🏪மருத்துவ செய்திகள்
20 Posts • 53K views
அப்படி சர்க்கரை நோயாளிகள் தங்களின் கால்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய எட்டு ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். 1. கால்கள் மற்றும் பாதங்களில் ஏதாவது காயங்கள், வெட்டுக்கள், வீக்கம், புண்கள், கொப்புளங்கள், சருமம் சிவந்து போதல், தடிப்புகள் போன்று இருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் சரிபார்க்க வேண்டும். பாதங்களின் அடிப்பகுதியை அவர்களால் பார்க்க முடியாவிட்டால் கண்ணாடியை பயன்படுத்த வேண்டும். அல்லது குடும்ப உறுப்பினரிடம் உதவி கேட்கலாம். பக்கவிளைவுகளும் குறைவு, செலவும் குறைவு... இது நம்ம பரம்பரை சொத்து! 2. தினமும் கால்களை சிறிது அளவு உப்பு போட்ட வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். பின்பு சாதாரண தண்ணீரால் கழுவ வேண்டும். கால் விரல்களுக்கு இடையில் உள்ள ஈரத்தை மென்மையான துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நோய் தொற்றுக்கு வழி வகுக்கும். 3. சர்க்கரை நோயாளிகள் ஒருபோதும் வெறும் காலுடன் வெளியில் செல்லக்கூடாது. எப்போதும் காலணிகள் அல்லது ஷூக்கள் அணிந்துதான் செல்ல வேண்டும். கால்களுக்கு பொருத்தமான காலணிகள் அல்லது ஷூக்கள் அவசியம். ஏதாவது கூர்மையான பொருட்களோ கற்களோ இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். 4. காலணிகள் தேய ஆரம்பித்ததும் அவற்றை அணியக் கூடாது. புதிதாக வாங்கி அணிய வேண்டும். புதிய காலணிகள் கால்களுக்கு மிகவும் இறுக்கமாகவோ அல்லது லூசாகவோ இருக்கக் கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டும். மென்மையான காலணிகள் அணிய வேண்டும். அதோடு சாக்ஸ் அணிவது நல்லது. புற்றுநோய் ஆராய்ச்சியில் ஒரு புது மைல்கல்..! இனி இரத்த புற்றுநோய் வருவதை முன் கூட்டியே அறியலாம்..! 5. கால் விரல் நகங்களை சீராக வெட்டி விட வேண்டும். கூர்மையாக நீட்டிக் கொண்டிருக்கும்படி எந்த நகத்தையும் விடக் கூடாது. நக வெட்டியால் நகங்களை மென்மையாக்கிகொள்ள வேண்டும். 6. கால்களில் ஏதாவது புண்களோ காயமோ ஏற்பட்டால் தானாக சுய வைத்தியம் செய்யக் கூடாது. மருத்துவரை கலந்த ஆலோசிப்பது மிகவும் அவசியம். 7. கால்களின் உணர்வு திறன் மற்றும் இரத்த ஓட்டத்தை சரி பார்க்க வேண்டும். உட்கார்ந்து இருக்கும்போது கால்களை உயர்த்தி, கால் விரல்களை சில நிமிடங்கள் அசைக்க வேண்டும். 8. தினமும் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற பாதங்களுக்கு ஏற்ற செயல்களைச் செய்ய வேண்டும். கால்களை எப்போதும் ஆரோக்கியமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் #🏪மருத்துவ செய்திகள் #உங்கள் ஆரோக்கியம்....இதோ #💊சர்க்கரை நோய் #ஆரோகிய குறிப்புகள்🚹 #நீரிழிவு நோய் குறைய
8 likes
6 shares
பலர் பருத்தி மொட்டு, தீப்பெட்டி அல்லது ஊசியைச் செருகுவதன் மூலம் தண்ணீரை அகற்ற முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவ்வாறு செய்வது ஆபத்தானது. தண்ணீரை தவறாக அகற்றுவது காதில் காயம், தொற்று மற்றும் செவிப்பறைக்கு சேதம் விளைவிக்கும் என்று ENT நிபுணர்கள் கூறுகின்றனர். காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் (மேஜர்) ஹிமான்ஷு பயத் சோஷியல் மீடியாவில் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார், அதில் உங்கள் காதில் தண்ணீர் புகுந்துவிட்டால், பீதி அடையத் தேவையில்லை என்று விளக்கியுள்ளாஎ. சில எளிய மற்றும் பாதுகாப்பான முறைகள் தண்ணீரை அகற்ற உதவும் என்றும் சில குறிப்புகளை அளித்துள்ளார். மருத்துவர் பரிந்துரைத்த மூன்று ஹேக்குகள் இங்கே: ஹேக் 1: நேராக நில்லுங்கள். தண்ணீர் நிரம்பிய காதை ஒரு பக்கமாக தலையை சாய்த்துக்கொள்ளுங்கள். காதை மெதுவாக இழுக்கவும். பின்பு காதை சாய்த்தவாறு குதிக்கவும்.. மீண்டும் காதை சாய்து சிறிது நேரம் அப்படியே இருக்கவும் இது தண்ணீரை வெளிப்புறமாக நகர்த்தி, ஈர்ப்பு விசை காரணமாக வெளியேற உதவும். இந்த முறை உடனடி நிவாரணம் அளிக்கும் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது. ஹேக் 2: உங்கள் உள்ளங்கையை வைத்து காதை அழுத்தி அழுத்தி மூடவும். இதில் காதுக்கு ஒரு அழுத்தம் கிடைக்கும். இதனால் ஒரு உறிஞ்சும் விளைவை உருவாக்கி, சிக்கியிருக்கும் திரவத்தை வெளியே இழுக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். திரவம் காற்றில் சிக்கியிருக்கும் போது இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும். ஹேக் 3 - இந்த முறையை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். - ஒரு ஹேர் ட்ரையரை எடுத்து குறைந்த அமைப்பில் இயக்கவும். - ட்ரையரை காதில் இருந்து சற்று தொலைவில் வைக்கவும். - சூடான காற்று காதில் பட வேண்டும். - அதை 5-6 முறை ஆன் மற்றும் ஆஃப் செய்யவும். இது மெதுவாக உள்ளே இருக்கும் தண்ணீரை ஆவியாகி உலர்த்தும், அடைபட்ட உணர்வை நீக்கும். மருத்துவர்களின் கூற்றுப்படி, ட்ரையரை அதிக வெப்பநிலையில் பயன்படுத்தவோ அல்லது காதுக்கு மிக அருகில் வைத்திருக்கவோ கூடாது. நீங்கள் எப்போது உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்? இந்த முறைகளுக்குப் பிறகும் பிரச்சனை தொடர்ந்தால் சுய சிகிச்சைகள் செய்யக்கூடாது என ENT மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்கவும்: -கடுமையான காதில் வலி. -சீழ் அல்லது இரத்தப்போக்கு. -தலைச்சுற்றல், குழப்பம் அல்லது கேட்கும் திறன் இழப்பு. -முன்பு காது அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். -காதில் தீப்பெட்டி, ஊசி அல்லது பஞ்சு மொட்டை வைப்பது தீங்கு விளைவிக்கும். நினைவில் கொள்ளுங்கள்: காதில் தண்ணீர் வருவது பொதுவானது, ஆனால் சரியான முறையை அறிந்து கொள்வது அவசியம். இந்த மூன்று எளிய உதவிக்குறிப்புகள் உடனடி நிவாரணத்தை அளிக்கும், ஆனால் பிரச்சனை தொடர்ந்தால், ஒரு நிபுணரை அணுகுவது பாதுகாப்பான வழி. #உங்கள் ஆரோக்கியம்....இதோ #🏪மருத்துவ செய்திகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #📢ஜனவரி 20 முக்கிய தகவல் 🫠
11 likes
13 shares