
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம், “ஈமான் என்றால் என்ன?”
என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உனது நன்மை உனக்கு மகிழ்ச்சியையும், உனது தீமை உனக்கு வருத்தத்தையும் அளித்தால் நீ முஃமின் (இறை நம்பிக்கையாளர்)” என்று கூறினார்கள்.
அவர், “அல்லாஹ்வின் தூதரே! பாவம் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உனது மனதில் எது உறுத்துகிறதோ (அதுவே பாவமாகும். எனவே) அதை விட்டுவிடு” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 22166) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
காரூனுக்கு அவனது சமூகத்தார் சொன்ன அறிவுரை இது.
இது சூரா அல்-கஸஸ் 77வது வசனத்தின் ஒரு பகுதி.
"அல்லாஹ் உனக்குக் கொடுத்ததைக் கொண்டு மறுமையின் வீட்டைத் தேடிக்கொள். இவ்வுலகில் உன் பங்கை மறந்து விடாதே. அல்லாஹ் உனக்கு நன்மை செய்தது போல் நீயும் நன்மை செய். பூமியில் குழப்பம் செய்யத் தேடாதே. நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்வோரை நேசிப்பதில்லை"
[அல்குர்ஆன் 28:77]
அல்லாஹ் நம் எல்லோருக்கும் அவன் செய்த நன்மைகளை உணர்ந்து, பிறருக்கு நன்மை செய்யும் பாக்கியத்தை தருவானாக.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
"அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணினால், அவற்றை உங்களால் எண்ணி முடிக்க முடியாது"
[அல்குர்ஆன் சூரா இப்ராஹீம் 14:34]
நாம் எண்ணாத நிஃமத்கள் ஏராளம்
கண் பார்வை, மூச்சு காற்று, தண்ணீர், நிம்மதியான தூக்கம், பாதுகாப்பு, இஸ்லாம் என்ற வழிகாட்டல். இவை இல்லாமல் வாழும் மனிதர்களை பார்க்கும் போதுதான் நம்மிடம் இருப்பதின் மதிப்பு புரியும்.
நமக்கு கீழே பார்த்தால் நன்றியுணர்வு வரும், நமக்கு மேலே பார்த்தால் பேராசை வரும்.
நபி ஸல் கூறினார்கள்: "உங்களை விட கீழ் நிலையில் உள்ளவரை பாருங்கள். உங்களை விட மேல் நிலையில் உள்ளவரை பார்க்காதீர்கள். அதுதான் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை அற்பமாக எண்ணாமல் இருக்க சிறந்த வழி"
[ஸஹீஹ் முஸ்லிம் 2963]
"நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக அதிகமாக்குவேன்"
[சூரா இப்ராஹீம் 14:7]
அல்ஹம்துலில்லாஹ் என்பது வெறும் வார்த்தை இல்லை. அது ரிஸ்கின் சாவி.
நாம் நினைப்பது தான் பிரச்சினை
நம்மிடம் இல்லாததை பற்றியே யோசித்து, இருப்பதை மறந்து விடுகிறோம். ஒரு கையை இழந்தவனுக்கு இன்னொரு கை இருப்பதே பெரிய நிஃமத். ஆனால் இரண்டு கை உள்ள நமக்கு அது சாதாரணமாக தெரிகிறது.
இன்று காலை கண் விழித்தது முதல் இதுவரை அல்லாஹ்விடம் கேட்காமலேயே எத்தனை நிஃமத்களை அனுபவித்திருக்கிறீர்கள்? இதயம் துடிக்கிறது, நுரையீரல் சுவாசிக்கிறது, சிறுநீரகம் வேலை செய்கிறது. இதற்கெல்லாம் நாம் பில் கட்டுகிறோமா?
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
"அவசரம் நமக்கு, நிதானம் அல்லாஹ்வுக்கு."
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
“நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை” என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்."
[ஸஹீஹ் புகாரி 6340]
மலர் மலர்வதற்கு முன் மொட்டுக்குள் அதற்கான வேலை நடக்கும்
வெளியில் தெரியவில்லை என்றாலும், உள்ளே இதழ்கள் விரிந்து கொண்டிருக்கும். உங்கள் துஆவும் அப்படித்தான். அல்லாஹ் பின்னணியில் காரணங்களை தயார் செய்து கொண்டிருக்கிறான். நீங்கள் நினைக்காத வழியில் அதை அழகாக்கி தருவான்.
சீசன் மாறினால் பூ மலராது
குளிர் காலத்தில் ரோஜா பூக்காது. அதற்கான சீசன் வர வேண்டும். உங்கள் வாழ்க்கையிலும் அல்லாஹ் சரியான 'சீசனுக்காக' காத்திருக்கிறான். அந்த நேரம் வரும்போது, நீங்கள் கற்பனை செய்ததை விட அழகாக உங்கள் துஆ மலரும்.
நினைவில் கொள்ளுங்கள்:
ரோஜா மலர்வதற்கு அல்லாஹ்வின் 'குன்' - ஆகு என்ற ஒரு கட்டளை போதும். உங்கள் துஆ நிறைவேறவும் அதே 'குன்' போதும். அந்த கட்டளை எப்போது வர வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும்.
எனவே துஆ கேட்பதை நிறுத்தாதீர்கள். மொட்டு மலரும் வரை தண்ணீர் ஊற்றுவது போல, துஆவை தொடர்ந்து கேளுங்கள். சரியான நேரத்தில் அல்லாஹ் அதை மலரச் செய்வான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
இம்மானுட வரலாற்றில் இறைவனுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் சிறந்த பெண்மணிகளை
இந்த ஹதீஸ் அடையாளப்படுத்துகிறது.
மர்யம் (அலை) அவர்கள் ஈஸா (அலை) அவர்களின் தாயார். கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி ஆவார்.
"அந்தக் காலத்துப் பெண்களில் சிறந்தவர் மர்யம் (அலை) அவர்கள் ஆவார். இந்தக் காலத்துப் பெண்களில் சிறந்தவர் கதீஜா (ரலி) அவர்கள் ஆவார்கள்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
ஒரு மனிதனின் உண்மையான நற்பண்பு அவனது வீட்டாரிடம் அவன் காட்டும் அன்பிலும், கனிவிலுமே
அடங்கியுள்ளது என்பதை இந்த ஹதீஸ் வலியுறுத்துகிறது.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
"ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக செல்லுபவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கைகளில் மருதாணி வைப்பதை தவிர்த்துக் கொள்ளவும்."
மருதாணி (henna) வைத்தால் கைரேகை மெஷினில் (fingerprint scanner) பொதுவாக பதியும் ஆனால் சில சூழ்நிலைகளில் சிரமம் இருக்கலாம்.
ஏனென்றால் மதீனாவில் வைத்து உங்கள் கைவிரல்களை ஆள் அடையாளமிடும் கருவியில்
(பிங்கர் பிரின்ட் ஸ்கெனர் மெஷினில்) பரிசோதித்து பார்க்கும் போது மருதாணி போட்ட விரல்களை சரியாக பதிவு செய்யாத காரணத்தினால் ஹஜ்ஜிக்குச் சென்ற சில பெண்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். இது மிகவும் மனவேதனையான விஷயம்.
எனவே தயவுசெய்து நீங்கள் கைகளில் மருதாணி வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
#இன்ஷா_அல்லாஹ்,
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
"உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; "
உயர்ந்த கை என்பது தர்மம் கொடுப்பதாகும், தாழ்ந்த கை என்பது யாசகம் கேட்பதாகும்" நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
[ஸஹீஹ் புகாரி 1429]
படைப்புகள் மீது சார்ந்திருப்பது இணைவைப்பின் ஒரு வகை. உதவி, ரிஸ்க், பாதுகாப்பு எல்லாம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. மனிதர்கள் வெறும் காரணங்கள் தான்.
கண்ணியமான வாழ்க்கை மற்றவர்களிடம் கையேந்தும், யாசிக்கும் நிலைக்கு அல்லாஹ் நம்மை ஆளாக்க வேண்டாம் என்ற பிரார்த்தனை தான்.
"அல்லாஹ் ஒருவனே போதுமானவன், அவனையே சார்ந்திருப்போருக்கு"
[சூரா அல்-அன்ஃபால் 8:64]
"எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அவனே போதுமானவன்"
[சூரா அத்-தலாக் 65:3]
துஆவை நாம் கேட்பதோடு, ஹலாலான முயற்சியும் செய்ய வேண்டும். ஏனென்றால் நபி ஸல் கூறினார்கள்: "முதலில் ஒட்டகத்தை கட்டிப்போடு, பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை" [திர்மிதி 2517]
அல்லாஹ் நம் அனைவரையும் அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் தேவையாக்காமல் கண்ணியமாக வாழச் செய்வானாக.ஆமீன்!
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
"யா அல்லாஹ்!
என் சகோதரன் எனக்கு மிகவும் பிரியமானவன். அவன் வாழ்க்கையை நன்மைகளால் நிரப்புவாயாக. அவன் மனதை அமைதியால் நிரப்புவாயாக. அவன் கண்களில் துக்கத்தால் கண்ணீரை ஒருபோதும் வர விடாதே. அவனை எல்லா தீங்குகளிலிருந்தும் காத்தருள்வாயாக. அவன் வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், ஈமான் ஆகியவற்றை அருள்வாயாக. ஆமீன்." #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖
#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
யா அல்லாஹ்,
உனது பொருத்தம் பெறக்கூடிய பாக்கியத்தை தந்தருள் ரஹ்மானே.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️




![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல் நீயும் நல்லதை செய்ப [அ்குள்ஆன் 28777] அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல் நீயும் நல்லதை செய்ப [அ்குள்ஆன் 28777] - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல் நீயும் நல்லதை செய்ப [அ்குள்ஆன் 28777] அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல் நீயும் நல்லதை செய்ப [அ்குள்ஆன் 28777] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_545910_8515705_1777311543964_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=964_sc.jpg)




![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - Qu8 BLGOLDGOW] நிறைவேற்றுவதற்காக செல்லுபவர்கள் உங்கள் கைகளில் மருதாணி வைப்பதை தவிர்த்துக் கொள்ளவும் ! Qu8 BLGOLDGOW] நிறைவேற்றுவதற்காக செல்லுபவர்கள் உங்கள் கைகளில் மருதாணி வைப்பதை தவிர்த்துக் கொள்ளவும் ! - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - Qu8 BLGOLDGOW] நிறைவேற்றுவதற்காக செல்லுபவர்கள் உங்கள் கைகளில் மருதாணி வைப்பதை தவிர்த்துக் கொள்ளவும் ! Qu8 BLGOLDGOW] நிறைவேற்றுவதற்காக செல்லுபவர்கள் உங்கள் கைகளில் மருதாணி வைப்பதை தவிர்த்துக் கொள்ளவும் ! - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_526285_13fb4ac6_1777121524087_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=087_sc.jpg)


