கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி 5சவரனா? 6 சவரனா?
4 Posts • 1K views
அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாகக் கடன் தள்ளுபடியை அறிவிக்கத் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி வருகின்றனர். விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், என்னநடக்க போகிறது? அறிவிப்பு வெளியாகுமா? கூட்டுறவு வங்கிகளை பொறுத்தவரை பயிர் கடன், நகை கடன், மகளிர் சுய உதவி குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், சிறு வணிகக் கடன் மற்றும் வாகனக் கடன் எனப் பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. கூட்டுறவு வங்கிகள் நகைக்கடன் தள்ளுபடி இதில் பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பு கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவோருக்கு 7 சதவீத வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது. இதர கடன்களுக்கு 9 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதியின்படி நகை மற்றும் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதும், அதற்கான நிதி வங்கிகளுக்கு அண்மையில் முழுமையாகக் கிடைத்ததும் மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்னும் 2 மாசத்தில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது.. இந்த சூழலில், கடந்த தேர்தலை போலவே இந்த முறையும் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியாகும் என்று மக்கள் பலமாக நம்புகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினருக்கான கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். நகை அடமானம் இதற்கு போட்டியாக ஆளும் கட்சியான தி.மு.க.வும் பல்வேறு கவர்ச்சிகரமான தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடத் தயாராகி வருகிறது. இதன் காரணமாகவே, மக்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைக் காட்டிலும், புதிய கடன்களைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 1.10 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நபார்டு வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் பெறுவது மற்றும் பொதுமக்களின் டெபாசிட் தொகைகளைக் கொண்டே இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதேசமயம், குடும்பச் செலவுகள் மற்றும் திருமணங்களுக்காக 10 லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் புதிய கடன் திட்டத்தை அறிவிக்க அரசும் ஆலோசித்து வருகிறது. அரசியல் லாபங்களுக்காகக் கூட்டுறவு வங்கிக் கடன்களைப் பயன்படுத்துவது நிதிச் சுமையைத் தரும் என்ற கவலைகளுக்கு மத்தியிலும், தள்ளுபடி எனும் ஒற்றை எதிர்பார்ப்பால் மக்கள் கடன் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ரூ.10 லட்சம் வரை லோன் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடன் தொகை 85,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடும்போது 13,000 கோடி ரூபாய் அதிகமாகும் என்பது மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாகும்..!! கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இது குறித்து சில கவலைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.. நபார்டு வங்கியில் குறைந்த வட்டிக்குப் பெறப்படும் நிதி மற்றும் பொதுமக்களின் டெபாசிட் தொகைகளைக் கொண்டே இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன. எனவே, அரசியல் காரணங்களுக்காக கூட்டுறவு வங்கிகளை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது என்றும், இது வங்கிகளின் நிதி நிலைமையை பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்... இதற்கிடையே, திருமணம் போன்ற குடும்ப தேவைகளுக்காக 10 லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கும் புதிய திட்டத்தை அறிவிக்க அரசு ஆலோசித்து வருவது கடன் பெறுவோரின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!! #📢 பிப்ரவரி 7 முக்கிய தகவல் #கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி 5சவரனா? 6 சவரனா?
11 likes
13 shares
அவசர தேவைகளுக்கு, மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற செலவுகளுக்கு விரைவில் நிதி கிடைக்கின்றன.. சாதாரண கடன்களுடன் ஒப்பிட்டால், நகை அடமான கடனின் வட்டி விகிதம் குறைவுதான்.. இந்நிலையில், நகைக்கடன் தள்ளுபடியை அரசு அறிவிக்குமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது!! நம்முடைய நாட்டை பொறுத்தவரை விவசாயம் நாட்டில் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் தங்கள் தேவைகளுக்கு, குறிப்பாக கல்வி, மருத்துவம், திருமணம் போன்ற செலவுகளுக்காக வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவது வழக்கம் ஆகி உள்ளது. கூட்டுறவு வங்கி - நகைக்கடன் இதில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி போன்ற வங்கிகளில் கடன் பெறுவதற்கு விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், இந்த வகை நகைக்கடனுக்கு விதிமுறைகள் குறைவாகவும், வட்டி விகிதம் குறைவாகவும் இருப்பது. வங்கிகள் வட்டி விகிதம் மாற்றப்பட்டாலும், மொத்தத்தில் விவசாயிகளுக்கான வட்டி சுமை குறைவாகவே இருக்கும். மாநில மற்றும் மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு அடமானம் பெயரில் நகைக்கடன் வழங்கி வருகின்றன. நகைக்கடன் தள்ளுபடி கடந்த 2025-ம் ஆண்டு, தங்கத்தின் விலை உயர்ந்ததால், சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சம் ரூபாயை கடந்துள்ளது. இதனால் புதிய தங்கம் வாங்கும் போக்கு குறைந்திருக்கும், ஆனால் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில் வங்கிகள், ரிசர்வ் வங்கியின் அறிவுரையின்படி நகைக்கடன் மதிப்பை 60 முதல் 65 சதவீதமாக குறைத்துள்ளன. அவசர தேவைக்காக, மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற காரணங்களுக்காக பொதுநகையை அடமானம் வைத்து கடன் வாங்கும் போது, வட்டி சற்று அதிகம், கடன் அளவும் வரம்பு விதிக்கப்படுகிறது. இதனிடையே, ஒவ்வொரு தேர்தலின் போதும், நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வாக்குறுதியாக அளிக்கப்பட்டு வருவது, விவசாயிகளுக்கு பேருதவியாக அமைந்து வருகிறது.. அந்தவகையில் விரைவில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது.. நகை கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பு மாநில அரசுகள் நகைக்கடனை விரைவில் தள்ளுபடி செய்துவிடும் என்ற அபரிமிதமான நம்பிக்கையிலும் அடகு வைக்கிறார்கள்.. இந்த முறை தேர்தலில் தள்ளுபடி அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே உள்ளது. இதனால் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியிருக்கிறார்களாம்.. அதுமட்டுமல்ல, நகைக்கடன் தள்ளுபடியில் திமுக ஏற்கனவே வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதால், மீண்டும் வாக்குறுதியை தரும் என்ற நம்பிக்கையிலும் உள்ளனர். போதாக்குறைக்கு அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பொங்கல் தொகுப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு சர்ப்ரைஸ் தந்துள்ளது.. தமிழக அரசு சர்ப்ரைஸ்? எனவே நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பும் விரைவில் வரக்கூடும் என்று விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனராம்.. அதற்கேற்றபடி, நிலுவையிலுள்ள நகைக் கடன் எவ்வளவு உள்ளது என்பது குறித்த லிஸ்ட்டை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கும் அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. 2026 தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.. ஆனால், கடந்த 2021 தேர்தலில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. #கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி 5சவரனா? 6 சவரனா? #நகை கடன் தள்ளுபடி அரசாணை
6 likes
4 shares