பன்னிரு திருமுறைகள்🙏🙏

840 Posts • 1M views
A Mohan Raj
15K views 1 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருக்கண்ணப்பதேவர் திருமறம்* திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்பது சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஒரு பிரபந்த இலக்கியமாகும். கண்ணப்ப நாயனாரின் ஒப்பற்ற சிவபக்தியையும், அவர் இறைவனுக்காகத் தன் கண்களைப் பெயர்த்து அளித்த வீரச்செயலையும் சிறப்பித்துப் பாடும் நூலாகும். இப்பெயரில் பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் உள்ளன. நக்கீரதேவ நாயனார் மற்றும் கல்லாட தேவ நாயனாரால் அருளப்பட்டது. பாடல் வரிகள் : *பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருக்கண்ணப்பதேவர் திருமறம்* திருக்கண் ணப்பன் செய்தவத் திறத்து விருப்புடைத் தம்ம விரிகடல் உலகே, பிறந்தது தேன்அழித்து ஊன்உண் கானவர் குலத்தே, திரிவது பொருபுலி குமுறும் பொருப்பிடைக் காடே, வளர்ப்பது செங்கண் நாயொடு தீவகம் பலவே, பயில்வது (5) வெந்திறற் சிலையொடு வேல்வாள் முதலிய அந்தமில் படைக்கலம் அவையே, உறைவது குறைதசை பயின்று குடம்பல நிரைத்துக் கறைமலி படைக்கலங் கலந்த புல்லொடு பீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை (10) வாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார் இரவும் பகலும் இகழா முயற்றியொடு மடைத்த தேனும் வல்நாய் விட்டும் சிலைவிடு கணையிலும் திண்சுரி கையிலும் பலகிளை யவையொடும் பதைப்பப் படுத்துத் (15) தொல்லுயிர் கொல்லும் தொழிலே, வடிவே மறப்புலி கடித்த வன்திரள் முன்கை திறற்படை கிழித்த திண்வரை அகலம் எயிற்றெண்கு கவர்ந்த இருந்தண் நெற்றி அயிற்கோட் டேனம் படுத்தெழு குறங்கு (20) செடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண் கடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத்து அடுபடை பிரியாக் கொடுவிற லதுவே,மனமே மிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள் அகப்படு துயருக்கு அகனமர்ந் ததுவே, இதுஅக் (25) கானத் தலைவன் தன்மை, கண்ணுதல் வானத் தலைவன் மலைமகள் பங்கன் எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும் புண்ணிய பாதப் பொற்பார் மலரிணை தாய்க்கண் கன்றெனச் சென்றுகண் டல்லது (30) வாய்க்கிடும் உண்டி வழக்கறி யானே, அதாஅன்று கட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற் சுட்டடி இடுந்தொறும் சுறுக்கொளும் சுரத்து முதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்து எதிரினங் கடவிய வேட்டையில் விரும்பி (35) எழுப்பிய விருகத் தினங்களை மறுக்குறத் தன்நாய் கடித்திரித் திடவடிக் கணைதொடுத்து எய்து துணித்திடும் துணித்த விடக்கினை விறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சி நறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு (40) அண்ணற்கு அமிர்தென்று அதுவேறு அமைத்துத் தண்ணறுஞ் சுனைநீர் தன்வாய்க் குடத்தால் மஞ்சன மாக முகந்து மலரெனக் குஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலை கடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக் (45) கடுங்குரல் நாய்பின் தொடர யாவரும் வெருக்கோ ளுற்ற வெங்கடும் பகலில் திருக்கா ளத்தி எய்திய சிவற்கு வழிபடக் கடவ மறையோன் முன்னம் துகிலிடைச் சுற்றித் தூநீர் ஆட்டி (50) நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி சொல்லின பரிசிற் சுருங்கலன் பூவும் பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித்து அருச்சனை செய்தாங்கு அவனடி இறைஞ்சித் திருந்த முத்திரை சிறப்பொடுங் காட்டி (55) மந்திரம் எண்ணி வலமிடம் வந்து விடைகொண் டேகின பின்தொழில் பூசனை தன்னைப் புக்கொரு காலில் தொடுசெருப் படியால் நீக்கி வாயில் இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத் (60) தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில் பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக் கண்டுகண் டுள்ளங் கசிந்து காதலில் கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல் அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா (65) அன்பொடு கானகம் அடையும் அடைந்த அற்றை அயலினிற் கழித்தாங் கிரவியும் உதித்த போழ்தத் துள்நீர் மூழ்கி ஆதரிக்கும் அந்தணன் வந்து சீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர் (70) பொற்புடைப் பூசனை காணான் முடிமிசை ஏற்றிய துவர்கண் டொழியான் மறித்தும் இவ்வாறு அருச்சனை செய்பவர் யாவர்கொல் என்று கரந்திருந் தவண்அக் கானவன் வரவினைப் பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று (75) வந்தவன் செய்து போயின வண்ணம் சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்கு மற்றை நாளும்அவ் வழிப்பட்டு இறைவ உற்றது கேட்டருள் உன்தனக்கு அழகா நாடொறும் நான்செய் பூசனை தன்னை (80) ஈங்கொரு வேடுவன் நாயொடும் புகுந்து மிதித்து உழக்கித் தொடுசெருப் படியால் நீக்கி வாயில் இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலை தங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை (85) நின்திருக் கோயிலில் இட்டுப் போமது என்றும் உன்தனக் கினிதே எனைஉருக் காணில் கொன்றிடும் யாவ ராலும் விலக்குறுங் குணத்தன் அல்லன் என்நும் திருக்குறிப்பு என்றவன் சென்ற அல்லிடைக் (90) கனவில்ஆ தரிக்கும் அந்தணன் தனக்குச் சீரார் திருக்கா ளத்தியுள் அப்பன் பிறையணி இலங்கு பின்னுபுன் சடைமுடிக் கறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கை நெற்றி நாட்டத்து நிறைநீற் றாக (95) ஒற்றை மால்விடை உமையொடு மருங்கில் திருவுருக் காட்டி அருளிப் புரிவொடு பூசனை செய்யும் குனிசிலை வேடன் குணமவை ஆவன உரிமையிற் சிறந்தநன் மாதவன் என்றுணர் (100) அவனுகந் தியங்கிய இடம்முனி வனம்அதுவே, அவன் செருப்படி யாவன விருப்புறு துவலே எழிலவன் வாயது தூய பொற்குடமே அதனில் தங்குநீர் கங்கையின் புனலே புனற்கிடு மாமணி அவன்நிரைப் பல்லே (105) அதற்கிடு தூமலர் அவனது நாவே உப்புனல் விடும்பொழு துரிஞ்சிய மீசைப் புன்மயிர் குசையினும் நம்முடிக் கினிதே, அவன்தலை தங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்த அங்குலி கற்பகத் தலரே அவனுகந்து (110) இட்ட இறைச்சி எனக்குநன் மாதவர் இட்ட நெய்பால் அவியே இதுவெனக்கு உனக்கவன் கலந்ததோர் அன்பு காட்டுவன் நாளை நலந்திகழ் அருச்சனை செய்தாங் கிருவென்று (115) இறையவன் எழுந்த ருளினன் அருளலும் மறையவன் அறிவுற் றெழுந்து மனமிகக் கூசி வைகறைக் குளித்துத் தான்முன் செய்வதோர் பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து (120) தோன்றா வண்ணம் இருந்தன னாக இரவியும் வான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக் கடும்பகல் வேட்டையில் காதலித் தடித்த உடும்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத் தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும் (125) செல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன் திருமேனியின் மூன்று கண்ணாய் ஆங்கொரு கண்ணிலும் உதிரம் ஒழியா தொழுக இருந்தன னாகப் பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று வாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக் (130) கையில் ஊனொடு கணைசிலை சிந்த நிலப்படப் புரண்டு நெடிதினில் தேறிச் சிலைக்கொடும் படைகடி தெடுத்திது படுத்தவர் அடுத்தஇவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்கு இன்மை கண்டு நன்மையில் (135) தக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறும் நெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்தென் அத்தனுக் கடுத்ததென் அத்தனுக் கடுத்ததென் என்று அன்பொடுங் கனற்றி இத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன் (140) கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு புண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக் கணையது மடுத்துக் கையில் வாங்கி அணைதர அப்பினன் அப்பலுங் குருதி நிற்பதொத் துருப்பெறக் கண்டுநெஞ் சுகந்து (145) மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும் நில்லுகண் ணப்ப நில்லு கண் ணப்பஎன் அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன்று இன்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம் தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால் (150) அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப் பிடித்து அருளினன் அருளலும் விண்மிசை வானவர் மலர்மழை பொழிந்தனர் வளையொலி படகம் துந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும் (155) ஏத்தினர் இன்னிசை வல்லே சிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே. திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
171 shares
A Mohan Raj
1K views 10 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - எறிபத்த நாயனார் புராணம்* *எறிபத்த நாயனார் புராணம் என்பது சேக்கிழார் பெருமானால் இயற்றப்பட்ட பன்னிரண்டாம் திருமுறையான பெரிய புராணத்தில், முதற் காண்டத்தில் உள்ள "இலை மலிந்த சருக்கம்" என்னும் பகுதியில் ஒன்பதாவது புராணமாக இடம்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையில் வரும் "இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்" என்ற அடியை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாறு விரித்துரைக்கப்பட்டுள்ளது. சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிப்போரைத் தன் கையில் எப்போதும் இருக்கும் 'மழு' (கோடரி) என்னும் ஆயுதத்தால் தண்டிப்பதே இவரின் சிவத்தொண்டாக இருந்தது.* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - எறிபத்த நாயனார் புராணம்* அறுசீர் விருத்தம் மல்லல் நீர்ஞாலந் தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்கு ஒல்லை வந்துஉற்ற செய்கை உற்றிடத்து உதவும் நீரார் எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல் உற்றாம். 1 பொன் மலைப்புலி வென்றுஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும் அந்நெறி வழியே ஆகஅயல் வழி அடைத்த சோழன் மன்னிய அநபாயன் சீர் மரபின் மாநகர மாகும் தொன்நெடுங் கருவூர் என்னுஞ்சுடர் மணி வீதி மூதூர். 2 மாமதில் மஞ்சுசூழும் மாளிகை நிரை விண் சூழும் தூமணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும் தேமலர் அளகஞ் சூழும் சிலமதி தெருவிற் சூழும் தாம் மகிழ்ந்து அமரர்சூழும் சதமகன் நகரம் தாழ. 3 கடகரி துறையில் ஆடும்களி மயில் புறவில் ஆடும் அடர்மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டுஆடும் படரொளி மறுகில் ஆடும்பயில் கொடி கதிர் மீதுஆடும் தடம்நெடும் புவி கொண்டாடும் தனிநகர் வளமை ஈதால். 4 மன்னிய சிறப்பின் மிக்கவள நகர் அதனில் மல்கும் பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால் துன்னிய அன்பின் மிக்கதொண்டர் தம் சிந்தை நீங்கா அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில். 5 பொருட்டிரு மறை கடந்த புனிதரை இனிது அக்கோயில் மருட்டுறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகி இருட்கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு அருட்பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார். 6 மழைவளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க அழலவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது முழையரி என்னத் தோன்றிமுரண் கெட எறிந்து தீர்க்கும் பழமறை பரசும் தூய பரசுமுன் எடுக்கப் பெற்றார். 7 அண்ணலார் நிகழும் நாளில் ஆனி லைஅடிக ளார்க்குத் திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் புண்ணிய முனிவனார் தாம்பூப் பறித்து அலங்கல் சாத்தி உண்ணிறை காதலோடும் ஒழுகுவார் ஒருநாள் முன் போல். 8 வைகறை உணர்ந்து போந்துபுனல் மூழ்கி வாயும் கட்டி மொய்ம்மலர் நெருங்கு வாச நந்தன வனத்து முன்னிக் கையினில் தெரிந்து நல்லகமழ் முகை அலரும் வேலைத் தெய்வ நாயகருக்குச் சாத்தும்திருப் பள்ளித் தாமம் கொய்து. 9 கோலப் பூங்கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில் வாலியநேசம் கொண்டு மலர்க் கையில் தண்டும் கொண்டங்கு ஆலயம் அதனை நோக்கி அங்கணர்க்கு அமைத்துச் சாத்தும் காலை வந்துஉதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார். 10 மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும் கொற்றவர் வளவர் தங்கள்குலப் புகழ்ச் சோழனார் தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனமாம் பண்பு பெற்றவெங் களிறு கோலம் பெருகு மாநவமி முன்னாள். 11 மங்கல விழைவு கொண்டுவரு நதித் துறை நீராடிப் பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார் எங்கணும் இரியல் போகஎதிர் பரிக் காரர் ஓடத் துங்கமால் வரைபோல் தோன்றித் துண்ணென அணைந்தது அன்றே. 12 வென்றிமால் யானை தன்னை மேல் கொண்ட பாகரோடும் சென்றுஒரு தெருவின் முட்டிச் சிவகாமியார் முன் செல்ல வன்தனித் தண்டில் தூங்கும் மலர்கொள் பூக்கூடை தன்னைப் பின்தொடர்ந்து ஓடிச் சென்று பிடித்துமுன் பறித்துச் சிந்த. 13 மேல்கொண்ட பாகர் கண்டு விசைகொண்ட களிறு சண்டக் கால்கொண்டு போவார் போலக் கடிதுகொண்டு அகலப் போக நூல்கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கி மால்கொண்ட களிற்றின் பின்பு தண்டுகொண்டு அடிக்க வந்தார். 14 அப்பொழுது அணைய ஒட்டாது அடற் களிறு அகன்றுபோக மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால் விரைந்து பின்செல்ல மாட்டார் தப்பினர் விழுந்து கையால்தரை அடித்து எழுந்து நின்று செப்புஅரும் துயரம்நீடிச் செயிர்த்து முன் சிவதா என்பார். 15 வேறு - கலிவிருத்தம் களி யானையின் ஈர்உரியாய் சிவதா! எளியார் வலியாம் இறைவா! சிவதா! அளியார் அடியார் அறிவே! சிவதா! தெளிவார் அமுதே! சிவதா! சிவதா!. 16 ஆறும் மதியும் அணியும் சடைமேல் ஏறும் மலரைக் கரிசிந் துவதே வேறுள் நினைவார் புரம்வெந்து அவியச் சீறும் சிலையாய்! சிவதா! சிவதா!. 17 தஞ்சே சரணம் புகுதுந் தமியோர் நெஞ்சே துயரம் கெடநேர் தொடரும் மஞ்சே எனவீழ் மறலிக்கு இறைநீள் செஞ்சே வடியாய்! சிவதா! சிவதா!. 18 நெடியோன் அறியா நெறியார் அறியும் படியால் அடிமைப் பணிசெய்து ஒழுகும் அடியார் களில்யான் ஆரா அணைவாய் முடியா முதலாய் எனவே மொழிய. 19 வேறு - அறுசீர் விருத்தம் என்றவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா நின்றவர் கேளாமூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி மன்றவர் அடியார்க்கு என்றும்வழிப் பகை களிறே அன்றோ கொன்று அதுவீழ்ப்பன் என்று கொலை மழுஎடுத்து வந்தார். 20 வந்தவர் அழைத்த தொண்டர்தமைக் கண்டு வணங்கி உம்மை இந்தவல் இடும்பை செய்த யானை எங்குற்றது என்ன எந்தையார் சாத்தும் பூவைஎன் கையில் பறித்து மண்மேல் சிந்திமுன் பிழைத்துப் போகா நின்றது இத்தெருவே என்றார். 21 இங்கது பிழைப்பது எங்கே இனிஎன எரிவாய் சிந்தும் அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெங்காலும் என்னப் பொங்கிய விசையில் சென்றுபொரு கரி தொடர்ந்து பற்றும்* செங்கண் வாள்அரியிற் கூடிக் கிடைத்தனர் சீற்ற மிக்கார். (*தொடர்ந்து செல்லும் என்றும் பாடம்) 22 கண்டவர் இதுமுன்பு அண்ணல் உரித்த அக்களிறே போலும் அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்துச் சிந்தத் துண்டித்துக் கொல்வேன் என்றுசுடர் மழு வலத்தில் வீசிக் கொண்டு எழுந்து ஆர்த்துச்சென்று காலினால் குலுங்கப் பாய்ந்தார். 23 பாய்தலும் மிசைகொண்டு உய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக் காய்தழல் உமிழ்கண் வேழம் திரிந்து மேற்கதுவ அச்சம் தாய்தலை அன்பின் முன்பு நிற்குமே தகைந்து பாய்ந்து தோய்தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர். 24 கையினைத் துணித்த போதுகடல் எனக் கதறி வீழ்ந்து மைவரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த வெய்யகோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர்ஆக ஐவரைக் கொன்று நின்றார் அருவரை அனைய தோளார். 25 வெட்டுண்டு பட்டுவீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி மட்டவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி பட்ட வர்த்தனமும் பட்டுப் பாகரும் பட்டார் என்று முட்ட நீர்கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார். 26 மற்றவர் மொழிந்த மாற்றம் மணிக்கடை காப்போர் கேளாக் கொற்றவன் தன்பால் எய்திக்குரை கழல் பணிந்து போற்றிப் பற்றலர் இலாதாய் நின்பொற் பட்டமால் யானை வீழச் செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார். 27 வளவனும் கேட்ட போதில் மாறின்றி மண் காக்கின்ற கிளர்மணித் தோள் அலங்கல் சுரும்பினம் கிளர்ந்து பொங்க அளவில் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான் இளஅரி ஏறுபோல எழில் மணி வாயில் நீங்க. 28 தந்திரத் தலைவர் தாமும் தலைவன்தன் நிலைமை கண்டு வந்துறச் சேனை தன்னைவல் விரைந்து எழமுன் சாற்ற அந்தரத்து அகலம் எல்லாம் அணிதுகில் பதாகை தூர்ப்ப எந்திரத்தேரும் மாவும் இடை இடை களிறும் ஆகி. 29 வில்லொடு வேல்வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க வல்லெழும் உசலம் நேமிமழுக் கழுக்கடை முன் ஆன பல்படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்தவன் கண் எல்லையில் படைஞர் கொட்புற்று எழுந்தனர் எங்கும் எங்கும். 30 சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டைவியன் துடி திமிலை தட்டி பொங்கொலிச் சின்னம் எல்லாம்பொரு படை மிடைந்த பொற்பின் மங்குல் வான்கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பிமல்க. 31 தூரியத் துவைப்பும் முட்டுஞ்சுடர்ப் படை ஒலியும் மாவின் தார்மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடந்தேர்ச் சீரும் வீரர்தஞ்செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லைக் காருடன் கடைநாள் பொங்கும் கடல்எனக் கலித்த அன்றே. 32 பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழுசேனை எல்லாம் மண்ணிடை இறுகால் மேன்மேல் வந்து எழுந்ததுபோல் தோன்றத் தண்ணளிக் கவிகை மன்னன் தானைபின் தொடரத் தானோர் அண்ணலம் புரவி மேற்கொண்டு அரச மாவீதி சென்றான். 33 கடுவிசை முடுகிப் போகிக் களிற்றொடும் பாகர் வீழ்ந்த படுகளம் குறுகச் சென்றான் பகைபுலத்து அவரைக் காணான் விடுசுடர் மழுஒன்று ஏந்தி வேறு இருதடக் கைத்தாய அடுகளிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான். 34 பொன்தவழ் அருவிக் குன்றம் எனப்புரள் களிற்றின் முன்பு நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளிக் குன்றவர் அடியார் ஆனார் கொன்றவர் இவரென்று ஓரான் வென்றவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான். 35 அரசன் ஆங்கருளிச் செய்ய அருகு சென்றணைந்து பாகர் விரை செய்தார் மாலையோய்நின் விறற் களிற்று எதிரேநிற்கும் திரை செய்நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்குசெய்தார் பரசு முன்கொண்டு நின்ற இவர்எனப் பணிந்து சொன்னார். 36 குழை யணிகாதி னானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார் பிழை படின்அன்றிக் கொல்லார் பிழைத்தது உண்டுஎன்று உட்கொண்டு மழை மதயானை சேனை வரவினை மாற்றி மற்ற உழை வயப்புரவி மேல் நின்று இழிந்தனன் உலகமன்னன். 37 மைத்தடம் குன்று போலும் மதக் களிற்று எதிரேஇந்த மெய்த்தவர் சென்றபோது வேறு ஒன்றும் புகுதா விட்ட அத்தவம் உடையேன் ஆனேன் அம்பல வாணர் அன்பர் இத்தனை முனியக் கெட்டேன்என் கொலோ பிழைஎன்று அஞ்சி. 38 செறிந்தவர் தம்மைநீக்கி அன்பர் முன்தொழுது சென்று ஈது அறிந்திலேன் அடியேன் அங்குக் கேட்டது ஒன்றதுதான் நிற்க மறிந்த இக்களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள எறிந்ததே போதுமோதான் அருள் செய்யும் என்று நின்றார். 39 மன்னவன் தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர் சென்னி இத்துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து பன்னக ஆபரணர்ச் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம் தன்னை முன்பறித்துச் சிந்தத் தரைபடத் துணித்து வீழ்த்தேன். 40 மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும் மீதங்கு கடாவு வாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார் ஈதிங்கு நிகழ்ந்தது என்றார் எறிபத்தர் என்ன அஞ்சிப் பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன். 41 அங்கணர் அடியார் தம்மைச் செய்த இவ்வப ராதத்துக்கு இங்கிது தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும் மங்கல மழுவால் கொல்கை வழக்குமன்று இதுவாம் என்று செங்கையால் உடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வு நேர்வார். 42 வெந்தழல் சுடர்வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக் கெட்டேன் அந்தமில் புகழான் அன்புக்கு அளவின்மை கண்டேன் என்று தந்தவாள் வாங்க மாட்டார் தன்னைத் தான்துறக்கும் என்று சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார். 43 வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே ஈங்கெனை வாளினால் கொன்று என்பிழை தீர்க்க வேண்டி ஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர்பால் என்றே ஆங்கவர் உவப்பக் கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி. 44 வன்பெருங் களிறுபாகர் மடியவும் உடை வாளைத் தந்து என்பெரும் பிழை யினாலே என்னையும் கொல்லும் என்னும் அன்பனார் தமக்குத் தீங்கு நினைந்தனன் என்று கொண்டு முன்பெனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவென்று எண்ணி. 45 புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம்கழுத்தில் பூட்டி அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை இருந்தவாறு இது என் கெட்டேன் என்று எதிர் கடிதிற் சென்று பெருந்தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும். 46 வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்து கின்ற அளவிலாப் பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டிக் களமணி களத்துச் செய்ய கண்ணுதல் அருளால் வாக்குக் கிளரொளி விசும்பின் மேல் வந்தெழுந்தது பலரும் கேட்ப. 47 தொழுங்கை அன்பின் மிக்கீர்! தொண்டினை மண் மேற்காட்டச் செழுந் திருமலரை இன்று சினக்கரி சிந்தத் திங்கள் கொழுந்தணி வேணிக் கூத்தர் அருளினால் கூடிற்றென்று அங்கு எழுந்தது பாக ரோடும் யானையும் எழுந்தது அன்றே. 48 ஈரவே பூட்டும் வாள்விட்டு எறிபத்தர் தாமும் அந்த நேரியர் பெருமான் தாள்மேல் விழுந்தனர் நிருபர் கோனும் போர்வடி வாளைப் போக எறிந்தவர் கழல்கள் போற்றிப் பார்மிசை பணிந்தான் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார். 49 இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியைப் போற்ற அருமறைப் பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை தன்னில் மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள மற்றுஅத் திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமி யாரும் நின்றார். 50 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
16 shares
A Mohan Raj
648 views 1 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #சிவன் #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பன்னிரெண்டாம் திருமுறை* *பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.* *சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த 11 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய 90 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரியபுராணம் எழுதப் பெற்றுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின்படி தில்லைக்குச் சென்றவர், அங்கிருக்கும் இறைவனான நடராஜர் பெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனப் பெரியபுராணத்தினைத் தொடங்கினார்.* *பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.* *காப்பிய தொகுப்பானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.* *முதற் காண்டத்தில், திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என்ற ஐந்து சருக்கங்களும்,* *இரண்டாம் காண்டத்தில், வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.* *இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் உதவுகிறது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் "பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.* இறைவனின் திருநாமம் - சிற்சபை: ஆனந்தநடராஜ மூர்த்தி, மூலஸ்தானம்: ஸ்ரீ மூலநாதர் இறைவி - சிற்சபை: சிவகாமசுந்தரி, மூலஸ்தானம்: உமாபார்வதி அமைவிடம் : கோயில் (சிதம்பரம், தில்லை) சோழநாடு காவிரி வடகரைத் ஸ்தலம் பதிகம் பற்றிய சுருக்கமான *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - மானக்கஞ்சாற நாயனார் புராணம்* *மானக்கஞ்சாற நாயனார் புராணம் என்பது சைவ சமயத்தின் பன்னிரண்டாம் திருமுறையான பெரியபுராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு உன்னதமான சிவபக்தரின் வரலாறு ஆகும். இவர் சோழ நாட்டின் வளம் பொருந்திய கஞ்சாறு (தற்போது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஆனதாண்டவபுரம்) அவதரித்தவர், இவர் சிவபெருமானின் அடியார்கள் மேல் கொண்ட அளப்பரிய பற்றின் காரணமாக, தன் மகளின் திருமண நாளன்றே அவளது நீண்ட கூந்தலை அறுத்துத் தானமாக வழங்கிய உன்னத தியாகத்திற்காக அறியப்படுகிறார்.* *மானக்கஞ்சாற நாயனார் தன் மகளை மற்றொரு சிறந்த சிவபக்தரான ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு மணம் முடிக்க நிச்சயம் செய்திருந்தார். திருமண நாளன்று, மணமகன் வீட்டார் கஞ்சாறு நோக்கி வந்துகொண்டிருந்த வேளையில், சிவபெருமான் ஒரு முதிய மகா விரதியார் (சிவனடியார்) கோலத்தில் நாயனாரின் இல்லத்திற்கு எழுந்தருளினார்.நாயனார் தனது மகளை அடியாரிடம் ஆசி பெறச் செய்தபோது, “இவளது நீண்ட கூந்தல் எனது பஞ்சவடி (பூணூல் போன்ற ஒரு ஆடை) செய்வதற்கு மிகவும் ஏற்றது” என்று அடியார் கூறினார். பெண்ணின் கூந்தலை வெட்டுவது மங்கலகரமான திருமணத்தில் பெரும் அபசகுனம் என்றும், மணமகன் அவளை நிராகரிக்கக்கூடும் என்றும் தெரிந்தும் நாயனார் சற்றும் தயங்கவில்லை. சிவனடியாரின் வார்த்தையைச் சிவக்கட்டளையாக ஏற்று, மணக்கோலத்தில் இருந்த தன் மகளின் அழகிய நீண்ட கூந்தலைத் தன் கத்தியால் உடனடியாக அறுத்து அவரிடம் சமர்ப்பித்தார்.* *நாயனாரின் ஈடிணையற்ற பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், உடனே மறைந்து அன்னை பார்வதியுடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இறைவனின் திருவருளால் அந்தப் பெண்ணின் கூந்தல் மீண்டும் பழையபடி அழகாக முளைத்தது. பின்னர் அங்கு வந்த கலிக்காம நாயனார் இந்த அதிசயத்தைக் கேட்டு, இறைவனின் லீலையை நேரில் காண முடியாமல் போனதை எண்ணி உருகி, அந்தப் பெண்ணை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.* பாடல் வரிகள் : *பன்னிரெண்டாம் திருமுறையில் இருந்து சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் - இலை மலிந்த சருக்கம் - மானக்கஞ்சாற நாயனார் புராணம்* மேலாறு செஞ்சடைமேல் வைத்தவர்தாம் விரும்பியது நூலாறு நன்குணர்வோர் தாம்பாடும் நோன்மையது கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் சாறொழுகும் காலாறு வயற்கரும்பின் கமழ்சாறூர் கஞ்சாறூர். 1 கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்தொதுங்கி உண்ணீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்துமலர்க் கண்சிவக்கும் தண்ணீர்மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்கும் மண்ணீர்மை நலஞ்சிறந்த வளவயல்கள் உளஅயல்கள். 2 புயல்காட்டுங் கூந்தல்சிறு புறங்காட்டப் புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க இனங்காட்டும் உழத்தியர்கண் முயல்காட்டும் மதிதோற்கும் முகங்காட்டக் கண்மூரிக் கயல்காட்டுந் தடங்கள்பல கதிர்காட்டுந் தடம்பணைகள். 3 சேறணிதண் பழனவயல் செழுநெல்லின் கொழுங்கதிர்போய் வேறருகு மிடைவேலிப் பைங்கமுகின் மிடறுரிஞ்சி மாறெழுதிண் குலைவளைப்ப வண்டலைதண் டலையுழவர் தாறரியும் நெடுங்கொடுவாள் அனையவுள தனியிடங்கள். 4 பாங்குமணிப் பலவெயிலும் சுலவெயிலும் உளமாடம் ஞாங்கரணி துகிற்கொடியும் நகிற்கொடியும் உளவரங்கம் ஓங்குநிலைத் தோரணமும் பூரணகும் பமும்உளவால் பூங்கணைவீ தியில்அணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு. 5 Go to top மனைசாலும் நிலையறத்தின் வழிவந்த வளம்பெருகும் வினைசாலும் உழவுதொழில் மிக்கபெருங் குடிதுவன்றிப் புனைசாயல் மயிலனையார் நடம்புரியப் புகல்முழவங் கனைசாறு மிடைவீதிக் கஞ்சாறு விளங்கியதால். 6 அப்பதியிற் குலப்பதியாய் அரசர்சே னாபதியாம் செப்பவருங் குடிவிளங்கத் திருஅவதா ரஞ்செய்தார் மெய்ப்பொருளை அறிந்துணர்ந்தார் விழுமியவே ளாண்குடிமை வைப்பனைய மேன்மையினார் மானக்கஞ் சாறனார். 7 பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் பனிமதியின் அணிவுடைய சடைமுடியார்க் காளாகும் பதம்பெற்ற தணிவில்பெரும் பேறுடையார் தம்பெருமான் கழல்சார்ந்த துணிவுடைய தொண்டர்க்கே ஏவல்செயுந் தொழில்பூண்டார். 8 மாறில்பெருஞ் செல்வத்தின் வளம்பெருக மற்றதெலாம் ஆறுலவுஞ் சடைக்கற்றை அந்தணர்தம் அடியாராம் ஈறில்பெருந் திருவுடையார் உடையாரென் றியாவையுநேர் கூறுவதன் முன்னவர்தம் குறிப்பறிந்து கொடுத்துள்ளார். 9 விரிகடல்சூழ் மண்ணுலகில் விளக்கியஇத் தன்மையராம் பெரியவர்க்கு முன்சிலநாள் பிள்ளைப்பே றின்மையினால் அரியறியா மலர்க்கழல்கள் அறியாமை யறியாதார் வருமகவு பெறற்பொருட்டு மனத்தருளால் வழுத்தினார். 10 Go to top குழைக்கலையும் வடிகாதில் கூத்தனார் அருளாலே மழைக்குதவும் பெருங்கற்பின் மனைக்கிழத்தி யார்தம்பால் இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த இப்பிறவிக் கொடுஞ்சூழல் பிழைக்குநெறி தமக்குதவப் பெண்கொடியைப் பெற்றெடுத்தார். 11 பிறந்தபெரு மகிழ்ச்சியினால் பெருமூதூர் களிசிறப்பச் சிறந்தநிறை மங்கலதூ ரியம்முழங்கத் தேவர்பிரான் அறந்தலைநின் றவர்க்கெல்லாம் அளவில்வளத் தருள்பெருக்கிப் புறந்தருவார் போற்றிசைப்பப் பொற்கொடியை வளர்க்கின்றார். 12 காப்பணியும் இளங்குழவிப் பதம்நீங்கிக் கமழ்சுரும்பின் பூப்பயிலும் சுருட்குழலும் பொலங்குழையும் உடன்தாழ யாப்புறுமென் சிறுமணிமே கலையணிசிற் றாடையுடன் கோப்பமைகிண் கிணியசையக் குறுந்தளிர்மெல் லடியொதுங்கி. 13 புனைமலர்மென் கரங்களினால் போற்றியதா தியர்நடுவண் மனையகத்து மணிமுன்றில் மணற்சிற்றில் இழைத்துமணிக் கனைகுரல்நூ புரம்அலையக் கழல்முதலாப் பயின்றுமுலை நனைமுகஞ்செய் முதற்பருவம் நண்ணினள்அப் பெண்ணமுதம். 14 உறுகவின்மெய்ப் புறம்பொலிய ஒளிநுசுப்பை முலைவருத்த முறுவல்புறம் அலராத முகிண்முத்த நகையென்னும் நறுமுகைமென் கொடிமருங்குல் நளிர்ச்சுருள்அம் தளிர்ச்செங்கை மறுவில்குலக் கொழுந்தினுக்கு மணப்பருவம் வந்தணைய. 15 Go to top திருமகட்கு மேல்விளங்குஞ் செம்மணியின் தீபமெனும் ஒருமகளை மண்ணுலகில் ஓங்குகுல மரபினராய்க் கருமிடற்று மறையவனார் தமராய கழல்ஏயர் பெருமகற்கு மகட்பேச வந்தணைந்தார் பெருமுதியோர். 16 வந்தமூ தறிவோரை மானக்கஞ் சாறனார் முந்தைமுறை மையின்விரும்பி மொழிந்தமணத் திறங்கேட்டே எந்தமது மரபினுக்குத் தகும்பரிசால் ஏயுமெனச் சிந்தைமகிழ் வுறஉரைத்து மணநேர்ந்து செலவிட்டார். 17 சென்றவருங் கஞ்சாறர் மணமிசைந்த படிசெப்பக் குன்றனைய புயத்தேயர் கோனாரும் மிகவிரும்பி நின்றநிலை மையினிரண்டு திறத்தார்க்கும் நேர்வாய மன்றல்வினை மங்கலநாள் மதிநூல்வல் லவர்வகுத்தார். 18 மங்கலமாம் செயல்விரும்பி மகட்பயந்த வள்ளலார் தங்குலநீள் சுற்றமெலாம் தயங்குபெருங் களிசிறப்பப் பொங்கியவெண் முளைப்பெய்து பொலங்கலங்கள் இடைநெருங்கக் கொங்கலர்தண் பொழில்மூதூர் வதுவைமுகங் கோடித்தார். 19 கஞ்சாறர் மகட்கொடுப்பக் கைப்பிடிக்க வருகின்ற எஞ்சாத புகழ்ப்பெருமை ஏயர்குலப் பெருமானும் தஞ்சால்பு நிறைசுற்றந் தலைநிறைய முரசியம்ப மஞ்சாலும் மலர்ச்சோலைக் கஞ்சாற்றின் மருங்கணைய. 20 Go to top வள்ளலார் மணமவ்வூர் மருங்கணையா முன்மலர்க்கண் ஒள்ளிழையைப் பயந்தார்தம் திருமனையில் ஒருவழியே தெள்ளுதிரை நீருலகம் உய்வதற்கு மற்றவர்தம் உள்ளநிலைப் பொருளாய உம்பர்பிரான் தாமணைவார். 21 முண்டநிறை நெற்றியின்மேல் முண்டித்த திருமுடியில் கொண்டசிகை முச்சியின்கண் கோத்தணிந்த எற்புமணி பண்டொருவன் உடலங்கம் பரித்தநாள் அதுகடைந்த வெண்தரளம் எனக்காதின் மிசையசையுங் குண்டலமும். 22 அவ்வென்பின் ஒளிமணிகோத் தணிந்ததிருத் தாழ்வடமும் பைவன்பேர் அரவொழியத் தோளிலிடும் பட்டிகையும் மைவந்த நிறக்கேச வடப்பூணு நூலும்மனச் செவ்வன்பர் பவமாற்றுந் திருநீற்றுப் பொக்கணமும். 23 ஒருமுன்கைத் தனிமணிகோத் தணிந்தவொளிர் சூத்திரமும் அருமறைநூற் கோவணத்தின் மிசையசையும் திருவுடையும் இருநிலத்தின் மிசைதோய்ந்த எழுதரிய திருவடியும் திருவடியில் திருப்பஞ்ச முத்திரையுந் திகழ்ந்திலங்க. 24 பொடிமூடு தழலென்னத் திருமேனி தனிற்பொலிந்த படிநீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையராய்க் கொடிநீடு மறுகணைந்து தம்முடைய குளிர்கமலத் தடிநீடும் மனத்தன்பர் தம்மனையி னகம்புகுந்தார். 25 Go to top வந்தணைந்த மாவிரத முனிவரைக்கண் டெதிரெழுந்து சிந்தைகளி கூர்ந்துமகிழ் சிறந்தபெருந் தொண்டனார் எந்தைபிரான் புரிதவத்தோர் இவ்விடத்தே யெழுந்தருள உய்ந்தொழிந்தேன் அடியேன்என் றுருகியஅன் பொடுபணிந்தார். 26 நற்றவராம் பெருமானார் நலமிகும்அன் பரைநோக்கி உற்றசெயல் மங்கலமிங் கொழுகுவதென் எனஅடியேன் பெற்றதொரு பெண்கொடிதன் வதுவையெனப் பெருந்தவரும் மற்றுமக்குச் சோபனம்ஆ குவதென்று வாய்மொழிந்தார். 27 ஞானச்செய் தவரடிமேற் பணிந்துமனை யகம்நண்ணி மானக்கஞ் சாறனார் மணக்கோலம் புனைந்திருந்த தேனக்க மலர்க்கூந்தல் திருமகளைக் கொண்டணைந்து பானற்கந் தரமறைத்து வருமவரைப் பணிவித்தார். 28 தஞ்சரணத் திடைப்பணிந்து தாழ்ந்தெழுந்த மடக்கொடிதன் மஞ்சுதழைத் தெனவளர்ந்த மலர்க்கூந்தற் புறம்நோக்கி அஞ்சலிமெய்த் தொண்டரைப்பார்த் தணங்கிவள்தன் மயிர்நமக்குப் பஞ்சவடிக் காமென்றார் பரவஅடித் தலங்கொடுப்பார். 29 அருள்செய்த மொழிகேளா அடற்சுரிகை தனையுருவிப் பொருள்செய்தா மெனப்பெற்றேன் எனக்கொண்டு பூங்கொடிதன் இருள்செய்த கருங்கூந்தல் அடியிலரிந் தெதிர்நின்ற மருள்செய்த பிறப்பறுப்பார் மலர்க்கரத்தி னிடைநீட்ட. 30 Go to top வாங்குவார் போல்நின்ற மறைப்பொருளாம் அவர்மறைந்து பாங்கின்மலை வல்லியுடன் பழையமழ விடையேறி ஓங்கியவிண் மிசைவந்தார் ஒளிவிசும்பின் நிலம்நெருங்கத் தூங்கியபொன் மலர்மாரி தொழும்பர்தொழு தெதிர்விழுந்தார். 31 விழுந்தெழுந்து மெய்ம்மறந்த மெய்யன்பர் தமக்குமதிக் கொழுந்தலைய விழுங்கங்கை குதித்தசடைக் கூத்தனார் எழும்பரிவு நம்பக்கல் உனக்கிருந்த பரிசிந்தச் செழும்புவனங் களிலேறச் செய்தோமென் றருள்செய்தார். 32 மருங்குபெருங் கணநாதர் போற்றிசைப்ப வானவர்கள் நெருங்கவிடை மேல்கொண்டு நின்றவர்முன் நின்றவர்தாம் ஒருங்கியநெஞ் சொடுகரங்கள் உச்சியின்மேற் குவித்தையர் பெருங்கருணைத் திறம்போற்றும் பெரும்பேறு நேர்பெற்றார். 33 தொண்டனார் தமக்கருளிச் சூழ்ந்திமையோர் துதிசெய்ய இண்டைவார் சடைமுடியார் எழுந்தருளிப் போயினார் வண்டுவார் குழற்கொடியைக் கைப்பிடிக்க மணக்கோலங் கண்டவர்கள் கண்களிப்பக் கலிக்காம னார்புகுந்தார். 34 வந்தணைந்த ஏயர்குல மன்னவனார் மற்றந்தச் சிந்தைநினை வரியசெயல் செறிந்தவர்பால் கேட்டருளிப் புந்தியினில் மிகவுவந்து புனிதனார் அருள்போற்றிச் சிந்தைதளர்ந் தருள்செய்த திருவாக்கின் திறங்கேட்டு. 35 Go to top மனந்தளரும் இடர்நீங்கி வானவர்நா யகரருளால் புனைந்தமலர்க் குழல்பெற்ற பூங்கொடியை மணம்புணர்ந்து தனம்பொழிந்து பெருவதுவை உலகெலாந் தலைசிறப்ப இனம்பெருகத் தம்முடைய எயின்மூதூர் சென்றணைந்தார். 36 ஒருமகள் கூந்தல் தன்னை வதுவைநாள் ஒருவர்க் கீந்த பெருமையார் தன்மை போற்றும் பெருமைஎன் அளவிற் றாமே மருவிய கமரிற் புக்க மாவடு விடேலென் னோசை உரிமையால் கேட்க வல்லார் திறமினி யுரைக்க லுற்றேன். 37 *"மலை மலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறன் அடியார்க்கும் அடியேன்"* திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
17 shares