
அம்மை ஆச்சி நேசன்
@432439658
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
அருள் மிகு கோமதி ஆச்சி அம்மன் பாமாலை 12
( S.ஜெயவீரபத்திரன்)
நல்புத்தியும் இல்லை உம் மேல் உறுதியான பத்தியும் இல்லை
உம்மை அடையும் ஸித்தியும் தெரியவில்லை நீயே வந்து அருளூம் யோகமூம் இல்லை
பூரண ஞானமும் இல்லை எவ்வகை உய்வேன் என் அம்மையே ஆச்சியே #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான்
அருள் மிகு கோமதி ஆச்சி அம்மன் பாமாலை 7
( S.ஜெயவீரபத்திரன்)
நிலையில்லா வாழ்வில் மேல் நேசம் வைத்து நின் திருவடி மறந்தேன் பார்
மறைப்புகழூம் என் அன்னையே மரகதமே
இந்த மாந்தனை
கடைத்தேற கருணையுடன் காப்பாய் என் அம்மையே ஆச்சியே #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
தர்மர் அறம் கூறுதல் {17}
சிறு அந்தணன் வடிவு கொண்டு சீர்மிகு மறை கற்ற பள்ளியில் இருந்து வருபவரைப்போல்
உடை கொண்டு
பலியை விரும்பும்
பரமசிவன் போல்
பண்டரிநாதனும் பாரின் நன்மைக்காக மகாபலி அரசனிடம் யாசகம் பெற விழைந்தார்
(ஜெயவீரபத்திரன்) #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான்
சதுர்புஜம் மேகஸ்யாமள வர்ண ரூபம்
நிர்பயதத்துவ ஸாரம் நிசும்ப சும்ப ஸம்ஹாரம்
வர அபய கட்க முண்ட ஹஸ்தம்
திவ்ய தேஜோமயி தேவி ஸ்வருபம்
பூஜாயாமி மஹாகாளி தேவி நித்யம் ஸர்வ மங்கள காரகம் #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
பத்தாம் திருமுறை
திருமூலர் அருளிய திருமந்திரம் நூற் சிறப்பு
பாடல் எண் : 24
நான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற
உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே
#🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான்
சலனமின்றி இருக்கிறாயே சங்கரியே கோமதியே என் அம்மை ஆச்சியே
மரணமில்லா பெருவாழ்வு வேண்டவில்லை மாநிலம் ஆளூம் யோகம் கேட்கவில்லை
திரைமறைவு சித்துகள் கோரவில்லை திருவடி போற்றிய பலன்
காயத்தில் காற்று உள்ளவரை மனம் நலிய செய்யாதே என் அம்மை ஆச்சியே
{ꜱ. ஜெயவீரபத்திரன்} #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 75வது திருத்தலம்
திருவெங்குரு
அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர்
பவழமல்லி பிரம தீர்த்தம்
பாடல் எண் : 8
பாங்கிலா அரக்கன் கயிலையன் எடுப்ப பல தலைமுடியொடு தோள்
அவை நெரிய ஓங்கிய
விரலால் ஊன்றிய அன்று அவற்கே ஒளி திகழ் வாள்
அது கொடுத்து அழகாய
கோங்கொடு செருந்தி கூவிளமத்தம் கொன்றையும் குலாவிய செஞ்சடைச்செல்வர்
வேங்கை பொன் மலரார் விரைதருகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை:
நற்குணங்கள் இல்லாத அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தபோது அவன் முடிகள் அணிந்த பல தலைகளையும் தோள்களையும் கால்விரலை ஊன்றி நெரித்த வரும், அவன் பிழை உணர்ந்து வருந்திப்பாடிய அளவில் அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய வாளை வழங்கியருளியவ ரும், அழகிய கோங்கு, செருந்தி, வில்வம், ஊமத்த மலர், கொன்றை ஆகியன விளங்கும் சிவந்த சடைமுடிச் செல்வரும் ஆகிய சிவபிரானார் வேங்கை மரங்களின் பொன்போன்ற மலர்களின் மணம் கமழும் வெங்குரு என்னும் சீகாழித் திருக்கோயிலில் வீற்றிருந்தருள்கிறார்.
குறிப்புரை:
இராவணனை அடக்கி அருள்செய்தவர் இவர் என் கின்றது. பாங்கிலா அரக்கன் - குணமில்லாத இராவணன்.
#🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான்
தர்மர் அறம் கூறுதல் {16}
தீவினையை காதலுடன் அழைத்தான் சிவந்த விழிகளையுடைய இரும்பு கரம் கொண்ட தானவர் தலைவன் மகாபலி
பெரும் படை கொண்ட அரக்கனை கத்தியின்றி இரத்தமின்றி ஒடுக்க வழியை திரு ஆடல் மூலம் புரிந்தார்
திருஒண நட்சத்திர அதிபதியான திருமால்
(ஜெயவீரபத்திரன்) #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
போற்றி திருவடி துதித்தல் ஈர்எட்டு (1) {ஜெயவீரபத்திரன்}
மலர்ச்சி தரும் மங்களமே போற்றி
புகழ்ச்சியான மகிழ்ச்சியை அருள்வாய் போற்றி
தளர்ச்சி இன்றி நின் தாளை போற்ற செய்வாய் போற்றி
என் தங்கமே தயாபரியே போற்றி
வளர்ச்சியை அருளிய
வள்ளலே போற்றி முயற்சியின் சக்தியே முத்தமிழ் நாயகியே போற்றி
எழுச்சியின் வடிவே என் அம்மை ஆச்சியே போற்றி
சங்கரியே நாரணியே அம்மை கோமதியே போற்றி
#🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏾சனி பகவான்
ஸ்ரீ சண்டி ஸ்தோத்திரம்
முண்டமாலா தாரிணி முகுந்தபூஜித ருபினி
முக்தி தாரிணிஸர்வ கார்யஸித்தி தாரிணி
முத்கல கேடக தாரிணி
மூலாதார ஸ்வரூபிணி
பாஹிமாம் பாஹிமாம் சாமுண்டி தேஹிமே தேஹிமே
பக்த இஷ்ட பிராதாயணி
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்












