🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையார் மலர் பாதம் சரணம் . சிவமே என் வரமே 🌹
*திருமுறை ஓதுவோம்*
*திருமுறை ஓதுவிப்போம்*
*🙏தினம் ஒரு தேவாரம்🌹🙏*
*🌹திருமயிலாடுதுறை🌹
`மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா`
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*திருப்பாடல் :*
🌹தோளின்மிசை வரியரவ நஞ்சழல வீக்கிமிகு நோக்கரியராய்
மூளைபடு வெண்டலையி லுண்டுமுது காடுறையு முதல்வரிடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி யுதிர்த்திட நிரந்துகமழ்பூ
வாளைகுதி கொள்ளமடல் விரியமண நாறுமயி லாடுதுறையே.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*பொழிப்புரை :*
*சிவபெருமான், தோளின்மீது வரிகளையுடைய பாம்பு நஞ்சை உமிழுமாறு, அதனை இறுக அணிந்தவர். எண்ணுதற்கு அரியவராய் விளங்குபவர். மூளை நீங்கிய பிரமகபாலத்தில் பலியேற்று உண்டு சுடுகாட்டில் வசிப்பவர். எப்பொருட்கும் முதல்வரான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், காவிரியிலுள்ள வாளைமீன்கள் கரையோரங்களிலுள்ள பாளைபொருந்திய பசிய கமுக மரங்களில் பாய, அவை சிவந்த பழங்களை உதிர்க்க, அதனால் பூ இதழ்கள் விரிய நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.*
`எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!`
` 🌹சிவாய நம🙇 சிவமே ஜெயம் 🌹சிவமே தவம் . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். சிவனே சரணாகதி*
*அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பிற்றி🦜🦜
*சித்தமெல்லாம்***
*சிவ மயமே.
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய