புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெற்ற #தமிழ்நாடு_தலைகுனியாது பொதுக்கூட்டம்
1 Post • 47 views
Ezhilraja
549 views
#புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெற்ற #தமிழ்நாடு_தலைகுனியாது பொதுக்கூட்டம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் "தமிழ்நாடு தலைகுனியாது" பொதுக்கூட்டம் மாநகர துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி, மாவட்ட அறங்காவல் குழு தலைவரும் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளருமான தவ.பாஞ்சாலன், தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ் ஆகியோர் வரவேற்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் கழக செயல்திட்ட குழு உறுப்பினருமான பொன்.முத்துராமலிங்கம் அவர்கள் திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களும் அதனால் தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாடும் அடைந்து வரும் வளர்ச்சி பற்றியும் மக்களிடம் எடுத்துரைத்தார். மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்து, பாஜக அரசு வழக்கம்போல் தமிழ்நாட்டுக்கு 'அல்வா' கொடுத்ததைக் குறிக்கும் வண்ணம், மக்களுக்கு அல்வா வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன், VR.கார்த்திக் தொண்டைமான், புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்ட மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் முக.ராமகிருஷ்ணன் வடக்கு ஒன்றிய செயலாளர் RR.சாமிநாதன் ஆகியோர் நன்றி கூறினார்கள். மீண்டும் வா தலைவனே! வென்று வா ஸ்டாலினே!!
12 likes
13 shares