#வரலாற்றில் இன்று.....மறக்க முடியாத நினைவுகள்
நவம்பர் 12, 1990*
இணைய வலைப் பற்றிய
தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்த நாள்.
first project of the Internet, Rim Berners - Lee announced.
ஆர்கன் என்ற அரிய தன்மையுள்ள வாயுவைக் கண்டு பிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, ஜான் வில்லியம் ஸ்ட்ரட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 12, 1842).*
ஜான் வில்லியம் ஸ்ட்ரட் (John William Strutt, 3rd Baron Rayleigh), நவம்பர் 12, 1842ல் இங்கிலாந்தில் எசெக்சு என்ற ஊரில் உள்ள லாங்க்போர்டு குரோவ் என்ற இடத்தில் பிறந்தார். மூத்த மகனாகப் பிறந்த இவருடைய தந்தை இரண்டாவது பாரன் ராலே ஆவார். இவர் உழவரும் நிலக்கிழாரும் ஆவார்.
சான் ஸ்ட்ரட் இளம் வயதிலேயே கணிதத்தில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். இவர் சிறுவனாயிருந்த போது இவரின் உடல் நலம் அடிக்கடி சீர்கேடு அடைந்தது. பத்து வயதான போது பள்ளியிலேயே அமைந்திருந்த உடல்நல வாழிடத்தில் இருந்துகொண்டே இவருடைய இளமைக் கல்வியைப் பெறவேண்டியிருந்தது. அதன்பின் மூன்று ஆண்டுகள் தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து தன்னுடைய கல்வியைத் தொடர்ந்தார்.
வார்னர் என்ற பாதிரியாரின் அரவணைப்பில் சில ஆண்டுகள் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
1861ல் டிரினிட்டிக் கல்லூரியில் நேர்ந்தார். எட்வர்டு.ஜெ, ரூத் என்ற மிகச் சிறந்த ஆசிரியருடைய பயிற்சி இவருக்குக் கிடைத்தது. இவருடைய அறிவியல் ஆர்வத்திற்கும் அவருடைய பயிற்சி அடித்தளமாக அமைந்தது. ஸ்டோக்ஸ் என்ற லூகேசியன் கணிதப் பேராசிரியர் அக்கல்லூரியில் அவ்வப்போது சொற்பொழிவுகளை நிகழ்த்திவந்தார்.
சொற்பொழிவுகளின் இடையே அவர் சில ஆய்வுகளையும் செய்து காட்டி விளக்கியது ராலேவை மிகவும் கவர்ந்தது. அந்த காலத்தில் மாணவர்கள் தனியே ஆய்வுகளைச் செய்து பார்க்க இயலாத சூழ்நிலையில் ஸ்டோக்சின் ஆய்வுக் காட்சிகள் இவரைக் கவர்ந்தன. பிற்காலத்தில் இவர் சிறந்த அறிவியலறிஞராக விளங்கிய போது, ஸ்டோக்ஸ் தன்னைக் கவர்ந்த விதத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
1864ல் இவருக்கு வானியல் துறையின் உதவித்தொகை கிடைத்தது. 1865ல் நடைபெற்ற டிரைபாள் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அதன் மூலம் சுமித் பரிசையும் வென்றார்.
1865ல் மாக்ஸ்வெல் என்ற அறிவியலறிஞர் வெளியிட்ட மின்காந்தக் கொள்கை பற்றிய ஆய்வறிக்கையை ஆர்வமுடம் படித்தார். அது தொடர்பான முக்கியக் கருத்துக்களை இவர் தன்னுடைய ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். அது போலவே 1860ல் ஹெல்ம் ஹோல்ட்ஸ் அவர்களால் எழுதப்பட்ட "ஒலி அனுநாத இயற்றி" (Acoustic resonator) பற்றிய ஆய்வுகளையும் தன்னுடைய ஆய்வில் பயன்படுத்திக்கொன்டார்.
1866ல் கேம்பிரிட்ஜ் டிரினிடி கல்லூரியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாட். அதே காலத்தில் அமெரிக்கா நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
தன்னுடைய வாழ்க்கைக்காக எந்தப் பணியிலும் ஈடுபட்டுப் பொருளீட்ட வேண்டிய தேவை இவருக்கு இல்லாமல் இருந்தது. அமெரிக்காவிலிருந்து திரும்பியது. தன்னுடைய அறிவியல் ஆய்வுகளுக்குத் தேவையான பல்வேறு கருவிகளை வாங்கி இவருடைய குடும்பப் பண்ணைத் தோட்டம் அமைந்துள்ள டெர்லிங்(டெர்லிங்) என்ற இடத்தில் தனக்கான ஆய்வுக் கூடம் ஒன்றை அமைத்துக் கொண்டார். கால்வனா மீட்டர் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். 1868ல் ஆங்கிலச் சங்கக் கூட்டம் ஒன்றில் அது பற்றிய தன்னுடைய முடிவுகளை அறிவித்தார்.
1871ல் ஒளிச்சிதறல் பற்றிய ராலே கொள்கையை வெளியிட்டார். வானம் நீல நிறத்தில் காட்சியளிப்பதற்கான சரியான விளக்கமாக இவருடைய கொள்கை அமைந்தது. 1872ல் கடுமையான காய்ச்சலால் தாக்கப்படார். அப்போது இவர் எகிப்திலும் கிரீசிலும் தன்னுடைய வாழ்க்கையைக் கழிக்க நேர்ந்தது.
1873ல் சொந்த ஊருக்குத் திரும்பினார். அப்போது இவருடைய தந்தை காலமானார். எனவே 7600 ஏக்கருள்ள நிலங்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு இவர் தலைமேல் விழுந்தது. பொது அறிவியலில் இவர் பெற்ற கல்வி, பட்டறிவில் இவர் பெற்ற வேளாண்மை அறிவுக்குப் பல வகைகளில் தூண்டுதலாக அமைந்தது. இவர் "மூன்றாம் பாரன் ராலே" ஆனார். 1876ல் இப்பொறுப்பைத் தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு விலகினார்.
1877ல் அறிவியல் முறையில் ஆராய்ந்து இவரால் எழுதப்பட்ட 'ஒலிக் கொள்கை' (Theory of Sound) பற்றிய முதல் நூல் தொகுதி வெளியிடப்பட்டது. இதில் ஒலியை உருவாக்கும் அதிரும் ஊடகத்தின் எந்திரவியல் (Mechanics of vibrating medium) பற்றி விளக்கமாக எழுதியிருந்தார். அடுத்த ஆண்டில் இரண்டாம் தொகுதியாக ஒலி அலைகளின் இயக்கம் பற்றி எழுதி வெளியிட்டார்.
ஆர்கன் என்ற அரிய தன்மையுள்ள வாயுவைக் கண்டறிந்தவர். வாயுக்களின் அடர்த்திகளைப் பற்றிய ஆய்வுகளுக்காகவும், அதன் மூலம் ஆர்கன் வாயுவைக் கண்டு பிடித்ததற்காகவும் இவருக்கு 1904 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
வானம் ஏன் நீலநிறமாக உள்ளது என்பதற்கு இவருடைய ஒளிச்சிதறல் (Scattering of Light) பற்றிய 'ராலே கொள்கை' சரியான விளக்கமாக இருந்தது. ஓம் (Ohm) என்ற அலகினைத் தரப்படுத்தியவர். நோபல் பரிசு பெற்ற சான் வில்லியம் ஸ்ட்ரட் ஜூன் 30, 1919ல் தனது 76வது அகவையில் இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
M̲O̲R̲N̲I̲N̲G̲ 𝙲̲𝙾̲𝙵̲𝙵̲𝙴̲𝙴̲... #𝙼𝚘𝚛𝚗𝚒𝚗𝚐 𝙲𝚘𝚏𝚏𝚎𝚎
Stop getting so emotionally attached and enjoy experience with a person...
*Be friends...*
*Be a moment in time...*
*Be a memory...*
You don't have to fall madly in love with everyone who comes your way...
Just enjoy the presence for your moment together.
𝕋𝕠𝕡 𝕠𝕗 𝕥𝕙𝕖 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘.
𝐑𝐢𝐬𝐞 𝐚𝐧𝐝 𝐒𝐡𝐢𝐧𝐞....𝙷𝚊𝚟𝚎 𝙰 𝙽𝚒𝚌𝚎 𝙳𝚊𝚢
இந்த ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடுங்கள்*
ஐப்பசியில் காவிரியில் நீராடி, பலன்களையும் புண்ணியங்களையும் பெற்றவர்கள் ஏராளம்.இந்தப் பூவுலகில், அறுபத்தாறு கோடி தீர்த்தங்கள் உள்ளன எனச் சொல்கிறது காவேரி மஹாத்மிய புராணம்.
துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் காவிரியில் சங்கமமாகின்றன என்பது ஐதீகம்.பிரஹ்மா முதலான ஸகல தேவர்களும், சரஸ்வதி, கெளரி, லக்ஷ்மி, இந்திராணி முதலியவர்களும், தேவ ரிஷிகளும், துலா மாதத்தில் காவிரியில் நீராட விரும்பி வருகின்றனர்.
மேலும் மஹான்களின் கதைகள், துளசியின் மஹிமை, கங்கையின் பெருமை, துளசியைக் கொண்டு பெருமாளுக்குச் செய்யப்படும் அர்ச்ச னையின் சிறப்பு, ஸாளக்ராமத்தின் ஆராதன மஹிமை, காவிரியின் பெருமை இவற்றை யாராவது சொல்ல காதால் கேட்பவர்களும். படிப்பவர்களும் பேறு பெற்றவர்கள்.
காவிரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரைப் புத்திரனாக அடைந்தார்.அர்ஜுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை தரிசித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்கிறது புராணம். துலா ஸ்நானம் செய்து பிதுர் தர்ப்பணம் செய்தால் புண்ணியமும் பித்ரு ஆசியும் கிடைக்கும்.
ஜாதகத்தில் உள்ள சர்ப்ப தோஷங்கள், பிதுர் தோஷங்கள் நிவர்த்தியாகும். சகல தேவதைகளின் ஆசீர்வாதமும் கிடைக்கும்
துலாக் காவிரி ஸ்நானம் செய்பவர்கள், காவிரி ஆறுக்கு பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கும் நீர் வார்த்து, வலம் வந்து வணங்குவது புண்ணிய பலன்களைத் தரும்.
கணவரின் உயிரை மீட்ட சுசீலை
துலா ஸ்நான மகிமை குறித்த பின்வரும் கதை மிகவும் உருக்கமானது. சுசீலை என்ற ஒரு குணவதி இருந்தாள். அவளுடைய கணவன் பிரம்ம சர்மா.
தீய ஒழுக்கங்களோடு வாழ்ந்து வந்தான். அதனால் அவன் ஆயுள் குறைந்துகொண்டே வந்தது. சுசீலை தினசரி நான்கு காரியங்களைத் தவறாமல் செய்துவந்தாள்.
1.காவிரியில் நீராடுவது (குறிப்பாக துலா மாதத்தில் தவறாமல் நீராடுவது).
2. நீராடி பகவானைப் பூஜிப்பது.
3. கரையில் உள்ள அரசமரத்துக்கு நீரூற்றி வலம் வந்து பூஜை செய்வது.
4. சில ஏழைகளுக்கு காவிரிக்கரையில் அன்னதானமும் செய்வது.
இதனால் அவள் புண்ணிய பலன் கூடியது. ஒருநாள் எமகிங்கரர்கள் அவள் கணவன் உயிரை எடுப்பதற்காக வந்தார்கள். ஆனால் சுசீலையைக் கடந்து அவர்களால் செல்ல முடியவில்லை. எமனிடம் சென்று சொன்னார்கள்.
எமன் கோபத்தோடு சித்ரகுப்தனைஅனுப்பினான்
சித்திரகுப்தன் எப்படியாவது பிரம்ம சர்மா உயிரைக் கவர்ந்து செல்லக் காத்திருந்தான். அவனாலும் சுசீலையைக் கடந்து பிரம்ம சர்மாவை நெருங்க முடியவில்லை. தக்க சமயத்திற்காகக் காத்திருந்தான்.
அப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்த பிரம்ம சர்மா தன் மனைவியை நோக்கி, ‘‘சுசீலை, இந்தச் சாப்பாடு நன்றாக இருக்கிறது இரவும் சாப்பிட வேண்டும் எடுத்து வை” என்றான். இதைக் கேட்டு தன்னை மறந்து சித்ரகுப்தன் சிரித்தான்.
அந்தச் சிரிப்பு அசரீரியாக சுசீலையின் காதில் விழுந்தது. ஏதோ விபரீதம் நடப்பதைத் தெரிந்துகொண்ட சுசீலை,“யார் சிரித்தது? யாராக இருந்தாலும் என் முன்னே வர வேண்டும்” என்று உரக்கச் சொல்ல அவளுடைய தவவலிமையால் சித்ரகுப்தன் சுசீலையின் முன்னால் தோன்றினான். ஒளி மயமான தேகத்துடன் சித்திரம் போன்ற அழகோடு இருந்த அவனைப் பார்த்து “நீர் யார்?ஏன் சிரிக்க வேண்டும்?” என்று கேட்டாள்.
தான் “சித்ரகுப்தன்” என்று சொன்னவுடன், அவனை விழுந்து வணங்க, “தீர்க்க சுமங்கலியாய் இருப்பாய்” என்று சித்ரகுப்தன் வாழ்த்தினான். அப்பொழுது சிரிப்புக்குக் காரணத்தைக் கேட்டாள் சுசீலை.சித்திரகுப்தன் சொன்னான்
“சாயங்காலம் உன்கணவன் உயிர் போகப் போகிறது. அதைத் தெரிந்துகொள்ளாத உன் கணவன் சாப்பாடு எடுத்துவைக்கச் சொல்கிறானே என்று சிரித்தேன்” என்று சொல்ல சுசீலை சித்திரகுப்தனிடம் பிராயச்சித்தம் கேட்கிறாள்.
“அம்மா, நீ தினசரி காவிரியில் நீராடிய பலனைத் தந்தால் இவன் பிழைப்பான். ஆனாலும் என் தலைவன் எமராஜாவுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அதனால் நான் இவனுக்கு யமஸ்துதி சொல்லித் தருகின்றேன். அதை அவனிடம் சொன்னால் யமன் இவனுடைய ஆயுளை நீட்டித்துக் கொடுப்பார்.
திரும்ப இவன் உயிர் வரும்வரை இவன் உடலை ஒன்றும் செய்ய வேண்டாம்” என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன்
அதேநேரம் பிரம்ம சர்மா ஒரு பெரிய உணவுக் கவளத்தை எடுத்து வாயில் அடக்கிக் கொள்ள அது தொண்டையில் சிக்கி அப்பொழுதே இறந்துபோனான்.
அவனை அழைத்துச்சென்ற சித்திரகுப்தன் யமனை மகிழ்விப்பதற்காக யம ஸ்துதிகளைச் சொல்லிக் கொடுத்தான்.“நீ யம லோகம் போனவுடன் யமராஜனை வணங்கி இந்தத் துதிகளைச் சொல்.
உன் மனைவியின் காவிரி ஸ்னான பலத்தாலும், அவனை மகிழ்விக்கும் யமஸ்துதி சொன்னதாலும் உன் வாழ்நாளை நீட்டித்து அனுப்புவான்” என்று சொல்ல அவ்வாறே எமலோகம் சென்று, யமனை பணிவோடு நமஸ்கரித்து, யமஸ்துதி சொல்ல, பிரம்ம சர்மாவினுடைய வாழ்நாள் நீட்டிக்கப்பட்டது. அவனைத் திருப்பி அனுப்பினான் யம தர்மராஜன். தூக்கத்திலிருந்து விழிப்பவனை போல எழுந்தான்
பிரம்மசர்மா.
காவிரி துலா ஸ்நானம் செய்பவர்கள் சங்கற்ப மந்திரத்தோடு,
“தர்மராஜ நமஸ்தேஸ்து சாக்ஷாத் தர்ம ஸ்வரூபிணே,
தர்மிஷ்ட சாந்த ரூபாய சத்திய ரூப நமோ நம:
என்று தொடங்கும் இந்த யமஸ்துதியையும் சொல்லலாம் என்று காவிரி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
துலா ஸ்நானம் குறித்தசுவையான செய்திகள்
1.. ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும்.
2. கங்கைக்கு இல்லாத பெருமை காவிரிக்கு ஏன் என்பதை,“ எனது திருவடிகளிலிருந்து பிறந்ததால், கங்கை புனிதமானது. காவிரியோ எனது மாலையாகி, எனது ஹிருதயத்திற்கு அருகில் இருப்பதால், கங்கையை விட புனிதமானது “ - என்று விளக்கமளித்தார் பகவான் விஷ்ணு.
3..துலா மாதத்தில் காவிரியில் நீராடி, தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும், அந்தப் பாபங்களைக் காவேரி போக்கிக் கொள்ள திருமங்கலக்குடி திருத்
தலத்திலும், மாயூரத்தில் (மயிலாடுதுறை) உத்தரவாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்வது) இருந்து போக்கிக்கொள்கிறாள்.
4. துலா மாதத்தில் இதர நதிகளும் புண்ய தீர்த்தங்களும் காவேரியில் சேர்ந்து விளங்குகின்றன. அன்று துலா கட்ட கோயில்களின் உற்சவ மூர்த்தி களுக்கு தீர்த்த வாரி நடத்துகிறார்கள். ஆதலால் அப்போது ஸ்நானம் செய்பவர்கள் பஞ்ச மகா பாதகங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். அஸ்வமேத யாகம் செய்த பலனையும் அடைகின்றனர்.
துலா ஸ்நான சங்கல்பம் முறையாகச் செய்து கொண்டு காவிரியில் நீராடி அருகில் உள்ள திருக்கோயிலில் எண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றினால் அவர்களுக்குச் சூரியலோகம் கிடைக்கிறது. காவிரியில் நீராடி யாராவது ஒரு ஏழைக்கு வஸ்திர (ஆடை) தானம் செய்தால் சந்திர லோகம் கிடைக்கிறது.
காவிரியில் நீராடி யாரேனும் ஒருவர் பசிக்கு அன்னமிட்டால் அவர் செய்த அனைத்துப் பாவங்களும் நசித்துப் போய்விடுகின்றன. எனவே, இந்த மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில் காவிரி நதியில் நீராடி பலன் பெறுவோம்.
#ஐப்பசி மாத வழிபாடு சிறப்பு
#டீ பரிதாபங்கள்
டீ குடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் நம் உடலில் ஏற்படும் விளைவுகள் அறிவோமா??*
டீ குடிக்காமல் இருப்பதால் செரிமான பிரச்சினைகள் மற்றும் ஒரு சில வகையான புற்று நோய்களை தடுக்க முடியும்
டீ குடிக்காமல் இருப்பதால் காஃபைன் உட்கொள்ளல் குறைந்து உடலிற்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது. மேலும் பதற்றத்தையும் குறைக்கிறது
டீ குடிப்பதை விடுவது உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பெரிய மாற்றத்தை உண்டாக்கும்
டீ குடிப்பதை கைவிடுவது டீஹைட்ரேஷன் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதற்கு உதவும்.*
டீ குடிப்பதை விடுவது நமது செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது.
டீ குடிப்பதை விட்டுவிட்டால் சர்க்கரை உட்கொள்ளல் குறையும். இதனால் முகத்தில் பளபளப்பு உண்டாகும்
#தூய்மையான ஆறு
உலகின் தூய்மையான ஆறுகளில் ஒன்று. இது இந்தியாவில் உள்ளது. மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங்கிலிருந்து 100 கிமீ தொலைவில் உம்ங்கோட் நதி. படகு காற்றில் இருப்பது போல் தெரிகிறது; தண்ணீர் மிகவும் சுத்தமான மற்றும் வெளிப்படையானது. நமது நதிகள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். மேகாலயா மக்களுக்கு ஹாட்ஸ் ஆஃப்.
One of the cleanest rivers in the world. It is in India. River Umngot, 100 Kms from Shillong, in Meghalaya state. It seems as if the boat is in air; water is so clean and transparent. Wish all our rivers were as clean. Hats off to the people of Meghalaya.
.
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
நவம்பர் 11, 1926*
அமெரிக்காவின் எண்ணிடப்பட்ட நெடுஞ்சாலை முறை உருவான நாள்.
இதுவே, எண்களின்மூலம் சாலைகளை அடையாளம் காட்டிய உலகின் முதல் நெடுஞ்சாலை அமைப்பாகும்.
பிற நாடுகளுக்கு முன்னோடியாக இவற்றை உருவாக்கிய அமெரிக்காதான், இன்றும் உலகிலேயே அதிகச் சாலைகளைக் கொண்ட நாடு.
சீனா மூன்றாமிடத்திலிருந்தாலும், மிக அதிக விரைவுச் சாலைகளைக் கொண்ட நாடாக உயர்ந்திருக்கிறது.
இந்தியா இரண்டாமிடத்தில் இருந்தாலும், மிகக்குறைந்த தொலைவிற்கே விரைவுச்சாலைகளை அமைத்து, காலத்திற்கேற்ற முன்னேற்றத்தை அடையாமல் பின்தங்கியிருக்கிறது.
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
*நவம்பர் 11, 1930*
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தன் (முன்னாள்) மாணவரான லியோ சிலார்ட் உடன் இணைந்து உருவாக்கிய குளிர்பதனப் பெட்டிக்கு இன்று காப்புரிமை வழங்கப்பட்ட நாள்.
இது தற்போது நாம் பயன்படுத்தும் குளிர்பதனப் பெட்டி அல்ல.
உண்மையில் இதற்கு முன்பே குளிர்பதனப் பெட்டி பயன்பாட்டில் இருந்தது.
பெர்லினில், குளிர்பதனப் பெட்டியில் ஏற்பட்ட கசிவினால், நச்சு வாயுக்கள் வெளியாகி ஒரு குடும்பமே பலியான செய்தியைப் படித்ததால், நச்சு வாயுக்கள் பயன்படுத்தப்படாத ஒரு குளிர்பதனப் பெட்டியை ஐன்ஸ்டீன் உருவாக்கினார்.
நாம் தற்போது பயன்படுத்தும் குளிர்பதனப் பெட்டியில் ஒரு மோட்டார் மூலம் கம்ப்ரசர் இயக்கப்படுகிறது. ஆனால், அசையும் பாகங்களே இல்லாமல் உருவாக்கப்பட்டது ஐன்ஸ்டீன் குளிர்பதனப் பெட்டி.
#காசு பணம் துட்டு
"பணம் உலோகமாக மட்டும் இல்லாமல் இருந்தபோது, நினைவுகளும் கூட...
நம் தாத்தா பாட்டி ஓடிய நாணயங்கள் இவை
3 பைசா, 5 பைசா, 10 பைசா, 12 பைசா, 25 பைசா, 50 பைசா, 75 பைசா...
ஒவ்வொரு நாணயத்திற்கும் தனித்துவமான அடையாளம் இருந்தது,
எங்கோ சதுரம், எங்கோ சுற்று, எங்கோ பூ போன்ற வடிவம்.
இந்த நாணயங்கள் வெறும் கொள்முதல் அல்ல,
மாறாக அவர்கள் இந்தியாவின் புதிய பொருளாதார அடையாளத்தின் அடையாளமாக இருந்தார்கள் —
1957ல் நாடு "புதிய பணம்" முறையை ஏற்றுக்கொண்ட போது மற்றும்
ரூபாய் 100 பாகங்களாக வழங்கப்பட்டது. 💰🇮🇳
இவற்றில் "புதிய பணம்" என்ற உகேரே எழுத்துக்கள் எங்களுக்கு நினைவூட்டுகின்றன
அப்படித்தான் இந்தியா பழமையிலிருந்து புதிய சகாப்தத்திற்கு அடியெடுத்து வைக்கிறது
பாரம்பரியமும் நவீனமும் கைகோர்த்துக்கொண்டிருந்த இடம்.
இன்று சந்தையில் இருந்து இந்த நாணயங்கள் மறைந்தாலும்
ஆனால் இவை சேகரிப்பவர்களுக்கான பொக்கிஷங்கள் மற்றும்
நம் அனைவருக்கும் — கடந்த காலத்தின் ஒரு பொன்னான பார்வை.
#வாழ்க்கை பாடங்கள்
வாழ்க்கையில் சில பாடங்கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும்.
சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்கள் தரும்.
இங்கேயும் ஒரு சாதாரணமான மனிதனையும் ஏற்படும் சூழல் மாற்றி மாற்றி வைக்கிறது.
நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வேறு ஒன்றாக இருக்கிறது.
எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபட தவிக்கிறோம். இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே அது தான் தன் நம்பிக்கை வாழ்க்கை













