ஆலய தரிசனம்🔔

1K Posts • 519K views
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K views 25 days ago AI indicator
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-2* புதிய தொடர் பதிவு! ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதொடர் பதிவில் இன்று இரண்டாவதாக தரிசனம் செய்ய இருப்பது *உறையூர் அழகிய* *மணவாளர் பெருமாள்* *கோயில்* 108 வைணவ திவ்ய தேச தலங்களுள், திருச்சி மாவட்டம், உறையூர் அழகிய மணவாளர் பெருமாள் கோயில் இரண்டாவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. திருக்கோழி,உறந்தை, நிகளாபுரி, திருவுறையூர் என்றும் இவ்வூர் அழைக்கப்படும். இத்தலம் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருப்பாணாழ்வாரின் அவதாரத் தலம் ஆகும். சோழ நாட்டு யானை, உறையூர் வந்தபோது கோழி ஒன்று அந்த யானையைத் தாக்கி ஓடச் செய்ததால், இவ்வூருக்கு ‘கோழியூர்’என்றும் ‘திருக்கோழி’என்றும் பெயர் கிட்டியது. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவிலும், திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து 3 கிமீ தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் : அழகிய மணவாளர் தாயார்: கமலவல்லி நாச்சியார் தீர்த்தம்: கமலபுஷ்கரிணி, கல்யாண தீர்த்தம் ஆகமம்: பாஞ்சராத்ரம் விமானம்: கமல விமானம் தான் எழுதிய பெரிய திருமொழியில் ஒரே ஒரு பாசுரத்தில் இத்தலத்தைப் போற்றி, திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றமன்ன பாழியும் தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் வாழியரோ இவர் வண்ணமெனில் மாகடல் போன்று உளர் கையில் வெய்ய ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா தல வரலாறு துவாபர யுகத்தில் தர்மவர்ம சோழரின் வம்சத்து அரசர் நந்த சோழர் உறையூர் பகுதியை ஆண்டு வந்தார். ரங்கநாதரின் பக்தரான இவருக்கு நீண்ட காலமாக குழந்தைப் பேறு கிட்டவில்லை. மன்னர், தன் வருத்தத்தை ரங்கநாதரிடம் தெரிவித்தார். அவரும், தன் பக்தருக்காக, மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்குமாறு பணித்தார். ஒரு சமயம் மன்னர் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு தடாகத்தில், தாமரை மலரில் படுத்திருக்கும் குழந்தையைக் கண்டார். மகிழ்ச்சி அடைந்த மன்னர் அக்குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்று கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பருவம் அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய மன்னர் எண்ணினார். ஒருநாள் தோழியருடன் கமலவல்லி வனத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, குதிரையில் பயணிக்கும் ரங்கநாதரைக் காண்கிறார். அவரையே மணக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார். இதைத் தொடர்ந்து, மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள், கமலவல்லியை மணக்க விரும்புவதாகக் கூறுகிறார். மன்னரும், கமலவல்லியை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்கிறார். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதருடன் கமலவல்லி ஐக்கியமானார். மன்னரும் தனது மகளுக்காக கோயில் எழுப்பினார். நாச்சியார் கோயில் தாயாரின் அவதாரத் தலம் என்பதால் இத்தலம் நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இங்கு தாயாரே பிரதானமாகக் கருதப்படுகிறார். இங்கு பெருமாளுக்குரிய அனைத்து ஆராதனைகளும், கமலவல்லித் தாயாருக்கு நடைபெறுகிறது. மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லித் தாயாரும் மணக் கோலத்தில் வடக்கு திசை நோக்கி ரங்கநாதரைப் பார்த்தவாறு நின்றபடி அருள்பாலிக்கின்றனர். திருமணத் தடை உள்ளவர்கள், ஆயில்யம் நட்சத்திர தினத்தில் தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் தாயார் மட்டுமே சொர்க்கவாசல் கடக்கிறார். ரங்கநாதர் மார்கழியில் வைகுண்ட வாசல் கடந்ததும், தை அல்லது மாசியில் வரும் ஏகாதசி தினத்தில், கமலவல்லி நாச்சியார் சொர்க்கவாசல் கடக்கிறார். பங்குனி உத்திர திருவிழாவின்போது, நம்பெருமாள் இத்தலத்துக்கு எழுந்தருளி, கமலவல்லி தாயாருடன் சேர்த்தி சேவை அருள்கிறார். மீண்டும் சுவாமி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தி சேவை அருள்கிறார். இவ்வாறு பங்குனித் திருவிழாவில்,பெருமாள் இரண்டு தாயாருடன் சேர்த்தி சேவை அருள்வதைக் காண கண்கோடி வேண்டும். 5 நிலை கோபுரம் கொண்டு இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் பிரகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜருக்கு சந்நிதிகள் உள்ளன. ஆலயத்திருவிழாக்கள் புரட்டாசி நவராத்திரி விழா, கார்த்திகை திருப்பாணாழ்வார் 10 நாள் திருவிழா, மார்கழி வைகுண்ட ஏகாதசி 21 நாள் வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. திருமணத்தடை நீக்கும் இரண்டாவது திவ்ய தேசமான உறையூர் அழகிய மணவாளர் பெருமாள் கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #108 திவ்ய தேசங்கள் #🙏பெருமாள் #108 திவ்ய தேசங்கள் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
20 likes
11 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
6K views 24 days ago AI indicator
*சிவன் கோயில்களில்* *காட்சி தரும் நந்தி* *பகவானின் நாக்கு* *மூக்கை அடைத்துக்* *கொண்டிருப்பதன்* *ஆன்மீக ரகசியம்*! சிவன் கோயிலுக்குள் நாம் கால் வைக்கும்போதே, முதலில் நம் கண்களைக் கவர்வது அமைதியாய் அமர்ந்திருக்கும் நந்தி தேவர்தான். அவரை வணங்காமல் சிவனை தரிசிக்க முடியாது என்பது மரபு. பல கோயில்களில் நந்தியின் நாக்கு அவர் மூக்கின் ஒரு பக்கத்தை மூடியபடி இருக்கும். சிலருக்கு இது விசித்திரமாகத் தோன்றும். இதன் பின்னே மறைந்திருக்கும் கதை ஒன்று உண்டு. நந்தி தேவர் வெறும் வாகனம் மட்டுமல்ல. அவர் சிவகணங்களின் தலைவர். சிவாலயத்தின் அதிகார தெய்வம். பக்தர்களின் மனநிலையைச் சோதித்து, அவர்களை இறைவனிடம் அனுப்பும் பொறுப்பு அவரிடம் உள்ளது. அதனால்தான் பிரதோஷ நேரத்தில் நந்தியின் காதில் நம் குறைகளைச் சொன்னால் அவை சிவனைச் சென்றடைகின்றன. அவர் சுவாசிக்கும் காற்றிலேயே சிவபெருமான் ஊஞ்சலாடுகிறார் என்பது புராண வாக்கு. ஆனால் இந்த நந்தியின் நாக்கு ஏன் மூக்கை அடைத்திருக்கிறது? என்பது பலருக்கும் தெரியாது. இதோ அதற்கான ஆன்மீக ரகசியம். சிவன் சன்னிதியில் இருக்கும் நந்தி தனது நாக்கால் இடது நாசியை மூடியிருப்பார். இது சூரிய கலை. அம்மன் சன்னிதியில் இருக்கும் நந்தி வலது நாசியை மூடியிருப்பார். இது சந்திர கலை. கோயில் வெளியே அமர்ந்திருக்கும் நந்தியோ, நாக்கு இரண்டு நாசிக்கும் நடுவில் நீட்டிக் கொண்டிருக்கும். இது சமநிலை சுவாசம். நந்திக்கு கைகள் இல்லை. ஆனாலும் அவர் தனது நாவையே கருவியாகக் கொண்டு சுவாசத்தை ஒழுங்குபடுத்துகிறார். இதுவே வாசியோகம். இதுவே யோக ஞானத்தின் உச்சம். நந்தி தனது சுவாசத்தைக் கட்டுப்படுத்தும்போது, அவர் அமர்ந்திருக்கும் இடமே பிரபஞ்ச சமநிலையின் மையமாகிறது. அந்தச் சீரான சுவாசத்தின் அதிர்வில்தான் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். இதுவே நந்தி வழிபாட்டின் மறைபொருள். இதுவே ஆலயக் காவலனின் அமைதியான போதனை. உயிரியல் ஆன்மிக வெளிப்பாடு 1. நந்தியின் நாக்கு – ஒரு உயிரியல் கலைக்களஞ்சியம். நந்தி தனது நாக்கால் நாசியை மூடுவது வெறும் சிற்பக் கலை அல்ல. அது நம் உடலுக்குள் நடக்கும் ஒரு பெரிய விஷயத்தின் வெளிப்படையான குறியீடு. நாம் இரண்டு நாசிகளாலும் சுவாசிக்கிறோம். ஆனால் எப்போதும் இரண்டும் சமமாக இயங்குவதில்லை. சில நேரம் வலது நாசி மிகச் செயல்படும். அப்போது நாம் சுறுசுறுப்பாகவும், சூடாகவும் இருப்போம். சில நேரம் இடது நாசி மிகச் செயல்படும். அப்போது நாம் அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் இருப்போம். இது நம் உடலின் இயற்கை நியதி. நந்தி தனது நாவால் ஒரு நாசியை மூடும்போது, அவர் நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்: “நீயும் உன் சுவாசத்தை உணர்ந்திடு. அதை ஒழுங்குபடுத்திடு.” 2. சூரிய கலை – உடலின் வெம்மை, சந்திர கலை – உடலின் குளிர்ச்சி. சிவன் சன்னிதியில் நந்தி இடது நாசியை மூடியிருப்பது நமக்குச் சொல்லும் செய்தி: “வலது நாசியால் சுவாசி. வெம்மையை உணர். செயலில் இறங்கு.” இது சிவனின் தாண்டவத்துக்கு ஏற்ற நிலை. அம்மன் சன்னிதியில் நந்தி வலது நாசியை மூடியிருப்பது நமக்குச் சொல்லும் செய்தி: “இடது நாசியால் சுவாசி. குளிர்ச்சியை உணர். அமைதியில் இருக்கக் கற்றுக்கொள்.” இது அன்னையின் கருணைக்கு ஏற்ற நிலை. இதன் மூலம் நந்தி நமக்கு உபதேசிக்கிறார்: “உன் சுவாசம் எப்போது வலது ஓடும், எப்போது இடது ஓடும் என்று தெரிந்துகொள். அப்போதுதான் உன் உணர்ச்சிகளை நீ கட்டுக்குள் வைக்க முடியும்.” 3. நடுவில் நீண்ட நாக்கு – யோக நிலையின் உச்சம் கோயில் வெளியே அமர்ந்திருக்கும் நந்தியின் நாக்கு இரண்டு நாசிக்கும் நடுவில் நீட்டிக் கொண்டிருக்கும். இது என்ன சொல்கிறது? “இரண்டு நாசிகளும் சமமாக ஓடட்டும். உடலில் வெம்மையும் இல்லை, குளிர்ச்சியும் இல்லை. எதிரெதிர்கள் உன்னை ஆட்டி வைக்க முடியாது.” இதுவே சமாதி நிலை. இதுவே முழுமையான யோகம். 4. நம் உள்ளே நடக்கும் அற்புதம் நந்தியின் சீரான மூச்சில் சிவன் ஊஞ்சலாடுகிறார் என்பது வெறும் கதையல்ல. நம் சுவாசம் சீராகும்போது, நம் மனம் அமைதியாகும். மனம் அமைதியாகும் போது, நம் உள்ளே இருக்கும் உணர்வு வெளிப்படும். அந்த உணர்வே சிவன். அதுவே நந்தி நமக்குக் காட்டும் பெரிய உண்மை. 5.பிரதோஷ நேரத்தில் நந்தியின் காதில் நம் குறைகளைச் சொன்னால் அவை சிவனைச் சென்றடைகின்றன. இது வெறும் நம்பிக்கையா? இல்லை. நாம் யாரிடமாவது நம் கவலையைச் சொல்லும்போது, அது வெறும் வார்த்தை அல்ல. அது நம் மனச் சுமையை இறக்கிவைக்கும் செயல். நந்தியின் காது என்பது நம் மனம் இலகுவாவதற்கான வாயில். சிவனை அடைவதற்கான முதற்படி. 6. நாம் கற்க வேண்டிய பாடம் நந்தி தனது நாக்கால் நாசியை மூடும்போது, அவர் நம்மிடம் சொல்லாமல் சொல்லும் பாடம்: “நீயும் ஒரு நிமிடம் மௌனமாய் இரு. உன் மூச்சை உற்றுப் பார். எந்த நாசி ஓடுகிறது? உன் உடல் சூடாக இருக்கிறதா? குளிர்ச்சியாக இருக்கிறதா? இதை உணர்ந்தால் போதும். பாதி பிரச்சனைகள் விலகும்.” “உன் சுவாசம் சீரானால், உன் மனம் சீராகும். உன் மனம் சீரானால், நீ காணும் சிவனும் சீரானவராய் இருப்பார்.” 7. நந்தி வெளியே மட்டும் இல்லை. நம் உள்ளேயும் ஒரு நந்தி அமர்ந்திருக்கிறான். அவன்தான் நம் சுவாசம். அவன்தான் நம் மன அமைதி. அவன் சீராக இருந்தால், நம் உள்ளிருக்கும் சிவன் வெளிப்படுவான். அடுத்த முறை சிவாலயம் செல்லும்போது, நந்தியின் நாக்கைப் பாருங்கள். அவர் மூக்கை மூடியிருக்கும் விதத்தைப் பாருங்கள். பின்னர் கண்களை மூடி, உங்கள் மூச்சை உணருங்கள். எந்த நாசியில் மூச்சு ஓடுகிறது? உங்கள் உடல் சூடாக இருக்கிறதா? குளிர்ச்சியாக இருக்கிறதா? இதை உணர்ந்தாலே, நந்தி உங்களுக்குத் தரிசனம் கொடுத்துவிட்டார். சிவனும் ஆடத் தொடங்கிவிட்டார். இந்த பதிவு தொடர்பான கீழ்க்கண்ட காணொளிகாட்சியை பாருங்கள்!🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔
60 likes
47 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 24 days ago AI indicator
மருத மரம்... கதலி வனம்... வெள்வேலம்... வினை தீர்க்கும் விருட்ச அற்புதங்கள்! மருத மரம் தரும் மருந்து! சிவகங்கை மாவட்டத்தில் நெற் குப்பை என்னும் சிற்றூரின் அருகிலுள்ளது பரியாமருது பட்டி. இந்தக் கிராமத்தின் தொடக்கத் திலேயே அமைந் துள்ளது பறியாமருந்தீஸ் வரர் ஆலயம். சிவ கங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்ட இந்த ஆலயம், 1829-ம் வருடம் நகரத்தாரால் கல் திருப்பணி செய்து கட்டப் பட்ட ஆலயம். ‘பறியா மருந்து ஈஸ்வரர்’ என்றால், பறியாத மருந்தான ஈஸ்வரர் என்று பொருள். அதாவது செடியில் பறிக்காத மருந்தே இவர். இவரை நினைத்தாலே, வணங்கினாலே வந்த நோய் பறந்து போகுமாம். இந்தக் கோயிலில் இரண்டு அம்பாள்களை தரிசிக்கலாம். சுத்த பிரும்மமாக பரஞ்சோதி அம்பாளும் பர பிரும்மமாக பார்வதி அம்பாளும் இங்கு அருள்பாலிப்பது சிறப்பு. கோயிலின் வெளிப் பிராகாரத்தில், மருத மரத்தடியில் அருள்புரி கிறார் மருத விநாயகர். பக்தர்களின் குறைகளையும் பிணிகளையும் தீர்க்கும் தெய்வம் இவர். ராகு - கேது பரிகாரம், நாக தோஷ நிவர்த்தி ஆகியவற்றுக்காக வேண்டிக்கொண்டு பக்தர்களால் அடித்து வைக்கப்பட்டுள்ள கல் நாகங்கள் இந்த விநாயகர் சந்நிதி யைச் சுற்றிலும் நிறைய உள்ளன. இந்த மருத மரம்தான் தல விருட்சம். இந்த ஆலயத்தை எழுப்பும் போது, மண்டபத்தின் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிக்காக இந்த மரத்தை வெட்ட முயற்சி செய்தனர். அப்போது மரத்திலிருந்து ரத்தம் போன்ற நீர் வடிந்ததால், வெட்டும் முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் தானாகவே அந்த மரம் முறிந்து விழுந்து, கோயில் சுவர் கட்டுவதற்கு உதவியதாம். அதன் பின்னர் மருத மரம் தானாக வளர்ந்தது என்கிறார்கள். இந்த மரமும் அதன் பட்டைகளும் மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தவை. மரத்திலிருந்து தானாகவே உதிரும் மருதம் பட்டையைப் பொடி செய்து நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆறாத புண், வயிற்று வலி போன்றவை நீங்கும். இங்கு சர்ப்பம் வந்து வழிபட்டதால், ராகு- கேது தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை. நன்றி...ரவிசங்கர் ராஜா, ஆரணி 🚩🕉🪷🙏🏼 #🕉️கணபதி போற்றி #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔 #🙏ஆன்மீகம்
4 likes
10 shares