ஆலய தரிசனம்🔔
1K Posts • 518K views
*புரட்டாசி ஸ்பெஷல்* 🙏 இன்றைய கோபுர தரிசனம் 🙏 திருச்சேறை - சாரநாதப்பெருமாள் ஆலயம். ◄•───✧ உ ✧───•► 🙏 இன்றைய கோபுர தரிசனம் 🙏 தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு திருச்சேறை அருள்மிகு சாரநாதப்பெருமாள் ஆலயம். கோபுர தரிசனம் - கோடி புண்ணியம் கோபுர தரிசனம் - பாவ விமோசனம் மூலவர் : சாரநாதன் அம்மன்/தாயார் : சாரநாயகி - பஞ்சலெட்சுமி தீர்த்தம் : சார புஷ்கரிணி பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் ஊர் : திருச்சேறை மாவட்டம் : தஞ்சாவூர் மாநிலம் : தமிழ்நாடு பாடியவர்கள்:திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும் மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம் செய்விரியும் தண்சேறை யெம் பெருமான் திருவடியைச் சிந்தித் தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க் காளாமென் அன்பு தானே. திருமங்கையாழ்வார் திருவிழா: தைப்பூச விழா பத்து நாள் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேர்விழா. காவிரித்தாய்க்கு காட்சியளித்த தைமாதம், பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இந்த சாரபுஷ்கரணியில் நீராடுவது என்பது மகாமகத்திற்கு ஈடானது என்பதால் இதை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். தல சிறப்பு: இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்)நிறைந்தது. எனவே தான் தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 15 வது திவ்ய தேசம். திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்,திருச்சேறை- 612605தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 0435-2468078, 435-2468001.9444104374, பொது தகவல்: இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார விமானம் எனப்படுகிறது. காவிரித்தாய் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார். கோயில் நீளம் 380 அடி. அகலம் 234 அடி. கிழக்கு நோக்கிய 90 அடி உயர பிரமாண்டமான ராஜ கோபுரம். கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாலிக் கின்றனர்.கோயில் உள்பிர காரத்தில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் சன்னதிகள் உள்ளன. பிரார்த்தனை: செய்த பாவங்கள் விலக இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. இத்த பெருமாளை வழிபாடு செய்தால் 100 முறை காவிரியில் குளித்த புண்ணியம் கிடைக்கிறது. நேர்த்திக்கடன்: பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். தலபெருமை: பூதேவியின் தந்தை மார்க்கண்டேயர்:மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயர் வீற்றிருக் கிறார் மார்க்கண்டேயர் இத்தலத்தில் தான் முக்தியடைந்தார். உப்பிலி யப்பன் கோயிலில் தனது மகள் பூதேவியை சிறுவயதிலேயே பெருமாள் விரும்புகிறார். அதற்கு மார்க்கண்டேயர்,""சுவாமி! இவள் சிறு பெண். இவளுக்கு சரியாக உப்பு போட்டு கூட சமைக்க தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்கள் எவ்வாறு இவளை திருமணம் செய்து கொள்ள முடியும்,''என்கிறார். அதற்கு பெருமாள்,""இவள் உப்பே போடாமல் சமைத்தாலும், அதை நான் திருப்தியாக ஏற்று கொள்வேன்''என்று கூறி பூதேவியை திருமணம் செய்து கொள்கிறார். அன்றிலிருந்து பெருமாள் உப்பிலியப்பன் என்ற திருநாமத்துடன் உப்பில்லாத நைவேத்தியத்தை ஏற்றுகொள்கிறார். மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி சன்னதியின் திருப்பணிக்காக அழகிய மணவாள நாயக்கர் மன்னன் ஆணைப்படி இவ்வூர் வழியாக வண்டிகள் சென்றன. வண்டிக்கு ஒரு கல்வீதம் இக்கோயில் திருப்பணிக்கு நரசபூபாலன் என்பவன் மன்னனுக்கு தெரியாமல் இறக்கி வைத்தான். இதைக்கேள்விப்பட்ட மன்னன் விசாரிக்க இங்கு வந்தான். இதனால் பயந்த நரசபூபாலன், இத்தல பெருமாளை வேண்டினான். பெருமாள் மன்னனுக்கு மன்னார்குடி ராஜகோபாலனாக காட்சி கொடுத்தார். மகிழ்ந்த மன்னன் இக்கோயிலுக்கும் சிறப்பாக திருப்பணிகள் செய்தான். தல வரலாறு: பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடம் செய்து அதில் வேதங்களை வைத்து காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது. ஒரு முறை காவிரித்தாய் பெருமாளிடம்,""அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும்,''என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். இவளது தவத ்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். ""தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது,''என காவிரி கூறியவுடன், கருட வாகனத்தில் சங்கு சக்கர தாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து, "வேண்டும் வரம் கேள்' என்றார். அதற்கு காவிரி,""தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும். கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும்,''என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம். சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் அனைத்து பஸ்களும் இத்தலம் வழியாக செல்கின்றன. அருகிலுள்ள ரயில் நிலையம்: கும்பகோணம் அருகிலுள்ள விமான நிலையம்: திருச்சி தங்கும் வசதி: கும்பகோணம் 🙏ஓம் நமோ நாராயணா🙏🚩🪷🙏🏻 #🙏பெருமாள் #🙏🏻புரட்டாசி மாதம்✨ #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
11 likes
9 shares
*பைரவர் ஆலயங்கள்* *அந்தியூர் செல்லீஸ்வரர்* *கோவிலில் அருள்* *பாலிக்கும் இடதுபுறம்* *நாய் வாகனம் உள்ள* *அபூர்வ வீர கால பைரவர்*! ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அமைந்துள்ளது செல்லீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் செல்வாம்பிகை. மூலவர் செல்லீஸ்வரர் பராசரமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இக்கோவிலில் சோமாஸ்கந்த மூர்த்தம் வடிவில் அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையில் முருகன் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு எழுந்தருளி இருக்கும் வீர கால பைரவர் மிகவும் பிரசித்தி பெற்றவர். பொதுவாக பைரவர், தன் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும் நாய் வாகனத்துடன் காட்சி அளிப்பார். ஆனால் இத்தலத்தில் வீர காலபைரவரின் நாய் வாகனம் இடதுபுறம் நோக்கி இருப்பது தனிச்சிறப்பாகும். கொங்கு மண்டலத்தில் மிகவும் பழமைவாய்ந்த, பிரசித்தி பெற்ற பைரவ தலங்களில் இக்கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர், பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக அமைந்துள்ளது. பஞ்சலோகத்தில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்அமர்ந்த நிலையில் தன் மடியில் பைரவியை அமர்த்திக் கொண்டு ஒரு கரத்தில் அமுத கலசமும், ஒரு கரத்தில் சூலமும் கொண்டு வைர கிரீடமும் பட்டு வஸ்திரமும் அணிந்து தம்பதி சமேதராக காட்சி தருகின்றார்.   ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் தேய்பிறை அஷ்டமி அன்று மாலை தான் அபிஷேகம் பூஜைக்காக தரிசனம் தருவார். மற்ற நாட்களில் கனகசபையில் மட்டுமே அருள்புரிவார். இவரை அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வணங்கினால் சகல சம்பத்தும், பொன் பொருளும் கிட்டும்.  வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். பவுர்ணமி , வெள்ளி கிழமைகளியில் மாலை சந்தியா காலங்களில் மஞ்சள் பூக்கள், சண்பகம் . மனோரஞ்சிதம் போன்ற வாசனை மலர்களால் மாலை சாற்றி, வில்வ இலைகளால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி  மகிழ்ச்சியை பெறலாம். பவுர்ணமி நாள் அன்று 33 தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், அஷ்ட லட்சுமி அருளும் கிட்டும். பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் வருடாவருடம் லட்சார்ச்சனை நடந்து வருகிறது. அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் அருள் பாலிக்கும் சக்தி வாய்ந்த வீர கால பைரவர், மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் எதிர்மறையான துஷ்ட சக்திகளை போக்ககூடியவர். எதிரிகளை அழிக்ககூடியவர். இந்த வீர கால பைரவரைக் காலை நேரத்தில் வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும். பகல் வேளையில் தொழுதால் நாம் விரும்பியது கிடைக்கும். அந்திசாயும் நேரத்தில் வழிபாடு செய்தால், பாவங்கள் விலகும். அர்த்த சாமத்தில் வழிபட்டால் மனசாந்தியும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும், வளமான வாழ்வும் அமையும். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் இரவு 7.30 மணி முதல் பத்து மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை வீர கால பைரவருக்கு நடைபெறுகிறது. ஓவ்வொரு வருடமும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று வீர காலபைரவருக்கு அன்னாபிசேகம் நடைபெறுகிறது. இத் திருகோவில் ஈரோடில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அந்தியூர் வீர கால பைரவர் படங்கள் கீழே!👇🚩🕉🪷🙏🏻 #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #🌷🌹தேய்பிறை அஷ்டமி பைரவா நாதா போற்றி🌹🐕 🐕 #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
213 likes
2 comments 297 shares
*நரசிம்மர் ஆலயங்கள் 08* *சோளிங்கர் நரசிம்மர்* *ஆலயம்* சென்னையில் இருந்து 100 கல் தொலைவிலும் வேலூரில் இருந்து 50 மைல் தொலைவிலும் அமைந்திருக்கும் ஆலயம் . காஞ்சிபுரத்துக்கும் திருப்பதிக்கும் இடையில் அமைந்திருக்கும் இந்த சோளிங்கர் நரசிம்மர் ஆலயம், மகா விஷேஷமான ஆலயம் வைஷ்ணவ திவ்யதேசங்களில் இது 65ம் தலம் மகா புண்ணியமானது. வடமொழியில் "பிரம்ம கைவர்த்த புராணத்தில்" இதன் சிறப்புக்கள் சொல்லபட்டிருக்கின்றன நரசிம்ம ஆலயங்களில் தொன்மையானது இதுதான், இதன் வரலாறு சப்தரிஷிகளிடம் இருந்து துவங்குகின்றது பகவானின் அவதாரங்களில் உடனே நடந்து மின்னல் வேகத்தில் பலன் கொடுத்தது நரசிம்ம அவதாரம், எவ்வளவு பெரிய இக்கட்டில் ஒருவன் சிக்கினாலும் இனி தப்பவே முடியாது என பெரும் நெருக்கடியில் வீழ்ந்தாலும் அங்கு ஓடிவந்து அவனை காக்கும் அற்புதமான சக்தி நரசிம்ம அவதாரத்துக்கே உண்டு நாளை வா என்றோ பின்னர் தருகின்றேன் என்றோ சொல்லாமல் நினைத்த மாத்திரம் வந்து வரமருளும் நரசிம்ம மூர்த்தியினை அதுவும் அதுவேண்டுமா இதுவேண்டுமா என கேட்காமல் இதுதானே வேண்டும் என செயலில் காட்டும் அவதார மூர்த்தியினை தரிசிக்கும் விருப்பம் சப்தரிஷிகளுக்கு உண்டாயிற்று அதுவும் உக்கிர நரசிம்மரை தவிர்த்து தங்களை போல் தவக்கோலத்தில் அமைதியாய் உலகை இயக்கும் கோலத்தில் இருக்கும் யோக நரசிம்மரை காண விரும்பினார்கள். வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் என ஏழுபேரும் மிகுந்த தவமிருந்து பகவானின் யோக நரசிம்ம‌ காட்சியினை ஒரு கடிகை அதாவது 24 நிமிடம் கண்ட தலம் இது பிரகலாதனை காக்க பகவான் வந்து நின்ற நேரம் ஒரு கடிகைதான் அது 24 நிமிடம் என வரையறுக்கபடும் . பழைய கால நேர அளவு, கடிகாரம் எனும் சொல் இதில் இருந்துதான் வந்தது இவ்வாறு 24 நிமிடங்கள் அந்த சப்தரிஷிகள் பகவானை மனதார கண்ணார தரிசித்த தலம் இது. அப்படியே அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பகவானும் இங்கு வந்து தன்னை 24 நிமிடம் தரிசிப்போர்க்கு முக்தி என திருவுளம் பற்றிய தலமும் இதுதான். ஆம், இத்தலத்தில் 24 நிமிடங்கள் தரிசித்தால் முக்தி. இங்கு எந்த காணிக்கை வேண்டாம், நேர்ச்சை வேண்டாம், மந்திர வழிபாடு யாகம் என எதுவும் வேண்டாம், 24 நிமிடங்கள் அவர் சன்னதியில் நின்றால் எல்லா தோஷமும் சரியாகும் மனதில் எண்ணியது பலிக்கும். இத்தலம் மிக பழமையானது . கடிகாசலம் அதாவது கடிகைமலை என அழைக்கபட்டது. பின் சோழர்கள் ஆட்சியில் இது சோழபுரமாகி பின் சோழிங்கர் என்றாயிற்று சோழி என்றால் காவல், கவசம் எனும் பொருளும் உண்டு. எல்லோருக்கும் காவல் தரும் நரசிம்மரின் தலமாதனால் சோழிங்கர் என்றாயிற்று என்பதும் ஒரு கோணம் இந்த தலம் இரு கோவில்களை கொண்டது மலையடியில் உற்சவராக பக்தவச்சலம் எனும் பெயரில் சுதாவல்லி, அமிர்தவல்லி என இரு தேவியரோடு எழுந்தருளியிருக்கின்றார். மூலவர் மலை மேல் ஆலயத்தில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். பக்தவத்சலம் என்றால் பக்தர்மேல் அன்புகொண்ட பெருமாளின் மலை என பொருள். 1035 படிகள் கொண்ட மலைபாதையில் கோவிலுக்கு செல்லும் வழியில் சங்கு சக்கரம் ஏந்திய அனுமர் சிலையினை காணலாம். அம்முனிவர்கள் தவமிருந்தபோது காலகேய அசுரர்கள், கும்போதர அசுரர்கள் அட்டகாசம் செய்தார்கள். அவர்களை தடுக்க அனுமனுக்கு தன் ஆயுதங்களை கொடுத்து பகவான் அனுப்பினார் என்பது புராண செய்தி. பகவானே இங்கு தன் பக்தர்களை அனுமனுடன் காக்கின்றார் என்பது இதன் தாத்பரியம். இந்த ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது சிறப்பு. மலையில் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளதாக ஆலயம் அமைந்துள்ளது. இங்கு லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாசி வழங்குகிறார். அனுமன் காவல் காப்பதால் இங்குள்ள குளம் அனுமன் தீர்த்தமாயிற்று. இதில் நீராடுவது நல்ல பலனை தரும். இது மிக தொன்மையான தலம் என்பதாலும், பகவானே யோக நிலையில் இருப்பதாலும் ஆழ்வார்களெல்லாம் மங்கள சாசனம் செய்தார்கள். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் இது. நம்மாழ்வார் தவிர பல ஆழ்வார்கள் வந்து பணிந்த ஆலயம் இது. பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்து வணங்கி அருள் பெற்றது வரலாறு. வைகுண்டம், திருபாற்கடல், திருவேங்கடத்துக்கு இணையாக போற்றபடும் தலமும் இதுதான். இங்கு வேண்டி கொண்டால் 24 நிமிடம் அமர்ந்து பகவானை மனமொன்றி தியானித்தால் எல்லா சிக்கலும் தீரும். குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். தொழில் வளரும் பெரும் வாழ்வு கிட்டும் இங்கு சொந்தமாக நிலம் வாங்கி வீடுகட்டி குடியேற விரும்புவோர் செய்யும் வினோத வழிபாடு ஒன்று உண்டு. அதன்படி மலைக்கு செல்லும் வழியில் கிடக்கும் கற்களை எடுத்து சென்று கோவில் முன் கல்லின் மேல் கல் அடுக்கி வழிபடுவார்கள். அந்த வழிபாடு நிச்சயம் சொந்தவீட்டை கொடுக்கும். இதற்கு சாட்சிகள் ஏராளம் இங்கு நரசிமம்ம தீர்த்தம் உண்டு. அது விஷேஷம் இங்கு நீராடுவதால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் இந்த தலம் பாற்கடலுக்கும் வைகுண்டத்துக்கும் ஈடானது என்பதால் இங்கு தான தர்மம் செய்வதும் இதர வழிபாடுகளை செய்வதும் கயாவில் செய்வதற்கு ஈடானது. சில துண்டு கற்கண்டுகளுக்கும், ஒரு கட்டி வெல்லத்துக்கும், வாழைபழ நைவேத்தியத்துக்கும் ஓடிவந்து அந்த எளிய பக்திக்கே இங்கு அருள்புரிவார். வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம். இங்கு வியாழக்கிழமைகளில் பிரம்மதீர்த்தத்தில் நீராடி நரசிம்மசுவாமியை வணங்கினால் எல்லா நலமும் அடையலாம் வேண்டியன கிடைக்கும். இது கயாவுக்கு ஈடான தலம் என்பதால் இங்கு தூய மனத்துடன் நீராடி நம்பிக்கையுடன் சோளிங்கரில் பித்ரு தர்ப்பணம் தானம் தவம் முதலியன செய்தால் பரம்பரை செழித்து வாழும் வம்சம் தொடரும். மாசி மாதத்தில் சூரியோதயத்தின் போது பிரம்ம தீர்த்தத்தில் நீராடிக் பகவானை தியானித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கும். பிரம்மதீர்த்தினருகில் பைரவ தீர்த்தம் இருக்கிறது. அதில் திங்கட்கிழமையில் நியமுடன் நீராடினால் பூதபிசாசுகளால் வரும் தொல்லை நோங்கும். இந்த ஆலய நரசிம்ம பகவானின் கண்கள் 11 மாதம் மூடியிருக்கும். கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பு நடைபெறும், கார்த்திகையில்தான் பகவான் கண்விழிப்பார் என்பதை மிக அழகாக காட்டும் ஏற்பாடு இது. வேறெங்கும் இந்த ஏற்பாட்டினை காணமுடியாது. சோளிங்கர் ஆலயம் சக்தி மிக்கது. நவகிரகங்களால் ஏற்படும் தொல்லை முதல் பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வரை இங்கு பிரம்மதீர்த்தத்தில் நீராடி மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் வணங்கினால் எல்லா சிக்கலும் தீரும் பலமிக்க எதிரிகள், எப்பக்கமும் பெரும் சிக்கல்கள், உயிராபத்து இதர பெரும் அழுத்தங்கள் கொண்டவர்கள் இங்கு வந்து வணங்கினால் நரசிம்மர் எல்லா விக்னங்களையும் நொடியில் அழித்து உங்களுக்கு காவல் தருவார். இந்த தலம் மன அமைதி தரும் தலம், அம்மலையில் இருக்கும் மூலிகளின் காற்றே பாதி நோயினை தீர்த்து நலமெல்லாம் தரும். வேலூர் பக்கம் செல்லும் போது இந்த சோளிங்கரை தரிசிக்க மறவாதீர்கள். அவருக்கு கல்கண்டும் வெல்லமும் வாழைபழமும் கொண்டு சென்று மனமொன்றி தரிசனம் செய்யுங்கள். நெய்விளக்கேற்றிவிட்டு 24 நிமிடம் அவர் சன்னதியில் அமர்ந்திருங்கள். அது போதும் அது மட்டும் போதும். கருணையே உருவான நரசிம்மம் உங்கள் சிக்கல் எதுவோ, உங்கள் ஆபத்து எதுவோ, எது உங்களை மிரட்டி அஞ்சவைக்கின்றதோ, எது உங்களை மனதால் வாட்டுகின்றதோ அதையெல்லாம் தீர்த்து எல்லா சிக்கலிலும் இருந்தும் உங்களை விடுவிப்பார். இது சத்தியம். பிரம்ம ரிஷியார். 🚩🕉🪷🙏🏻 #ஸ்ரீ நரசிம்ம பெருமாள் #🙏 லட்சுமி நரசிம்மர் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
23 likes
25 shares
*பைரவர் ஆலயங்கள்* *தாடிக்கொம்பு* *சௌந்தரராஜ* *பெருமாள் கோவிலில்* *அருள் பாலிக்கும்* *சகல செல்வங்களையும்* *தந்தருளும் சொர்ண* *ஆகர்ஷண பைரவர்*! திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி. அஷ்ட பைரவர்களில், சொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். இந்தக் கோவிலில், சிவப்பெருமானின் ஒரு அவதாரமாக இருப்பவர் பைரவர். பெரும்பாலும் வைணவ திருத்தலங்களில் பைரவர் எழுந்தருள்வது கிடையாது. ஆனால் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வடகிழக்கு மூலையில் பெருமாளின் பொக்கிஷ காவலராகவும், சேத்திர பாலகராகவும் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றால் பொன்னை இழுத்து தருபவர் என்று பொருளாகும். இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்திலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் ராகு கால நேரத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வழிபடுவதன் மூலம் வராக்கடன்கள் வரப்பெறுவதுடன், இழந்த சொத்துகள் மீளபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறும் பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து வழிபாடு செய்கின்றனர். அந்த நாளில் பால், இளநீர், பன்னீர், பச்சரிசி மாவு, தேன் ஆகியவற்றால் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகங்கள் செய்து, செவ்வரளி மாலை சார்த்தி, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால், சனிக் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம்; தொல்லைகள் நீங்கி, வாழ்வில் முன்னேறலாம். தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது ஆயிரம் லிட்டர் அளவில் பாலபிஷேகம் சிறப்புற நடைபெறுகிறது. அந்த நாளில், தீபமேற்றி அவரை வழிபட்டால், சொத்துப் பிரச்னைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும். தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் அருள் பாலிக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவர் படங்கள் கீழே!👇👇🚩🕉🪷🙏🏻 #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #🌷🌹தேய்பிறை அஷ்டமி பைரவா நாதா போற்றி🌹🐕 🐕 #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
45 likes
32 shares