: அதிநவீன வசதிகளை உடைய மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்கும். சுக்கிரன்... குருவின் புனர்பூசம் விசாகம் பூரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் இருந்தால்.? குழந்தைகளுக்கு : உறுதியான நீடித்து நிலைத்து இருக்கக்கூடிய கல்வியில் ஆர்வம் ஏற்படுத்தக்கூடிய விளையாட்டுப் பொருட்களும் கௌரவத்தை ஏற்படுத்தக்கூடிய ஆடைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்காத தின்பண்டங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு : எப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்தாலும் கல்வியில் சிறந்து விளங்க வைக்கும். இளைஞர்களுக்கு: கௌரவமான வேலை கிடைக்கும் அல்லது கௌரவமான தொழில் அமையும். மேலும் அந்த இளைஞரை திருமணம் எனும் பந்தத்திலும் இணைத்து வைக்கும். முதியவர்களுக்கு: அழகான அமைதியான ஆன்மீக ரீதியிலான சூழ்நிலையில் வாழ்வதற்கு. உரிய வாய்ப்பு கிடைக்கும். நோயாளிகளுக்கு: அனைத்து மருத்துவ முறையையும் அறிந்த. மருத்துவம் செய்வதில் கைதேர்ந்த சிறந்த மருத்துவர் கிடைப்பார். பொதுவாக ..இந்த பதிவு.. சுக்கிரனின் காரகத்துவம் குருவின் காரகத்துவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்ட பலன் மட்டுமே இது... அவரவர் லக்னத்திற்கு சுக்கிரன் எந்த ஆதிபத்தியத்திற்கு உரியவர் குரு எந்த ஆதிபத்தியத்திற்கு உரியவர் என்பதை பொறுத்து பலன் அமையும். உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக அடைவு மற்றும் தசா புத்தி சூட்சமங்களை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628 #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
🚹உளவியல் சிந்தனை - kadavul diaries kadavul diaries - ShareChat
https://youtube.com/shorts/J3ujkan0jII?si=naG34EUbui-xSzY7 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
https://youtube.com/shorts/ceKnbn2ZT0w?si=4_xaSXjxtp7rPwvH #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்
https://youtube.com/shorts/FtPZvw2Laxo?si=HDP9tEvzDLpY1b6w #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
பெரிய மனிதர்கள். எந்த சூழ்நிலையிலும் பெரிய மனிதர்களாகவே நடந்து கொண்டால்.,. கால தேவனிடம் இருந்து என்றாவது ஒருநாள் பெரிய சலுகை ஒன்று. நிச்சயமாக கிடைக்கும். சிறிய மனிதர்கள். எல்லா சூழ்நிலையிலும் சிறிய மனிதர்களாகவே இருந்து விடாமல் இருந்தால். கால தேவனிடம் இருந்து சிறிய சலுகையாவது நிச்சயம் கிடைக்கும். அருளையும் பொருளையும் அள்ளித் தருபவர் குரு என்றாலும். அதில் கை தேர்ந்தவர் ஞானி என்றாலும் ..... ஞானப் பாதைக்கு அழைத்துச் செல்பவர் கேது. அதாவது.. ஞானத்திற்கு அதிகாரம் பெற்ற கிரகம் கேது. கேதுவே ... நாளை நடப்பதை இன்றே தெரிந்து கொள்ளக் கூடிய அதிகாரம் படைத்த குரு ஆவார். ஆன்மீகத்தில் ஜோதிடம் கலந்திருப்பதை போல... ஜோதிடத்திலும் ஆன்மீகம் கலந்திருப்பது அவசியம். ஏனெனில் பாம்புகள் செய்ய இருப்பதை பரமாத்மா ஒருவரை தவிர யார் அறிவார்... அதை நாமும் அறிய முற்படும்போது அந்த பரமாத்மாவிடமே சரணாகதி அடைந்திருப்பது சிறப்பு.... சுருக்கமாக.. பரமாத்மாவிற்குரிய கிரகமான புதனின் ஆதிக்கத்தில் பிறந்தாலே இவ்வளவு ஞானமும் அறிவும் கிடைக்கிறது என்றால்.!! பரமாத்மாவிடமே சரணடைவது எத்தகைய மேன்மையானது என்பதை அறிய வைப்பதும் உணர வைப்பதும் கேது பகவான். உங்கள் ஜாதகத்தில் உள்ள சூட்சம பலனை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் ஜோதிடர் Jaya Kannan Only WhatsApp 78100 22628
🚹உளவியல் சிந்தனை - ٥ 900 ٥ 900 - ShareChat
சனி பகவானின் பார்வைக்கு என்ன பலன்.? பொதுவாக சனி பகவானை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது ... சுப அசுப கருமத்தை அனுபவிக்க வைப்பவர். சுப அசுப கருமத்தை செய்யத் தூண்டக் கூடியவர். சுப அசுப கருமத்தை செய்ய விடாமல் தடுப்பவர். என்பதும் ... மேலும்... சனிபகவான்...தான் அமர்ந்த... இடத்திலிருந்து 3,7,10 என...மூன்று வித பார்வைகளை பார்ப்பார் என்பதும்... அடிப்படை புரிதலுக்கானது. பொதுவாக.. சனி பார்வை கெடுதலை மட்டுமே தரும் என்று சொல்லிவிட முடியாது.... ஏன் .? எப்படி.? உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான்., திரிகோணாதிபதியாக இருந்து திரிகோணத்திலேயே அமர்ந்து பார்ப்பதை விட. கேந்திரத்தில் அமர்ந்து பார்ப்பது நன்மை அளிக்கும். என்ன நன்மை..? அசுப கர்மங்களை செய்யவிடாமல். சுப கர்மங்களைச் செய்ய தூண்டும். அதேபோல உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான். கேந்திராதிபதியாக இருந்து கேந்திரத்திலேயே அமர்ந்து பார்ப்பதைவிட. திரிகோணத்தில் அமர்ந்து பார்ப்பது நன்மை அளிக்கும் . என்ன நன்மை.? அசுப கர்மங்களை அனுபவிக்க விடாமல். சுப கர்மங்களை அனுபவிக்க வைக்கும். இதுவே... உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான் திரிகோண அதிபதியாக இருந்து. மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து பார்த்தால். சுப கர்மங்களை அனுபவிக்க விடாமல் தடுக்கும். மேலும் உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான் கேந்திர அதிபதியாக இருந்து மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து பார்த்தால். அசுப கர்மங்களை செய்யத் தூண்டும். குறிப்பாக... சனி தன்னுடைய பார்வையினால் எப்பொழுது கெடுதலை செய்வார்... உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான் மறைவு ஸ்தான அதிபதியாக இருந்து. அங்கேயே ஆட்சியாக அமர்ந்து பார்த்தாலும் சரி. அல்லது தன் வீட்டிற்கு... மறைவு ஸ்தான வீடுகளில் அமர்ந்து பார்த்தாலும் சரி.. அல்லது ... ஒரு மறைவு ஸ்தான அதிபதி வேறொரு மறைவு ஸ்தானத்தில் அமர்ந்து...பார்த்தாலும் சரி... விபரீதமான குரூரமான மோசமான கருமங்களையே அனுபவிக்க வைக்கும்.. இப்பொழுது மனதில் ஒரு கேள்வி எழும். சனிபகவான் சுபத்துவமாக இருக்கும் பட்சத்தில் ஒன்றும் செய்யாது. என்று... உண்மைதான்.. ஆனால் அதில் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது.. சனி பகவானை எந்த கிரகம் சுபத்துவப்படுத்தி இருக்கிறதோ அந்த கிரகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு ஜாதகருக்கு அவருடைய பார்வையின் வழியே நன்மையை செய்வார். . இப்பொழுது மீண்டும் ஒரு கேள்வி எழும். சனியுடன் ஒரு சுப கிரகம் நெருங்கி இருந்து சுபத்துவ படுத்தினால் தானே இந்த பிரச்சனை.. சனி பகவானை பார்வையாலேயே ஒரு கிரகம் சுபத்துவப்படுத்தி இருந்தால்.? உண்மைதான்... குரு போன்ற சுப கிரகங்கள் தனது ஏழாம் பார்வையை தவிர்த்து.. ஐந்து ஒன்பதாம் பார்வையால் சனியை சுபத்துவப்படுத்தி இருக்கும் பட்சத்தில்.... சனிபகவான் அவருடைய பார்வையின் வழியே நன்மையைச் செய்வார்.. மேலும்... குரு பகவான் உங்களுடைய லக்னத்திற்கு எந்த ஆதிபத்தியத்திற்கு உரியவரோ அவர்களின் மூலம் அல்லது அவர்களின் தயவின் மூலம் மட்டுமே சனிபகவானால் நன்மையைச் செய்ய முடியும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
✡️ஜோதிட பரிகாரங்கள் - ShareChat