பன்னிரு திருமுறைகள்🙏🙏

978 Posts • 1M views
chellakannan
562 views 4 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருப்பாசூர் #பதிகம்_025 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
13 likes
16 shares
A Mohan Raj
1K views 3 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 22. முத்திரியம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *திருமூலர் அருளிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம், ஒரு ஆன்மா தனது பாசத் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு இரண்டறக் கலக்கும் உயர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது. இது சுமார் 526 பாடல்களைக் (2122 - 2648) கொண்டது*. *எட்டாம் தந்திரத்தில் உள்ள 22-வது பகுதி "முத்துரியம்" ஆகும். இப்பகுதி சீவன்பரம்சிவம் ஆகிய மூன்றும் முறையே நனவுகனவுஉறக்கம்துரியம் ஆகிய அவத்தைகளில் (நிலைகளில்) எங்ஙனம் கலந்திருக்கின்றன என்பதை விளக்குகிறது. மேலும்அசிபதத் தத்துவத்தின் வழிபாட்டு முறைகளையும் இது கூறுகிறது*. முக்கிய கருத்துக்கள் (பாடல் 2466 - 2467) : சீவ துரியம் : நனவாதி மூன்றினில் (நனவுகனவுஉறக்கம்) சீவ துரியம் நிகழ்கிறது. பர துரியம் : அதன் ஆதி மூன்றினில் (முன்னர் கூறியவற்றின் தொடர்ச்சியாக) பர துரியம் அமையும். சிவ துரியம் : அதுவே முக்தியில் சிவ துரியமாக முடிகிறது. தொந்தம் : அசிபதத்து (அத்துவா) உடனுள்ள நிலை முத்திரியம் எனப்படும். இது ஆன்மா தன்நிலை உணர்ந்துசிவனோடு கலக்கும் உயரிய அவத்தை நிலைகளை விவரிக்கும் ஒரு தத்துவப் பகுதியாகும். பாடல் வரிகள் : *22. முத்திரியம்* 2466 நனவாதி மூன்றினில் சீவ துரியம் தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான் நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம் இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே. 1 2467 தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம் தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில் ஆனாப் பரபதம் அற்றது அருநனா வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே. 2 2468 அணுவின் துரியத்து நான்கும துஆகிப் பணியும் பரதுரி யம்பயில் நான்கும் தணிவில் பரமாகிச் சாரமுந் துரியக் கணுவில் இந் நான்கும் கலந்தார் ஐந்தே. 3 2469 ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள் நேர்அந்த மாகநெறிவழி யேசென்று பார்அந்த மான பராபத்து அயிக்கியத்து ஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே. 4 2470 தொட்டே இருமின் துரிய நிலத்தினை எட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப் பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள் தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே. 5 2471 அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்று செறிவாய மாயை சிதைத்துஅரு ளாலே பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலையறிந் தாரே. 6 2472 நனவின் நனவாகி நாலாம் துரியம் தனதுயிர் தெம்பதம் ஆமாறு போல வினையறு சீவன் நனவாதி யாகத் தனைய பரதுரி யந்தற் பதமே. 7 2473 தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்பொல் நம்பிய மூன்றாம் துரியத்து நல்நாமம் அம்புலி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 8 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
8 likes
15 shares
A Mohan Raj
1K views 3 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 21. பரலட்சணம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *திருமூலர் அருளிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம், ஒரு ஆன்மா தனது பாசத் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு இரண்டறக் கலக்கும் உயர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது. இது சுமார் 526 பாடல்களைக் (2122 - 2648) கொண்டது*. *எட்டாம் தந்திரத்தில், 21-வது அதிகாரமாக விளங்குவது பரலட்சணம் ஆகும். பரலட்சணம் என்பது இறைவனது (பரம்பொருளின்) சிறப்பியல்பு அல்லது அதன் உண்மையான நிலையை விளக்குவதாகும். இந்த அதிகாரத்தில் உள்ள பாடல்கள், ஆன்மா எவ்வாறு தனது சிற்றறிவை நீக்கி, இறைவனின் பேரறிவை அடைந்து அவனது இயல்பை (லட்சணம்) உணர்ந்து கொள்ள முடியும் என்பதை விளக்குகின்றன*. *பதி (இறைவன்) இயல்பு : பதியாகிய பரம்பொருள் தோற்றமும் அழிவும் இல்லாதது. அது எங்கும் நிறைந்த பேரொளியாகவும், உயிர்களுக்கு அறிவை வழங்கும் ஆதாரமாகவும் விளங்குகிறது*. *அதீத நிலை : இறைவன் எல்லா நிலைகளுக்கும் அப்பாற்பட்டவன் (அதீதத்து உள்ளவன்). அவன் எங்கும் விரிந்து பரந்திருப்பவன் என்பதைக் குறிக்க "அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி" என்று திருமூலர் குறிப்பிடுகிறார்*. *உயிர் விளக்கம் : அறிவில்லாத நிலையில் இருக்கும் ஆன்மா, இறைவனது அருளைப் பெற்று அறியாமை என்னும் இருளை நீக்கும்போது, அது பரம்பொருளுடன் ஒன்றிணையும் தன்மையைப் பெறுகிறது*. *பரை ஒளி : பரலட்சணம் என்பது பரை ஒளியின் (சக்தி அல்லது இறைவனின் ஆற்றல்) இயல்பைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது*. பாடல் வரிகள் : *21. பரலட்சணம்* 2452 அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம் பதியிற் பதியும் பரவுயிர் தானே. 1 2453 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின் நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே. 2 2454 துரியங் கடங்கு துரியா தீதத்தே அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும் பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே. 3 2455 செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல் அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப் பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில் செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே. 4 2456 வைச்ச கலாதி வருதத்து வங்கெட வெச்ச இருமாயை வேறாக வேரறுத்து உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே அச்சம் அறுத்தென்னை ஆண்டவன் நந்தியே. 5 2457 என்னை அறிய இசைவித்த என்நந்தி என்னை அறிந்து அறி யாத இடத்துய்த்துப் பின்னை ஒளியிற் சொரூபம் புறப்பட்டுத் தன்னை அளித்தான் தற்பர மாகவே. 6 2458 பரந்தும் சுருங்கியும் பார்புனல் வாயு நிரந்தர வளியொடு ஞாயிறு திங்கள் அரந்த அறநெறி யாயது வாகித் தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே. 7 2459 சத்தின் நிலையினில் தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கு உடல் உய்த்தரும் இச்சையில் ஞானாதி பேதமாய் நித்தம் நடத்தும் நடிக்கும்மா நேயத்தே. 8 2460 மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள் பாலிய விந்து பரையுள் பரையாகக் கோலிய நான்சுவை ஞானம் கொணர் விந்து சீலமி லாஅணுச் செய்திய தாமே. 9 2461 வேறாம் அதன்தன்மை போலும்இக் காயத்தில் ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம் பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமாய் ஊறாய் உயிர்த்துண்டு உறங்கிடும் மாயையே. 10 2462 தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி சிற்பரம் தானே செகமுண்ணும் போதமும் தொற்பதம் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்கு அப்புறம் மற்றதுஇங்கு ஒப்பில்லை தானே. 11 2463 பண்டை மறைகள் பரவான் உடலென்னும் துண்ட மதியோன் துரியாதீ தந்தன்னைக் கண்டு பரனும்அக் காரணோ பாதிக்கே மிண்டின் அவன்சுத்தம் ஆகான் வினவிலே. 12 2464 வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற தனியா இயதற் பரங்காண் அவன்தான் வெளிகால் கனல்அப்பு மேவுமண் நின்ற வெளியாய சத்தி அவன்வடி வாமே. 13 2465 மேருவி னோடே விரிகதிர் மண்டலம் ஆர நினையும் அருந்தவ யோகிக்குச் சீரார் தவம்செய்யில் சிவனருள் தானாகும் பேரவும் வேண்டாம் பிறிதில்லை தானே. 14 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
12 likes
15 shares
A Mohan Raj
1K views 18 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 *பதினோராம் திருமுறை* *பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.* *பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* : *1 திரு ஆலவாய் உடையார் 2 காரைக்கால் அம்மையார் 3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 4 சேரமான் பெருமாள் நாயனார் 5 நக்கீரதேவ நாயனார் 6 கல்லாடதேவ நாயனார் 7 கபிலதேவ நாயனார் 8 பரணதேவ நாயனார் 9 இளம்பெருமான் அடிகள் 10 அதிராவடிகள் 11 பட்டினத்து அடிகள் 12 நம்பியாண்டார் நம்பி.* *தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.* *சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.* *பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *பதினோராம் திருமுறையில் இருந்து திருவலஞ்சுழி மும்மணிக்கோவை* திருவலஞ்சுழி மும்மணிக்கோவை என்பது சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள ஒரு சிற்றிலக்கிய நூலாகும். இதனைப் பாடியவர் நக்கீரதேவ நாயனார் ஆவார். காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவத்தலமான திருவலஞ்சுழி இறைவனைப் போற்றி இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. *பாடல் அமைப்பு : 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான இது, ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூன்று வகையான பாக்கள் அடுத்தடுத்து மாறிவரும்படி மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது.* பாடல் வரிகள் : *திருவலஞ்சுழி மும்மணிக்கோவை* ஆசிரியப்பா வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன் பொருகடல் முகந்து கருமுகிற் கணம்நற் படவர வொடுங்க மின்னிக் குடவரைப் பொழிந்து கொழித்திழி அருவி குணகடல் மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல் உடுத்த மணிநீர் வலஞ்சுழி அணிநீர்க் கொன்றை அண்ணல தடியே. 1 வெண்பா அடிப்போது தந்தலைவைத் தவ்வடிகள் உன்னிக் கடிப்போது கைக்கொண்டார் கண்டார் - முடிப்போதா வாணாகஞ் சூடும் வலஞ்சுழியான் வானோரும் காணாத செம்பொற் கழல். 2 கட்டளைக் கலித்துறை கழல்வண்ண மும்சடைக் கற்றையும் மற்றவர் காணகில்லார் தழல்வண்ணம் கண்டே தளர்ந்தார் இருவரந் தாமரையின் நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிற வண்ணம் நெடியவண்ணம் அழல்வண்ண முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே. 3 ஆசிரியப்பா அண்ணலது பெருமை கண்டனம் கண்ணுதற் கடவுள் மன்னிய தடமல்கு வலஞ்சுழிப் பனிப்பொருட் பயந்து பல்லவம் பழிக்கும் திகழொளி முறுவல் தேமொழிச் செவ்வாய்த் திருந்திருங் குழலியைக் கண்டு வருந்திஎன் உள்ளம் வந்தஅப் போதே. 4 வெண்பா போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத் தாதெலாம் தன்மேனி தைவருமால் -தீதில் மறைக்கண்டன் வானோன் வலஞ்சுழியான் சென்னிப் பிறைக்கண்டங் கண்டணைந்த பெண். 5 கட்டளைக் கலித்துறை பெண்கொண் டிருந்து வருந்துங்கொ லாம்பெரு மான்திருமால் வண்கொண்ட சோலை வலஞ்சுழி யான்மதி சூடிநெற்றிக் கண்கொண்ட கோபம் கலந்தன போல்மின்னிக் கார்ப்புனத்துப் பண்கொண்டு வண்டினம் பாடநின் றார்த்தன பன்முகிலே. 6 ஆசிரியப்பா முகிற்கணம் முழங்க முனிந்த வேழம் எயிற்றிடை அடக்கிய வெகுளி ஆற்ற அணிநடை மடப்பிடி அருகுவந் தணைதரும் சாரல் தண்பொழில் அணைந்து சோரும் தேனுகு தண்தழை செறிதரு வனத்தில் சருவரி வாரல்எம் பெருமநீர் மல்கு சடைமுடி ஒருவன் மருவிய வலஞ்சுழி அணிதிகழ் தோற்றத் தங்கயத் தெழுந்த மணிநீர்க் குவளை அன்ன அணிநீர்க் கருங்கண் ஆயிழை பொருட்டே. 7 வெண்பா பொருட்டக்கீர் சில்பலிக்கென் றில்புகுந்தீ ரேனும் அருட்டக்கீர் யாதும்ஊர் என்றேன் – மருட்டக்க மாமறையம் என்றார் வலஞ்சுழிநம் வாழ்வென்றார் தாம்மறைந்தார் காணேன்கைச் சங்கு. 8 கட்டளைக் கலித்துறை சங்கம் புரளத் திரைசுமந் தேறுங் கழியருகே வங்கம் மலியுந் துறையிடைக் காண்டிர் வலஞ்சுழியா றங்கம் புலன்ஐந்தும் ஆகிய நான்மறை முக்கணக்கன் பங்கன் றிருவர்க் கொருவடி வாகிய பாவையையே. 9 அகவல் பாவை ஆடிய துறையும் பாவை மருவொடு வளர்ந்த அன்னமும் மருவித் திருவடி அடியேன் தீண்டிய திறனும் கொடியேன் உள்ளங்கொண்ட சூழலும், கள்ளக் கருங்கண் போன்ற காவியும் நெருங்கி அவளே போன்ற தன்றே தவளச் சாம்பல் அம்பொடி சாந்தெனத் தைவந்து தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த வெள்ளேற் றுழவன் வீங்குபுனல் வலஞ்சுழி வண்டினம் பாடுஞ் சோலைக் கண்ட அம்மஅக் கடிபொழில் தானே. 10 வெண்பா தான்ஏறும் ஆனேறு கைதொழேன் தன்சடைமேல் தேன்ஏறு கொன்றைத் திறம்பேசேன் - வான்ஏறு மையாருஞ் சோலை வலஞ்சுழியான் என்கொல்என் கையார் வளைகவர்ந்த வாறு. 11 கட்டளைக் கலித்துறை ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற் றைப்பிறை சூடிமற்றைக் கூறுபெண் ணாயவன் கண்ணார் வலஞ்சுழிக் கொங்குதங்கு நாறுதண் கொம்பரன் னீர்கள்இன் னேநடந் தேகடந்தார் சீறுவென் றிச்சிலைக் கானவர் வாழ்கின்ற சேண்நெறியே. 12 ஆசிரியப்பா நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்த செறிதரு தமிழ்நூல் சீறியாழ்ப் பாண பொய்கை யூரன் புதுமணம் புணர்தர மூவோம் மூன்று பயன்பெற் றனவே நீஅவன் புனைதார் மாலை பொருந்தப் பாடி இல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ள வாசகம் வழாமல் பேச வண்மையில் வானர மகளிர் வான்பொருள் பெற்றனை, அவரேல் எங்கையர் கொங்கைக் குங்குமந் தழீஇ விழையா இன்பம் பெற்றனர் யானேல் அரன்அமர்ந் துறையும் அணிநீர் வலஞ்சுழிச் சுரும்பிவர் நறவயற் சூழ்ந்தெழு கரும்பில் தீநீர் அன்ன வாய்நீர் சோரும் சிலம்புகுரற் சிறுபறை பூண்ட அலம்புகுரற் கிண்கிணிக் களிறுபெற் றனனே. 13 வெண்பா தனம்ஏறிப் பீர்பொங்கித் தன்அங்கம் வேறாய் மனம்வேறு பட்டொழிந்தாள் மாதோ - இனம்ஏறிப் பாடாலம் வண்டலம்பும் பாய்நீர் வலஞ்சுழியான் கோடாலங் கண்டணைந்த கொம்பு. 14 கட்டளைக் கலித்துறை கொம்பார் குளிர்மறைக் காடனை வானவர் கூடிநின்று நம்பா எனவணங் கப்பெறு வானை நகர்எரிய அம்பாய்ந் தவனை வலஞ்சுழி யானைஅண் ணாமலைமேல் வம்பார் நறுங்கொன்றைத் தாருடை யானை வணங்குதுமே. 15 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
48 likes
1 comment 35 shares