
முனைவர் ச.சு.ஜைனுதீன் நிறுவனத் தலைவர் மு.ம.க.
@479671514
நல்லதே நினை! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!
#நல்லதே பேசு நல்லதே நினை
உயர்திரு திரு பானுமதி ஆணையாளர் அவர்கள் திண்டிவனம் நகராட்சி திண்டிவனம் 604001
திண்டிவனம் நகரில் அதிகரித்து வரும் கொசு தொல்லை மற்றும் மேம்பாலத்தில் மின்விளக்கு இல்லாத பிரச்சினை குறித்து முஸ்லிம் மக்கள் கழகம் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் தெரிவித்ததாவது:
திண்டிவனம் நகரில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். டெங்கு போன்ற ஆபத்தான நோய்கள் பரவிவிடுமோ என்ற அச்சத்திலும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் உடனடியாக நகரம் முழுவதும் கொசு மருந்து புகை அடித்து கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மறைந்த தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் வழக்கறிஞர் டி.ஜி. வெங்கட்ராமன் அவர்களின் முயற்சியால் சுமார் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்ட தமிழகத்தின் இரண்டாவது மேம்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ள திண்டிவனம் மேம்பாலத்தில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாத நிலை நிலவுகிறது. மேம்பாலத்தின் நான்கு புறங்களிலும் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்திருப்பதால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேம்பாலத்தின் நான்கு பக்கங்களிலும் உடனடியாக மின்விளக்குகளை அமைத்து எரியவைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் குறித்து இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், வரும் 20.03.2026 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் பொழுது மாநில மகளிர் அணி அமைப்பாளர் பா. சிராஜ் பேகம். விழுப்புரம் மாவட்ட பொருளாளர் மு. அப்துல் ஹக்கீம். திண்டிவனம் நகர செயலாளர் அ. தாவுத்அலி. நகரத் தலைவர் அ. முஹம்மத் சாதிக். நகரத் துணைத் தலைவர் இ. சர்தார் அஹமத். நகர இளைஞரணி தலைவர் இ. நிசார் அஹமத்.
#நல்லதே பேசு நல்லதே நினை நாள் கையிருப்பு எங்கே? கேஸ் விலையேற்றத்தால் எரியும் மக்களின் வயிறு!” – மத்திய அரசுக்கு முனைவர் ச.சு. ஜைனுதீன் கடும் கண்டனம்
விழுப்புரம் மார்ச் 12:
முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் மத்திய அரசின் சமையல் எரிவாயு விலையேற்றத்தையும் தட்டுப்பாட்டையும் கடுமையாக கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் இந்தியாவில் 90 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால் நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஒருபுறம் கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
மற்றொருபுறம் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் குடும்பச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது.
சமையல் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அன்றாட உணவு சமைப்பதற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
90 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக கூறும் மத்திய அரசு,அதே எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்படும் எரிவாயு விநியோகத்தில் மட்டும் ஏன் தோல்வியடைந்தது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கையிருப்பு இருப்பதாக கூறும் அரசு, அதனை சரியான முறையில் மக்களுக்கு வழங்குவதில் ஏன் கோட்டை விட்டது என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் இந்த நிலை மிகுந்த கவலைக்கிடமானது எனவும் கூறினார்.
எரிவாயு விலை உயர்வால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலையேற்றம் காரணமாக குடும்பங்களின் பொருளாதார நிலை மேலும் சீர்குலைந்துள்ளது.
இதனை மத்திய அரசு உடனடியாக கவனிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் சிலிண்டர் தட்டுப்பாட்டை நீக்கி, தடையின்றி விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் முனைவர் ச.சு. ஜைனுதீன் கேட்டுக் கொண்டார்.
இல்லையெனில் மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பொதுமக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலை மத்திய அரசின் நிர்வாகத் தோல்வி என அவர் குற்றம்சாட்டினார்.
எனவே உடனடியாக விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
*90 நாள் கையிருப்பு எங்கே? ஜைனுதீன் கண்டனம்*
இந்த தகவலை முழுமையாக படிக்கவும்:
https://getlokalapp.com/share/posts/16427553?utm_source=article&utm_v=pdd_article_share #நல்லதே பேசு நல்லதே நினை
#நல்லதே பேசு நல்லதே நினை
#நல்லதே பேசு நல்லதே நினை
#நல்லதே பேசு நல்லதே நினை
#நல்லதே பேசு நல்லதே நினை தின வாழ்த்து தெரிவித்தார் முனைவர் ச.சு. ஜைனுதீன்
முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது:
“தாய்மை என்ற அருமை இல்லாமல் அடுத்த தலைமுறை இல்லை; பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை. விடியாத இரவு இல்லை போல, பெண்களால் முடியாததும் எதுவும் இல்லை. தன்னம்பிக்கையுடன் உயர்ந்து நிற்கும் பெண்களுக்கும், பெண் என்பதே ஒரு பெருமை.
அன்பு, தைரியம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவமாக இருக்கும் பெண்கள், அள்ளிக் கொடுத்து அன்பை பகிர்ந்து, தேவைப்படும் போது ஆறுதலாக நின்று, வாழ்நாள் முழுவதும் குடும்பத்தின் தூணாக திகழ்கின்றனர்.
நிபந்தனையற்ற நேசத்தையும் அளவற்ற பாசத்தையும் பொழியும் அனைத்து பெண்களும், நதி போல இடையறாது ஓடி வாழ்க்கையை முன்னேற்றுகின்றனர். பெண்கள் அனைவரும் வளமும் நலமும் பெற்று மகிழ வாழ்த்துக்கள். அனைவருக்கும் முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
#நல்லதே பேசு நல்லதே நினை அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
திண்டிவனம் உமர் சாஹிப் தெருவில் வசித்து வந்த மர்ஹூம் முத்தலிப் மறைக்காயர் அவர்களின் மகனும் இறையனூர் இரும்பு கடை நடத்தி வரும் கே. எம் .உதுமான் அலி அவர்களின் தம்பியும் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வந்த எம். கரீம் அவர்கள் இன்று 8.3.2026 காலை 5: 20 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 9.3.2026 திங்கட்கிழமை திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் லுஹர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் நடைபெறும் என்பதனை இதில் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்
குறிப்பு ஜனாஸா இருக்கும் இடம் கறிக்கடை அமான் வீடு கசாமியான் தெருவில் உள்ளது
செய்தி வெளியீடு முஸ்லிம் மக்கள் கழகம் திண்டிவனம்.
#முஸ்லீம் மக்கள் க மக்கள் கழகத்தில் இணைந்த இளைஞர்கள் – சமூகப் பணியில் ஈடுபட உறுதி
திண்டிவனம், மார்ச் 7:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் வசித்து வருகின்ற அயாத் பாஷா அவர்களின் மூத்த மகன் முகமது ஆஸிப், இன்று (7.3.2026) சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3.30 மணி அளவில் முஸ்லிம் மக்கள் கழகத்தில் இணைவதற்காக மனு வழங்கினார்.
முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவன தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்துடன் தன்னை முஸ்லிம் மக்கள் கழகத்தில் இணைத்துக் கொள்ள முகமது ஆஸிப் கோரிக்கை வைத்தார்.
அவருடன் அவரது நண்பர்கள் ஆர். முகமது ரேயான்,ஷ. முகமது அஷ்ரப்,ச. அஷ்ரப் ஆகிய இளைஞர்களும் கலந்து கொண்டு, சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் முஸ்லிம் மக்கள் கழகத்தில் இணைந்தனர்.
இந்த இளைஞர்களின் சமூகப் பணி மேலும் வளர அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
*திண்டிவனம் தாலுகா அலுவலக பின்பக்க கேட் திறக்க கோரிக்கை*
இது போன்ற செய்திகள் மற்றும் வீடியோக்களை பெற லோக்கல் ஆப் லிங்கை கிளிக் செய்யவும்.!
https://getlokalapp.com/share/posts/16396780?utm_source=video_link&utm_v=pdd_video_link_share&utm_constituency_id=3544 #நல்லதே பேசு நல்லதே நினை
நான் *Lokal App* பயன்படுத்துகிறேன். நீங்கள் உடனடியாக டவுன்லோட் செய்து உங்கள் மாவட்டம்/உள்ளூர் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம்.










