பன்னிரு திருமுறைகள்🙏🙏

1K Posts • 1M views
chellakannan
462 views 1 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருக்கழிப்பாலை #பதிகம்_021 #இந்தளப்பண் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
17 likes
9 shares
A Mohan Raj
1K views 1 months ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *எட்டாம் தந்திரம் - 15. ஆறு அந்தம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது. *திருமூலர் அருளிய திருமந்திரத்தில் எட்டாம் தந்திரம், ஒரு ஆன்மா தனது பாசத் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு இரண்டறக் கலக்கும் உயர்ந்த நிலைகளைப் பற்றி விளக்குகிறது. இது சுமார் 526 பாடல்களைக் (2122 - 2648) கொண்டது*. *எட்டாம் தந்திரத்தில் 15-வது பிரிவாக 'ஆறு அந்தம்' (ஆறு வகையான முடிவுகள்/நிலைகள்) விளக்கப்படுகிறது. ஆன்மீகப் பயணத்தில் ஒரு சாதகன் கடந்து செல்லும் ஆறு எல்லையோர நிலைகளை இது குறிக்கிறது. திருமந்திரம் - எட்டாம் தந்திரம் ஆன்மாவின் உயர் நிலைகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது*. அந்த ஆறு அந்தங்கள் ஆவன : கலாந்தம் : கலைகளின் முடிவு (கல்வி மற்றும் கலை ஞானத்தின் எல்லை). யோகாந்தம் : யோகப் பயிற்சியின் மூலம் அடையும் சித்தி அல்லது முடிவு. நாதாந்தம் : உள்ளத்தில் எழும் நாதத்தின் (ஒலியின்) எல்லை. போதாந்தம் : அறிவு அல்லது போதத்தின் முடிவு (அறிவு கடந்த நிலை). வேதாந்தம் : வேதங்களின் இறுதி முடிவான அத்வைத நிலை. சித்தாந்தம் : சிவஞானத்தின் இறுதி முடிவான சிவசாயுஜ்ய நிலை. *திருமூலர் இந்த ஆறு நிலைகளையும் கடந்து நிற்பதே உண்மையான முக்தி நிலை என்கிறார். குறிப்பாக, "வேதாந்தச் சித்தாந்தம் வேறற்ற நிலை" என்பதை இப்பகுதியில் வலியுறுத்துகிறார். அதாவது வேதத்தின் முடிவும் (வேதாந்தம்), அனுபவத்தின் முடிவும் (சித்தாந்தம்) ஒன்றே என்பதை உணர்வதே சிறந்தது*. பாடல் வரிகள் : *15. ஆறு அந்தம்* 2370 வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும் நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் ஓதத் தகும்எட்டு யோகாநந்த அந்தமும் ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே. 1 2371 அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர் அந்தம்ஒர் ஆறும் அறிவார் அமலத்தர் அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்கு அந்தமோடு ஆதி அறியஒண் ணாதே. 2 2372 தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம் ஆனாத் துரியத்து அணுவன் தனைக்கண்டு தேனார் பராபரம் சேர்சிவ யோகமாய் ஆனா மலமற்று அரும்சித்தி யாதலே. 3 2373 நித்தம் பரனோடு உயிருற்று நீள்மனம் சத்தம் முதல்ஐந்தும் தத்துவத் தால்நீங்கச் சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்து அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே. 4 2374 மேவும் பிரமனே விண்டு உருத்திரன் மேவுசெய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால் மேவும் பரவிந்து நாதம் விடாஆறாறு ஓவும் பொழுதுஅணு ஒன்றுஉள தாமே. 5 2375 உள்ள உயிர்ஆறாற தாகும் உபாதியைத் தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல் உள்ள இருள்நீங்க ஓர்iஉணர் வாகுமேல் எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே. 6 2376 தேடும் இயம நியமாதி சென்றகன்று ஊடும் சமாதியில் உற்றுப் படர்சிவன் பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக் கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே. 7 2377 கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில் விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு உள்ளன வாம்விந்து உள்ளே ஓடுங்கலும் தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே. 8 2378 தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு அளியவ னாகிய மந்திரம் தந்திரம் தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே. 9 2379 ஆகும் அனாதி கலைஆ கமவேதம் ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல் ஆகும் அனாதி உடல்அல்லா மந்திரம் ஆகும் சிவபோ தகம்உப தேசமே. 10 2380 தேசார் சிவமாகும் தன்ஞானத் தின்கலை ஆசார நேய மறையும் கலாந்தத்துப் பேசா உரையுணர் வற்ற பெருந்தகை வாசா மகோசர மாநந்தி தானே. 11 2381 தான்அவ னாகும் சமாதி தலைப்படில் ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும் ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது ஞான மென்ஞேய ஞாதுரு வாகுமே. 12 2382 ஆறந்த மும்சென்று அடங்கும்அந் நேயத்தே ஆறந்த ஞேயம் அடங்கிடும் ஞாதுரு கூறிய ஞானக் குறியுடன் வீடவே தேறிய மோனம் சிவானந்த மாமே. 13 2383 உண்மைக் கலைஆறுஓர் ஐந்தான் அடங்கிடும் உண்மைக் கலாந்தம் இரண்டுஐந்தோடு ஏழ்அந்தம் உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்து உண்மைக் கலைசொல்ல ஓர்அந்தம் ஆமே. 14 2384 ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின் தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக் கூளி யருளிய கோனைக் கருதுமே. 15 2385 கருதும் அவர்தம் கருத்தினுக்கு ஒப்ப அரனுரை செய்தருள் ஆகமந் தன்னில் வருசமயப் புற மாயைமா மாயை உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே. 16 2386 வேதாந்தம் சித்தாந்தம் வேறிலா முத்திரை போதாந்த ஞானம் யோகாந்தம் பொதுஞேய நாதாந்தம் ஆனந்தம் சீரோ தயமாகும் மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே. 17 2387 வேதாந்தம் தன்னில் உபாதிமே வேழ்விட நாதாந்த பாசம் விடுநல்ல தொம்பதம் மீதாந்த காரணோ பாதியேழ் மெய்ப்பரன் போதாந்த தற்பதம் போமசி என்பவே. 18 2388 அண்டங்கள் ஏழும் கடந்துஅகன்று அப்பாலும் உண்டென்ற பேரொளிக் குள்ளாம் உளஒளி பண்டுறு நின்ற பராசக்தி என்னவே கொண்டவன் அன்றிநின் றான்தங்கள் கோவே. 19 2389 கோஉணர்ந் தும்சத்தி யாலே குறிவைத்துத் தேவுணர்த் துங்கரு மஞ்செய்தி செய்யவே பாவனைத் தும்படைத் தர்ச்சனை பாரிப்ப ஓஅனைத் துண்டுஒழி யாத ஒருவனே. 20 2390 ஒருவனை உன்னார் உயிர்தனை உன்னார் இருவினை உன்னார் இருமாயை உன்னார் ஒருவனு மேயுள் உணர்ந்திநின் றூட்டி அருவனு மாகிய ஆதரத் தானே. 21 2391 அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து வருமவை சத்திகள் முன்னா வகுத்திட்டு உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும் திரனுறு தோயாச் சிவாநந்தி யாமே. 22 2392 வேதாந்த தொம்பதம் மேவும் பசுஎன்ப நாதாந்த பாசம் விடநின்ற நன்பதி போதாந்த தற்பதம் போய்இரண்டு ஐக்கியம் சாதா ரணம்சிவ சாயுச் சிய மாமே. 23 2393 சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும் அவம்அவம் ஆகும் அவ்வவ் இரண்டும் சிவமாம் சதாசிவன் செய்துஒன்றான் ஆனால் நவமான வேதாந்தம் ஞானசித் தாந்தமே. 24 2394 சித்தாந்த தேசீவன் முத்திசித் தித்திலால் சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்திவர் சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால் சிந்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே. 25 2395 சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும் அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால் நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம் தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே. 26 2396 தத்துவம் ஆகும் சகள அகளங்கள் தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம் தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம் தத்துவ மாம்சிவ சாயுச் சியமே. 27 2397 வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல் ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன நாதன் உரையவை நாடில் இரண்டந்தம் பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே. 28 2398 பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம் பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம் விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம் பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே. 29 2399 ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம் ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில் ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே. 30 2400 அன்றாகும் என்னாதுஐ வகைஅந்தம் அன்னை ஒன்றான வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் மன்றாடி பாதம் மருவலும் ஆமே. 31 2401 அனாதி சீவன்ஐம் மலமற்றுஅப் பாலாய் அனாதி அடக்கித் தனைக்கண்டு அரனாய்த் தன்ஆதி மலம்கெடத் தத்துவா தீதம் வினாவுநீர் பாலாதல் வேதாந்த உண்மையே. 32 2402 உயிரைப் பரனை உயிர்சிவன் தன்னை அயர்வற்று அறிதொந் தத்தசி அதனால் செயலற்று அறிவாகி யும்சென்று அடங்கி அயர்வற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே. 33 2403 மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம் சென்னிய தான சிவயோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை யாய்பொருள் துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே. 34 2404 முதலாகும் வேத முழுதுஆ கமம்அகப் பதியான ஈசன் பகர்ந்தது இரண்டு முதிதான வேதம் முறைமுறை யால்அமர்ந்து அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே. 35 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
23 likes
1 comment 28 shares
A Mohan Raj
853 views 11 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஒன்பதாம் தந்திரம் 7. அதிசூக்கும பஞ்சாக்கரம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமந்திரத்தின் ஒன்பதாம் தந்திரம் (மகுடாகமம்) திருமூலரால் அருளப்பட்ட சைவ சித்தாந்தத்தின் உச்சகட்ட ஞான நிலை, குருமட தரிசனம், பஞ்சாக்கர மந்திரங்கள், சிவனின் நடனங்கள், மற்றும் சமாதி நிலை பற்றிப் பேசுகிறது. இது ஆத்மா சிவத்தோடு கலக்கும் பரமானந்த நிலையையும், மெய்ஞான அனுபவங்களையும், பிரணவ மந்திரத்தின் நுட்பங்களையும் விளக்கும் உயரிய பகுதியாகும்.* *திருக்கூத்து தரிசனம் என்பது ஒன்பதாம் தந்திரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கியமான பகுதியாகும். இது இறைவன் ஆடுகின்ற தெய்வீகத் தாண்டவத்தைக் கண்டு தரிசிப்பதன் தத்துவங்களை விளக்குகிறது.* பரவியிருக்கும் இறைநிலை : இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன்; உலகம் முழுவதும் அவனது திருமேனியாகவும், அவனது ஆற்றல் (சக்தி) எங்கும் நிறைந்திருப்பதாகவும் திருமூலர் குறிப்பிடுகிறார். சிதம்பரம் தரிசனம் : 'சிதம்பரம்' என்பது வெறும் ஊர் மட்டுமல்ல, அது நம்முள்ளே இருக்கும் 'சிதாகாசம்' (அறிவு வெளி) ஆகும். இறைவன் அங்கே இடைவிடாது திருக்கூத்து (நடனம்) புரிகிறான். ஐந்தொழில் கூத்து : இறைவனின் ஆடல் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களைக் குறிக்கிறது. ஆன்ம லாபம் : பொறிகள் மற்றும் புலன்களால் உலகைப் பார்ப்பதை விட, அகக்கண்ணால் இறைவனின் திருக்கூத்தைக் காண்பதே உண்மையான ஞானம் என விளக்கப்படுகிறது. பாடல் வரிகள் : *8.1 திருக்கூத்து தரிசனம்* 2722 எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. 1 2723 சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச் சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப் பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யார்அறி வாரே. 2 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
11 likes
10 shares