
அம்மை ஆச்சி நேசன்
@432439658
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
ஆட்கொள்வாய் நீ என்று அனுதினம் உம்மை போற்றுகின்றேன்
மாற்றம் அருள்வாய் மங்கள தாயே மாகாளியே என்று நின் மகிமைக்கு ஏங்குகின்றேன்
குணம் மூன்று கொண்ட நீ எம் குறைகளை பாராமல் குல மகளே கோமதியே
வளமும் நலமும் வற்றாத நின் திருவருளும் அருள்வாய் வள்ளலே அம்மை ஆச்சியே
(ஜெயவீரபத்திரன்) #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில்
உள்ளத்தில் உண்மையான பக்தி இல்லை உன் திருவடி நாடி வர உடலில் சக்தியும் இல்லை
நின் அருள் பெற்ற அடியவர்கள் வழி காட்டுதலும் இல்லை அடியவர்களை நாடி ஆட்கொள்ளூம் அரனின் நாயகியே ஆவுடையே அன்னை கோமதியே
என் அம்மை ஆச்சியே அடியேனை ஆட்கொள்வாயே
(ஜெயவீரபத்திரன்) #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம்
அதோ அந்த குயிலின் குடில்
*BSN 2 *
சோலைகளில் வாழும் இசைக்கும் குயில்
கூடு விட்டு
இவ் குடிலில் வந்து
இசைத்ததோ நீர்
அதை கேட்டீரோ
ஆம் என்றேன்
உற்று நோக்கினாள்
உஷ்ணத்துடன்
ஆனால் எனக்கு பாதம் வரை
குளிர் பொதிகையில்
தீண்டியது போல் உணர்ந்தேன் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில்
காலனை காலால் உதைத்து காதலுடன் கால் விரலால் அரக்கனை அடர்த்தி
மலர் கணையனை மாயக்கண்ணால் எரித்து மண்ணை தின்ற மாயவனை
மலரடி தேட வைத்து
எண்ணிலா அடங்கா அற்புதங்கள் அடியவர் மூலம் நிகழ்த்தும் ஏகனே ஈசனே
சொல்லில் அடங்கா துயரோடு வாழும் எளியேனை ஆட்கொள்வாயே
அம்மை ஆச்சி நேசனே ஆலவாய் அய்யனே நின் திருவடிகள் போற்றியே
(ஜெயவீரபத்திரன்) #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
அதோ அந்த குயிலின் குடில்
*BSN 1*
தயக்கத்துடன் கதவு
அருகே நின்றேன்
படக்கென்று கதவை திறந்து
கனல் பார்வையோடு
குளிர் பொய்கை போல்
தேவதை வந்தாள்
யார் நீர் என்ன வேண்டும்
கேட்டாள்
தயக்கத்துடன் உரைத்தேன்
குயிலின் இசை இவ் குடிலிருந்து வந்தது
அதை காண வந்தேன்
ஒ என்றாள் #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 73 வது திருத்தலம்
திருக்கானூர்
அருள்மிகு சிவயோகநாயகி உடனுறை செம்மேனிநாதர்
மரம்: வன்னி மரம், வில்வ மரம்
குளம்: கொள்ளிட நதி
பாடல் எண் : 4 பண் : தக்கேசி
விண்ணார் திங்கள் கண்ணி வெள்ளை மாலை அது சூடி
தண்ணார் அக்கோடு ஆமை பூண்டு தழை புன் சடைதாழ
எண்ணா வந்து எனில் புகுந்து எவ்வ நோய் செய்தான்
கண்ணார் சோலை கானூர் மேய விண்ணோர் பெருமான்
பொழிப்புரை:
இடம் அகன்ற சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய விண்ணோர் தலைவராகிய சிவபிரானார் வானகத்தில் பொருந்திய பிறைமதியைக் கண்ணியாகச்சூடி, வெண்ணிறமான மாலையை அணிந்து, குளிர்ந்த என்புமாலை, ஆமையோடு ஆகிய வற்றைப் புனைந்து தழைத்த சிவந்த சடைகள் தொங்க, என்னை அடைய எண்ணி வந்து என் இல்லம் புகுந்து, எனக்கு மிக்க விரகவேதனையைத் தந்து சென்றார். இது முறையோ? #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏கோவில்
திருநீற்றினை நெற்றியில் பூசி
என் தீவினை தீர நின் திருவடி புகழ் பாடி
பெரும் நீரினை அடக்கி சிறுநீரின் மூலம் பகீரதன் வினை தீர்த்த ஈஸ்வரியே
இவ் சிறியேன் ஆதரிக்க நல்லாளே என் மன இல்லாளே
உன்னையின்றி யார் உளார்
தாகம் தீர்ப்பாயே தயாபரியே தட்சிண காளியே என் அம்மை ஆச்சியே
{S. ஜெயவீரபத்திரன்}
#🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏
இன்புறு தமிழலில் பதிகம் நாளூம் எழுதி இமயவளே உம் திருவடிகள் நித்தம் சாற்றி
அன்புறுவான அம்மை ஆச்சியே ஆதிசக்தியே ஆவுடை மாகாளியே என
அனுதினம் நின் திருவடி போற்றி புகழ் பாடி புகழ் மிகு கழல்களை வேண்டி
பழம்பதிக நாயகியே பாவியேனுக்கு அருள்வாயே என் அம்மையே ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன் }
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய
கருணைக்கொண்டு நீரூம் காத்து அருள வேண்டும் எம்மை நாளூம்
பிறையை சூடிய பிஞ்சகன் போல் எம் இறைவியே
நீர் உம்
திருவடி மேல் காதல் கொள்ள வேண்டும் நாளூம்
வளர்பிறை தேய்பிறை போல் இல்லாமல் வள்ளலே வளர்ந்த பிறை போலவே வாழ்வு நிலையனாதாக இருக்க நீர் அருள் புரிய வேண்டும்
என் அம்மையே ஆச்சியே
{ S.ஜெயவீரபத்திரன் }
#🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏
பரம தயாபரி பட்டிஸ்வர தேவி அம்மை ஆச்சி அன்பு செல்வர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 73 வது திருத்தலம் திருப்பட்டீச்சரம்
அருள்மிகு பல்வளைநாயகி உடனுறை பட்டீச்சுரநாதர்
மரம்: வன்னி: ஞான தீர்த்தம்
பாடல் எண் : 11 பண் : சாதாரி
மந்தமலி சோலை மழபாடி
நகர் நீடு பழையாறையதனுள்
பந்தம் உயர் வீடு நல
பட்டிசர மேயபடர் புன்சடையனை அந்தண்
மறையோர் இனிது வாழ்
புகலி ஞானசம்பந்தர் அணியார் செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்பவல தொண்டர்வினை நிற்பது இலவே.
பொழிப்புரை:
தென்றல் உலாவும் சோலைகளையுடைய திருமழபாடி என்னும் நகர்ப் பகுதியைத் தன்னுள் கொண்ட நெடிய பழையாறை என்னும் திருத்தலத்தில், தன்னையடைந்தவர்கட்குப் பந்தமும், வீடும் அருளவல்ல நல்ல திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் படர்ந்த சிறுசடைகளையுடைய சிவபெருமான். அப்பெருமானைப் போற்றி எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுள்ள மறையோர்கள் இனிது வாழ்கின்ற திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அழகிய செந்தமிழில் அருளிய இப்பதிகத்தைக் கேட்டற்கும், உணர்தற்கும் இனிதாகச் சொல்லவல்ல தொண்டர்களின் வினைகள் நீங்கும். #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய












