வேப்பனப்பள்ளி சட்டமன்றத்தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள PSசீனிவாசன் மகாத்மா காந்தியின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியதை செலுத்தினார்.
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரியில் உரூஸ் திருவிழாவையொட்டி குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சந்தனக்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் மூன்று மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
#கிருஷ்ணகிரி_செய்தி
தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். #கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரியில் ரம்ஜான் மற்றும் உரூஸ் திருவிழாவினை முன்னிட்டு ஹக்கே பஞ்சத்தன் பொதுஅறக்கட்டளை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி உணவை கிருஷ்ணகிரி செங்கல் தோப்புதர்காவின் கமிட்டி தலைவர் எஸ் கேநவாப் தொடங்கி வைத்தார்
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரிபழைய பேட்டை TB ரோட்டில்அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில்சமூக நல்லிணக்க ஈகைப்பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் நடைப்பெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யும் கட்சிக்கு ஆதரவளிப்பது என தீர்மானம்.
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அசோக்குமார் எம் எல் ஏ அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு , கிருஷ்ணகிரியில் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த
போத்தாபுரம் கிராமத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.இதில ஏராளமாமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
#கிருஷ்ணகிரி_செய்தி
100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது - மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
#கிருஷ்ணகிரி_செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தில் ஸ்ரீமாரியம்மன்
ஸ்ரீ காளியம்மன்
கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதனையொட்டி
ஊர் கவுண்டர் குப்புசாமி தலைமையில் காவேரிப்பட்டணம்
தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஆற்றில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு
காவடியாட்டம், மயிலாட்டம் ஒயிலாட்டத்துடன் புனிதநீர் எடுத்துவரப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
#கிருஷ்ணகிரி_செய்தி



