கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள (SBI)பாரத ஸ்டேட் வங்கியில் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிய வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்த ரகுவரன்(36) என்பவர் வெவ்வேறு நபர்களின் பெயரில் கவரிங் நகைகளை அடகு வைத்து சுமார் 2 கோடி ரூபாய் மோசடி செய்தது வங்கி சுற்றறிக்கையில் கண்டுபிடிப்பு
இதனைத் தொடர்ந்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் நகை மதிப்பீட்டாளருடன் இந்த மோசடி சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
*மண்டைக்காடு திருவிழாவில் காணாமல் போன 7 வயது சிறுவன் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர்*
மார்ச் 08,
🟢கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர்.R. ஸ்டாலின் IPS* அவர்கள் உத்தரவில் மண்டைக்காடு பகவதி அம்மன் திருவிழாவிற்க்கு வருகின்ற பக்தர்களுக்கு உதவிடும் நோக்கத்தில் May I Help You என்ற பெயரில் பல உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
🟣மணிக்கட்டி பொட்டல் குஞ்சன் விளையை சேர்ந்த வேலுச்சாமி என்பவருடைய 7 வயது மகன் மண்டைக்காடு திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்திருந்த போது, கூட்ட நெரிசலில் திடீரென காணாமல் போன சிறுவன் விரைவில் காவல் துறையினர் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவரது பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டார்.
🟤சிறுவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
குளச்சல்: விசைப்படகில் வட மாநில தொழிலாளி சாவு
குளச்சல் துறைமுகத்தில் இருந்து 5 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜெகேஸ்வர் (46) என்பவர் சமையல் வேலை செய்யும்போது 6 ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்தார். அவரை கரைக்கு கொண்டு வந்த நிலையில், நேற்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் படகு கரை சேர்ந்ததும், மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது. இது குறித்து குளச்சல் மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
திருட போன வீட்டில் மெத்தையில் படுத்து உறங்கி , லேடீஸ் உடை அணிந்து சென்ற திருடன்
குளச்சல் அடுத்த கோடிமுனை பகுதியிலுள்ள ஒரு வீட்டில் திருடிய ஆரோக்கியப் பிரவீன் என்பவரை குளச்சல் போலீசார் கைது செய்தனர். திருட வந்த இவர் வீட்டில் மெத்தையை பார்த்ததும் படுத்து தூங்கி உள்ளார். பின்னர் அவர் தான் அணிந்த பேண்டை கழற்றிப் போட்டுவிட்டு வீட்டிலிருந்த லேடிஸ் ஜீன்ஸ் பேண்ட் எடுத்து அணிந்து விட்டு பட்டுப் புடவைகளை திருடி விட்டு சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தெரிசனங்கோப்பு பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் ஆறு சவரன் செயின்
பறிப்பு...
பூதப்பாண்டி போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். குற்றவாளியை தேடும் பணி தீவிரம்.. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
குமரி மாவட்டம் - சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கேரை (yellowfin tuna ) மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது
5 கிலோ முதல் 200 கிலோ வரை உள்ள கேரை மீன்களை தூண்டில் மூலம் பிடித்து வந்த மீனவர்கள் வார கடைசியான இன்று (சனிக்கிழமை) உற்சாகமாக விற்பனை செய்தனர்.
கேரை மீன்கள் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
💥 சுசீந்திரம் அருகே பூதத்தார் இசக்கியம்மன் கோயிலில் திருட்டு: 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது
சுசீந்திரம் அருகேயுள்ள ஆசிரமம் பகுதியில் உள்ள வடிவீஸ்வரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூதத்தார் இசக்கியம்மன் கோயிலின் கதவை உடைத்து திருட்டு நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு கோயிலுக்கு வந்த பூசாரி, ரூ.1500 மதிப்புள்ள பித்தளை சூலாயுதம் காணாமல் போனதை கவனித்து நிர்வாகத்திடம் தகவல் அளித்தார்.
இதுகுறித்து அஞ்சன மெழுதிய கண்டன் சாஸ்தா கோயில் செயல் அலுவலர் கொம்பு குமார் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். மருங்கூர் அமராவதி விளையை சேர்ந்த மரிய சேவியர் (37) கைது செய்யப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
குமரி மாவட்டம் - நாவல்காடு அருகே கான்கிரீட் போடும் வாகனத்தை இழுத்து வந்த டிம்போ கவிழ்ந்து விபத்தானதில் ஒருவர் பலி. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பனியின் போது
நெடுமங்காடு பகுதியை சார்ந்த சுஜாதா என்ற பக்தர் தவறவிட்ட மணி பர்சை பணத்தோடு மீட்டு உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் கடையல் மேலே முக்கு பகுதியில் கோழி கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ ஒன்றை கடையல் வருவாய் துறை அதிகாரிகள் சிறை பிடித்து பேரூராட்சியிடம் ஒப்படைத்தனர். வாகன ஓட்டுனர் ஓடி தப்பினர். இது ஆலஞ்சோலை பகுதியில் அனுமதி இன்றி இயங்கும் பன்றி பண்ணைக்கு கொண்டு செல்ல முயன்ற போது பிடிக்கப்பட்டது என கூறப்படுகிறது.
தற்போது கடையல் பேரூராட்சி தலைவர், கடையல் காவல்துறையினர் மற்றும் மார்த்தாண்டம் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். வாகனத்தை கடையல் காவல்துறையினர் கைப்பற்றினர்.
பேரூராட்சி நிர்வாகம் கழிவை பள்ளம் தொண்டி புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்












![📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - SR *0 Minಧ ~ 0 ೧aಬb KANIಚIAENLE3*urs Vsls WNchdes [ I Breuha ద 6 ~~] )7_?_{|919648[!4581 8೮ .1ಎTk "" 0Jc1312726` Jf{e Cerel n ] aTl16 1 084341 Op"oogu; {వి6ః' | Tப1 esl { 0 vivo X2OO FEI ZEISS 03/07/2026, 1205 SR *0 Minಧ ~ 0 ೧aಬb KANIಚIAENLE3*urs Vsls WNchdes [ I Breuha ద 6 ~~] )7_?_{|919648[!4581 8೮ .1ಎTk "" 0Jc1312726` Jf{e Cerel n ] aTl16 1 084341 Op"oogu; {వి6ః' | Tப1 esl { 0 vivo X2OO FEI ZEISS 03/07/2026, 1205 - ShareChat 📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - SR *0 Minಧ ~ 0 ೧aಬb KANIಚIAENLE3*urs Vsls WNchdes [ I Breuha ద 6 ~~] )7_?_{|919648[!4581 8೮ .1ಎTk "" 0Jc1312726` Jf{e Cerel n ] aTl16 1 084341 Op"oogu; {వి6ః' | Tப1 esl { 0 vivo X2OO FEI ZEISS 03/07/2026, 1205 SR *0 Minಧ ~ 0 ೧aಬb KANIಚIAENLE3*urs Vsls WNchdes [ I Breuha ద 6 ~~] )7_?_{|919648[!4581 8೮ .1ಎTk "" 0Jc1312726` Jf{e Cerel n ] aTl16 1 084341 Op"oogu; {వి6ః' | Tப1 esl { 0 vivo X2OO FEI ZEISS 03/07/2026, 1205 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_552036_188bbc3c_1772902325381_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=381_sc.jpg)
