jepin
ShareChat
click to see wallet page
@4484599124
4484599124
jepin
@4484599124
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - யோவான் 6:56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்  யோவான் 6:56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன் - ShareChat
#✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:22
#✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat
00:40
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்* ஏப்ரல்-25 அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில், அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது, அவரது இரக்கம். அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா. நித்திய மகிமைக்கு இருப்பிடமான, கன்னித்தாயின் திருக்குமாரனாகிய இயேசுவே! அத்தியந்த பக்தி வணக்கத்துடனே தேவரீரை ஆராதிக்கிறேன். ஆராதனைக்குரிய பரம திருவருட்சாதனமாகிய தேவ நற்கருணையை, தேவரீர் உண்டாக்கின நாள் முதற்கொண்டு, அதிலே மனுமக்களால் தேவரீருக்குச் செய்யப்பட்ட சகல நிந்தை அவமான துரோகங்களுக்கும், இயன்ற மட்டும் பொதுப் பரிகாரம் செய்யும் பொருட்டு, அடியேன் சகல பாவிகளுக்குத் திடமான அடைக்கலமும், தேவரீருக்குப் பிறகு அவர்களுக்குப் பிரதான நம்பிக்கை ஆதரவுமாகிய, உம்முடைய திரு மாதாவின் உதவி அநுக்கிரகத்தை இரந்து கேட்கிறேன் சுவாமி. மனுக்குலத்தின் நம்பிக்கையும், பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் அரசியும், உம்முடைய திருக்குமாரனை இடைவிடாது ஆராதிக்கிறவளுமாகிய அன்புள்ள தேவதாயே! நீர் அன்போடே ஏற்றுக்கொண்ட பிள்ளைகளில், அடியேன் ஒருவனாயிருக்க, மகிமைப் பாக்கியம் பெற்றவனாகையால், அனந்த பக்தி நம்பிக்கை நேசத்துடனே, உம்முடைய பாதத்திலே விழுந்து பாவிகளாகிய எங்களுக்கு, நீதித் தீர்வையிடும் நித்திய கர்த்தாவினிடத்தில் நீரே மனுப்பேசி, எங்களுக்காகவும், எங்கள் பேராலேயும், உம்முடைய புண்ணிய பலன்களால் உத்தரிக்கவும், எங்களாற் செலுத்த முடியாத, அனந்த நமஸ்காரக் கடமைகளைத் தீர்த்து நிறைவேற்றவும் வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம் ஆண்டவளே. ஆமென். நிலையான புகழுக்குரிய தூய்மைமிகு நற்கருணைக்கு எல்லா காலமும் ஆராதனையும் புகழும் மாட்சிமையும் உண்டாகக்கடவது. இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !
✝️இயேசுவே ஜீவன் - Orok Orok - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை நாதர்* பகுதி-19 *"பாவத்தோடு நன்மை வாங்கின ஒரு பெண், ஒரு கிணற்றில் அதைப் போட்டதினால் அந்தக் கிணற்றுத் தண்ணீரால் நடந்த புதுமை"* ப்ரசெல்ஸ் நகரில் ஒரு யூதன் வீட்டில் ஒரு கிறிஸ்தவ வேலைக்காரி இருந்தாள் . அந்த யூதனின் துர்புத்தி கேட்டு அவள் யூத மதத்தில் சேர்ந்ததுமல்லாமல் தேவநற்கருணையில் இயேசுநாதர் இல்லையென்று நினைத்திருந்தாள் . அவளுடைய எசமான் ஒருநாள்அவளைப் பார்த்து " மற்ற கிறிஸ்தவர்களைப்போல் நீயும் உண்மையான கிறிஸ்தவள் போல் நடித்துக் கோவிலுக்கு போய் நன்மை வாங்க வேண்டும் . அந்தத் திவ்ய நற்கருணையை நீ உட்கொள்ளாமல் உடனே எடுத்து எனக்கு கொண்டு வர வேண்டும் " என்று சொன்னான் . அதற்கு அவள் சம்மதித்து கோவிலுக்குப் போய்த் தேவநற்கருணை வாங்கினாள் . அவளுடைய நாவில் குருவானவர் தேவநற்கருணையை வைத்தவுடனே அவள் அந்தத் தேவநற்கருணையை எடுக்கத் துணிந்தாள். உடனே அவளுடைய ஈரற்குலையில் கடினமான வலி ஏற்பட்டதினால் அவஸ்தைகாரிபோல் இருந்தாள் . அவள் தன் பாவத்துக்கு தண்டணையாக அந்த வேதனை வந்தது என்று நினைத்து அதை மற்றவர்கள் அறியாத படிக்குத் தான் வாந்தி பண்ணுகிறாப்போல்நடித்து வெளியிலே வந்து கோவிலருகிலிருக்கிற கிணற்றினருகே போய் சற்று நின்றாள் . இப்படி நின்றபோது அவளுக்குமீண்டும் அகங்காரம் ஏற்படவே தேவநற்கருணையைக் கிணற்றுக்குள்ளே போட்டுவிட்டு தன் வீட்டுக்குப் போனாள் . கிணற்றில் நற்கருணை விழுந்ததின் பயனாக அநேகப் புதுமைகள் நடந்தன . அந்தக் கிணற்றுத் தண்ணீரைக் குடித்ததால் வியாதிக்காரர்கள் குணமடைந்தனர் . இதனால் அந்த ஊரிலுள்ள அநேகம் வியாதிக்காரர்கள் இந்தக் கிணற்றினிடம் திரண்டு வந்தார்கள் . இதையெல்லாம் கண்ட அந்தவேலைக்காரி தான் செய்த தூரோகத்திற்கு மனஸ்தாபப்பட்டு நடந்த சேதியெல்லாம் மற்றவர்கள் அறியப் பண்ணிணாள் . குருக்களும் மற்றவர்களும் இதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனைப் பண்ணி அந்தக் கிணற்று தண்ணீரெல்லாம் வெளியில் இரைத்து விட்டு கிணற்றைப் பார்க்கிறபோது வெகு நேர்த்தியான பாடுபட்ட சுருபம் ஒன்று அதிலே இருக்கிறதைக் கண்டார்கள் . அதை வெளியில் எடுத்து மகா மகிமையோடு கோவிலில் வைத்தார்கள் . அந்தச் சுருபத்தின் வழியாக எண்ணற்ற புதுமைகள் நடந்தன . இறைமக்களே ! இப்போது சொல்லப்பட்ட பெண் துர்ப்புத்திக் கேட்டதினால் கெட்டுப்போனாள். ஆகையால் பதிதர்களும், பாவிகளும் சொல்லுகிற துர்ப்புத்திக்கு நீங்கள் செவி கொடுக்க வேண்டாம். தேவநற்கருணையை நல்ல ஆயத்தத்தோடு நீங்கள் வாங்கின பிறகு அதில் இருக்கிற இயேசுநாதரைப் பார்த்து எங்கள் ஆத்துமத்துக்கு ஞான வைத்தியரே , எங்களிடத்தில் கோபமும், ஆங்காரமும், காய்மாகரமும், போசனபிரியமும் தேவகாரியங்களில் சோம்பலும் இவைமுதலான வியாதிகள் இருக்கின்றன என்று சொல்லிக் காட்டி " தேவரீர் அந்த வியாதிகளை நீக்கி எங்களுக்கு ஞான சஞ்சீவியாய் இரும் " என்று மன்றாடவேண்டும் . நீங்கள் இப்படி கெஞ்சினால் அவர் உங்கள் வியாதியைத் தீர்க்க வந்திருப்பதால் உங்கள் ஆத்துமத்தின் வியாதி நீங்கிப் போவதற்கு அவர் அருள் புரிவார் .
✝️இயேசுவே ஜீவன் - I I - ShareChat
*🌹அர்ச். கன்னி மரியாயின் மீது பக்திகொள்வதன் அவசியம்..* பரமபிதா மானிடரை நேசித்த அன்பினால் தம் ஏககுமாரனை உலகத்திற்கெனக் கொடுத்து விட்டார். ஆதாமிற்குப் பின் அத்தனை பிதாப்பிதாக்களும் எத்தனையோ பெருமூச்சுவிட்டு இரட்சகரின் வருகைக்காக மன்றாடி வந்தார்கள். மீட்பர் சிங்காரத் தோப்பில் முன்னறிவிக்கப்பட்டதிலிருந்து 4000 ஆண்டுகளாக தீர்க்கத்தரிசிகளும், கடவுளுக்கு ஏற்புடையவர்களாய் நடந்த பல பழைய ஏற்பாட்டின் புனிதர்களும் “ஆண்டவரே வாரும்" என்று ஆயிரம் மன்றாட்டுக்கள் செய்து வந்தார்கள். சர்வேசுரன் விரும்புகிறார். மக்கள் மன்றாடுகிறார்கள். ஆயினும் மீட்பரை உலகிற்கு அனுப்ப முடியவில்லை. காரணம், "தேவ குமாரனைக் கடவுளின் கரத்திலிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ள உலகம் தகுதி பெற்றிருக்கவில்லை” என்று அர்ச். அகுஸ்தினார் உரைக்கிறார். நோவேயின் பேழையிலிருந்து புறப்பட்ட புறா, "பூமியின் மீதெங்கும் ஜலம் வியாபித்திருந்ததால் கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல் திரும்பவும் பெட்டகத்திற்கு வந்தது” (ஆதி 8:9) போல், உலகமெங்கும் பாவப் பிரளயமாயிருந்ததால் தேவ புறாவான சுதன் பூமியில் காலூன்ற இடம் காணப்படவில்லை. ஆனால், தன் புண்ணியங்களின் உயர்வாலும், தன் வேண்டுதல்களின் வலிமையாலும் தேவ குமாரனைப் பெற்றுக் கொள்ளக் கூடிய பூமியாக மாமரியை இறைவன் தயாரித்தார். ஜென்ம கர்ம பாவம் எதுவும் இல்லாமல் முழுவதும் பரிசுத்தமாய் ஆங்காரத்தின் நிழல் முதலாய் இல்லாமல் முழுவதும் தாழ்ச்சியின் உருவமாய், தான் உற்பவித்த கணத்திலேயே சகல சம்மனசுக்களுக்கும், அர்ச்சிஷ்டவர்களுக்கும் மேலாக சகல புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த இந்த நாசரேத் கன்னிகையைத் தான் தன் குமாரன் தங்கும் புதிய சிங்காரத் தோப்பாகக் கடவுள் திட்டம் செய்திருந்தார். இத்திட்டத்தின் காலம் நிறைவேறிய போது தம் ஏக குமாரனை அந்தக் கன்னிகையின் வழியாகவே கடவுள் உலகிற்குக் கொடுத்தார். தம் ஏக திரவியத்தை இறைவன் நேரடியாக உலகத்திடம் கொடுக்காமல் மரியாயிடம் அவரைக் கொடுத்து அவர்கள் வழியாக உலகம் அவரைப் பெற்றுக் கொள்ளச் செய்தார். தேவசுதன் மனிதனானார் என்றால் அது மாதாவிடத்தில் தான். தேவ குமாரன் உலகத்தில் வந்தாரென்றால் அது மாதாவின் வழியாகத் தான். மாதாவின் வழியாக சேசு வந்தார் என்பது உண்மைதான்: ஆயினும் அப்படி என்ன பெருஞ்சிறப்பு உள்ளது? யாராவது ஒரு தாய் உலகில் அவருக்குத் தேவைப்பட்டது. அது மரியாளாக இருந்தது. அவ்வளவு தானே நமக்கு வேண்டியவர் சேசுகிறீஸ்து தானே? என்று கேட்பவர்கள் இன்னும் சிலர் இருக்கிறார்கள் !. இப்படிக் கேட்டது முழு உண்மையை உணராததாகும். மாதா ஏதோ தற்செயலாய் கடவுளால் தெரிந்தெடுக்கப்படவில்லை நித்திய நித்தியமாக அவர்கள் இறைவனின் தாயாக தெரிந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டிருந்தார்கள். மேலும் முழு மனச் சுயாதீன சம்மதத்தோடு மாதா கடவுளின் தாய்மையை ஏற்று கடவுளின் சித்தத்தோடு முழுவதும் ஒத்துழைத்தார்கள். இதனாலேயே சேசு கிறீஸ்துவை மரியாயிடம் உருவாக்கிய கடவுள், அப்படிச் செய்யும்முன் தம் அணிகளில் முதன்மை வாய்ந்த ஒரு தூதரை அனுப்பி மரியாயின் சம்மதத்தைக் கேட்டார்! மாதா தன் முழு சுயாதீன விருப்பத்தைத் தெரிவித்தபிறகே அவரை அவர்களிடம் உருவாக்கினார். தேவனின் தாய்மை மாதாவிடம் வெறுமனே கொடுக்கப்படவில்லை. மாதா தன் முழு விருப்ப ஒத்துழைப்புடனேயே தேவனின் தாயானார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. பரிசுத்த திருக்குடும்பமே எங்களை புண்ணிய வாழ்வு வாழ வழிநடத்துங்கள் ஆமென். நன்றி - www.catholictamil.com #✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - Grok Grok - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் *இயேசுவின் திரு இருதயச் செபமாலை* 💞🕯️💞🕯️💞🕯️💞🕯️💞🕯️ பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென். கிறிஸ்துவின் திரு ஆத்துமமே, -என்னைத் தூய்மையாக்கும் கிறிஸ்துவின் திரு உடலே, -என்னை மீட்டருளும். கிறிஸ்துவின் திரு இரத்தமே, என்னை நிரப்பியருளும். கிறிஸ்துவின் திருவிலாத் தண்ணீரே, என்னை கழுவியருளும். கிறிஸ்துவின் திருப்பாடுகளே, என்னைத் திடப்படுத்தும். ஓ, நல்ல இயேசுவே, எனக்கு செவி சாய்த்தருளும். உம் திருக்காயங்களுக்குள் என்னை மறைத்தருளும். உம்மை விட்டு என்னைப் பிரியவிடாதேயும். பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும். என் மரண நேரத்தில் என்னை அழைத்து, உம் புனிதரோடு எக்காலமும் உம்மைப் புகழ எனக்குக் கற்பித்தருளும் - ஆமென். *பத்து மணிக் கருத்துக்கள்:* 🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸 1. பிற சமயத்தினரால், பிரிவினைச் சகோதரரு அனைவராலும் இழைக்கப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம். 2. மாசு நிறைந்த கிறிஸ்தவர்களால் ஏற்படும் நிந்தைகளுக்குப் பரிகாரமாக செபிப்போம். 3. நாம் அனைவரும் கட்டிக்கொண்ட பாவங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம். 4. மனிதர் அனைவராலும் வருவிக்கப்படும் அவமானங்களுக்குப் பரிகாரமாக செபிப்போம். 5. எல்லாரும் திருஇருதயத்தை அறிந்து அன்புசெய்யுமாறு அமல அன்னை, புனிதர் அனைவரின் அன்புப் பெருக்குடன் ஒப்புக்கொடுப்போம். *சிறிய மணி:* இயேசுவின் மதுரமான திருஇருதயமே - என் சிநேகமாயிரும்.! *பத்து மணி முடிவில்:* மரியாவின் மாசற்ற இருதயமே, என் இரட்சணியமாயிரும் *பெரிய மணி :* இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே! - என் இதயத்தை உம் இதயம் போல் ஆக்கியருளும்! *ஐம்பது மணி முடிவில்:* 🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸 *முதல்வர்:* இயேசுவின் திரு இதயமே *எல்லாரும் :* எங்கள்மேல் இரக்கமாயிரும். *முதல்வர்:* சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயின் மாசற்ற திரு இருதயமே‌ *எல்லாரும் :* எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் *முதல்வர்:* இயேசுவின் திரு இருதயம் எல்லாரும்: எங்கும் போற்றப்படுவதாக. *முதல்வர்:* திரு இதயத்தின் அன்பரான புனித சூசையப்பரே எல்லாரும் :எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். இயேசுவின் திருஇருதயமே ! உமது இராச்சியம் வருக. எங்கள் பாவங்ளைப் பொறுத்தருளும். எனது செபம், தபம், அனுதின அலுவல், இன்ப துன்பம் எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். எனது கடைசி மூச்சு வரை உம்மை நேசிக்கவும் உமக்கு மகிமை வருவிக்கவும் வேண்டிய வரம் தந்தருளும். *🙏🏻ஆமென்.🙏🏻* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻 *👑வெளியீடு👑* *✝️கத்தோலிக்கன்📖* *🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
✝️இயேசுவே ஜீவன் - "" {1  0 0 { ppomus1 0 SVin 1೧ Convon ಚ2 Jells "" {1  0 0 { ppomus1 0 SVin 1೧ Convon ಚ2 Jells - ShareChat
#✝️இயேசுவே ஜீவன் நற்கருணை நாதர்* பகுதி-18 *தேவநற்கருணையில் புனித சவேரியாரிடத்தில் நடந்த புதுமை!* கிழக்கிந்திய நாடுகளின் அப்போஸ்தலரான புனித சவேரியார் தேவநற்கருணையின் பேரில் மிகுந்த பக்தியாய் இருந்தார் . அந்த பக்தி காரணமாக அவரிடத்தில் சில புதுமைகள் நிகழ்ந்தன. ஒருநாள் அவர் பூசை செய்யும் போது தேவநற்கருணை உட்கொண்டவுடன் பூமியை விட்டு உயர நிற்கிறதை கோயிலில் இருந்தவர்கள் அனைவரும் கண்டார்கள். அவர் மக்களுக்குத் தேவநற்கருணை கொடுக்கிறபோது மற்ற குருக்களைப் போல் தேவநற்கருணைகுச் சங்கையாக முழங்காலிலே நின்று மக்களுக்கு தேவநற்கருணை கொடுப்பார் . ஒருநாள் கோவை நகரில் இவ்வாறு ஏராளமான மக்களுக்கு தேவநற்கருணை கொடுக்கிறபோது முழங்காலில் இருந்தபடியே புதுமையாக பூமியை விட்டு மூன்று சாண் உயரத்தில் எழும்பி மக்கள் அனைவருக்கும் தேவநற்கருணை கொடுத்தார் . கிறிஸ்தவர்களே! சிலர் தேவநற்கருணை வாங்கினவுடனே சற்று நேரமாகிலும் முழங்காலில் இராமல் இரண்டொரு நிமிடத்தில் அமர்ந்து கொள்கிறார்கள் . அவர்கள் புனித சவேரியார் தேவநற்கருணைக்குக் காட்டிய சங்கையைக் கேட்டு மிகவும் வெட்கப்படுவார்களாக. மிகுந்த பலவீனம் உள்ளவனை உயர்ந்த மலைமேல் ஏறச்சொன்னால் அவன் என்னால் முடியாதென்பான் ; சிலநாட்கள் நல்ல உணவை உண்டபிறகு அதன் வழியாக தனக்கு வந்த பலத்தினால் அவன் உயர்ந்த மலைமேல் எளிதாய் ஏறுவான் . சில கிறிஸ்தவர்கள் அநேக நாள் நன்மை வாங்காமல் ஒரு வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் போல்வாங்குகிறர்கள் . அவர்களுடைய ஆத்துமம் பலவீனமுள்ளதாக இருக்கும். ஆனால் இப்படிபட்டவர்கள் ஒரு வருடத்துள்ளாக பலமுறை நல்ல ஆயத்தத்தோடு தேவநற்கருணை வாங்கினால் அதன் வழியாக அவர்களுடைய ஆத்துமம் பலமடையும். ஆனால் தக்க ஆயத்தத்தோடு தேவநற்கருணை உட்கொள்ள வேண்டும் . அசீரணமுள்ளவன் நல்ல சாப்பாடு சாப்பிட்டாலும் பலன் வராது. இந்தக் குறை அவனுடைய வியாதி வழியாக வருகிறதேயல்லாமல் சாப்பிட்டதினால் அல்ல . அவ்வண்ணமே தக்க ஆயத்தமின்றி நன்மை வாங்குகிறவர்களுடைய ஆத்துமத்துக்கு தேவநற்கருணையினால் நன்மை விளையப் போவதில்லை .
✝️இயேசுவே ஜீவன் - ShareChat