Rationalist
708 views • 1 months ago
இவ்வுலகில் மனிதர்களின் இருத்தலை அச்சுறுத்தும் மூன்று முக்கிய அபாயங்களில் ஒன்றாக ‘நெகிழி மாசு’ அறிஞர்களால் வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் மனித குலத்தின் வரமும் சாபமுமாக இருக்கும் இந்தப் பொறியிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சிகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் ஜனவரி மாதம் ‘உலக கழிவற்ற மாதமாக’ சிறப்பிக்கப்படுகிறது.
‘நெகிழி மாசற்றத் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பின் மூலமாக குப்பை மேலாண்மைப் பிரச்சினையை எதிர்கொள்ளப் பணியாற்றும் பூவுலகின் நண்பர்கள் குழுவானது, இதனையொட்டி இரண்டு நிகழ்வுகளை நடத்துகிறது.
முதல் நாள் இணைய வழி நிகழ்வு நெகிழிப் பிரச்சினைக்குத் தீர்வுகளை விவாதிப்பதாகவும், இரண்டாம் நாள் அரங்க நிகழ்வு நெகிழிப் பிரச்சினைக்கு முன்வைக்கப்படும் போலியான தீர்வுகளை அம்பலப்படுத்துவதாகவும் அமைகிறது. வாய்ப்புள்ளவர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு நெகிழி மாசில்லா தமிழகத்திற்கான கனவை நனவாக்கும் பயணத்தில் எங்களோடு இணைய வேண்டுகிறோம்.
முன்பதிவு செய்ய:👇🏾
https://forms.gle/n87PnWGayvt2CTLZA
#internationalzerowastemonth #plasticfreetn #🚨கற்றது அரசியல் ✌️ #சுற்றுச்சூழல் அரசியல் #பூவுலகின் நண்பர்கள் அமைப்பு #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு தமிழருக்கே!
19 likes
9 shares