பன்னிரு திருமுறைகள்🙏🙏

1K Posts • 1M views
A Mohan Raj
2K views 4 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஆறாம் தந்திரம் - 9. தவவேடம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. திருமந்திரத்தின் ஆறாம் தந்திரம், இறைவனான சிவகுருவின் தரிசனம் மற்றும் அவரை அடையும் வழிகளைப் பற்றி விளக்குகிறது. இந்த தந்திரம், குருவின் வழிகாட்டுதலால் ஆன்மிகப் பாதையில் செல்பவர்கள் நல்ல வழியை அறிந்தவர்கள் என்றும், தவறான ஆசைகளின் வழியே செல்பவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார்கள் என்றும் கூறுகிறது. இந்த தந்திரத்தில் உள்ள பாடல்கள், புறக்கண்களை நிறுத்தி அகநோக்கைப் பார்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. *"தவவேடம்" என்பது, அகத்தவத்தின் உண்மையான தன்மையை வெறும் புறத்தோற்றத்தில் காட்டிக்கொள்வது தவறு என்பதைக் குறிக்கிறது. உண்மையான தவமானது தவத்தை மேற்கொள்பவர்களுக்கே உரியது, ஏனெனில் அவர்கள் மட்டுமே அதன் தன்மையை தாங்க முடியும் என்று திருமூலர் கூறுகிறார். புற வேடங்களை மட்டும் பூணுபவர்கள் தவத்தின் உண்மையான தகுதியை அடைவதில்லை*. பாடல் வரிகள் : *9. தவவேடம்* 1661 தவமிக் கவரே தலையான வேடர் அவமிக் கவரே யதிகொலை வேடர் அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந் தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே. 1 1662 பூதி யணிவது சாதன மாதியிற் காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந் தீதில் சிவயோகி சாதனந் தேரிலே. 2 1663 யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்று றாகத்து நீறனி யாங்கக் கபாலஞ் சீகந்த மாத்திரை தின்பிரம் பாகுமே. 3 1664 காதணி குண்டலங் கண்டிகை நாதமும் ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம் ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. 4 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
32 likes
28 shares
A Mohan Raj
2K views 5 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது*. *திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரம், இது சைவ சமயத்தின் பல்வேறு மார்க்கங்களைப் பற்றியும், குறிப்பாக அக வழிபாட்டு முறைகளைப் பற்றியும் பேசுகிறது. இது "உட் சமயம்" (அக வழிபாடு) மூலம் இறைவனை அடையும் வழிமுறைகள், யோகம், சன்மார்க்கம் போன்றவற்றை விளக்குகிறது*... *"சன்மார்க்கம்" என்பது உண்மை மற்றும் இறைவனைப் பற்றிய தத்துவத்தை உணரும் உண்மையான பாதையாகும். இந்த நெறியை நந்திதேவர் உலக மக்களுக்கு அருளியுள்ளார். இது சிவபெருமானின் அருள் வழி, இறைவனையும், தன்னை அறிவதையும் குறிக்கிறது, மேலும் குருபக்தி மூலம் முக்தி அடைய உதவுகிறது*. பாடல் வரிகள் : *9. சன்மார்க்கம்* 1477 சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத் தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க் கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே. 1 1478 சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி நன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத்துள் ளார்க்கு வகுத்தவைத் தானே. 2 1479 தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக் குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத் தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே. 3 1480 தெளிவறி யாதார் சிவனை யறியார் தெளிவறி யாதார் சீவனு மாகார் தெளிவறி யாதார் சிவமாக மாட்டார் தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே. 4 1481 தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று மோனம தாம்மொழிப் பான்முத்த ராவது மீனமில் ஞானானு பூதியில் இன்பமுந் தாவை னாயுறலானசன் மார்க்கமே. 5 1482 சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ் சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ் சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம் எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ. 6 1483 சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம் பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய்நிற்கும் துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார் சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே. 7 1484 சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப் பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால் நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே சொன்மார்க்க மென்னச்சுருதிகைக்கொள்ளுமே. 8 1485 அன்னிய பாசமும் ஆகுங் கருமமும் முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும் பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந் தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே. 9 1486 பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிப் கசியாத நெஞ்சங் கசியக் கசிவித் தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற் றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே. 10 1487 மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை மார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர் மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே. 11 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
33 likes
16 shares
A Mohan Raj
1K views 5 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது*. *திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரம், இது சைவ சமயத்தின் பல்வேறு மார்க்கங்களைப் பற்றியும், குறிப்பாக அக வழிபாட்டு முறைகளைப் பற்றியும் பேசுகிறது. இது "உட் சமயம்" (அக வழிபாடு) மூலம் இறைவனை அடையும் வழிமுறைகள், யோகம், சன்மார்க்கம் போன்றவற்றை விளக்குகிறது*... *'ஞானம்' என்பது இறைவனை அடையும் வழிகளில் முக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது. இதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும் இந்தப் பகுதி, ஞானத்தின் மூலம் வீடுபேறு அடைய முடியும் என்பதையும், ஞானம் இல்லாமல் செய்யும் எந்த செயலும் முழுமையான பலனைத் தராது என்பதையும் வலியுறுத்துகிறது*. பாடல் வரிகள் : *8. ஞானம்* 1467 ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவா ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே. 1 1468 சத்தமுஞ் சத்த மனனும் தகுமனம் உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ் சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ் சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே. 2 1469 தன்பால் உலகுந் தனக்கரு காவதும் அன்பா லெனக்கரு ளாவது மாவன என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும் பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே. 3 1470 இருக்குஞ் சேம இடம்பிரமமாகும் வருக்கஞ் சராசர மாகும் உலகந் தருக்கிய ஆசார மெல்லாந் தருமே திருக்கிலாஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே. 4 1471 அறிவும் அடக்கமும் அன்பும் உடனே பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன் குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே. 5 1472 ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள் ஏனம் விளைந்தெதி ரேகாண வழிதோறுங் கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே. 6 1473 ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமா மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து மேனிற்ற லாஞ்சத்தி வித்தை விளைத்திடுந் தானிக் குலத்தோர் சரியை கிரியையே. 7 1474 ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல் ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே. 8 1475 நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன் புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோன் கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோன் திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே. 9 1476 ஞானச் சமயமே நாடுந் தனைக் காண்டல் ஞான விசேடமே நாடு பரோதய ஞானநிர் வாணமே நன்றறி வானருள் ஞானாபி டேகமே நற்குறு பாதமே. 10 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
22 likes
22 shares