ஆலய தரிசனம்🔔
1K Posts • 519K views
*வித்தியாசமான நவகிரகங்கள்* நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் வெவ்வேறு திசையை நோக்கி இருக்கும். அவை ஒவ்வொன்றும் எந்த திசையை நோக்கியுள்ளன என்று தெரியுமா? சூரியன்: கிழக்கு சந்திரன்: மேற்கு செவ்வாய்: தெற்கு புதன்: கிழக்கு வியாழன்: வடக்கு சுக்கிரன்: கிழக்கு சனி: மேற்கு ராகு: தெற்கு கேது: தெற்கு. *ஒரே கல்லில் நவகிரகங்கள்* கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சிவன் கோயிலில் நவகிரகங்கள் ஒரே கல்லில் (நாலடி சதுரம்) செதுக்கப்பட்டுள்ளன. நடுவில் சூரியன் அமைந்துள்ள அற்புதமான சிற்பம்! *தஞ்சைபெரிய கோவில்* *லிங்க வடிவில் நவகிரகங்கள்* தஞ்சைபெரிய கோவிலில் நவக்கிரக சன்னதியில் நவக்கிரகங்களுக்கு பதில் லிங்க வடிவில் நவகிரகங்கள் காட்சியளிக்கின்றனர் இந்த நவ லிங்கங்களை சுற்றிவர முடியாத அமைப்பில் உள்ளது *திருப்பைஞ்ஞீலி ஆலய்* *நவக்கிரக குழிகள்* திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் ஒன்பது படிக்கட்டுகளையே நவகிரகங்களாக வழிபாடு செய்கின்றனர்.. சனீஸ்வர பகவானுக்கு அதிபதி எமதருமராஜன். இங்கே, திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் எமதருமனுக்கு சந்நிதி இருப்பதால், சனீஸ்வரரை உள்ளடக்கிய நவக்கிரகத்துக்கு சந்நிதி இல்லை. மாறாக, ராவண கோபுர வாசலை அடுத்து சுவாமியை தரிசிக்கச் செல்லும் போது ஒன்பது படிக்கட்டுகள் இருக்கின்றன. இந்த ஒன்பது படிக்கட்டுகளும் நவக்கிரகங்களாகவே திகழ்கின்றன என்றும் இந்தப் படிகளைக் கடந்து சிவ சந்நிதிக்கு வந்து தரிசிப்பவர்களுக்கு கிரக தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பதும் உறுதி. சிவனாரின் சந்நிதிக்கு எதிரில் நந்தி உள்ளது. நந்திக்கு அருகே ஒன்பது குழிகள் இருக்கின்றன. இந்த ஒன்பது குழிகள் தீபமேற்றி, நவக்கிரக வழிபாடாகச் செய்கிறார்கள் பக்தர்கள். உடுப்பியில் உள்ள கோயிலில் ஒன்பது துவாரங்களாக நவகிரகங்களை தரிசிக்கலாம். *சுசீந்திரம் கோவில் மேலிருந்து* *பக்தர்களை பார்க்கும்* *நவக்கிரகங்கள்*.!! சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத்தில் மேல் தளத்தில் நவக்கிரக சிலைகள் உள்ளன. ஒரே கல்லில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அந்த கல்லில் 12 ராசிகளும் இடம் பிடித்துள்ளன. புதிதாக செல்பவர்கள் நவக்கிரக மண்டபத்துக்கு சென்றால் அங்கு வெறும் மேடை மட்டுமே தென்படும். தலையை உயர்த்தி மேலே பார்த்தால் தான் நவக்கிரகங்களையும், ராசிகளையும் காண முடியும். சிவனும், பார்வதி தேவியும் இக்கோவிலில் அமர்ந்து யாகம் செய்தபோது நவக்கிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி வழிபட்டதால் எல்லா நவக்கிரகங்களும் கீழ் நோக்கி பார்ப்பதாக கூறப்படுகிறது லிங்கத்தை வழிபடும் நவக்கிரகங்கள் உள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில். *கடலூர் மாவட்டம், விருத்தாசலம்* *வட்டம் வயலூர் குபேரலிங்க ஆலய* *பெருமுக நவக்கிரகங்கள்*! கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வயலூர் குபேரலிங்கம் /பெருமுக நவக்கிரக கோயில். பழமலைநாதர் கோயில் என்று அழைக்கப்படும் விருத்தாசலம் கோயிலின் எட்டு திக்கிலும் அஷ்ட திக்கு லிங்கங்கள் இருந்துள்ளன. விருத்தாசலத்தின் நேர் வடக்கில் 2கிமி தூரத்தில் உள்ளது வயலூர் கிராமம், இது குபேரதிக்கு ஆகும். அதனால் இங்குள்ள இறைவனுக்கு குபேரலிங்கம் என பெயர். விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள தொடர் வண்டி மேம்பாலத்தினை ஏறிஇறங்கினால் உள்ளது வயலூர் . இங்கு பிரதான சாலையில் ஒரு பெரிய குளத்தின் மேற்கு கரையில் கிழக்கு நோக்கிய விநாயகர் கோயில் உள்ளது. அதனை ஒட்டி கிழக்கு நோக்கிய இறைவனாக உள்ளவர் குபேரதிக்கு இறைவன். முன்னர் பெரிய சிவாலயமாக இருந்த இத்தலம் இன்று விநாயகர் தனியாகவும், லிங்கம் தனியாகவும், சண்டேசர் நாகம்,பாதி உடைந்த பைரவர்மூர்த்திகளும் நவகிரகங்களும் தனித்தனி சன்னதி கொண்டு ஒரு சிறிய காம்பவுண்டுக்குள் அடங்கியுள்ளன. இவர் தற்போது உள்ள இடம் ஒரு நீண்ட ஓட்டு கொட்டகை. விநாயகர் சிற்றாலயம் கிழக்கில் உள்ள குளத்தினை நோக்கியுள்ளது அவரின் இடப்புறம் குபேரலிங்க மூர்த்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார், அவரின் எதிரில் நந்தியும் பலிபீடமும் உள்ளன. வடகிழக்கு பகுதியில் நவகிரகங்கள் உள்ளன. பிற தலங்களில் காண இயலாத காட்சியாக நவகிரகங்களின் முக அமைப்பு பெரிது பெரிதாக உள்ளது இதன் காரணம் அறிய முடியவில்லை இந்த பெருமுக நவகிரகங்கள் அனைவரும் கண்டு தொழவேண்டிய ஒன்று. இந்த குபேர இலிங்கத்தினை வழிபடுவோருக்கு செல்வங்கள் கிடைக்கும் என்பது மட்டுமன்றி, இந்த லிங்கமூர்த்தியின் பூஜைக்கு, திருப்பணிக்கு பொருள் தருவோர், முறையில்லா வழியில் செல்வம் சேர்த்திருந்தாலும், அப்பாவங்கள் விலகும் என்பதும் ஒரு நம்பிக்கை. விசேஷ நாட்களில் மக்கள் குழுவாக வந்து செல்கின்றனர். மேற்கண்ட ஆலயங்களில் காணப்படும் வித்தியாசமான நவகிரகங்களின் படங்கள் கீழே!👇🏻🚩🕉🪷🙏🏻 #நவக்கிரகங்கள் #🕉️நவகிரகங்கள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
14 likes
19 shares
*பைரவர் ஆலயங்கள்* *தாடிக்கொம்பு* *சௌந்தரராஜ* *பெருமாள் கோவிலில்* *அருள் பாலிக்கும்* *சகல செல்வங்களையும்* *தந்தருளும் சொர்ண* *ஆகர்ஷண பைரவர்*! திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி. அஷ்ட பைரவர்களில், சொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். இந்தக் கோவிலில், சிவப்பெருமானின் ஒரு அவதாரமாக இருப்பவர் பைரவர். பெரும்பாலும் வைணவ திருத்தலங்களில் பைரவர் எழுந்தருள்வது கிடையாது. ஆனால் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வடகிழக்கு மூலையில் பெருமாளின் பொக்கிஷ காவலராகவும், சேத்திர பாலகராகவும் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றால் பொன்னை இழுத்து தருபவர் என்று பொருளாகும். இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்திலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் ராகு கால நேரத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வழிபடுவதன் மூலம் வராக்கடன்கள் வரப்பெறுவதுடன், இழந்த சொத்துகள் மீளபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறும் பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து வழிபாடு செய்கின்றனர். அந்த நாளில் பால், இளநீர், பன்னீர், பச்சரிசி மாவு, தேன் ஆகியவற்றால் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகங்கள் செய்து, செவ்வரளி மாலை சார்த்தி, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால், சனிக் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம்; தொல்லைகள் நீங்கி, வாழ்வில் முன்னேறலாம். தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது ஆயிரம் லிட்டர் அளவில் பாலபிஷேகம் சிறப்புற நடைபெறுகிறது. அந்த நாளில், தீபமேற்றி அவரை வழிபட்டால், சொத்துப் பிரச்னைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும். தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் அருள் பாலிக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவர் படங்கள் கீழே!👇👇🚩🕉🪷🙏🏻 #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #🌷🌹தேய்பிறை அஷ்டமி பைரவா நாதா போற்றி🌹🐕 🐕 #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
65 likes
63 shares
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #ஆலய தரிசனம்🔔 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # மாவட்டம், சேலம் நகரில் மிக அருகாமையில் உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில்: ராவணனின் தம்பி கரதூசனன் வழிபட்ட திருத்தலம்* ..... ஒருமுறை அனைவரும் கண்டிப்பாக தரிசனம் செய்யுங்கள் உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒளி பிறக்கும்..... 😟😯😟😯😟 புராணச்சிறப்பும் பழமையும் நிறைந்த மகிமைவாய்ந்த கோயில்கள் நம் தேசமெங்கும் உள்ளன. அந்த வகையில் பழைமை வாய்ந்த சேலம் அருகே அமைந்திருக்கும் உத்தம சோழபுரம் கோயில் குறித்து அறிந்துகொள்வோம். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது உத்தமசோழபுரம். இந்த ஊரில்தான் கரபுரநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. ராவணனின் சகோதரன் கரதூசனன், ஈச்னை நோக்கித் தவம் செய்தான். அவன் கடுமையான தவம் கண்டு பிரபஞ்சமே நடுங்கியது. ஆனாலும் ஈசனின் தரிசனம் மட்டும் கிடைக்கவில்லை. கரதூசனன் அக்னி வளர்த்துத் தன்னையே ஆகுதியாக இறைவனுக்குத் தரத் தீர்மானித்தான். அவன் அக்னிக்குள் பாயத் தயாரான தருணம் ஈசன் அசரீரியாக நில் என்று கூறியதோடு அடுத்த கணம் அவன் முன் தோன்றிக் காட்சி அருளினார். ஆனந்த தரிசனம் கண்ட கரதூசனன் ஈசனுக்கு பூஜை செய்து மகிழ்ந்தான். கரதூசனன் பூஜை செய்ததால், இந்த இறைவனுக்கு 'கரபுரநாதர்' என்ற திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள். இங்கு சூரியன், சந்திரன், தேவர், முனிவர் ஆகியோர் நாளும் ஈசனை வணங்கி மகிழ்வர் என்று போற்றுகின்றன புராணங்கள். இங்கு ஈசன் சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர், கரபுரநாதர். லிங்க வடிவில் உள்ள கரபுரநாதரின் தலை சற்று சாய்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதற்குக் காரணமான திருக்கதை ஒன்று உண்டு. முன்னொரு காலத்தில் கரபுரநாதருக்கு அர்ச்சனை செய்துவந்த அர்ச்சகருக்கு ஒருநாள் அவர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரால் பூஜை செய்ய முடியாது என்ற நிலையில் தன் மகன் குணசீலன் என்ற சிறுவனை கோயிலுக்கு அனுப்பினார். குணசீலனும் கோயிலுக்கு வந்தான். ஈசனுக்குச் செய்யவேண்டிய கைங்கர்யங்கள் அனைத்தையும் செய்தான். அர்ச்சனையையும் செய்து முடித்தான். பிறகு, கரபுரநாதருக்கு மாலை அணிவிக்க முற்பட்டான். ஆனால், அவன் உயரம் போதாத காரணத்தால், லிங்கத்தின் தலை அவனுக்கு எட்டவில்லை. பதறிப்போனான். `இறைவா! என்னால் மாலை அணிவிக்கமுடியாமல் போய்விடுமோ... கருணை காட்ட மாட்டாயா?’ என மனமார கண்ணீர்மல்க இறைவனை வேண்டினான். அப்போது ஈசன் மனம் கனிந்து லேசாகத் தலையைச் சாய்த்தார். குணசீலன், ஈசனுக்கு மாலையை அணிவித்தான். இந்தக் காரணத்தால் ‘முடி சாய்ந்த மன்னர்’ என்ற திருநாமம் கரபுரநாதருக்கு உண்டானது. இந்தத் தலத்தின் பெருமைகளை உணர்ந்த அன்றைய சோழ மன்னர்கள், இங்கு வந்து வழிபட்டிருக்கிறார்கள்; திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இதனால் இறைவனாரை ‘சோழேஸ்வரர்’ என்றும் திருநாமம் சூட்டி அழைக்கின்றனர் பக்தர்கள். சோழர்கள் மட்டுமல்ல சேர பாண்டியர்களும் இந்த ஈசனை வழிபட்டுள்ளனர். மேலும் ஔவை, அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோரும் இங்கு வந்து பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். இதன் காரணமாகவே, இங்கு ராஜ கோபுரத்தை அடுத்துள்ள நுழைவாயிலின் மேற்புறத்தில் மூவேந்தர்களின் சிலைகளும் ஔவை, அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகியோரது சிலைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலும், முன் மண்டபத்தில் உள்ள கல்தூண் மற்றும் சுவர்களில் மூவேந்தர்களின் கொடிச்சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலின் பழைமையை இங்கு உள்ள பழங்காலக் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. ராஜகோபுரத்தின் முன்பாக நின்ற நிலையில் ஔவை பிராட்டியார் காட்சி தருகிறார். இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்கள் ஔவை பிராட்டியை மனம் உருகி வணங்கிச் செல்கின்றனர். பாரி மன்னரின் மகள்கள் அங்கவை, சங்கவை. தந்தை மற்றும் தாயை இழந்த இந்த இருவரையும் ஔவையார் இங்கு அழைத்து வந்து, மூவேந்தர் களின் முன்னிலையில் திருக்கோவிலூர் மன்னருக்குத் திருமணம் செய்துவைத்தாராம். இதன் பொருட்டு, மூவேந்தர்களும் பகை மறந்து ஒன்றுகூடிய தலம் இது எனவும் கூறப்படுகிறது. மூவேந்தர்களும் இங்கு வந்து இருந்தபோது சோழ மன்னர் உத்தமசோழபுரம் என்ற இடத்திலும், சேர மன்னர் சேலம் என்ற இடத்திலும், பாண்டிய மன்னர் வீரபாண்டி என்ற இடத்திலும் தங்கி இருந்ததாகக் கூறுகின்றனர் பக்தர்கள். அம்பாளின் திருநாமம் ஸ்ரீபெரியநாயகி கோயிலின் பின்புறத்தில், ஆறு சிரங்களையும் பன்னிரு கரங்களையும் கொண்டு மயில் வாகனத்தில் தேவியருடன் அருள்கிறார் முருகன். மேலும், இந்தக் கோயிலில் கால பைரவர் சந்நிதி, கரடி சித்தர் சந்நிதி, ஐயப்பன் சந்நிதி ஆகியவையும் உள்ளன. இந்தக் கோயில் அமைந்துள்ள ஊருக்கு `கைகொடுக்கும் ஊர்’, `பெரியூர்’, `உத்தமசோழபுரம்’ என மூன்று திருப்பெயர்கள் உள்ளன. திருமணத் தடையால் வருந்தும் ஆண்களும் பெண்களும் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் நெய் தீபமேற்றி திருமண வரம் வேண்டி வழிபட்டுச் சென்றால், தடைகளும் தோஷங்களும் நீங்கி விரைவில் கல்யாண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களது நம்பிக்கை. வாழ்வில் ஒருமுறையேனும் கரபுரநாதரை வழிபட்டு வருவோம். சிறுவனுக்காக சிரம் சாய்த்த அந்த ஈசன், நமது பிரார்த்தனைகளுக்கும் செவி சாய்த்து அருள்பாலிப்பார்! நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 1 மணி வரை, மாலை 4 முதல் இரவு 7 மணி வரை. தெரிந்து கொள்வோம்..... 😟🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😟
53 likes
98 shares