N Murugesan
ShareChat
click to see wallet page
@67491307
67491307
N Murugesan
@67491307
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
நேற்று காலை நெட்பிளிக்ஸில் வைகிங் (The Vikings - serial) படம் பார்த்தேன். மாலையில் இந்த கதீஜா ரஹ்மான் பாடிய "அன்பென்ற மழையிலே.." பாடலை கேட்க நேர்ந்தது!! அப்போது இந்த பாடலின் உண்மையான மகத்துவம் புரிந்தது!! What a contrast!! இயேசுபிரானின் அவதார பெருமையை உணர வேண்டுமானால் நீங்கள் வைகிங் படமும் பார்க்க வேண்டும்!! 😄😂 https://youtu.be/qcHQGO2WMjE?si=U03itzP3XA682j-W ************************************************ வைகிங் காலத்தில் ஒரு பக்க மேற்கத்திய கலாச்சாரம் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக இருந்தது என்பதை காண அதிர்ச்சியாக இருந்தது. நான் கிமு 1000 காலத்து கதை என்றே நினைத்தேன்!!😄 ஆனால், கதை நடந்தது கிபி 750!! அந்த காலகட்டத்தில் நமது கலாச்சாரம் எந்த நிலையில் இருந்தது தெரியுமா?! தமிழர்கள் வெறும் தற்பெருமை பேசுபவர்கள் என்று நினைப்பவர்களும் இந்த படத்தை பார்க்க வேண்டும். அந்த காலகட்டத்தில் நாம் ஆன்மீகம், கட்டட கலை (தஞ்சை பெரிய கோவில்), சிற்பக்கலை, விவசாயம், பொருளாதாரம், கப்பல் படை, அரசாங்க கட்டமைப்பு என்று எல்லாவற்றிலும் உன்னதத்தில் இருந்தோம்!! What a contrast!! ************************************************* படத்தை எடுத்தவர்கள் கிறிஸ்துவம் மற்றும் இயேசுவை இழிவு படுத்தியும், வைகிங்களை உயர்வாகவும் காட்சிப் படுத்தி உள்ளனர். ஆனால், வைகிங் கலாச்சார கடவுளான "ஓடினை" அடைவது எப்படி தெரியுமா?! ஏதாவது சண்டையில் வீர மரணம் அடைய வேண்டுமாம்!! (நாம் இங்கு கர்மம், யோகம், ஞானம், சைவ சித்தாந்தம் என்றெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தோம்!😄). இங்கிலாந்திற்கு எதிராக படையெடுத்து வைகிங்கள் இயேசுவை ஏளனப்படுத்தியும், எப்படி போரில் வெற்றி அடைந்தார்கள் என்று படம் போகிறது (நாமும் தான் வீரத்திற்கு பெரும் மதிப்பு கொடுத்தோம்; காட்டுமிராண்டித்தனத்திற்கு அல்ல!). ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் ஒரு பாதிரியார் வேண்டுகிறார் - "இயேசுவே, நீ எங்கே போனாய்?! நாங்கள் எல்லாம் அழிய வேண்டும் என்பது தான் உன் விருப்பமா?!". நேற்று பார்த்த பகுதியில் இறுதியில் பெரும் தோல்வி அடைந்த பிறகு இங்கிலாந்து மன்னர் சூளுரைக்கிறார் - "இறைவா, உன் அருளால் என்றாவது ஒரு நாள் இவர்களை பழி தீர்ப்பேன்". இந்த படம் அப்படி முடியாது என்று தான் நினைக்கிறேன். ஆனால், இன்றைய காலகட்டத்தை ஒப்பிட்டுப் பாருங்கள்!! அந்த ஓடின், ரக்னோராக், தோர், லோகி போன்ற கடவுள்களும், அந்த காட்டுமிராண்டி கலாச்சாரமும் எங்கே போனது?! சுமார் 800 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்துவம் முழுமையாக வெற்றி அடைந்ததால் தான் மேற்கத்திய கலாச்சாரம் அறிவியலில் முன்னேறி வளர்ந்த நாடுகளாக மாறியிருக்கிறது. ஆனால், அதைவிட முக்கியமான விஷயம் - வெரும் அன்பை மட்டுமே போதிக்கும் மதம், வீரமே சொர்க்கத்திற்கு வழி என்ற மதத்தை இல்லாமல் செய்து விட்டது!! அதுவே இயேசுபிரானின் அவதார மகிமை!! இந்த பாடலை அந்த காலகட்டத்தோடு பொருத்தி பார்க்கும் போது இவை அனைத்தும் புலப்படுகிறது!! ************************************************ #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம https://youtube.com/watch?v=qcHQGO2WMjE&si=xn0ZxYQ_087Ir2rd
சென்னைக்கு செல்ல தத்காலில் டிக்கெட் எல்லாம் புக் செய்து கடைசியில் போகவில்லை. இப்போது திருச்சியில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. நான் வாங்கிய புத்தகங்கள்!! (தமிழ் நாவல், இலக்கியம் எல்லாம் படிக்க இப்போதைக்கு நேரமில்லை) #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - ShareChat
01:25
எனக்கு பெண்ணியம், பெண்ணுரிமை, பெண் சமத்துவம் என்றெல்லாம் பேசுவது சுத்தமாக பிடிக்காது. எங்கோ ஜெயகாந்தன் போன்றோர் பெண்ணிய இயக்கத்தை ஆதரிப்பவர்கள் என்று படித்ததால் ஜெயகாந்தன் எழுதியது எதையும் படித்தது கிடையாது!! என்னைக் கேட்டால் தமிழர்களின் கலாச்சாரம், தமிழர் பண்பாடு பெண் சமவாதத்தை ஆதரிக்காது!! தமிழர்கள் முற்போக்கான சிந்தனை கொண்ட கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள்; அதெப்படி பெண்ணியம் தவறாகும்?! என்று நீங்கள் கோபப்பட்டால் சரி தான்!! ஆனால், இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!! பிறகு நான் கூறுவது புரியும்!! ************************************************** பெண்ணியம், பெண் சமவாதம் போன்றவை எப்போது பேசு பொருளாகும்?! ஒரு கலாச்சாரத்தில் பெண் எந்த வகையில் பார்க்கப் படுகிறாள் என்பதைப் பொருத்தது. சில கலாச்சாரம் பெண்களை மிகவும் கீழாக பார்க்கிறது. உதாரணத்திற்கு மனு தர்மம் பிராமணப் பெண்கள் சூத்திரர்களுக்கு சமம் என்று அவர்கள் சமூக பெண்களையே தாழ்த்தி பேசுகிறது. அது உலகத்தை வெறுக்கும் தர்மம். அங்கு சம்சாரம் என்றால் இரண்டு பொருள் - உலகம் மட்டும் மனைவி!! இரண்டும் முக்திக்கு தடை!!😄 மற்றொரு கலாச்சாரம் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்கிறது. ஆகையால், பெண்களுக்கு வாக்குரிமை, வேலை என்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடே இல்லாத சமுதாயத்தை உருவாக்க நினைக்கிறது (women empowerment!!😄). அது மேற்கத்திய கலாச்சாரம். அங்கு ஆண்களும் பெண்களும் சமம். ஆனால், இவற்றிற்கு மாறாக பெண்களை ஆண்களுக்கு மேலாக வைக்கும் சமுதாயம் ஒன்று இருக்கிறது - அதுவே நமது சிவபெருமானின் தமிழ் சைவ சமுதாயம்!! இங்கே நமக்கு பெண்களை ஆண்களை விட அதிகம் உயர்த்தி வைத்து அழகு பார்ப்பது தான் பண்பாடு!! இது நமது சிவபெருமானின் சிவ தத்துவத்தில் இருந்து உதித்தது. ஆகையால், பெண்களை கீழாகவோ, சமமாகவோ பார்க்கும் கலாச்சாரங்கள் பெண்ணுரிமை பேசலாம்!! நமக்கு அது தேவையேயில்லை!! (சிகாராயமான சிவத்தை சேர்ந்தவர்கள் சொல்வார்கள் - "எவனவன் மனைவியையும் வேலைக்கு போகச் சொல்பவன்? சொந்த சம்பாத்தியத்தில் வைத்து காப்பாற்ற திராணியற்றவன்; இவனுக்கு எதற்கு மனைவி?!!😄" ஏனென்றால் இவன் பெண்ணை சமமாக நடத்துகிறானாம்!! நமது கலாச்சாரத்தில் அன்புக்கும், குடும்பத்தை பராமரிக்கவும் தான் மனைவி!! 😄. *************************************************** அப்படியென்றால் சிவனும், சக்தியும் சரிபாதி; பெண்ணுக்கு பாதி உடலை ஈந்தவன் நமது பெருமான்; ஆகையால் இருவரும் சமம் என்பது தான் சைவ சமயம் என்றால் அது உண்மை தான். ஆனால், இதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. ஆதியில் பெண்களை சமுதாயத்தில் ஆண்கள் அதிக உரிமை கொடுத்து ஆராதிக்கும் கலாச்சாரம் தான் இருந்தது!! (இதுவே பிற்காலத்தில் Matriarchy என்று சிதைந்து போனது!). ஆனால், இராமாயண காலத்திற்கு பிறகு பெண்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும்; அவர்களும் சொந்த காலில் நிற்கும் சக்தி வேண்டும்; எப்போதும் ஆண் துணையை நாடி இருக்கக் கூடாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது (அந்த கால ராமரின் பழி தீர்க்கும் அடாவடியாக இருக்குமோ?!😄). இதனால் தான் சக்தி சிவனுக்கு நிகர்; சிவமும் சக்தியும் சரி சமம்; என்றெல்லாம் ஏற்பட்டு விட்டது!! அதாவது வெறும் ஊடலாக மட்டும் இருக்க வேண்டிய காதல், நான் பெரியவனா? நீ பெரியவளா என்ற consort கூத்தாக மாறி விட்டது என்று எனக்கு தோன்றுகிறது!!😄😂 அதாவது வெறும் ஊடலாக இருக்க வேண்டியது, காதலுக்கு வலிமை சேர்க்க வேண்டியது டைவர்ஸ் வரைக்கும் கூட போகும் போலிருக்கிறது!! ************************************************ மேற்கூறிய கதை உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை: வர்ணாசிரம மனு தர்மம் போல் பெண்களை இழிவு படுத்துவது நம் கலாச்சாரம் அல்ல!! அவர்கள் பெண்ணுரிமை பேசத்தான் வேண்டும்!!😄 அது போல் பெண்களை சமமாக பார்க்க தவறிய மேற்கத்திய சமுதாயம் பெண்களை சமநிலைக்கு women empowerment மாற்ற முயற்சிக்கிறது!! நமது சிவபெருமானின் சைவ கலாச்சாரம் உலகம் உண்மை; இல்லறமே சிறந்த அறம்; அதற்கு ஆணிவேர் பெண்கள்; ஆகையால் அவர்களை உயர்ந்த நிலையில் வைக்க வேண்டும் என்ற கொள்கையை உடையது. நாம் ஏன் பெண்ணியம் பேச வேண்டும்?! 😄😂. ************************************************ மற்றுமொரு விஷயம் - இந்த விஷயத்தில் நம் கலாச்சார ஆன்மீக உயர் உருவக நிலைகளை பாருங்கள்!! ஒரு நாள் பேருந்தில் ஏறிய போது, ஒரு அழகான பெண் என்னை முழுவதும் ஏறெடுத்துப் பார்க்காமல் ஓரக்கண்ணால் பார்த்து நாணத்தை வெளிப்படுத்துவது போல் பார்த்தாள்!! (அட, இப்போதெல்லாம் பெண்களிடம் நாணத்தை பார்ப்பதெல்லாம் ரொம்ப ரேர் தெரியுமா?!! ) அவள் மனதில் கூறினாள் - "நீ யாரை கொஞ்சினாய்?! என்னைப் போல் இலட்சுமியாக இருந்தால் தான் நாணத்துடன் கொஞ்ச விடாமல் சிணுங்குவாள்" (against lust!!) பெருமாளே உசத்தி!! அதாவது சிவனாக (பார்வதியாக) இருந்தால் கொஞ்ச விடுவாள் என்பது போல. பிறகு, அன்று ஈங்கோய் மலை சென்று விட்டு திரும்பும் போது, "ஈங்கோய் மலை எழுபது" திருமுறை பாடல்களை விளக்கும் யூடியூப் கேட்டு வந்தேன். அதில் ஒரு பாடல்: "உமை மனம் மகிழ, தீயாடும் பரமர் நமது பெருமான்!!". அப்போது தான் புரிந்தது - சிணுங்கினால் அது இலட்சுமி (நாராயணன்), "ஏன்டா காமத்துடன் வந்து கொஞ்சுகிறாய்?" என்று வெகுண்டால் பார்வை + தீ = பார்வதீ!! எனக்கென்னவோ பார்வை தீயாக யாரும் வெகுண்ட மாதிரி தெரியவில்லை; ஆகையால் தான் பரமரே தீயாடுகிறார் என்று நினைக்கிறேன்!! 😄😄😂😂. **************************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - பெண்ணியம் பேசுவதுதவறு 8 13 பெண்ணியம் பேசுவதுதவறு 8 13 - ShareChat
இன்று இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை பூஜித்து வழிபடும் நாள்!! மற்ற பௌதீக எண்ணங்கள் அனைத்தையும் உதறி, மனம் முழுவதும் சிவ தத்துவத்தில் நிறைந்து, பக்தியில் நனைந்து இரவை கழிக்கும் நாள். அவ்வாறு காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்க சிவபெருமானை வழிபட அனைவருக்கும் மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்!!😄 ஓம் நமசிவாய!! #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - MahaShivRatsi] ANight with the Divine 15 Feb 2026 6PMto 6 AM Attend at Isha Yoga Center, Coimbatore Register now isha colmsr event reg Limited seats available MahaShivRatsi] ANight with the Divine 15 Feb 2026 6PMto 6 AM Attend at Isha Yoga Center, Coimbatore Register now isha colmsr event reg Limited seats available - ShareChat
ரீ ரிலிஸ் டிரெய்லர் பார்த்தால் வெறும் காமத்தால் தான் இந்த படம் 100 நாட்கள் ஓடியிருக்கும் என்று தோன்றுகிறது!! காதல் என்ற பெயரில் ஒரே காமம் - என்ன கேவலமான ரசனை அந்த காலத்தில்!! 😄 #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - உயிருளளவு பாடசர்தர C1J=u' ஊ ೮೦೦೦೫3 |018|) i3t ~ 6 USI ரீரிலீஸ்! ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா ட திரைப்படம் 4K டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ரீரிலீஸ் ஆகிறது உயிருளளவு பாடசர்தர C1J=u' ஊ ೮೦೦೦೫3 |018|) i3t ~ 6 USI ரீரிலீஸ்! ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா ட திரைப்படம் 4K டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ரீரிலீஸ் ஆகிறது - ShareChat
எதற்காக சிவபெருமானிடம் ஊடல்?! பல காரணங்கள். நான் ஆன்மீகத்திற்கு வந்ததே காமத்திலிருந்து முழுமையாக விடுபடுவதற்கே. அது இன்று வரை நடக்கவில்லை; அது முக்கியமான காரணம்; மேலும் எழுதுவதற்கு முன்பு, இறைவனிடம் என்னை விட அதிகம் ஊடல் கொண்டவர்களைப் பற்றி... *************************************************** நேற்று ஜி. செல்வா என்பவர் எழுதிய "எல்லாத்துக்கும் நாங்க தான் கஷ்டப்பட வேண்டுமா?!" என்ற புத்தக வெளியீட்டு விழா பற்றிய Shruti Literature TV சுருதி டிவி வீடியோ சில பார்த்தேன் - யுகபாரதி மற்றும் எழுத்தாளர் தீபலட்சுமி ஆகியோர் இந்த புத்தகத்தை பற்றி பேசியது. அப்போது எனக்குத் தோன்றியது: இவர்கள் சிவபெருமான் மீது கொண்ட ஊடல் தான் மிகப்பெரியது; அது என்னுடைய ஊடலை விட மிகவும் உண்மையானதுமா கூட என்று!! 😄 அப்போது தான் இவர்களுடைய கம்யூனிச சித்தாந்தமும் புரிந்தது. "இங்கே உலகில் இவ்வளவு அக்கிரமம் நடக்கிறது; இறைவன் என்ன செய்து கொண்டு இருக்கிறான்?! நாங்கள் அப்படி ஒரு இறைவன் இருக்கிறான் என்று இறை தத்துவத்தையே அவமதிப்பதற்கு பதிலாக, உலகில் இறைவன் இல்லை என்றே கொள்வோம்; உலகிற்கு நன்மை செய்வோம்!!" - இதற்கு முன்னர் கம்யூனிச சித்தாந்தத்தை நான் இவ்வாறு புரிந்து கொள்ள வில்லை!! நீங்கள் ஜி செல்வா எழுதிய இந்த புத்தகத்தை படித்தால், உங்களுக்கு உண்மையான கடவுள் பக்தி இருந்தால், நீங்களும் சிவபெருமானுடனுடன் ஊடல் கொள்வீர்கள் என்பது திண்ணம்!! (இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள்; இந்த புத்தகம் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!). இங்கு மிகப் பெரிய உண்மை ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் கேட்க வேண்டிய கேள்வி: "இந்த உலகில் சிவபெருமான் இருப்பது உண்மை. ஆனாலும், இவ்வளவு அக்கிரமங்கள் நடப்பது ஏன்?!". இந்த கேள்வி தான் உண்மையான ஆன்மீகத்திற்கு அடிப்படை. இங்கு தான் ஆன்மீக வாழ்க்கை ஆரம்பிக்கிறது. என்னுடைய ஆன்மீகம் இப்படித் தான் ஆரம்பித்தது. Harold Kushner ஹேரால்ட் குஷ்னர் என்பவர் (யூத பாதிரியார்) எழுதிய "Why bad things happen to good people?" - "நல்ல மனிதர்களுக்கே தீமை நிகழ்வது ஏன்?" - என்ற புத்தகத்தில் இருந்து தான் என் ஆன்மீக தேடல் தொடங்கியது. ஆகையால் இதை அனுபவ ரீதியாக தான் சொல்கிறேன். இறைவன் இருந்தும் இந்த உலகம் இப்படி இருக்கிறதா?! இதை எப்படி புரிந்து கொள்வது?! (இந்த புரிதல் ஏற்படுவதற்கு பக்தி, யோகம், ஞானம் என்று பல பாதைகள் உள்ளன! 😄). இந்த கேள்விக்கான முழு விடையை இறைவனை முழுமையாக அடைந்தவர்கள் மட்டுமே முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்!! சிவபெருமானை நான் ஒரு முறை கண்டிருக்கக் கூடும்; ஆனால், நான் இன்னமும் சிவபெருமானை முழுமையாக அடையவில்லை. ஆகையால் தான் ஊடல். ஆகையால், என்னுடையது கம்யூனிசம் அல்ல; இது ஊடல் என்ற அளவில் தான் உள்ளது; நாத்திகம் அல்ல!! கம்யூனிச தோழர்கள் இறைவன் இல்லை என்ற எளிதான, ஆம், தோழர் செல்வாவுக்கும் தான் சொல்கிறேன்; இறைவன் இல்லை என்ற "மிகவும் எளிதான பாதையில்" செல்வதை விட்டுவிட்டு - "இறைவன் இருந்தும் ஏன் இவ்வளவு அக்கிரமம்?!" - என்ற "மிகவும் கடினமான ஆன்மீக பாதையில்" செல்ல அடுத்த பிறவி வரை காத்திருக்க கூடாது என்பதே என் விருப்பம்!! உலகிற்காக பாடுபடுவது உண்மையான ஆன்மீகத்தின் வழியும், எல்லையும் (both journey and destination) கூட. ஆகையால், ஆன்மீகம் என்றால் "இந்த போராட்டங்கள் தேவையில்லை; இறைவன் பார்த்துக் கொள்வான்; உலகைத் துறக்க வேண்டும்" போன்ற முட்டாள்தனமான சனாதன கொள்கைகளை உடையது அல்ல; நமது சைவ சமயத்தில் சிவபெருமானை "தேவர்களுக்கு (உயர் சாதியினர்க்கு) அரியவன்; ஏழைகளின் பங்காளன்" என்று பல இடங்களில் தேவாரத்திலும் திருவாசகத்திலும் பாடியுள்ளனர். ஆகையால், நீங்கள் சிவபெருமானிடம் ஊடலில் தான் இருக்கிறீர்கள்!! (By the way, தீபலட்சுமியின் குழந்தை பள்ளியில் ஆசிரியரிடம் கேட்ட கேள்வியை நாம் அனைவரும் கேட்டால் உலகை திருத்த முடியும்; நல்ல அரசியலை, ஆன்மீகத்தை உருவாக்க முடியும்!!) ***************************************************** என் ஊடலுக்கு காரணம் என்ன? சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் "கோவில் கோவிலாக அலைகிறேன்; அவனை காணவில்லை" என்பது தான்! ஆனால் சிவபெருமானின் காட்சியை பெற, பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற முனிவர்கள் கூட பெரும் தவம் செய்ய வேண்டியிருந்தது; நாமெல்லாம் எம்மாத்திரம்?! (ஏழை பங்காளன் என்ற நம்பிக்கை தான்!!😄). அதாவது பரவாயில்லை; காதலித்தவர்களுக்கு தெரியும் - கொஞ்சும் போது, காதலி அதை தடுத்து கொஞ்ச விடாமல் சிணுங்கினால், அழகு அதிகமாகும்; இன்பமும் அதிகமாகும்; ஆனால், கொஞ்சக் கூட விடாமல் டார்ச்சரே செய்தால்?!😄 இப்படித்தான் யாரோ திருவையாறில் பாட்டுப் பாட விடாமல் தடுத்தார்கள்; இவன் ஒன்றுமே செய்யாமல் "சிவனே" என்று உட்காந்திருக்கிறான்!!😄 இதனால் திருவையாறு சிவனிடம் எனக்கு ஊடல்; அது போல் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு காரணம்!! நேற்று ஈங்கோய்மலை சென்றேன்; மலையில் ஏறவே விடாமல் யாரோ கடும் டார்ச்சர் செய்கிறார்கள் (கர்மம் வைத்திருக்கிறார்கள்)!! இவன் எதுவும் செய்யவில்லை!! (மேலே நல்ல தரிசனம் கிடைத்தது; ஆனாலும் ஏதோ டார்ச்சர்). **************************************************. இது போன்ற ஊடல் என் கற்பனை அல்ல. மாணிக்கவாசகர் பல பாடல்களில் சிவபெருமானை காணவில்லை என்று புலம்பி இருக்கிறார். "ஒரு முறை காட்சி கொடுத்தான்; அப்போதே அவனுடன் சென்றிருக்க வேண்டும்; இப்போது அவனை காணாமல் வருந்துகிறேன்" என்று பல பதிகங்களில் பாடியிருக்கிறார். அதாவது இறைவனை ஒரு முறை கண்டுவிட்டு பிறகு காணமல் தவிப்பது இந்த வகையான ஊடலாக வெளிப்படும். சுந்தரரின் ஊடல்கள் பிரசித்தமானவை. ஒரு முறை ஏதோ கோவிலில் ஏதோ வேண்டியிருக்கிறார்; ஒன்றும் நடக்கவில்லை போலிருக்கிறது; உடனே வழியில் வந்த ஒரு கோவிலுக்கு உள்ளே செல்லக் கூட மனம் வராமல் கோபமாக வெளியிலேயே நின்று விட்டார்!! உள்ளே போய் கும்பிட்டு என்னவாக போகிறது?! கோபத்தில் வெளியில் நின்று கொண்டு "உள்ளே நீ இருக்கிறாயா அல்லது வெறும் கல் மட்டும் தான் இருக்கிறதா?!" என்று கேட்டாராம். உடனே உள்ளிருந்து சிவபெருமானின் பதில் வந்ததாம் - "நாம் இங்கு தான் இருக்கிறோம்; நீர் போகலாம்!!" 😄😄😂 இதை ஒரு பதிகமாக அவர் எழுதியும் வைத்து விட்டார்!! ************************************************ என்னுடைய ஊடல் காரணங்கள் (கம்யூனிச தோழர்களுடையது போலல்லாமல்) சுயநலமானவையே!! 😄😂. காமத்திலிருந்து காப்பாற்றவில்லை என்பது மட்டுமல்ல; இவனுக்கு வாழ்க்கை பட்டு ஒரு உபயோகமும் இல்லை; வேலை இல்லை; வீடு வாசல் இல்லை; பணம் இல்லை; நகை இல்லை; ("ஏன்டா பிச்சைக்காரா, இப்படி செய்கிறாய்? நீ ஒரு முறை பிச்சை எடுத்திருக்கலாம்; அதற்காக நானும் இப்படி வாழ வேண்டுமா?!" என்று ஒரு முறை கேட்டேன். "என்னை பிச்சை எடுக்க வைத்ததால், பிராமண சமூகம் ஆயிரம் வருடங்கள் பிச்சை எடுக்க வேண்டியிருந்தது" என்று அதிர்ச்சி தகவல் கொடுத்தான்!!😄) இவனுக்கு ஒரு முறை வாழ்க்கைப் பட்டால் எழு பிறவியும் வாழ்க்கை பட வேண்டும்; இதனால் சுந்தரரை திருமணம் செய்து கொள்ள விடவில்லை!! சம்பந்தரை கூட மணப்பந்தலுடன் எடுத்துச் சென்று விட்டான்!! இது போன்ற காரணங்களாலானது என்னுடைய ஊடல்!! தொடர்ந்து கோவில்களுக்கு சென்று கொண்டு தான் இருக்கிறேன்; என்றாவது அகப்படுவான் என்று நம்பிக்கை!! 😄😂 ************* #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - ஜிசெல்வா எழுதிய எல்லாத்துக்கும் 3 நாங்கதான் கஷ்டப்படணுமா ?" 5 வெளியீட்டு விழா நூல் தீபலட்சுமி ஜிசெல்வா எழுதிய எல்லாத்துக்கும் 3 நாங்கதான் கஷ்டப்படணுமா ?" 5 வெளியீட்டு விழா நூல் தீபலட்சுமி - ShareChat
காதலை பக்தியுடன் இணையாக பேசுவது இல்லற ஆன்மீகம் செழிக்க வேண்டும்; இல்லறத்தில் இருந்தாலும் இறைவனை அடைய முடியும் என்பது போன்ற உண்மைகளை வலியுறுத்துவதற்காக மட்டுமல்ல. உண்மையாகவே காதலும், பக்தியும் ஒரு போன்ற தன்மையை உடையவையே. இதை மேலும் ஆராய்வதற்கு பதிலாக காதலியிடம் நமக்கு ஏற்படும் ஈர்ப்பும், இறைவனிடம் நாம் கொள்ளும் ஈர்ப்பும் ஒரு தன்மையானதே என்று புரிந்து கொண்டால் போதுமானது. ஆனால், மனிதர்களின் காதலும், இறைவனிடம் கொள்ளும் பக்தி / காதலும் எல்லா விதத்திலும் ஒன்றாகாது. ****************************************†*********. நான் முன்பு எழுதியது போல் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அதை பயன்படுத்தி பெறக்கூடிய புலன் இன்பம் ஓரளவிற்கு தான். பணக்காரர்கள் தமக்கு பிடித்த உணவை பத்து மடங்கு அதிகம் சாப்பிட முடியுமா என்ன?! ஆனால், அந்த இன்பத்தை அதிகரிக்க ஒரு வழி இருக்கிறது. அது தான் அந்த அதிக பணத்தை மற்றவர்களுக்கு உதவ உபயோகப் படுத்தி அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைவதை பார்த்து நாமும் மகிழ்வது. இன்பத்தை நம் புலன்களுக்கு அப்பால் அதிகப்படுத்தும் வழி மற்றவர்களையும் மகிழ்ச்சிப் படுத்தி பார்ப்பது தான். ஒரு முறை நான் கோவிலுக்கு அதிகாலை சென்று கொண்டிருந்த போது, வழியில் ஒரு பெரிய ஏழைகள் க்யூ! என்னவென்று பார்த்தால் யாரோ அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஏழைகள் அவ்வளவு சந்தோஷமாக, ஆர்வமாக க்யூவில் நின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன் ஏதோ நானே அவர்களுக்கு அன்னதானம் அளிப்பது போன்ற ஒரு சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது. அந்த காலத்தில் பணம் அதிகம் சம்பாதிப்பதே அதனால் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்ற எண்ணத்தில் தான் என்று ஒரு திருக்குறள் கூட இருக்கிறது. வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியை அதிகம் பெறுவதற்கு மற்றவர்களுக்கு உதவி செய்வது தான்!! ************************************************* மேற்கூறிய உண்மை பலருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், பலரும் உணராத ஒரு உண்மை இருக்கிறது. அது என்னவென்றால் மேற்கூறியது பக்திக்கும் பொருந்தும்!! ஒரு முறை உறையூர் சிவன் கோவிலில் பக்தியுடன் இருந்த போது இது எனக்கு தோன்றியது: "இந்த பக்தி உணர்வை, அதனால் வரும் மகிழ்ச்சியை எப்படி அதிகப் படுத்துவாய்?! இதற்கு ஒரு வழி இருக்கிறது; உண்மையான பக்தியில் ஆழ்ந்த அனைவரும் இதை இயற்கையாகவே செய்வர்; ஆனால், காரணம் இதுதான் என்று அவர்களுக்கு தெரியாது! அது தான், மற்றவர்களையும் பக்தியில் ஈடுபட செய்வது!! மற்றவர்களுக்கு இறை நம்பிக்கையை ஊட்டுவதும், அவர்களுக்கு பக்தியை மேலும் பெருகச் செய்வதும் நம்முடைய பக்தியையும் அதிகரிக்கும்!!' இதை பக்தியில் ஆழ்ந்த பலர் புரிந்து கொள்வர்! (பகவத் கீதையில் அர்ஜுனன்: "இறைவனை அடைந்தவர்கள் எப்படி காலம் கழிப்பர்? உலக இன்பத்தை துறந்த அவர்களுக்கு இன்பம் தான் ஏது?" என்று கேட்க, கிருஷ்ணர் கூறுவது இதைத்தான்: "அவர்கள் என்னுடைய புகழை மற்றவர்களிடம் கூறி அதனால் இன்பம் பெறுவர்"!!). இதனால் தான் அடியவர்கள் மத்தியில் இருப்பதும் மகிழ்ச்சியை தருகிறது. உங்களுக்கு அவனருளால் அவன் தாள் வணங்கி உண்மையான பக்தி கிடைத்து விட்டால், இயற்கையாகவே மற்றவர்களுக்கும் அந்த நம்பிக்கையை, பக்தியை ஊட்டுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். உண்மையான இறையருள் பெற்ற பலருடைய வாழ்க்கை வரலாறு இதற்கு சான்று!!************************************************** இப்போது பக்தி = காதலுக்கு வருவோம். மேற்கூறியது தான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு!!. உலகியல் காதலில் என்னுடைய காதலியை மற்றவர்கள் பார்க்கக் கூட நான் அனுமதிக்க மாட்டேன்!!😄 அப்படியிருக்க மற்றவர்கள் நம் காதலியை கொஞ்சுவதற்கு அனுமதிப்போமா?! ஆனால், ஆன்மீகத்தில் இது ரிவர்ஸ்!! ஆன்மீகத்தில் என் காதலியை மற்றவர்களையும் கொஞ்ச செய்வதில் மேலும் இன்பம்!! எல்லோரும் என்னுடைய இறைவனை வழிபட வேண்டும்; அவன் புகழ் பாட வேண்டும்; அதனால் நன்மை பெற வேண்டும் என்று நினைப்பது உண்மையான பக்தி உணர்வு!! ஆக, இது போன்ற விஷயங்களில் பக்தியும், காதலும் ஒன்று என்ற உவமை பொருந்தாது! அது போல் தான் சிவபெருமானை மட்டும் தான் வணங்க வேண்டும்; வேறு கடவுளை வணங்கக் கூடாது என்பதும் இந்த பக்தி=காதல் என்ற ஒற்றுமையில் அடங்காது. அனைத்து கடவுள்களும் ஒன்றே - ஒரே பொருளில் தோன்றியவர்களே என்பதால் இந்த விஷயத்தில் தவறாகாது. சைவ சித்தாந்தம் சிவபெருமானே அனைத்து கடவுள்களுக்கும் ஆதாரம் என்று கூட கூறுகிறது!! (ஆனால், முக்தி நிலையடைய இது அவசியம் - முக்தி என்பது இறைவனுடன் இரண்டற கலப்பது; அதற்கு நிஷ்டா பக்தி தேவை தான். அதே வேளையில் மற்ற கடவுள் கள்ள காதலி என்ற உவமை பொருந்தாது!! 😄😄) ******************* #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - ShareChat
பல வருடங்களுக்கு பிறகு தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றிருந்தேன். வரும் போது இந்த பாடல் எங்கிருந்தோ ஒலித்துக் கொண்டிருந்தது!!😄 ஆஹா!! என்ன அற்புதமான காதல் இசை!! இவ்வளவு வசீகரமான பாடகி குரல் யாரென்று தெரியவில்லை!! கேட்டு எவ்வளவோ நாளாகி விட்டது!! பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய ஃபேவரைட் பாடலாக இந்த பாடல் இருந்தது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது!! மீண்டும் கேட்பதற்கு எவ்வளவு அருமையாக உள்ளது!! (ஆனால், பாடுவது சிவனாக இருக்கலாம்; நான் இன்னும் ஊடலில் தான் இருக்கிறேன்!! 😄😄😂) #ஆன்மீக வாழ்க்கை #ஓம் சிவாயநம #ஓம் நமோ நாராயணா *************************************************
ஆன்மீக வாழ்க்கை - ShareChat
01:55
சிவபெருமானுடன் நான் ஊடலில் (கோபத்தில்) இருக்கிறேன். டைவர்ஸ் வரைக்கும் போகுமா அல்லது மீண்டும் பழையபடி ஆகுமா என்று தெரியவில்லை!😄 ************************************************* இளையராஜா எஸ்பிபி ஜானகி டூயட் பாடல் ஒன்றில் வரும் வரி எனக்கு மிகவும் மிகவும் பிடிக்கும் - "கொஞ்சும் இன்பம் போல் உலகில் வேறு இன்பம் இல்லை!". அது போல் , ஆன்மீகத்தில் இறைவனிடம் பக்தி செலுத்தும் இன்பம் போல் வேறு இல்லை. இந்த கொள்கை வைணவத்திற்கு மிகவும் பொருந்தும். அது போதாது; இறைவனுடன் இரண்டற கலத்தல் வேண்டும் - இது சைவம். ஆனால், காதலி கொஞ்சுவதற்கு கூட தடை செய்தால் எப்படி? அல்லது தடையை நீக்காமல் இருந்தால் எப்படி?; போதாத குறைக்கு தாயுமானவர் கோவிலுக்கு செல்லும் போது, வழியில் ஏன் பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு வருகிறாய்? என்கிறான். இது எப்படி இருக்கிறது என்றால் "யாரினும் காதலம்" என்று வரும் திருக்குறள் போல். காதலன் காதலியிடம் கூறினானாம் - "மற்ற யாருடைய காதலையும் விட நம் காதல் தான் பெரிது; இதற்கு இணையில்லை". உடனே காதலி கோபித்துக் கொண்டு சென்று விட்டாளாம். ஏனென்று கேட்டால் "மற்ற யாருடைய காதலை விட " என்றால் உனக்கு வேறு காதலி உண்டு என்றல்லவா அர்த்தம் ஆகிறது என்றாளாம்!! 😄 சிதம்பரம் சென்றால் நடுநாயகமாக பெருமாள் சன்னதி இருக்கிறதே அது என்னவாம்?! ************************************************ காதலில் ஊடல் மிகவும் அவசியம். ஏன் தெரியுமா?! இதை திருவள்ளுவர் கூட சரியாக விளக்கவில்லை. ஆங்கிலக் காதலில் "there should be space distance, one should not be too possessive" என்பார்கள். அதாவது இருவருக்கும் இடையே ஒரு வகை இடைவெளி இருப்பது அவசியம். அப்போது தான் அவரவர்கான ஃப்ரீடம் சற்று சுதந்திரம் இருக்கும் என்பார்கள். அதாவது அப்படி distance இருந்தால் தான் அடிக்கடி சண்டை ஏதும் வராதாம். ஆனால், காதலர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வர வேண்டும் என்று தமிழ் காதலுக்கு இலக்கணம் கூறுகிறது!! சிலர் குறளுக்கு உரை எழுதுவது போல் - "ஊடல் தான் பிறகு இன்பத்தை பெருக்கும்; அதற்காக காதலி ஊடல் கொள்வாள்" - ஊடல் இன்பத்தை பெருக்குவதற்காக அல்ல!! எதற்காக காதலர்களிடையே சண்டை வர வேண்டும்? நமது குறிக்கோள்- இரண்டற கலப்பது. அதற்கு உள்ள தடைகள் எல்லாம் நீங்க வேண்டும் (இரு பொருட்கள் சமாதி அடைய அந்த இரு பொருட்களும் ஒரே தன்மையாக வேண்டும்!!). இந்த சண்டைகள் தாம் இருவருக்கும் இடையேயான வேறுபாடுகள்; குற்றங்கள் ; தடங்கல்கள் போன்றவை வெளிப்பட கருவியாகிறது. ஒவ்வொரு ஊடல் நடந்து மீளும் போதும் ஒரு தடை விலகுகிறது. நெருக்கம் அதிகமாகிறது!! ஆங்கில காதல் போல் இருவருக்கும் இடையேயான வேற்றுமைகள் இங்கு பாதுகாக்கப் படவில்லை!! மாறாக, அந்த வேற்றுமைகள் ஒவ்வொன்றாக வெளிப்பட வெளிப்பட ஊடல்கள் ஏற்பட்டு, "இது உண்மையான காதலா? இது இந்த வேற்றுமையை வெல்லும் அளவுக்கு உறுதியானதா?" என்று டெஸ்ட் நடைபெறுகிறது!! அந்த வேற்றுமை கலையைப் படும் போது, ஊடல் நீங்கி, இன்பம் மேலும் அதிகரிக்கிறது - ஏனென்றால் இடைவெளி இப்போது மேலும் குறைந்து விடுகிறது!! இப்படியாக ஊடல்களே இரு காதலர்களை மேலும் மேலும் நெருங்க வைக்கிறது!! காதல் என்பதற்காக எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள கூடாது!! ஆகையால் காதலுக்கு ஊடல் மிகவும் அவசியம் என்று காதலுக்கு தமிழ் இலக்கணம் கூறுகிறது!! ஆனால் ஒன்று: ஊடலை களைய முடியாத அளவுக்கு வேற்றுமை என்றால், பிரிவதே மேல் என்பதாலும் ஊடல் காதலுக்கு அவசியம். இணையவே முடியாத இருவர் முயற்சி செய்வதில் என்ன பயன்?! முயற்சியால் வரும் ஊடல் வேற்றுமையை நீக்கினால் அல்லவா இடைவெளி குறையும்?! ஆகையால், ஆங்கில காதல் போல் வேற்றுமைகளை, இடைவெளியை ("maintaining a distance"!😄) அப்படியே வைத்துக் கொண்டு முயல்வது உண்மையான காதல் ஆகாது!! ************************************************. ஆன்மீகத்திற்கும் இது பொருந்தும். இறைவனே ஆனாலும் தவறு என்றால் விலகி விட வேண்டும். இதுவே உண்மையை வெளிப்படச் செய்யும். கர்மங்களை களையும். இறைவனை அடைய உள்ள தடைகள் நீங்க வழிவகை செய்யும். தமிழ் கலாச்சாரத்தில் இறைவனுக்கே எதிராக போவது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. நக்கீரர், வணங்காமல் சென்ற சுந்தரரின் சிவனையே தள்ளி வைப்பேன் என்று சொன்ன சிவனடியார் என்று உதாரணங்கள் பல உண்டு. இணையவே தேவையில்லை எனும் வைணவத்தில் ஊடலும் தேவையில்லை!!😄 இரண்டற கலப்பதை கொள்கையாக கொண்ட சைவத்தில் ஊடல் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று!! ***************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - காதலில் ஊடல் எதற்கு ?! காதலில் ஊடல் எதற்கு ?! - ShareChat
ஓ, கூடல சங்கம தேவ தேவா, உன் நறுமணம் எங்களிடையேயும் பரவட்டும்!! மற்றுமொரு கன்னட வசன ன பாடல்; அற்புதமான இசையில்!! #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம https://youtube.com/watch?v=mG9_sKHTcMk&si=BKRuCgGP_5vCoIln
youtube-preview