𝓚 𝓟 𝓚  𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
ShareChat
click to see wallet page
@mahicbe
mahicbe
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
@mahicbe
Today is the best day
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 Age is just a number!
நலம் வாழ - *WHO IS SHAKING THE WORLD* *Only seniors above ७० years* *Putin* 72 Years Jing 72 Years *Xi Ping* *Narendra modi* : ७४ years *Netanyahu* : 75 Years *Donald Trump* : ७९ Years ८५ years *Khameni* thinking that *But the most of uS are after 60 everything is over * *These people are shaking the Worldl* THOUGHT FORTHCDRY *WHO IS SHAKING THE WORLD* *Only seniors above ७० years* *Putin* 72 Years Jing 72 Years *Xi Ping* *Narendra modi* : ७४ years *Netanyahu* : 75 Years *Donald Trump* : ७९ Years ८५ years *Khameni* thinking that *But the most of uS are after 60 everything is over * *These people are shaking the Worldl* THOUGHT FORTHCDRY - ShareChat
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 முகூர்த்தக்கால் / பந்தக்கால் நடுவது ஏன்...?? ஹிந்து மதத்தில் ஒருவருக்கு திருமணம் ஆகப் போகிறது என்றாலே... திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன் வீட்டில் முகூர்த்தக் கால் நடுவார்கள். இது எதற்காக நடுகிறார்கள்...? என்பது பலருக்கு தெரியாத ஒன்றே. இந்த முகூர்த்தக்கால் நடும் வழக்கத்தை நம் முன்னோர்களிடம் இருந்து நாமும் இன்றளவும் பின்பற்றி வருகிறோம். திருமண வீடுகளில், திருமணம் நடப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் சுபகூர்த்த நாளில், சுபமுகூர்த்த நேரத்தில் முகூர்த்தக் கால் நடப்படுகிறது. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளாசியோடு மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதைக் குறிக்கவே பந்தக்கால் அல்லது முகூர்த்தக் கால் நடப்படுகிறது. மணப்பந்தலின் ஒரு கால்தான் முகூர்த்தக் கால் ஆகும். திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகள் இல்லங்களிலும், திருமணம் செய்யும் இடத்திலும் வடகிழக்கு திசையில் முகூர்த்தக் கால் நடுவது மரபாக இருந்து வருகிறது. மூங்கில் அல்லது பால் ஊறும் மரக் கிளைகளை மணமகன் மற்றும் மணப்பெண் இவர்களுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் சேர்ந்து இவர்களின் வீடுகளில் இடப்படும் மணப் பந்தலுக்கான முகூர்த்தக் காலாக நடுவார்கள். மூங்கிலும், பால் ஊறும் மரமும் தழைத்துச் செழிப்பது போல் மணமக்களின் வாழ்வும் செழிக்கும் என்ற நம்பிக்கை குறித்த சடங்காகும். இந்த பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஏன் நடுகிறார்கள்...?? அவற்றை நட்டால் என்ன பயன்...?? எந்த திசையில் முகூர்த்த கால் நட வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!! முகூர்த்தக்கால் நடும் முறை எப்படி வந்தது? தற்போது திருமண விழாக்களின் போது குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு அழைப்பிதழ் வைத்து வணங்குவது போல், முற்காலத்தில் திருமணம் ஆக போகிறது என்றால் அந்நாட்டு அரசனுக்கு மரியாதை செய்யும் வகையில் திருமண அழைப்பிதழை அரசனுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால், அரசனால் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க இயலாது. அதற்காக அவர் தனது ஆணைக்கோலை திருமண விழாவிற்கு அனுப்பி வைப்பார். அரசனிடம் இருந்து அந்த ஆணைக்கோல் வந்து விட்டாலே அத்திருமணம் அங்கீகரிக்கப் பட்டது என்று அர்த்தம். இந்த வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்து இன்றளவும் பந்தக்கால் நடும் முறை வளர்ந்து வருகிறது. முகூர்த்தக் கால் நடப்பட்ட பிறகு எந்த ஒரு துக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இந்த நடைமுறையில் உள்ளது. பந்தக்கால்: திருமணத்திற்கு முன்னதாகவே வீட்டில் முகூர்த்த கால் நட்டு மாவிலையால் தோரணம் கட்டுவது ஐதீகம். கோவில்களில் திருவிழாக்கள் தொடங்கும் முன்பும் வீட்டில் திருமணம் நடைபெறுவதற்கு முன்பும், பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் நடும் விழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. திருமணம் நடைபெறுவதற்கு ஐந்து அல்லது மூன்று நாட்களுக்கு முன்பாக வீட்டின் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் பந்தக்கால் நடப்படும். இது, வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதன் அடையாளமாக கருதப்படுகிறது. பந்தக்கால் நடும் முறை: கல்யாண முருங்கை மரத்தின் ஒரு கிளையை வெட்டி அதிலுள்ள இலைகளை அகற்றி, அதன் நுனியில் ஐந்து மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிற்றால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு வைத்து முடிந்து கட்டிவிட வேண்டும். உறவினர்கள் அனைவரையும் அழைத்து வீட்டிலுள்ள அந்த மரத்தை நட வேண்டிய இடத்தில் வைத்து அதற்கு பூக்கள் சாற்றி, தேங்காய் உடைத்து, சாம்பிராணி மற்றும் கற்பூரம் காட்டி பூஜையினை செய்ய வேண்டும். அதை நடும் இடத்தில் உள்ள குழிக்குள் நவதானியத்தோடு நீர், பால் ஊற்றி மரத்துக்கு திருநீறு, சந்தனம், குங்குமம் போன்றவற்றை இட வேண்டும். இதுதான் முகூர்த்தக்கால் நடும் முறை. பந்தக்காலை நட்டபின், பெண் மற்றும் மாப்பிள்ளையின் குடும்பத்தினர் திருமணச் சடங்குகள் முடியும் வரை எந்தவித துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடாது என்பது நியதி. முகூர்த்த கால் நட காரணம்: திருமண நிகழ்ச்சியின் ஆரம்ப சடங்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும். கண்திருஷ்டி விலகி, நடக்க போகும் சுபகாரியம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும், தீமைகள் ஏதும் அனுகாமல் மணமக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கும் இந்த நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. இதனைத் தொடர்ந்தே மற்ற திருமண சடங்குகளை குடும்பத்தினர் துவக்குவார்கள். மணமகன் வீடு, மணமகள் வீடு மற்றும் சுப நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஆகியவற்றில் தனித்தனியாக, இந்த முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி சுப முகூர்த்த நாளில், சுப முகூர்த்த வேளையில் நடைபெறுவது அவசியம் ஆகும். நடைபெறும் சுப காரியமானது இறைவனின் அருளால் நல்ல படியாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே பந்தக்காலில் பால் ஊற்றி நடப்படுகிறது. மூங்கில் அல்லது பலா மரம் செழித்து வளர்வது போல, புதிதாக வாழ்க்கையை துவங்க போகும் மணமக்களின் வாழ்க்கையும் செழித்து வளர வேண்டும் என்பதற்காகவே இந்த சடங்கானது நடத்தப்படுகிறது. ஈசானிய மூலையானது சிவனுக்குரிய திசை ஆகும். அவரின் அருளானது நடக்க போகும் சுப காரியத்தில் நிறைந்திருக்க வேண்டும் என்பதை குறிக்கவே பந்தக்கால் வடகிழக்கு திசையில் நடப்படுகிறது.
நலம் வாழ - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க நேத்திக்கு ஒரு பேய் படம் பாக்க நைட் ஷோ போயிருந்தேன்...!! அப்பவே சொன்னானுங்க பசங்க... அந்த படத்த போயி, அதுவும் நைட்டுல... தனியா... வேணாம்டான்னு... ஷோ முடிஞ்சப்ப நைட்டு ஒரு 1.15 மணி இருக்கும்... செம திகிலான பேய் படம்... அரண்டு போய் தியேட்டர விட்டு உடம்பெல்லாம் வேர்த்து, விறுவிறுத்து வெளியே வந்து நின்னேன். படம் முடிஞ்சதும் வந்து pickup பண்றேன்னு சொன்ன ஆட்டோவ இன்னும் காணோம். ஆட்டோ ட்ரைவருக்கு ஃபோன் போட்டா... "சார், டயர் பஞ்சர்... ஒட்டிகிட்டு இருக்கேன்... லேட்டாகும்... நீங்க வேற ஒரு ஆட்டோல வீட்டுக்கு போய்டுங்கன்னு சொன்னார்." ரொம்ப நேரம் வெய்ட் பண்ணியும் வேற ஆட்டோ கெடைக்கல... மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பிச்சேன்... பேய் படம் பார்த்த எபெக்ட், ஒரே பீதியா இருந்துச்சு. கும்முன்னு இருட்டு வேற, கரண்ட்டும் இல்ல... என் அடிமனசு திக் திக்ன்னு ஒரு கலக்கு கலக்குச்சு... திடீர்னு அந்த இருட்டுல லைட்டே போடாம ஒரு பஸ் வந்துச்சு. அது என் ஏரியாவுக்கு போற வண்டி மாதிரி தெரிஞ்சது... வண்டி ரொம்ப மெதுவா சத்தமில்லாமல் ஊர்ந்து வந்துச்சு... கை காட்டியும் அது நிக்கல... மெதுவா வந்துட்டே இருந்தது. பேய் படம் பாத்த effect என் மனசுலேருந்து மறையல... யோசிக்காமல் ஓடிப் போய் வண்டியில் ஏறிட்டேன்... டிரைவர் மாத்திரம் உட்காந்திருந்தார்... சுத்தி முத்தி பாத்தா, வண்டியில நான் மட்டும்தான். 3வது சீட்ல பம்மி உக்காந்துட்டேன்... என்ஜின் சத்தம் கேக்கல... கண்டக்டர், பாசன்ஜர்ஸ் யாரும் இல்ல... ஆனா வண்டி மெதுவாக ஊர்ந்துகிட்டே இருந்துச்சு... என் ஹார்ட்டு படக் படக்னு அடிச்சுக் கிட்டே இருக்கு... நடக்கறதெல்லாம் ஒருவேளை நாம பாத்த பேய் படத்தோட பார்ட் 2 வா இருக்குமோன்னு எனக்கு ரொம்பவே பயம் வர ஆரம்பிச்சிருச்சு... என்னோட குலதெய்வம், ஊர் தெய்வம், உலக தெய்வம் அத்தனை தெய்வத்தையும் ஒரு நிமிஷம் நினைச்சு... நான் மட்டும் இன்னைக்கி ராத்திரி முழுசா வீடு போய் சேர்ந்துட்டா கால்நடையா கோயிலுக்கு வந்து மொட்டை அடிக்கிறேன்னு, திருப்பதிக்கு வேண்டிகிட்டே இருக்குறப்ப... திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம்... டிர்ர்ர்ர்ர்... டுர்டுர்டுர்ர்ர் னு இஞ்சின் ஸ்டார்ட் ஆயிடுச்சு... பஸ்ஸுக்குள்ள, வெளில ஹெட்லைட் எல்லாமே எரிய ஆரம்பிச்சிடுச்சு... தட தடன்னு கண்டக்டரும் சுமார் 25 பயணிகளும் வண்டிக்குள்ள ஏறினாங்க... உள்ள உக்காந்து இருந்த என்னை பாத்து கேட்டாங்க பாருங்க... "எருமை மாடு, எருமை மாடு... வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு பேரு பின்னாலே இருந்து உசுர குடுத்து தள்ளிகிட்டிருக்கோம்...!! நீ ராஜா மாதிரி ஏறி உக்காந்துட்டியே... அறிவு இருக்கா உனக்குன்னு...?!"
சிரிப்புக்காக - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க William Hanna and Joseph Barbera might have foreseen the AI and its influence.
சிரிப்புக்காக - ShareChat
00:58
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க இப்ப என்ன பண்ணுவ... 🤣 இப்ப என்ன பண்ணுவ... 😂 நான் தூங்க மாட்டேனே...!! நீ என்ன இப்ப பண்ணுவ... 😎😉😏
சிரிப்புக்காக - ShareChat
00:35
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏 🙏 🪈 Hare Krishna 🛕🚩
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - மனதாய் செயல்பட்ட எந்த 9)( காரியமும் வெற்றி அடைந்ததில்லை %a மனதாய் செயல்பட்ட எந்த முழு காரியமும் தோல்வி அடைந்ததில்லை மனதாய் செயல்பட்ட எந்த 9)( காரியமும் வெற்றி அடைந்ததில்லை %a மனதாய் செயல்பட்ட எந்த முழு காரியமும் தோல்வி அடைந்ததில்லை - ShareChat
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ தேவர், அசுரர், சித்தர், செழுமையான வேதங்களை ஓதும் நாவினராகிய அந்தணர், நாம் வாழும் மண், விண், எரி, காற்று, நீர் ஆகிய ஐம்பூதங்கள், மணம் மிக்க தாமரை மலர் மேல் உறையும் நான் முகன், சிவந்த கண்களை உடைய திருமால், உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகள் ஆகிய எல்லாமாகவும் அவர்களின் தலைவராகவும் இருக்கின்ற சிவபிரான் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றத் தலமாகும். அ௫ளியவர் : திருஞானசம்பந்தர். திருமுறை : தேவாரம், முதல்-திருமுறை. பண் : பழந்தக்கராகம் திருச்சிற்றம்பலம். நாடு : நடு நாட்டுத் திருத்தலம் தலம் : திருமுதுகுன்றம். சுவாமி : பழமலைநாதர், விருத்தகிரீசுவரர். அம்பாள் : பெரிய நாயகி, பாலாம்பிகை, விருத்தாம்பிகை.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - @474 ஓம் நமசிவாய தேவராயும் அசுரராயும் சித்தர், செழுமறை சேர் நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் ருவன் மூவர் ஆய முதல் மேயது முதுகுன்றே @474 ஓம் நமசிவாய தேவராயும் அசுரராயும் சித்தர், செழுமறை சேர் நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் மேவர் ஆய விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் ருவன் மூவர் ஆய முதல் மேயது முதுகுன்றே - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க பலே... 😎 சபாசு... 😉 ஒத்த ரோசா... 🤔 ரொம்ப அருமையா புள்ளைய வளத்திருக்கம்மா!! 🤣😂
சிரிப்புக்காக - muttitask٠٠٠?? Manager can yOU 8 VaM @ He : yeS... 1 can listen, ignore and forget at the same time PHOE PHOE  muttitask٠٠٠?? Manager can yOU 8 VaM @ He : yeS... 1 can listen, ignore and forget at the same time PHOE PHOE - ShareChat
#சிரிப்புக்காக #🤣 லொள்ளு #😄சிரிப்போ சிரிப்பு😅 #😅100% சிரிப்பு இலவசம் #சிரிக்கலாம் வாங்க Cuteness becomes a problem sometimes...!! 🤣😁😂
சிரிப்புக்காக - ShareChat
00:14
#🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #தெரிந்து கொள்வோமா 🤔 #நலம் வாழ ஸ்ரீ மத்வாச்சாரியார்... துவைத வேதாந்த தத்துவத்தை நிலைநாட்டியவர். கர்நாடகாவில் பிறந்த இவர், வாயுவின் மூன்றாவது அவதாரமாகப் போற்றப்படுகிறார். அத்வைதத்தை மறுத்து, பிரம்மம் (விஷ்ணு) மற்றும் ஆத்மா முற்றிலும் வேறுபட்டவை என்ற துவைதக் கொள்கையை வலியுறுத்தினார். உடுப்பியில் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலை நிறுவியவர். கி.பி 1238ஆம் ஆண்டு, விளம்பி என்ற பெயருடைய வருடத்தில் 32 லக்ஷணங்களும் கூடிய ஒர் ஆண் குழந்தை வேதவதி-மத்யகேஹ பட்டர் என்னும் தம்பதியினருக்குப் பிறந்தது. இக் குழந்தைக்கு வாசுதேவன் என்று பெயரிட்டு வளர்த்தனர். குழந்தை சிரிப்பும், விளையாட்டுமாய் வளர்ந்து வந்தான். ஒருநாள் மத்யகேஹ பட்டர் வாங்கியிருந்த கடனை திரும்பக் கேட்டு வந்தான் ஒருவன். அந்த சமயத்தில் மத்யகேஹ பட்டர் ஊரில் இல்லை. கடன்காரனோ கடனை திருப்பி கொடுத்தாலே ஒழிய இங்கிருந்து போகமாட்டேன் என்று தொல்லை செய்கிறான். அப்போது 6 வயதே ஆன குழந்தை வாசுதேவன் வேகமாக சமயலறைக்குச் சென்று அங்கிருந்த சில புளியங்கொட்டைகளை தனது சிறுகையில் அள்ளிக் கொண்டுவந்து உனக்கு பணம்தானே வேண்டும் இதோ வாங்கிக் கொள் என்று கடன்காரன் கையில் அளிக்கிறான். புளியங்க்கொட்டைகள் எல்லாம் தங்க காசுகளாக மின்னியதாம். 7 வயதில் குழந்தைக்கு உபநயனம் செய்வித்து குருகுலத்திற்கு அனுப்பினர். குருகுலத்தில் பாடம் பயிலும் சமயத்தில் ஒரு நாள் ஓர் மலைப்பாம்பு வழியில் படுத்திருக்க, வாசுதேவன் தனது காலால் அழுந்தச் செய்தே அந்த பாம்பை கொன்றான். இவ்வாறாக ஒருசில அதிசயமான செய்கைகள செய்த வாசுதேவனது கைரேகைகளை பார்த்த ஒரு பெரியவர் திகைப்படைகிறார். பின்னர் அன்னை வேதவதியிடம் "அம்மா உங்கள் திருக்குமரன் ஓர் அவதார புருஷன். முன்பு வாயுகுமாரனாக ராமயண காலத்திலும், பாண்டவர்களில் பீமனாகவும் இருந்தவர் இவர். இப்பிறவியில் சிறந்த ஞானியாக பாரதம் முழுவதும் ஒளிவிசுவார்" என்றார். வாசுதேவனுக்கும் தனது 15 ம் வயதிலேயே சன்யாசியாகும் எண்ணம் வந்தது. ஆனால் பெற்றோர் பாசம் அவரைக் கட்டுப்படுத்த, ஒருநாள் தன் பெற்றோரிடம், "நான் ஒரே மகனாக இருப்பதால் தானே என்னை சன்யாசம் கொள்ள தடுக்கிறீர்கள்?, உங்களுக்கு இன்னொரு மகன் பிறப்பான் அதன் பின் நான் சன்யாசம் ஏற்கிறேன் என்று கூறுகிறார். அது போலவே வேதவதி-மத்யகேஹ பட்டருக்கு இன்னொரு ஆண் மகவு பிறக்கிறது. அப்போது வாசுதேவன் வயது 16. காஷாயம் தரித்து, இல்லத்தை துறந்து உடுப்பி வந்து அச்சுதப்பிரக்ஞர் என்னும் மகானை குருவாக ஏற்கிறார். அனந்தேஸ்வரர் கோவிலில் சன்யாச தீக்ஷை அளித்து பூரணபிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் என்ற தீக்ஷா நாமம் பெறுகிறார். தனது 23 ம் வயதில் கீதைக்கு பாஷ்யம் எழுதி, அதனை வேதவியாசரிடம் சமர்பணம் செய்வதற்காக பத்ரிநாத் சென்று, பின்னர் ப்ரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் செய்திருக்கிறார். இவர் கன்னடம், சம்ஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் இருந்திருக்கிறார். தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் என்று 37 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் கனவிலேயே உடுப்பி கிருஷ்ணன் விக்ரஹம் தான் இருக்கும் இடம் பற்றிக் கூறி, அதனை மீட்கச் செய்து உடுப்பியில் கோவில் கட்டி எழுந்தருளுகிறார். இன்றும் இவர் ஸ்தாபித்த அஷ்ட மடங்களைச் சார்ந்த சன்யாசிகளே இங்கு பூஜை செய்கின்றனர். இறைவனிடம் அழியாத அன்பு கொள்வதும், எல்லாரிடமும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டுவதும், தனக்குரிய கடமைகளை பணிவுடன் செய்வதும், பக்தி உள்ளத்துடன் வாழ்வதும், வாழ்கையை நல்ல பணிகள் செய்ய அர்பணிப்பதுமே வாழ்வின் தத்துவம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். 'மத்வர்' என்று, அதாவது 'யாராலும் வெல்ல முடியாதவர்' என்று அழைக்கத் தொடங்கினர் சிஷ்யர்கள். இவர் அளித்த ப்ரம்ம ஞான தத்துவமே த்வைதம் எனப்படுகிறது. இவரது கூற்றுப்படி பரமாத்மாவும்-ஜீவாத்மாவும் என்றும் ஐக்கியமாகாது. இவரது தத்துவங்களை பின்பற்றியவர்களை மாத்வர் என்று கூறும் வழக்கம் ஏற்பட்டது. இன்றும் மாத்வர்களுக்கு ஹரியும் வாயுவும் ப்ராதான்யம், ஏனென்றால் மாத்வர் ஹரிபக்தியில் சிறந்தவர், அதே சமயத்தில் அவரே வாயுகுமாரன் என்பதால். மாத்வர் மற்ற சன்யாசிகள் போல ப்ருந்தாவனப் பிரவேசம் செய்யவில்லை. 1317 ம் வருஷம் மாக சுக்லபக்ஷ நவமியில் அனந்தேஸ்வரர் கோவிலில் தனது சிஷ்யர்களுக்கு பாடம் நடத்தும் போது திடீரென அவர் மீது புஷ்பங்களால் விருஷ்டி நடந்து அவரை மூடி ஒரு பூங்குன்று உருவாகிறது. இதை அவரிடம் பாடம் கற்ற மாணவர்கள், கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாம் பார்க்கிறார்கள். பிறகு புஷ்பங்களை விலக்கிப் பார்த்தால் மத்வரை காணவில்லை. இவர் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் வேதவியாசர் அருகில் அமர்ந்து பாடம் கேட்பதாக நம்பிக்கை. மத்வர் வாழ்ந்த வீடு, கல்வி கற்ற இடம், விளையாடிய இடம் நீராடிய குளம், மலைப்பாம்பு இறந்த இடம் எல்லாம் பாஜகம் என்ற கிராமத்தில் கர்னாடகத்தின் தென் பகுதியில் இருக்கிறது. இவரின் வாழ்க்கை வரலாறு ஸ்ரீ ஸுமத்வ விஜய மஹா காவியம் என்று அழைக்கப் படுகிறது.
🕉️ ஓம் நமோ நாராயணா 🙏 - ShareChat