ராகு சகுனி...கேது நாரதர்...
சகுனியின் நன்மை கூட தீமையில் முடியும்.
நாரதரின் கலகம் கூட நன்மையில் தான் முடியும்.
ராகுவினால் கிடைத்தது.
தீயவர்களாலும்
தீய வழிகளினாலும்
தீய விஷயங்களுக்காகவும்
தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
கேதுவினால் கிடைக்காதது.
தீயவர்களாலும்.
தீய வழிகளினாலும்.
தீய விஷயங்களுக்காகவும்.
தீங்கு விளைவிக்க கூடியதிலிருந்து தடுக்கும்.
ராகுவின் குணத்தை தாழ்த்தியும்
கேதுவின் குணத்தை உயர்த்தியும்
சொல்வதற்கு காரணம் உண்டு.
ராகு போக காரகன்
கேது ஞான காரகன்
ராகு கொடுத்தால் போகத்திற்காகவே கொடுப்பார்.
போகம் நிலையற்றது.
போகம் புறநிலை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
போகத்தினால் எந்த அளவுக்கு மகிழ்ச்சி உண்டோ.!!
அதே அளவிற்கு தீமையும் உண்டு.
கேது தடுத்தால் ஞானத்திற்காகவே தடுப்பார்.
ஞானம் நிலையானது.
ஞானம் அகநிலை மகிழ்ச்சியையே
தரும்.
ஞானம் கிடைக்கப்பெறும் போது
எந்த அளவிற்கு துன்பம் உண்டாகிறதோ.?
அதைவிட அதிகமாக ...
இறுதியில் இன்பம் உண்டாகும்.
உன்னதமான மனிதப் பிறவியின் லட்சியங்களை மறக்க வைத்து போகத்தில் திழைக்க வைத்து.
ராகுவின் பிரம்மாண்ட
குணங்களால்..
மாயத்திரை போட்டு ஜாதகரின்
இயல்பு நிலையை மறக்க வைத்து
குறுக்கு வழிகளில் சென்றேனும்....
வெளியுலகத்திற்கு தெரியப்படுத்துவதும்
பிரபலப்படுத்துவதும்
ராகு பகவான்.
மனித பிறவியின் உன்னதமான லட்சியமான மோட்சத்தை அடைவது ஒன்றையே குறிக்கோளாக கொள்வதற்கும்...
மாயத்திரையை அகற்றுவதற்கும்
பேருதவி புரிவதே ...
கேது பகவான்.
அதனால்தான் ...
ராகு சகுனி.
கேது நாரதர்.
சுருக்கமாக...
ராகு தரும் மகிழ்ச்சி....
சகுனியின் சூழ்ச்சியின் மூலம்
உண்டாகக்கூடிய
நிலையற்ற மகிழ்ச்சி.
கேது தரும் மகிழ்ச்சி....
நாரதரின் கலகத்தின் மூலம்
உண்டாகக்கூடிய
நிலையான மகிழ்ச்சி.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628
#✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️
குரு சூரியன் சந்திரன் செவ்வாய் கேது
போன்ற அருள் அணிகிரகங்கள்
லக்னத்துடனும் லக்னாதிபதியுடனும்
ராசியுடன் ராசி அதிபதியுடன்
தொடர்பு பெற்றிருக்கும் பட்சத்தில்...
அருளையே நாடுவார்கள்.
இவர்களிடம் அருளே வந்து சேரும்.
சுக்கிரன் புதன் சனி ராகு
போன்ற பொருள் அணி கிரகங்கள்
லக்னத்துடனும் லக்னாதிபதியுடனும்ராசியுடன் ராசி அதிபதியுடன் தொடர்பு பெற்றிருக்கும் பட்சத்தில்...
பொருளையே நாடுவார்கள்.
இவர்களிடம் பொருளே வந்து சேரும்.
அல்லது...
ஒருவருடைய லக்னம்
பொருள் அணியாக இருந்து..
ராசி ...
அருள் அணியாக இருக்கும் பட்சத்தில்...
இவர்கள் வாழும் காலத்தில் பொருளும் உண்டு
அருளும் உண்டு
என்றாலும்...
அதே சமயம்....
இவர்களுடைய எண்ணம் அருளை தேடிக் கொண்டிருந்தாலும்...
இறுதியில் இவர்களிடம்
பொருளே
வந்து சேர்ந்திருக்கும் .
அதேபோல...
ஒருவருடைய லக்னம்
அருள் அணியாக இருந்து.
ராசி....
பொருள் அணியாக இருக்கும் பட்சத்தில்.
இவர்களுக்கும் தங்கள் வாழும் காலத்தில் பொருளும் உண்டு
அருளும் உண்டு
என்றாலும்...
அதே சமயம்....
இவர்களுடைய எண்ணம் பொருளை தேடிக் கொண்டிருந்தாலும்...
இறுதியில் இவர்களிடம்
அருளே
வந்து சேர்ந்திருக்கும்.
பொதுவாக...
பொருள் இல்லார்க்கு
இவ்வுலகில்லை.
அருள் இல்லார்க்கு
அவ்வுலகில்லை.
என்கிற பழமொழி உண்மைதான் என்றாலும்.
ஒருவர் ...
ஒன்றை தேடுவதும் தேடி அலைவதும் சிறப்பு அல்ல .
எது கிடைக்க இருக்கிறதோ
அதைத் தேடுவதே சிறப்பு.
உங்கள் ஜாதக #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628
ஆண்டி இங்கே
அரசனும் இங்கே
அடிமை இங்கே
அறிஞன் இங்கே
அஷடனும் இங்கே......
என்கிற பாடல் வரியை போல..
ஒருவருடைய ஜாதகத்தில்...
ஒரு பாவகத்தில்,
மூன்றிற்க்கும் மேற்பட்ட கிரகங்கள்
ஒரே நட்சத்திரத்தில்
ஒளிக் கலவையில்
கிரக யுத்தத்தில்
இருக்குமேயானால்........
அதற்குரிய தசா புக்தி காலகட்டத்தில்...
நிலையில்லாத
கலப்படமான.
ஒருவித
கலவையான.
குழப்பமான
தெளிவில்லாத
முடிவில்லாத
பலனையே தரும்.
இதன் காரணமாக
ஜாதகர்...
சில நேரத்தில் ஆண்டியைப் போலவும்.
சில நேரத்தில் அரசரைப் போலவும்.
சில நேரங்களில் அடிமையை போலவும்.
சில நேரங்களில் அறிஞனை போலவும்.
சில நேரங்களில் அஷடனை
போலவும்.
இதுபோன்று...
அனைத்தும் கலந்த கலவையான ..
மனநிலையையும்
வாழ்க்கை முறையையும்
குறிப்பிட்ட அந்த
கிரக சேர்க்கையில் இருக்கக்கூடிய
ஏதேனும் ஒரு தசாபுக்தியில்
மட்டும் தரும்..
மேலும் ...
குறிப்பிட்ட அந்த கிரக சேர்க்கையில்
லக்னாதிபதியும் சிக்கிக்கொண்டால்
மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பாதிப்பு
வாழ்க்கை முழுவதும் தொடரும்.
ஒருவேளை...
குறிப்பிட்ட அந்த கிரக சேர்க்கையில்
லக்னாதிபதி சிக்காமல்...
லக்னம் லக்னாதிபதி
சுப பலத்தோடு , வலுத்து இருக்கும் பட்சத்தில்...
கலவையான கிரக கூட்டத்தில் இருக்கக்கூடிய கிரகத்தின்
தசா புத்தியை
அனுபவித்தாலுமே.....
மரணத்திற்க்கு அருகில் சென்று வந்ததை போல..
ஞான விளிம்பை தொட்டவரை போல..
குழப்பத்தின் உச்சிக்குச் சென்று திரும்பியவரைப் போல..
எதையும் தாங்கும் இதயத்தோடு
பீனிக்ஸ் பறவையைப் போல..
தொடர்ந்து தங்களுடைய வாழ்க்கையை
கரடு முரடான சாலையை
கடந்த பிறகு....
சீரான பாதை தென்பட்டவுடன்
வாகனத்தின் சொகுசை.
சரியாக புரிந்து கொண்டு
உணர்வதை போல...
வாழ்க்கையின் உண்மை தன்மையை
உணர்ந்து ...
பொறுப்புடன் கடமை உணர்ச்சியுடன்
நிலையான வாழ்க்கையை
நல்ல முறையில் வாழ்வார்கள்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️
பொருந்தாத ஜோடிகள் திருமண பந்தத்தில் சேர்வது எதனால் எப்படி.?
ஆண் பெண்ணின்
ஜாதகத்தில் கிரக அடைவுகள் சரியில்லாத பட்சத்திலும்....
இவர்கள் இருவருக்கும் நடக்கக்கூடிய
தசா புக்தி ..
ஆண் பெண்ணை தம்பதிகளாக
ஒன்றிணைக்கிறது.
ஆண் பெண்ணிற்கு நடக்கக்கூடிய
தசா புக்தி.
சரி இல்லாத பட்சத்திலும்..
இவர்கள்
இருவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக அடைவுகள் தம்பதிகளாக ஒன்றிணைக்கிறது.
ஆண் பெண் இருவருடைய ஜாதகத்தில் உள்ள...
கிரக அடைவுகள் தம்பதிகளாக ஒன்றிணைத்தால்.
அடுத்து வரவிருக்கும்
தசா புக்தி அமைப்புகள் இருவரையும் இணைந்து வாழ விடாமல் தடுக்கும்.
ஆண் பெண் இருவருடைய ஜாதகத்தில் உள்ள...
தசாபுக்தி அமைப்புகள் தம்பதிகளாக ஒன்றிணைத்தால்.
கிரக அடைவு அமைப்புகள் இருவரையும் இணைந்து வாழ விடாமல் தடுக்கும்.
பொதுவாக இது போன்ற அமைப்பில் இணைந்த தம்பதிகள்...
திருமண பந்தத்தில் மட்டும் இணைத்து விட்டு...
வாழ்க்கை பயணத்தில் பலவித இன்னல்களை சந்திக்க வைப்பதால்...
வரன் பார்த்த ...
பெற்றோர்கள் மீதும்
பொருத்தம் பார்த்த...
ஜோதிடர்கள் மீதும்
கடுமையான கோபம் கொண்டாலும்.
உண்மையில் இது...
அவரவர் கர்ம வினைகளின் படி
இறைவனால் போடப்பட்ட முடிச்சு
என்பதே உண்மை..
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
கம்ப்யூட்டரை விட துல்லியமானது கர்மாவின் கணக்கு..
எந்த ஒரு வினைக்கும்
எதிர் வினை உண்டு..
அந்த வகையில்....
யாருக்கு எப்படி எந்த விதத்தில்
எந்த ரூபத்தில் எந்தப் பிறவியில்
கணக்கு நேர் செய்யப்பட வேண்டுமோ...
அதுவரை கர்மாவிடாது.
எனவே முடிந்தவரை
அவரவர் கர்மத்தை
அவசரப்படாமல்
அளவோடு அளந்து
சரியானவற்றை மட்டும்
செய்ய முயற்ச்சிக்க வேண்டும்.
நாளைய தேவைக்கு
சிறுசேமிப்பு உதவுவதை போல...
நாளைய சந்ததியினர் பயனடைவதற்க்கு
நற்கருமங்களை
செயலின் மூலம்
செய்து சேமியுங்கள்.
தர்மம் தலை காக்கும்
அதேசமயம்
நற்கருமங்கள்
சந்ததியையே காக்கும்.
யார் கண்டார்..
அதற்க்குறிய நற் பலனை
இந்தப்பிறவியில் அது உங்களுக்கே கூட கிடைக்கலாம்.
பொதுவாக
நற்கருமத்தின்
மூலம் கிடைக்கக்கூடிய புண்ணிய பலனின்
அருமையை
இளமையில் உணர்வது
இல்லை...
முதுமையும் தனிமையும்
வரும்போது
யாராவது தானாக
முன்வந்து நமக்கான தேவையை பூர்த்தி செய்து விட மாட்டார்களா...
என ஏங்கும்போது
தெரியும்
புண்ணியத்தின் அருமை...
நீங்கள் செய்த புண்ணியத்தின் பலனை அனுபவிக்கும்போது
கடவுள் உங்களுக்காகவே இறங்கி வந்து..
உங்கள் அருகிலேயே
இருப்பதைப் போல உணர்வீர்கள்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
7810022628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️
சூரிய சந்திரனுக்கு வக்கிர நிலை கிடையாது...
ராகு கேது எப்பொழுதுமே வக்கிர நிலையிலேயே இருக்கும்.
மீதமுள்ள ஐந்து கிரகங்களான...
குரு சுக்கிரன் புதன்
செவ்வாய் சனி
ஆகிய ஐந்து கிரகங்களுக்கு வக்கிர நிலை ஏற்படுவதுண்டு.
அந்த வகையில்..
இயற்கை சுப கிரகங்களான
குரு சுக்கிரன் புதனின் வக்கிர நிலையிலும்.
இயற்கை பாவ கிரகங்களான
செவ்வாய் சனியின் வக்கிர நிலைக்கான
பலன்களில்
வேறுபாடுகளும் மாறுபாடுகளும் உள்ளது..
அதாவது...
இயற்கை சுப கிரகங்களான
குரு சுக்கிரன் புதனின்
வக்கிர நிலையானது
தன்னுடைய காரகத்துவ பலனையும் ஆதி பத்திய பலனையும்....
நேர் எதிராக மாற்றித் தரும்.
அதேபோல..
இயற்கை பாவ கிரகங்களான
செவ்வாயும் சனியும் வக்கிர நிலையில் இருக்கும் பட்சத்தில்
தன்னுடைய காரகத்துவ பலனையும் ஆதிபத்திய பலனையும்
அதிதீவிரமாக தரும்.
அதிலும் சில முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன.
அதாவது...
இயற்கை சுப கிரகங்களானாலும்
இயற்கை பாவ கிரகங்களாக
இருந்தாலும்.
ஒருவருடைய லக்னத்திற்கு
நன்மை விளைவிக்க கூடிய
கிரகமாக இருந்து வக்கிரம் அடைந்திருக்கும் பட்சத்தில்
தீமையையும்.
அதேபோல தீங்கு விளைவிக்க கூடிய கிரகமாக இருந்து வக்கிரம் அடைந்திருக்கும்
பட்சத்தில் நன்மையையும்
செய்யும்.
மேலும்....
சுபரோ பாவரோ
இவர்கள் தங்களுடைய
உச்சவீட்டில் அமர்ந்து வக்கிரம் பெற்றிருக்கும் பட்சத்தில்
நீச்சநிலையை அடைவார்கள்.
மேலும்...
தன்னுடைய நீச்ச வீட்டில்
அமர்ந்து வக்கிரம் பெற்றிருக்கும் பட்சத்தில்
உச்சநிலையை அடைவார்கள்.
குறிப்பாக
ஒரு கிரகம் வக்கிரமடைந்திருந்தாலும்
அதனுடைய பார்வை பலனில்
மாற்றம் இருக்காது..
மேலும் பொதுவாக
எந்த ஒரு கிரகமும் வக்கிர நிலையில் இருந்தாலும் அதன் தாக்கமானது ...
அவர்களுடைய தசா புத்தி காலத்திலேயே வெளிப்படும்.
கூடுதல் தகவலாக...
வக்ர கிரகங்களான
ராகு கேதுவுடன்
வக்கிர நிலையில் இணைந்து இருக்கக்கூடிய
ஒரு கிரகம்.!!
அதன் தசாபுத்தி காலத்தில்
நன்மையையே செய்யும்.
அனைத்திற்கும் மேலாக....
ஒரு கிரகம் வக்கிரமடைந்து நன்மையை செய்தாலும்
வக்கிரமடையாமல் நன்மையை செய்தாலும்.
அதற்குரிய கொடுப்பினை ஜாதகருக்கு இருக்க வேண்டும்.
மேலும்
நற்பலனை தக்க வைத்துக் கொள்ளக்கூடியதான அமைப்பில்...
குறைந்தபட்சம் லக்னம் லக்னாதிபதி பாவத்துவம் அடையாமல் இருக்க வேண்டும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 226 28 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள்
https://www.facebook.com/share/p/1DYvWrzUCF/ #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ கேது பகவானைப் பற்றி
இரண்டு வரிகளில் அறிய
வேண்டுமானால்...
""உடைமை எதுவுமற்ற"" நிலையில்,.!!
"தன்னை" தான்.
உணர்தலே"" முக்தி.!!
என்பதை உணர கற்று தருபவர் கேது பகவான்.
இதை சற்று விளக்கமாக பார்த்தால்....
நவகிரகங்களில் கேதுவே "ஞானகாரகன்" ...
ஆசைகள், பற்றுகள் மற்றும் உலகியல் ரீதியான அடையாளங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி எறியும் போது,...
எஞ்சியிருக்கும் "ஆத்மாவை" உணர வைப்பதே
கேது பகவானின் வேலை.
சுருக்கமாகச் சொன்னால்....
வெளியுலகத் தேடலை
நிறுத்தவைத்து...,
உள்நோக்கிய தேடலில்
ஈடுபட வைத்து
அதில் நிலை நிறுத்துவதுதான்...
கேதுவின் தத்துவார்த்தமான
அடிப்படை வேலை...
கேதுவின் இந்தத் தத்துவமானது...
உங்கள் ஜாதக ரீதியாகவோ.!! அல்லது
உங்களின் ஆன்மீக பயண ரீதியாகவோ.!!
எந்த வகையில் வேண்டுமானாலும்
ஒருவரிடம் இதுபோன்ற
தாக்கத்தை ஏற்படுத்துவார்
கேது பகவான்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628
#followersシ゚
#philosophy
#God
#hilights
#shiva
#ganapathi
#kethubhagavan
குழப்பங்களும் கொடுமைகளும் தீராத மனக்கவலைகளும்
திடீர் பிரச்சனைகளுமே
ஒருவரை ஜாதகம் பார்க்க தூண்டுகிறது..
பொதுவாக...
9 கிரகங்களின் தசா காலங்களும், அவற்றினுள்
வரும் புத்திகளுமே ஒருவரின் வாழ்க்கையின் மேடு பள்ளத்தை
தீர்மானிக்கின்றன.
அதிலும் குறிப்பாக..
ஒரு ஜாதகத்தில் 6, 8, 12 ஆகிய மறைவு ஸ்தான அதிபதிகளின் தசா புத்திகள் நடக்கும்போது குழப்பங்களும் கொடுமைகளும் தீராத மனக்கவலைகளும்
திடீர் பிரச்சனைகளும்
உருவாக கூடும்
என பொதுவாக கருதப்படுகிறது.
இருப்பினும் இதுபோன்ற
கடுமையான பலன்களை
மறைமுகமாக தரக்கூடிய
தசா புத்திகளும்
இருக்கவே செய்கின்றன.
அவற்றில்...
பொதுவாக...
ராகு தசை - சனி புத்தி:
சனி திசை - ராகுபுக்தி:
இது ஒரு நிழல் கிரக தசையில் வரக்கூடிய இருள் கிரகத்தின் புத்தி.
இருள் கிரக தசையில் வரக்கூடிய நிழல் கிரக புத்தி.
என்பதால்....
மனக்குழப்பம், வீண் பழி, தொழில் முடக்கம் மற்றும் வியாதிகள், அதன் மூலம் குடும்பத்தில் விரையங்கள் மற்றும் வழக்குச் சிக்கல்களில் பின்னடைவையும் அவமானத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
என்கிற ரீதியிலான பொதுவான பிரச்சனைகளையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.
செவ்வாய் தசை - சனி புத்தி:
சனி திசை - செவ்வாய் புத்தி:
இது இரு பெரும் பகை கிரகங்களின் தசா பத்தி என்பதால் நெருப்பு அல்லது கூர்மையான ஆயுதங்களால் பாதிப்பு,
அல்லது கடுமையான உடல் உபாதைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் அதிகாரிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு மோதல்கள் திடீர் விபத்து
சகோதரர்களுடன் பகை மற்றும் அதன் மூலம் சொத்து இழப்புகளைத் தரலாம்.
ராகு தசை - செவ்வாய் புத்தி:
செவ்வாய் தசை- ராகு புத்தி:
இந்த காலகட்டத்தில்..
சட்டச் சிக்கல்கள், வில்லங்கங்கள் அதன் மூலம் சிறைவாசம் அல்லது திடீர் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது.
சூரிய தசை - சனி புத்தி:
சனி திசை - சூரிய புத்தி:
இந்த காலகட்டத்தில்
தந்தை-மகன் உறவில் விரிசல், அரசாங்க ரீதியான கெடுபிடிகள்
வழக்கு பற்றிய பயம்.
மற்றும் கௌரவக் குறைச்சல் ஏற்படலாம்.
மேலும் கண் கோளாறுகள், இதய நோய்கள் மற்றும் வேலையில்
திடீர் இடமாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும்.
புதன் தசை - கேது புத்தி:
கேது தசை - புதன் புத்தி:
கல்வியில் தடை, நரம்புத் தளர்ச்சி, தோலில் ஒவ்வாமை மற்றும் தவறான திடீர் முடிவுகளால் பொருளாதாரம
நஷ்டம் ஏற்படலாம்.
அல்லது நண்பர்கள் தாய் மாமன்
போன்ற நெருங்கிய நபர்களாலும்
உறவினர்களாலும் ஏமாற்றப்படுதல், மன உளைச்சல் மற்றும் புத்தி தடுமாற்றம் புத்தி பேதலிப்பது
போன்ற எதிர்பாராத நிலைகளைத் தரும்.
குரு தசை - ராகு புத்தி:
ராகு தசை - குரு புத்தி:
குழந்தைகளின் வழியில் கவலை, பெரியோர்களிடம்
அதிருப்தி மற்றும் தேவையற்ற
பொருளாதாரப் பிரச்சினைகள் சிக்கல்கள் ஏற்படலாம்
மேலும் இது இந்த காலகட்டத்தில்
குரு சண்டாள யோகம்
போலச் செயல்படக்கூடும்.
அதாவது
ஒழுக்கக் குறைவான செயல்களில் ஈடுபடத் தூண்டுதல் அதன் மூலம் செல்வம் ஈட்டுதல்
மற்றும் தெய்வ நிந்தனை போன்ற செயல்களில் ஈடுபடுதல்.
அதன் மூலம்
பலரின் சாபத்திற்கு
ஆளாகுதல் போன்றவற்றை தானே வலிய சென்று ஏற்படுத்திக் கொள்ள வைக்கும்.
பொதுவாக...
6, 8, 12 அதிபதிகளின்
தசா புத்திகள் என்பது....
6-ம் அதிபதியின் தசா புத்தியில்
கடன், நோய், எதிரி
போன்றவற்றை உருவாக்கும்.
8-ம் அதிபதியின் தசா புத்தியில் கடன், நோய், அவமானம்,
திடீர் கண்டம்
போன்றவற்றை உருவாக்கும்.
12-ம் அதிபதியின் தசா புத்தியில்
தூக்கமின்மை,
மருத்துவ செலவு ,
தொழிலில் தேவையற்ற விரயம்,
புதிய முதலீடுகளில் விரயம்,
கடன் வாங்கி கடன் கட்டுவதால் ஏற்படக்கூடிய வட்டி விரயம்....
அளவுக்கு அதிகமான சட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டு சிறை செல்வது...
இதுபோன்று ....
இந்த 6,8,12 தசா புத்தி காலங்களில்
இது போன்ற நிலைகளை
அனைவருக்குமே ஏற்படுவதில்லை....
பொது விதியும்
சுபத்துவ பாவத்துவ அமைப்பின்படி
விதி விலக்குகள் உண்டு
என்பதைப் போல தான்
இந்த பதிவில் நான் கூறியிருக்க கூடிய
தசா புத்தி காலங்களிலும்
விதிவிலக்குகளும்
உண்டு.
அதை ஒரு ஜோதிடர் தங்களுடைய அனுபவத்தினால் கண்டறிந்து ஜாதகரிடம் எடுத்துரைக்கும் போது தான்
குழப்பம் அகன்று
நிம்மதி பெருகி
ஜாதகரிடம் மகிழ்ச்சி பொங்குகிறது.....
#🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️தோஷ பரிகாரங்கள்
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
78100 22628
ராகு கேதுவை பற்றி
ஒரு பார்வை...
ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களும் தங்கள் தசா புத்தி காலங்களில்...
ராகு கேது நின்ற வீட்டின் அதிபதி ....
அதே இடத்தில் ஆட்சி பெற்று இருப்பதை விட ..
அந்த வீட்டு அதிபதி தன் வீட்டை தானே பார்க்கும் பட்சத்தில்..
அந்த வீட்டின் ஆதிபத்திய பலனை சிந்தாமல் சிதறாமல் முழுமையாக பிரதிபலிப்பார்கள்.
ராகு கேது அமர்ந்த வீட்டு அதிபதிகள் ஆட்சி பெற்ற நிலையில் ராகு கேதுவுடன் அதே இடத்தில் இருந்தால்.?
அந்த வீட்டு பலனை கூட்டியும் குறைத்தும் அல்லது முழுமையாக செயல்படாமல் இருக்க வைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது..
மேலும் முக்கியமாக..
இவர்களுடைய தசாபுத்தியில் கவனிக்க வேண்டியது
இவர்கள் அமர்ந்த வீட்டு அதிபதி
ஆட்சி பெற்ற நிலையில் இவர்களுடன் அமர்ந்திருந்தாலும்...
இவர்களுடைய தசா புத்தி காலத்தில்...
இவர்கள் அமர்ந்த வீட்டு அதிபதியை போல முதலில் செயல்படாமல்..
இவர்களைப் பார்த்த
கிரகத்தின் ஆதி பத்திய பலனையே இவர்கள் அமர்ந்த வீட்டின் வாயிலாக தருவார்கள்.
உதாரணமாக,.
சிம்ம லக்ன ஜாதகருக்கு
இரண்டாம் வீட்டில்
ஆட்சி பெற்ற புதனுடன் ராகு கேது இருந்தாலும்...
சிம்ம லக்கினத்திற்கு 12 ஆம்
அதிபதியான
சந்திரனின்
பௌர்ணமி அதியோகப் பார்வை கிடைக்கும் போது..
பனிரெண்டாம் பாவக
பலனான
வெளிநாடு வாய்ப்புகளை தந்து
இரண்டாம் வீட்டின் வாயிலாக
இரண்டாம் வீட்டின் பலனான
இரண்டாம் வீட்டில் அமர்ந்த
ராகு கேது
கல்வியையும் தனத்தையும் திருமணத்தையும்
ஏற்படுத்தி தருவார்கள்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp
7810022628
#✡️தோஷ பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை











