🙏🪔🔱 ஓம் நமசிவாய சிவாய ஓம் 🔱🪔🙏🐂 ஓம் நந்தீஸ்வரர் பகவான் போற்றி 🔱🪔🙏 ஓம் பிரதோஷ நாயகனே போற்றி
2 Posts • 434 views
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 இப்படி_செய்தால்_தீராக்கடன்_தீர்ந்து_செல்வம்_கொழிக்கும்.* ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ நாளை விசுவாவசு வருடம் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஆகும். இந்த தை வெள்ளி, திரயோதசி திதியில் வருவதால் சிவபெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. பிரதோஷ நாளில் சிவபெருமான் வழிபாடு மேற்கொண்டால் தீராத கடன்கள் தீரும், செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. தோஷங்கள் அனைத்தும் விலகி, பாவங்கள் அனைத்தும் நீங்கி, கேட்ட வரம் கேட்ட படி கிடைக்கக்கூடிய இந்த பிரதோஷ நாளில் சிவ பெருமானை எப்படி வழிபடுவது.? ☘️ தை மாத வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய பிரதோஷ தினம் சுக்கிரவாரம் பிரதோஷம் என்று கூறப்படுகிறது. பொதுவாக சோமவார பிரதோஷம் மற்றும் சனி பிரதோஷம் ரொம்பவே விசேஷமானது. இந்த தை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வந்துள்ள பிரதோஷத்தன்று முழு நாளும் விரதமிருந்து சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய கடன்களும் எளிதாக தீரும் என்கிறது சாஸ்திரங்கள். ☘️ கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், சுபகாரியத் தடைகள் உள்ளவர்கள், தோஷங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்க இந்த நல்ல நாளை தவறாமல் சிவ வழிபாடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். பிரதோஷத்தன்று மாலை நாலரை மணி முதல் ஆறு மணி வரையிலான கால கட்டத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள சிவபெருமானைப் கண்குளிர தரிசனம் செய்து, அபிஷேக பொருட்களை தானம் செய்வதன் மூலம் நமக்கு தீராத தோஷங்கள் அனைத்தும் தீர்வதாக ஐதீகம் உண்டு. ☘️ பால், விபூதி, தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற ஏதாவது ஒரு அபிஷேக பொருளை உங்களால் முடிந்த மட்டும் நீங்கள் வாங்கி கோவிலுக்கு தானம் கொடுக்க வேண்டும். நீங்கள் வாங்கிக் கொடுக்கும் அபிஷேகப் பொருளைக் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது கண்குளிர தரிசிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் சிவபெருமானை உங்கள் வேண்டுதல் போய் சென்றடைய, நந்தி பகவானையும் வழிபட வேண்டும். நந்தியுடைய காதுகளில் நீங்கள் உங்களுடைய வேண்டுதல்களை வைத்தால், அது சிவபெருமானுக்கு நேரடியாக போய் சேரும் என்கிறது ஆன்மீகம். எனவே கோவிலுக்கு சென்று நந்தி பகவானை தவறாமல் வழிபட்டு வாருங்கள். ☘️ இந்நாளில் நந்தி பகவானுக்கு உரிய பரிகாரம் செய்ய பசுக்களுக்கு தானம் கொடுப்பது ரொம்பவே சிறப்புக்கு உரியதாக கருதப்படுகிறது. பசுவிற்கு பச்சரிசியை ஊற வைத்து அதனுடன் வெல்லம் கலந்து, மஞ்சள் வாழைப்பழம் சேர்த்து தானம் கொடுக்க வேண்டும். கோவிலில் கொடுக்க முடியா விட்டாலும் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பசுக்களுக்கு இந்த தானத்தை நீங்கள் தவறாமல் கொடுத்து பயன்பெறலாம். ☘️ தெரியாமல் கூட வில்வ இலைகளால் பிரதோஷ தினத்தில் அர்ச்சனை செய்தால் செய்த புண்ணியங்கள் யாவும் இரட்டிப்பாகும். எனவே வீட்டில் அல்லது கோவிலில் சிவனுக்கு கட்டாயம் வில்வ அர்ச்சனை செய்யுங்கள். இதற்காக முன்கூட்டியே வில்வ இலைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மேலும் பிரதோஷ நாளில் சோமசூக்த பிரதட்சண வலம் வருவது ரொம்பவே விசேஷமானது. இந்நாளில் அன்னதானம் செய்பவர்களுக்கு ஈரெழு ஜென்ம பாவங்களும் நீங்கும் என்ற ஐதீகம் உண்டு. உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள். யாராவது ஒருவருக்காவது உணவு பொட்டலம் வாங்கிக் கொடுங்கள். மேலும் சிவ ஸ்லோகங்கள் உச்சரிப்பது, சிவ புராணம் படிப்பது போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம். முழுநேர விரதம் இருக்க முடியாதவர்கள் பாலும், பழமும் சாப்பிட்டு சிவ சிந்தனையில் ஈடுபடலாம். 🙏🪷🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
12 likes
13 shares
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏நந்தி பகவான் 🙏 இரண்டு ஆன்மீக தகவல்கள் : 03 உயிரோட்டமுள்ள நந்தி:- சிவசைலம் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில். திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது. ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி இந்திரன் தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும் சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று அங்கிருந்து செல்ல எழ முயற்சித்தது. மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியது. மனோரஞ்சிதம் மாலை.... மனோரஞ்சிதம் அரிதானது என்பதுடன், சுவாமி வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. பூக்களுக்கான கவர்ச்சியான வண்ணம் இல்லாவிட்டாலும், தன் ரம்மியமான மணத்தால், அனைவரையும் மயக்கும் அற்புதம் மனோரஞ்சிதம் மலருக்கு உண்டு. மலர்களில் வாசம் அதிகம் கொண்டது மனோரஞ்சிதம். இந்த பூ நுகரும் போது, நாம் நினைக்கும் பழத்தின் வாசனை வரும் என்றும் கூறப்படுகிறது. இலை போன்ற தோற்றத்தில் பச்சை வண்ணத்தில் பூத்து, பின், வெளிர் மஞ்சள் நிறத்திற்கு இந்த பூ மாற்றம் அடையும். பூக்கும் போது, இலையை போன்றே காணப்படும்.மாலை நேரத்தில் மட்டுமே பூக்கக்கூடியது இது. மனோரஞ்சிதம் பூத்தால், 200 அடி சுற்றளவிற்கு பூவின் வாசம் இருக்கும். மிகவும் அற்புதமான இதன் வாசம், மனதை மயங்கச் செய்யும். நீர் நிரப்பிய பாத்திரத்தில், ஒரு மனோரஞ்சிதம் பூவை வைத்தால், அந்த அறை முழுவதும் சுகந்தமான மணம் வீசும். இதன் மணத்திற்கு ஈடு இணையே கிடையாது. மனதை மயக்கும் என்பதாலும், மனதில் நினைக்கும் பழத்தின் வாசத்தை தரும் என்பதாலேயே, இது மனோரஞ்சிதம் என, அழைக்கப்படுவதாக தெரிகிறது. இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருக்கிறது. உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும் இந்த நந்தியின் மீது பார்க்க முடியும். இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும் அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும் அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன. எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏 நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
11 likes
16 shares