தினம் ஒரு கோயில்

2K Posts • 498K views
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 23 days ago AI indicator
*தினம் ஒரு தேவாரம்* *பாடல் பெற்ற* *சிவத்தலங்கள்*. *புதிய தொடர் பதிவு* *தேவாரம் பாடல் பெற்ற* *சிவ ஸ்தலங்கள்* தொடர் பதிவில் இன்று காவிரி தென்கரை தலங்களில் இரண்டாவதாக(2) பார்க்க இருப்பது கடம்பவன நாதேஸ்வரர் திருக்கோவில், திருகடம்பந்துறை சிவஸ்தலம் பெயர் திருகடம்பந்துறை (தற்போது குளித்தலை என்று வழங்குகிறது) இறைவன் பெயர் கடம்பவன நாதேஸ்வரர் இறைவி பெயர்முற்றிலா முலையம்மை திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்துக்கான பதிகம் 1)முற்றி லாமுலை யாளிவ ளாகிலும் திருநாவுக்கரசர் இறைவன் மேல் பாடிய இத்தலத்துக்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது: தமிழ்நாட்டிலுள்ள கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவஸ்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம். மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், கடம்பந்துறையும் காவிரி தென்கரைத் தலங்கள். அவ்வகையில் திருகடம்பந்துறை தலத்தில் உள்ள கடம்பவனநாதரை காலை தரிசனம் செய்து வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது. தல வரலாறு:  தூம்ரலோசனன் என்ற அசுரன் தரும் துன்பங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அவர்களுக்காக அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அசுரனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோத, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே சப்தகன்னிகளை அனுப்பி அசுரனுடன் போர் புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன் அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் அசுரன் ஒளிந்து கொள்ள,அங்கு வந்த சப்த கன்னியர்களும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன் தான் முனிவர் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர். அம்பாளின் கூற்றுப்படி இத்தலத்தில் சிவனை வேண்டிக் கொண்டு சாப விமோசனம் பெற சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். அசுரனை அழித்தால் தங்களுக்கு மீண்டும் தோஷம் ஏற்படும் அன்று கருதிய சப்தகன்னியர், அசுரனை அழித்து தங்களைக் காக்கும்படி இறைவனிடர் முறையிட்டனர். சிவபெருமானும் அசுரனை அழித்தார். இத்தலத்தில் சப்தகன்னியர்களுக்கு இறைவன் பாதுகாப்பாக இருப்பதாக ஐதீகம். இத்தலம் அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஒரு திருப்புகழ் தலம். இங்கு முருகப்பெருமான் ஆறு திருமுகமும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவர் ஒரு திருமுகத்துடன் மயில் மீதமர்ந்து காட்சி தருகிறார். திருப்பகழில் ஒரு பாடல் உள்ளது. கடம்பவன நாதர் கோவில் காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கிறது. சிவன் கோவில்கள் எல்லாம் ஒன்று கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கித் தான் அமைந்திருக்கும். கங்கைக் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு நோக்கி இருப்பது போல், காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோவில் இது ஒன்று தான். வடக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரமும், கோபுரத்திற்கு வெளியே 16 கால் மண்டபமும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. 5நிலை கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் ஒரு நீண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. இம்மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இறைவி முற்றிலா முலையம்மை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அடுத்த வாயிலைக் கடந்து சென்றால் இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் கடம்பவன நாதர் லிங்கத் திருவுருவுக்குப் பின்னால் சப்த கன்னியர் உருவச் சிலைகள் இருக்கின்றன. சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலம் இதுவாதலின், மூலவர் பின்னால் சப்தகன்னிகைகளின் உருவங்கள் கல்லில் பிம்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நலக்கிரகங்கள், ஜேஷ்டாதேவி, நால்வர், 63 மூவருடைய மூல, உற்சவத் திருமேனிகள், விஸ்வநாதர், கஜலட்சுமி ஆகிய சந்நிதிகள் உள்ளன. இக்கோவிலில் இரண்டு சோமஸ்கந்த மூர்த்திகள், இரண்டு நடராஜர் மூர்த்திகள் இருக்கின்றன. ஒரு நடராஜ மூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, மற்றொன்றில் இல்லை. தலவிருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் காவிரி நதி. கண்ணுவ முனிவரும், தேவர்களும் இத்தலத்து இறைவனை பூசித்துப் பேறு பெற்றுள்ளனர். கண்ணுவ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம். . எப்படிப் போவது? இத்தலம் குளித்தலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. கரூரில் இருந்து 23 கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 55 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. குளித்தலை ரயில் நிலையம் திருச்சி - கரூர் - ஈரோடு ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்1.  திருஈங்கோய்மலை - 6 கிமி -  2. திருவாட்போக்கி - 9.3 கிமி -  3. திருப்பராய்த்துறை - 18 கிமி -  ஆலய முகவரி:அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை குளித்தலை அஞ்சல் கரூர் மாவட்டம் PIN - 639104 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔 #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥
6 likes
17 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 23 days ago AI indicator
*தினம் ஒரு தேவாரம்* *பாடல் பெற்ற* *சிவத்தலங்கள்*. *புதிய தொடர் பதிவு* *தேவாரம் பாடல் பெற்ற* *சிவ ஸ்தலங்கள்* தொடர் பதிவில் இன்று காவிரி தென்கரை தலங்களில் நான்காவதாக(4) பார்க்க இருப்பது நீண்ட ஆயுள் பெற மற்றும் எமபயம் போக்கும் உஜ்ஜீவனநாதர் கோவில், கற்குடி (உய்யக்கொண்டான் மலை) பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 4-வது தலமாக விளங்குவது திருகற்குடி. தேவாரத்தில் கற்குடி. என்று பெயர் பெற்ற இத்தலம், இந்நாளில் உய்யக்கொண்டான்மலை என்று வழங்குகிறது. இத்தலத்தில் வசிப்போரும், இத்தல இறைவனை வழிபட்டு வருபவர்களும் நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வங்களையும் பெற்று வாழ்வர். இங்கு வழிபடுவோருக்கு எமபயம் இல்லை என்று தலபுராணம் கூறுகிறது. இறைவன் பெயர்:  உஜ்ஜீவனநாதர், உஜ்ஜீவனேஸ்வரர் இறைவி பெயர்:  அஞ்சனாட்சி, பாலாம்பிகை இத்தலத்துக்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மூன்று பதிகங்கள் உள்ளன. திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்துக்கான பதிகம் வடந்திகழ் மென்முலை யாளை திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்துக்கான பதிகம் மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி சுந்தரர் அருளிய இத்தலத்துக்கான பதிகம் விடையா ருங்கொடியாய் அருணகிரிநாதர் அருளிய இத்தலத்துக்கான திருப்புகழ் குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்தி நெறித்துப் பொருப்புக் கொத்த புராண வரலாறு  மிருகண்ட முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டு தவமிருந்தார். அவரின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் அவர் முன் தோன்றி, உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா என்று கேட்டபோது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார் மார்க்கண்டேயனுக்கு 16வயது நெருங்கும் போது, மிருகண்ட முனிவர் அவனுடைய ஆயுள் விவரத்தைக் கூறி, இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார். மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவஸ்தலம் வந்து சேர்ந்தான். இத்தலத்தில்தான் மார்க்கண்டேயனுக்கு இறைவன் உஜ்ஜீவனேஸ்வரர் காட்சி கொடுத்து, அவன் என்றும் 16 வயதுடன் சிரஞ்ஜீவியாக வாழ வரம் கொடுத்தார். கோவில் அமைப்பு  தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் கற்குடி என்றும், தற்போது உய்யக்கொண்டான்மலை என்றும் வழங்கும் சிவஸ்தலம் 50 அடி உயரமுள்ள ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. குன்றின் அடிவாரத்தில் முருகப் பெருமானின் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாழில் வழியே உள்ளே நுழைந்தால், இடதுபுறம் ஞானவாவி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்துக்கு எதிரே, ஒரு முகப்பு வாயிலுடன் குன்றின் மேலே ஏற படிகள் தொடங்குகின்றன. குன்றின் பாறைகளில் நன்கு அமைந்துள்ள சுமார் 65 படிகள் ஏறி ஆலயத்தை அடையலாம்.  படிகள் ஏறி செல்லும் போது இடதுபுறம் விநாயகர் உள்ளார். குன்றின் மீது ஒரு 3 நிலை கோபுரம், 5பிராகாரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது. மூன்று வாயில்களைக் கொண்ட இவ்வாலத்தின் இரண்டு வாயில்கள் தெற்கு நோக்கியும், ஒன்று கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன. குன்றின் மேலுள்ள வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன், எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். குன்றின் மீது சுற்றிலும் உயர்ந்த மதில்சுவருடன் கூடிய ஆலயம் அழகுற அமைந்திருக்கிறது.  கொடிமரம் முன்பு மார்க்கண்டனைக் காக்க, எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற சுவாமியின் பாதம் உள்ளது. படிகள் ஏறி உட்சென்றால், முதலில் அஞ்சனாட்சி அம்பாள் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தரும் இவள் பழைய அம்பாள். இத்திருமேனியின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்துபோய் உள்ளது. எனினும், அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு, இப்பழைய அம்பாளை அப்புறப்படுத்தாது அப்படியே வைத்துள்ளனர். இதனால், புதிய அம்பாள் பாலாம்பிகை பிரதிஷ்டை செய்துள்ளனர். புதிய அம்பாள் பாலாம்பிகை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரு அம்பாளுக்கும் நித்திய பூஜை நடைபெற்று வருகிறது. அம்பிகைச் சந்நிதிக்கு அருகில் சண்முகர் தனி சந்நிதி அழகானது. உள் நுழைந்ததும், நேரே கோஷ்ட தட்சிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். வலமாக வரும்போது நால்வர் பிரதிஷ்டையும், அம்பாளுடன் காட்சி தரும் விநாயகர் சந்நிதியும், மறுபுறம் வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. கஜலட்சுமி, ஜ்யேஷ்டாதேவி, பைரவர், சூரியன், சனி பகவான் சந்நிதிகளும் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியுடன் துர்க்கையும், பிரம்மாவும், அர்த்தநாரீஸ்வரரும் உள்ளனர். மூலவர் உஜ்ஜீவனேஸ்வரர் மேற்குப் பார்த்த சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அருகில் இறைவி அஞ்சனாட்சி சந்நிதி உள்ளது.  இறைவன், இறைவி சந்நிதி தவிர பைரவர், மஹாலக்ஷ்மி, சக்திகணபதி, சூரியன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. கோவிலின் உட்புறச் சுவர்களில் சோழ மன்னர்கள் உத்தம சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் அளித்த தானங்கள் பற்றிய விவரங்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவன் இக்கோவிலுக்குப் பல தானங்களும், திருப்பணிகளும் செய்திருக்கிறான். இத்தலம் நந்திவர்ம மங்கலம் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நந்திவர்ம பல்லவனுக்கு இத்தலத்திலுள்ள ஜ்யேஷ்டாதேவியே குலதெய்வம். இந்த ஜ்யேஷ்டாதேவியை தரிசித்தால், விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். ராவணனுடைய சகோதரர்களில் ஒருவனான கரன், இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரு பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவார மூவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற பெருமையுடைய சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று. திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் கற்குடி இறைவன் உஜ்ஜீவனநாதரைக் கண்ணாரக் கண்டதைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தில் இத்தல இறைவனை பலவாறு புகழந்து பாடியுள்ளார். எப்படிப் போவது? திருச்சியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மேல் இத்தலம் அமைந்திருக்கிறது. ஆலய முகவரி அருள்மிகு உஜ்ஜீவநாத சுவாமி திருக்கோயில் உய்யக்கொண்டான் மலை உய்யக்கொண்டான்மலை அஞ்சல் (வழி) சோமரசம்பேட்டை S.O. திருச்சி மாவட்டம் - 620 102. இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய தொடர்புக்கு: உஜ்ஜீவனேஸ்வரர் திருக்கோவில் தேவஸ்தானம், தொலைபேசி: 0431-2702472, கைபேசி: 94436 50493 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔 #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥
6 likes
4 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
648 views 16 hours ago AI indicator
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-2* புதிய தொடர் பதிவு! ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதொடர் பதிவில் இன்று இரண்டாவதாக தரிசனம் செய்ய இருப்பது *உறையூர் அழகிய* *மணவாளர் பெருமாள்* *கோயில்* 108 வைணவ திவ்ய தேச தலங்களுள், திருச்சி மாவட்டம், உறையூர் அழகிய மணவாளர் பெருமாள் கோயில் இரண்டாவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. திருக்கோழி,உறந்தை, நிகளாபுரி, திருவுறையூர் என்றும் இவ்வூர் அழைக்கப்படும். இத்தலம் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருப்பாணாழ்வாரின் அவதாரத் தலம் ஆகும். சோழ நாட்டு யானை, உறையூர் வந்தபோது கோழி ஒன்று அந்த யானையைத் தாக்கி ஓடச் செய்ததால், இவ்வூருக்கு ‘கோழியூர்’என்றும் ‘திருக்கோழி’என்றும் பெயர் கிட்டியது. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவிலும், திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து 3 கிமீ தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் : அழகிய மணவாளர் தாயார்: கமலவல்லி நாச்சியார் தீர்த்தம்: கமலபுஷ்கரிணி, கல்யாண தீர்த்தம் ஆகமம்: பாஞ்சராத்ரம் விமானம்: கமல விமானம் தான் எழுதிய பெரிய திருமொழியில் ஒரே ஒரு பாசுரத்தில் இத்தலத்தைப் போற்றி, திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றமன்ன பாழியும் தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் வாழியரோ இவர் வண்ணமெனில் மாகடல் போன்று உளர் கையில் வெய்ய ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா தல வரலாறு துவாபர யுகத்தில் தர்மவர்ம சோழரின் வம்சத்து அரசர் நந்த சோழர் உறையூர் பகுதியை ஆண்டு வந்தார். ரங்கநாதரின் பக்தரான இவருக்கு நீண்ட காலமாக குழந்தைப் பேறு கிட்டவில்லை. மன்னர், தன் வருத்தத்தை ரங்கநாதரிடம் தெரிவித்தார். அவரும், தன் பக்தருக்காக, மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்குமாறு பணித்தார். ஒரு சமயம் மன்னர் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில், தாமரை மலரில் படுத்திருக்கும் குழந்தையைக் கண்டார். மகிழ்ச்சி அடைந்த மன்னர் அக்குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்று கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பருவம் அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய மன்னர் எண்ணினார். ஒருநாள் தோழியருடன் கமலவல்லி வனத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, குதிரையில் பயணிக்கும் ரங்கநாதரைக் காண்கிறார். அவரையே மணக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார். இதைத் தொடர்ந்து, மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள், கமலவல்லியை மணக்க விரும்புவதாகக் கூறுகிறார். மன்னரும், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்கிறார். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதருடன் கமலவல்லி ஐக்கியமானார். மன்னரும் தனது மகளுக்காக கோயில் எழுப்பினார். நாச்சியார் கோயில் தாயாரின் அவதாரத் தலம் என்பதால் இத்தலம் நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இங்கு தாயாரே பிரதானமாகக் கருதப்படுகிறார். இங்கு பெருமாளுக்குரிய அனைத்து ஆராதனைகளும், கமலவல்லித் தாயாருக்கு நடைபெறுகிறது. மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லித் தாயாரும் மணக் கோலத்தில் வடக்கு திசை நோக்கி ரங்கநாதரைப் பார்த்தவாறு நின்றபடி அருள்பாலிக்கின்றனர். திருமணத் தடை உள்ளவர்கள், ஆயில்யம் நட்சத்திர தினத்தில் தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் தாயார் மட்டுமே சொர்க்கவாசல் கடக்கிறார். ரங்கநாதர் மார்கழியில் வைகுண்ட வாசல் கடந்ததும், தை அல்லது மாசியில் வரும் ஏகாதசி தினத்தில், கமலவல்லி நாச்சியார் சொர்க்கவாசல் கடக்கிறார். பங்குனி உத்திர திருவிழாவின்போது, நம்பெருமாள் இத்தலத்துக்கு எழுந்தருளி, கமலவல்லி தாயாருடன் சேர்த்தி சேவை அருள்கிறார். மீண்டும் சுவாமி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தி சேவை அருள்கிறார். இவ்வாறு பங்குனித் திருவிழாவில்,பெருமாள் இரண்டு தாயாருடன் சேர்த்தி சேவை அருள்வதைக் காண கண்கோடி வேண்டும். 5 நிலை கோபுரம் கொண்டு இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் பிரகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜருக்கு சந்நிதிகள் உள்ளன. ஆலயத்திருவிழாக்கள் புரட்டாசி நவராத்திரி விழா, கார்த்திகை திருப்பாணாழ்வார் 10 நாள் திருவிழா, மார்கழி வைகுண்ட ஏகாதசி 21 நாள் வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. திருமணத்தடை நீக்கும் இரண்டாவது திவ்ய தேசமான உறையூர் அழகிய மணவாளர் பெருமாள் கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #108 திவ்ய தேசங்கள் #🙏பெருமாள் #108 திவ்ய தேசங்கள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
16 likes
6 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
616 views 16 hours ago AI indicator
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-5* புதிய தொடர் பதிவு! ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்கள் தொடர் பதிவில் இன்று ஐந்தாவதாக தரிசனம் செய்ய இருப்பது 108 வைணவ திவ்ய தேச உலா - 5. அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில் திருச்சி மாவட்டம் அன்பில் சுந்தரராஜப் பெருமால் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 5-வது திவ்ய தேசம் ஆகும். பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதைப் போல இங்கும் திருமால் தாரக விமானத்தின் கீழ் உள்ளார். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பில் உள்ளது. திருமழிசையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் (நான்முகன் திருவந்தாதி) செய்துள்ளார். நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத் தணையரங்கம் பேர் அன்பில்- நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால் அணைப் பார் கருத்தனாவான் மூலவர்: சுந்தரராஜப் பெருமாள் உற்சவர்: வடிவழகிய நம்பி தாயார்: அழகியவல்லி தலவிருட்சம்: தாழம்பூ தீர்த்தம்: மண்டுக தீர்த்தம் தல வரலாறு ஒருசமயம் நான்முகனுக்கு உலகில் தானே மிகவும் உயர்ந்தவர் என்ற எண்ணம் மேலிட்டது. மேலும் தான் மட்டுமே உலகில் உயிர்களைப் படைக்கிறோம் என்றும் அவை அழகாக இருப்பதற்குக் காரணம் தான்மட்டுமே என்ற ஆணவமும் வலுப்பெற்றது. இருப்பினும் தன்னை யாரும் வணங்குவதில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது. நான்முகனின் இந்த எண்ண ஓட்டத்தை உணர்ந்த திருமால், இதுகுறித்து நான்முகனை எச்சரித்தார். இதற்கெல்லாம் செவி சாய்க்காதவராக இருந்தார் நான்முகன். திருமால், நான்முகனைத் திருத்தும் நோக்கில், பூலோகத்தில் ஒரு சாதாரண மானிடப் பிறவி எடுக்குமாறு அவரை சபித்துவிட்டார். பூலோகத்தில் அனைத்து தலங்களுக்கும் சென்று தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கோரி வந்தார் நான்முகன். இவ்வாறு ஒவ்வொரு தலமாகச் சென்று வரும்போது ஒருநாள் இத்தலத்துக்கு வந்தார். இத்தலத்தில் திருமாலை நோக்கி தவம் இருக்கத் தொடங்கினார். அச்சமயத்தில் திருமால் பேரழகு வாய்ந்த மனிதராக நான்முகன் முன்பு வந்தார். அப்போது அவரைக் கண்டு அவருடைய அழகு குறித்து வினவினார். அப்போது திருமால், நான்முகனிடம் அழகு நிலையற்றது. ஆணவம் ஒருவரை அழிக்கக் கூடியது. இவ்விரண்டையும் கொண்டிருப்பவர்கள் சிறந்த வாழ்க்கையைப் பெறுவதில்லை என்று கூறினார். உபதேசம் செய்ததோடு மட்டுமல்லாமல் பள்ளி கொண்ட கோலத்தில் இத்தலத்தில் எழுந்தருளினார். பிற்காலத்தில் சோழ மன்னர் ஒருவரால் கோயில் எழுப்பப்பட்டது. நான்முகனிடம் மிகுந்த அன்பு கொண்டு, திருமால் எழுந்தருளிய தலம் என்பதால் ‘அன்பில்’என்ற பெயரை இத்தலம் பெற்றது. சுதபா என்ற முனிவர் தன் தவ வலிமையால் நீரிலும் நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டிருந்தார். திருமால் மீது மிகுந்த பக்தி உடையவர். ஒரு சமயம் நீருக்கடியில் திருமாலை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க துர்வாச முனிவர் வந்தார். நீருக்குள் இருந்ததால் சுதபா முனிவர், துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை. வெகு நெரம் காத்திருந்ததால் கோபமடைந்த துர்வாசர், அவரை தண்ணீருக்கடியில் வாழும் தவளையாக (மண்டுகம்) பிறக்குமாறு சபித்துவிடுகிறார். இதன்காரணமாக சுதபா முனிவருக்கு மண்டுகர் என்ற பெயர் ஏற்பட்டது. துர்வாசரிடமே சாப விமோசனம் குறித்து கேட்டார் மண்டுகர். முற்பிறவியில் செய்த கர்மத்தாலேயே இச்சாபம் கிடைத்தது என்றும், தகுந்த காலத்தில் திருமாலின் தரிசனம் அருளப் பெற்று சாப விமோசனம் கிடைக்கும் என்று மண்டுகரிடம் கூறினார் துர்வாசர். அதன்படி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (மண்டுக தீர்த்தம்) திருமாலை நோக்கி தவம் செய்தார் மண்டுக முனிவர். அவரது தவத்தை மெச்சி திருமால் அவருக்கு சுந்தரராஜராக காட்சி அளித்து சாப விமோசனம் கொடுத்தார். கோயில் மூலஸ்தானத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாபியில் நான்முகனுடன் அருள்பாலிக்கிறார் சுந்தர்ராஜ பெருமாள். உத்தமர் கோயிலில் ஈசனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதும், இத்தலத்துக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தார். இத்தலத்தில் முன்மண்டபத்தில் ஆண்டாள் தனிசந்நிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். மூலவர் நின்ற கோலத்தில் இருக்க, உற்சவர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். ஒரே சமயத்தில் ஆண்டாளின் இரண்டு கோலங்களை தரிசனம் செய்வது சிறப்பு. தேவலோக நடன மங்கை ஊர்வசி தன் அழகு மீது கர்வம் வந்துவிடாமல் இருப்பதற்காக ஆண்டாளை வணங்கிச் சென்றுள்ளாள். ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் நடக்க அருள்புரிவாள். பிரகாரத்தில் நரசிம்மர், வேணு கோபாலர், லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் அருள்பாலிக்கின்றனர். திருச்சி, திருப்பேர் நகர், திருஅன்பில் என அருகருகே மூன்று திவ்ய தேசங்களில் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருவிழாக்கள் ஆடிவெள்ளி, தைவெள்ளியில் தாயார் புறப்பாடு, நவராத்திரி உற்சவம், திருக்கார்த்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு. மார்கழியில் திருவாய்மொழி, திருமொழி திருநாள், ராப்பத்து திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். மாசி மாத தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தாயாரையும், ஆண்டாளையும் வணங்குவதால் திருமணத் தடை நீங்கி வாழ்வில் ஒளி பிறக்கும். அமைவிடம்: திருச்சியில் இருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ளது. திருமண வரம் அருளும் ஐந்தாவது திவ்ய தேசமான அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇👇 #🙏பெருமாள் #108 திவ்ய தேசங்கள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
8 likes
2 comments 22 shares