#மாஞ்சோலை எஸ்டேட் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #தோழர் திருமுருகன் காந்தி
#📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழக அப்டேட்🗞️ #தமிழ்நாடு தமிழருக்கே! #தோழர் திருமுருகன் காந்தி
#🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #தோழர் திருமுருகன் காந்தி #💪 மே17 இயக்கம் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
இன்று 2.2.2026 மாலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் தோழமைகள் சந்தித்தோம்.
இன்று, 2.2.2026 முற்பகலில் மயிலாடுதுறை மாவட்ட பகுதியில், இரண்டு முறை குண்டுகள் வெடிப்பது போன்று பலத்த ஓசை கேட்டது. இந்த அதிர்வில் பல இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன. சில வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கிவிட்டன. சில வீடுகளில் கதவுகளில் வீறல் ஏற்பட்டுவிட்டன. இத்தகைய பலத்த ஓசை அவ்வப்போது கேட்டு வருகிறது.
மேற்படி குண்டு வெடிப்பு சத்தம் ONGC நிறுவனத்தின் நில அதிர்வு சோதனை காரணமாக எழுவதாகக் கருதுகிறோம். சிலர் அது ஜெட் விமானம் செல்வதில் Air Release காரணம் என்று அவரவர் கற்பனைக்கு ஏற்ப பதில் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து எங்களுக்கு தெளிவுபடுத்துமாறு கோரினோம் .
மேலும், பலருடைய வீட்டுச் சுவர்கள் வெடிப்பு ஏற்பட்டதற்கும், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததற்கும் இந்திய விமானப்படை ஜெட் காரணமானாலும் சரி, ஓ.என்.ஜி.சி.யின் நில அதிரிவு சோதனை காரணமானாலும் சரி, சம்பந்தப்பட்டவர்களால் முறையாக நட்ட ஈடு தரப்பட வேண்டும். நட்ட ஈட்டை எப்படிப் பெறுவது என்பது குறித்தும் தெளிவுபடுத்த மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினோம்.
மாவட்ட ஆட்சியருக்கும் பலத்த ஓசை எழுந்தது குறித்து அலுவலகத்தில் கூறி இருந்திருக்கிறார்கள். எங்கள் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் எந்தப் பகுதியில் அப்படிப்பட்ட சத்தம் எழுந்தது என்பது குறித்து விசாரித்தறிவதாகக் கூறியிருக்கிறார். ஜன்னல், கதவுகள் பாதிப்புகள் குறித்த பதிவுகளை அளிக்குமாறும, சம்பந்தப்பட்ட மக்கள் நேரில் சந்திக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார். இப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை காண இயலும் என்று நம்புகிறோம்.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம், தமுமுக, விசிக, மக்கள் நீதி மய்யம், மதிமுக, ம.ம.க உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் சந்திப்பில் பங்கேற்றார்கள்.
Perasiriyar Jayaraman
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
02.02.2026 #மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு #பேராசிரியர் ஜெயராமன் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு
#📺அரசியல் 360🔴 மிக கடுமையான உளைச்சலை Epstein-ன் ஆவணங்கள் ஏற்படுத்துகிறது.
காமம், வக்கிரம் ஆகியவை ஒருபுறம் என்றால் உலக அதிகார மையங்கள் கொண்டிருக்கும் அருவருப்புகளின் உச்சம் ஒருபுறம் என்றால், மனிதக் கறி உண்ணும் சடங்கு உள்ளிட்ட பல சடங்குகள் இங்கு இருந்திருக்கிறது என்பது ஒருபுறம் என்றால் உலக அரசியலின் முக்கியமான கட்டங்களும் பல நாடுகளின் அரசியலும் இத்தகைய இடங்களில்தான் கட்டமைக்கப்படுகிறது என்பது ஒருபுறம் என்றால் நோம் சாம்ஸ்கி போன்ற அறிஞர்களும் இந்த மானுட அவலத்துக்கு துணையாக இருந்திருப்பது இன்னொரு புற அதிர்ச்சி.
அமெரிக்க தலைமை தன்னை ஏற்க வேண்டுமென மோடி தூது அனுப்பியது இந்தக் கூட்டத்தைதான். மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு தேவைப்படுகிற ஒருங்கிணைப்பை உருவாக்க இஸ்ரேல் சார்பாக அமெரிக்க தரப்புக்கு இந்த கூட்டத்தின் வழியாகதான் மோடி சென்றிருக்கிறார். இவற்றுக்கான அன்பளிப்புகளில் ஒன்றுதான் இஸ்ரேலிடமிருந்து பெற்ற பெகாசஸ் உளவுசெயலி. இந்த உளவுசெயலி மூலமாக இன்றும் சிறையில் வாடும் உமர் காலீத் போன்ற பல செயற்பாட்டாளர்கள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள் என்கிற உண்மைதான், எப்ஸ்டீன் வெறுமனே பாலியல் குற்றவாளியோ தரகனோ மட்டுமில்லை என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
பைசாண்டிய சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம் போன்ற ஆட்சிகளில் உள்ள மேட்டுக்குடிகள் தங்களுக்கென பிரத்யேக பாலுறவு இச்சைகளை உருவாக்கி அவற்றுக்கான பாலின வகைகளையும் உருவாக்கி பாலியியல் அடிமைகள் என்கிற பண்பாட்டை உருவாக வழிவகை செய்தார்கள்.
உலகில் மனிதர்கள் துய்க்கும் அனைத்தையும் துய்க்க முடிகிற சமூக அதிகாரத்தில் இருப்பவர்கள், அவற்றை தாண்டி தங்களின் இச்சைகளை விரிவடைய செய்யும்போது இத்தகைய வக்கிரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் சாமானியர்களுக்கு இருக்கும் வாழ்க்கை மற்றும் வழக்கங்களில் இருந்து முற்றிலும் வேறு வழக்கங்களை தங்களுக்கு உருவாக்கி, தனித்துவம் வாய்ந்தவர்களாகவும் சிறப்பு சலுகை வாய்த்தவர்களாகவும் ஆக்கிக் கொள்கிறார்கள்.
இயற்கையான மற்றும் சமூகப்பூர்வமான மனித வழக்கங்களிலிருந்து வேறு வழக்கங்களை வரித்துக் கொள்வதன் மூலம் சமூகத்துக்கு மேலே, உயரத்தில் அந்தரத்தில் மிதக்கும் சக்தி பெற்றவர்களாக தங்களை வரித்துக் கொள்கிறார்கள். இத்தகைய வரித்துக் கொள்ளுதல் என்பது ஒரு வகை அதிகாரம்தான். இதனால்தான் இவர்கள் எப்போதும் சாமானிய மனிதர்களை விரும்புவதில்லை. ஒடுக்குமுறை அதிர்ச்சியை தருவதில்லை. போர்களும் இவர்களுக்கு அலுப்பதில்லை.
உலக அதிகாரம், வணிகம், அரசியல் யாவும் இந்த அதிகார முற்றங்களில் தீர்மானிக்கப்படும் அவலம்தான் இதிலுள்ள வக்கிரங்களில் எல்லாம் வக்கிரம். இதற்குள் இருந்துதான் தற்கால அறிவுஜீவிகளும் கலைஞர்களும் தங்களுக்கான வெற்றிகளை வடிவமைத்து கொள்ள வேண்டும் என்பது அவர்களையும் இக்குற்றத்தின் பங்குதாரர் ஆக்குகிறது.
சோவியத் யூனியனை கடுமையாக விமர்சிக்கும் நோம் சாம்ஸ்கி, தனக்கான சிறப்பு சலுகைகளை அதிகார மட்டங்களில் பெறவென எப்ஸ்டீனின் ஆதரவாளராக மிஞ்சிப் போன பிறகு, அவரின் வார்த்தைகள் யாவும் அர்த்தமிழக்கின்றன.
இதிலுள்ள அரசியல் பக்கம் என்னவென்றால் இவை யாவும் அமெரிக்காவின் உளவுத்துறைக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. பிரிட்டனின் அரசுக்கும் தெரிந்திருக்கிறது. பில் கேட்ஸ் உள்ளிட்ட உலக பொருளாதார கர்த்தாக்கள் (!) இந்த கூட்டத்தில் இருந்துதான் தங்களின் வளர்ச்சியை பெற்றிருக்கின்றனர். அமெரிக்க உருவாக்கிய சவுதி அரசு தொடங்கி இந்த எப்ஸ்டீனின் இந்த தீவு முழுமையும் ஏதோவொரு வகையில் இஸ்ரேலுக்காக இயங்கி இருக்கிறது. முதலாம் புஷ் தொடங்கி, ஸ்டீபன் ஹாக்கிங், நோம் சாம்ஸ்கி, அமெரிக்க சார்பு அரபு தலைவர்கள் யாவரும் இங்கு உறுப்பினர்கள்.
எப்ஸ்டீன் ஒரு யூதர். அவருடன் இயங்கிய கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் ஓர் அரை யூதர். இவரின் தந்தை மொசாதில் பணிபுரிந்தவர் என சொல்லப்படுகிறது. கடலில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட அவர், மொசாத்தால் கொல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் சுற்றுகிறது. ஒரு வகையில் எப்ஸ்டீனும் இஸ்ரேலுக்குதான் இயங்கி இருக்கிறார். அவரும் மொசாத்தாக இருக்கலாம். அவருடைய மரணத்திலும் மர்மம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா-இஸ்ரேல்-பிரிட்டன்-ஐரோப்பா என்கிற உலக ஒழுங்கை பொருளாதார ரீதியாக முதலாளித்துவம் இணைத்தாலும் உள்ளூர முதலாளித்துவம் உருவாக்கும் மனித விரோத வக்கிரங்கள் ஒருங்கிணைந்து செயலாற்றி இருக்கின்றன என்பதற்கு எப்ஸ்டீன் குறித்த ஆவணங்கள் மற்றுமோர் உதாரணம்.
உலகம் முழுக்க கடுமையான எதிர்பிரசாரம் செய்யப்படும் சீன அதிபரோ ரஷிய அதிபரோ வடகொரிய கிம்மோ ஈரானின் கமேனியோ ஈராக்கின் சதாமோ லிபியாவி கடாபியோ இந்த கூட்டத்துக்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'வணக்கம் வைக்காத ராணுவத் தளபதியை கண்டதுண்டமாக வெட்டினார் கிம்' என்றும் 'கட்சியில் கேள்வி கேட்டவரை காணாமலடித்த ஜி ஜிங்பிங்' என்றும் மாதத்துக்கு ஒருமுறை கதை கட்டும் சிஐஏவும் அமெரிக்க ஊடகங்களும் அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் எப்ஸ்டீன் இத்தனை காலம் தப்பித்திருக்க முடிந்ததற்கு யாரெல்லாம் காரணம் என்பது பற்றி ஒரு பத்தி கூட வெளியிட்டதில்லை.
முதலாளித்துவம் முன் வைக்கும் நுகர்வு மிகுதி, சிறப்பு சலுகைகள் மற்றும் கட்டற்ற அதிகார வெறி யாவும் மனிதனின் அடி ஆழத்தில் இருக்கும் அற்பங்களை தட்டியெழுப்பி விடுகிறது.
சிக்மண்ட் ப்ராய்டின் உளப்பகுப்பாய்வு உயிர்ப்பு கொள்ளும் இருண்ட இடங்கள்தான் எப்ஸ்டீனின் தீவு போன்ற இடங்கள்.
Squid Games தொடரில் காட்டப்படும் கொடூரங்களை காட்டிலும் பெரும் கொடூரங்கள் எப்ஸ்டீனின் தீவில் அரங்கேறி இருக்கிறது. எப்ஸ்டீனை போல மைக்கேல் ஜாக்சனும் ஒரு தீவு வைத்திருந்தார். இன்னும் இது போல் எத்தனை வெளிவராமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன எனத் தெரியவில்லை.
ஆனால் நமக்கு அமெரிக்காதான் சுதந்திரம் போற்றும் நாடு, முதலாளித்துவம்தான் உலகம் உய்வதற்கான தத்துவம், மோடிதான் ஆகச்சிறந்த இந்தியப் பிரதமர்!
Rajasangeethan அவர்களின் பதிவு #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️
#🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார் #அரசியல் மீம்ஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
"அட என்னப்பா நீ..? போகப்போறது #பெரியார்! கப்பலை நிக்கச்சொல்லி மத்தியானமா எடுக்கச் சொல்வோம்! போ போ.. காலையில வா..!" என்ற #காமராசர்
"1956-ஆம் ஆண்டு காமராசர் முதலமைச்சராக இருந்த காலகட்டம். தந்தை பெரியாருக்கு மலேசியா, -சிங்கப்பூர் நாடுகளில் இருந்து அழைப்பு வந்தது.
சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழின் ஆசிரியர் கோ.சாரங்கபாணி அவர்கள் அய்யாவை அழைக்க ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
முதலில் பர்மாவுக்கு போய் பின்னர் அங்கிருந்து மலேசியாவின் பினாங்கு பிறகு சிங்கப்பூர் என பயணம் செய்வதாக திட்டம்.
அய்யாவுடன் அவரின் உறவினர்கள் ஆனைமலை நரசிம்மன், அவரது சகோதரி ராமகிருஷ்ணம்மாள், தவமணியம்மை, நான் ஆகிய அய்ந்து பேரும் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விசாவைப் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனிக்குப் போய் அய்ந்து பேருக்கும் டிக்கெட் எடுத்தோம்.
எஸ்.எஸ்.ரஜூலா என்கிற அந்த புகழ்பெற்ற கப்பல் கம்பெனிக்காரர்கள் டிக்கெட் கொடுக்கிற போதுதான்..
'நீங்கள் அய்ந்து பேரும் பயணம் செய்ய வேண்டுமானால் மாநில அரசாங்கம் கொடுக்கும் நோ அப்செக்சன் சர்டிபிகேட் எடுக்க வேண்டும்!' என்று குண்டை தூக்கி போட..
இது என்னடா புதுக்கரடி? என்று நான் ஆடிப்போனேன். டிக்கெட் கைக்கு கிடைக்கும்போதே மாலை 6 மணி ஆகிவிட்டது.
மறு நாள் காலை 7 மணிக்கு கப்பலில் புறப்பட வேண்டும். இரவு ஒரே ஒரு பொழுதுக்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் சான்றிதழில் சீல் பெற்றாக வேண்டும்.
கோட்டையில் எல்லோரும் வீட்டுக்குப் போயிருப்பார்கள். 'நாளை காலையில் கப்பலில் புறப்பட்ட மாதிரிதான்' என்று கவலையோடு நான் பெரியாரின் வீட்டுக்கு வந்தேன்.
மணியம்மையும், கிருஷ்ணம்மாளும் பயணம் புறப்படுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தனர். பெட்டி படுக்கைகள் கட்டி தயாராக வைக்கப்பட்டிருந்தன.
இந்த பரபரப்பைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் படாமல் தந்தை பெரியார் எப்போதும்போல படித்துக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்!
நான் மிகவும் சோர்ந்துபோய் வருவதைக் கண்ட மணியம்மை விபரம் கேட்டார். நிலைமையை எடுத்துச் சொன்னேன். சற்று யோசித்த மணியம்மை,
"நீ உடனே முதலமைச்சர் காமராஜரை போய்ப் பார். அவரால் உடனே ஏற்பாடு செய்ய முடியும். அய்யாகிட்டே இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதே. அவர் சத்தம் போடுவார். முதலைமைச்சருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாதென்பார்" என்று சொன்னார்.
நான் இரவு 8 மணி அளவில் காமராஜரின் திருமலைப்பிள்ளை சாலை வீட்டுக்குப் போனேன். காமராஜரிடம் நடந்ததை சொன்னேன்.
காமராஜரோ "இதற்கு நீ ஏன் இவ்வளவு அலைஞ்சே? என்கிட்டே சொல்லி இருந்தால் பாஸ்போர்ட்லேருந்து மற்ற எல்லா ஏற்பாடுகளையும் நானே செய்து இருப்பேனே.. சரி நீ நாளைக்கு காலைல பத்து மணிக்கு வா. நான் சீல் போட்டு கொடுக்க சொல்றேன்" என்றார்.
நான் தயங்கியபடி மெல்ல, "கப்பல் காலை 7 மணிக்கு. ராத்திரிக்குள் சீல் போட்டு வாங்கினாத்தான்" என்றேன்.
காமராஜர் உடனே "அட என்னப்பா நீ..? போகப்போறது பெரியார்! வேற யாரும் சாதாரண ஆளில்லை. கப்பலை நிக்கச்சொல்லி மத்தியானமா எடுக்கச் சொல்வோம்! போ போ.. காலைல வா!" என்றார்.
இதெல்லாம் நடக்கிற காரியமா என எனக்கு மலைப்பாகத் தோன்றியது. நான் தயக்கத்தோடுதான் அவர் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தேன்.
அடுத்த நிமிடமே முதலமைச்சர் காமராஜர் அங்கிருந்த உதவியாளர்களிடம் "ரஜூலா கப்பல் சதக் தம்பி மரைக்காயருக்கு போனைப் போடு" என்றார்.
தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் கொடுத்தனர். "இந்தாப்பா நாளைக்கு பெரியார் பர்மாவுக்கு போறாரு. அவருக்கு அரசாங்க அனுமதி 12 மணிக்குத்தான் கெடைக்கும். அவர் கப்பலுக்கு வந்து சேர 1 மணி ஆயிடும். நீங்க என்ன பண்றீங்க.. நாளைக்கு மட்டும் கப்பல் மதியம் ரெண்டு மணிக்கு எடுங்க. பயணிகளிடம் முன்கூட்டியே அறிவிச்சிடுங்க. மற்ற பயணிகளுக்கும் தொல்லை இருக்காதில்லையா.. ஞாபகம் இருக்கட்டும்.. போறது நம்ம பெரியார்.. புரியுதான்னேன்" என்று உரிமையோடும் அதிகாரத்தோடும் பேசிவிட்டு வைத்தார்.
பின்னர் என்னைப் பார்த்து, "என்னய்யா இப்போதாவது தைரியம் வந்துச்சா.. நீ பொறப்படுப்பா.. கவலையே படாதே.. கப்பலையே நிறுத்திப் புடுவோம்!" என்றார்.
மறுநாள் காலையில் சொன்னது போலவே எல்லா இடத்திலும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார். எனக்கு ராஜ மரியாதையோடு வேலைகள் நடந்தன. பகல் 12 மணிக்கெல்லாம் நான் வெற்றியோடு வீடு திரும்பினேன்.
காமராஜர், "இதை எல்லாம் பெரியார்கிட்ட போய்ச் சொல்லிகிட்டு இருக்காதே. அவருக்கு இதெல்லாம் கொஞ்சம்கூட பிடிக்காது.. என்ன புரியுதான்னேன்" என்றார்.
அதிகாரமோ பதவியோ ஏதுமில்லாத ஒரு சாதாரண மனிதனுக்காக கடலில் கப்பல் காத்துக் கிடந்தது. நாங்கள், தலைவர் காமராஜரின் பெருந்தன்மையை நினைத்துப் பூரித்தபடி பயணம் கிளம்பினோம்."
-முன்னாள் அமைச்சர் க.இராசாராம் #🚨கற்றது அரசியல் ✌️ #பெரியார் #தமிழ்நாடு தமிழருக்கே!
#அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #🎙️அரசியல் தர்பார்
இவ்வுலகில் மனிதர்களின் இருத்தலை அச்சுறுத்தும் மூன்று முக்கிய அபாயங்களில் ஒன்றாக ‘நெகிழி மாசு’ அறிஞர்களால் வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் மனித குலத்தின் வரமும் சாபமுமாக இருக்கும் இந்தப் பொறியிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சிகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் ஜனவரி மாதம் ‘உலக கழிவற்ற மாதமாக’ சிறப்பிக்கப்படுகிறது.
‘நெகிழி மாசற்றத் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பின் மூலமாக குப்பை மேலாண்மைப் பிரச்சினையை எதிர்கொள்ளப் பணியாற்றும் பூவுலகின் நண்பர்கள் குழுவானது, இதனையொட்டி இரண்டு நிகழ்வுகளை நடத்துகிறது.
முதல் நாள் இணைய வழி நிகழ்வு நெகிழிப் பிரச்சினைக்குத் தீர்வுகளை விவாதிப்பதாகவும், இரண்டாம் நாள் அரங்க நிகழ்வு நெகிழிப் பிரச்சினைக்கு முன்வைக்கப்படும் போலியான தீர்வுகளை அம்பலப்படுத்துவதாகவும் அமைகிறது. வாய்ப்புள்ளவர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு நெகிழி மாசில்லா தமிழகத்திற்கான கனவை நனவாக்கும் பயணத்தில் எங்களோடு இணைய வேண்டுகிறோம்.
முன்பதிவு செய்ய:👇🏾
https://forms.gle/n87PnWGayvt2CTLZA
#internationalzerowastemonth #plasticfreetn #🚨கற்றது அரசியல் ✌️ #சுற்றுச்சூழல் அரசியல் #பூவுலகின் நண்பர்கள் அமைப்பு #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு தமிழருக்கே!











