theiveega kathay.

5 Posts • 1K views
saravanan.
610 views 11 days ago
#theiveega kathay. யானைகளும் குதிரைகளும் பூட்டப்பட்ட தேரில் எப்படி வந்தார்? - திருக்குடந்தை உ.வே.வெங்கடேஷ் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளில் சத்துவ குணம் யாருக்கு உள்ளது என அறிந்துகொள்ள விரும்பிய பிருகு மகரிஷி, ஒவ்வொரு தெய்வத்தையும் பரிசோதிக்கச் சென்றார். திருமாலைப் பரிசோதிக்கச் சென்றபோது, திருமாலின் திருமார்பிலேயே உதைத்தார் தன் மார்பில் பிருகு உதைத்த போதும், திருமால் பிருகு மேல் கோபம் கொள்ளாமல், அவரது பாதங்களை வருடி விட்டதால் திருமாலுக்கே சத்துவ குணமுண்டு எனத் தெளிந்தார் பிருகு மகரிஷி ஆனால் அத்திருமார்பில் வீற்றிருக்கும் மகாலட்சுமி, “ஸ்வாமி! உங்கள் மனைவியின் இருப்பிடத்தை உதைப்பவர் மேல் உங்களுக்குக் கோபம் வரவில்லை. இதிலிருந்தே என்மேல் உங்களுக்கு அன்பு இல்லை என்று தெரிகிறது. இனி இந்தத் திருமார்பில் இருக்க நான் விரும்பவில்லை!” எனச் சொல்லித் திருமாலின் திருமார்பை விட்டுப் பிரிந்து கொல்லாபுரம் சென்றாள். பின் திருமால் திருமலையில் ஸ்ரீநிவாசனாகத் திருவவதாரம் செய்து மீண்டும் திருமகளை அடைந்தார். ஸ்ரீநிவாச கல்யாணம் நிறைவடைந்த பின், பிருகு மகரிஷி, “திருமகள் உறையும் திருமார்பை உதைத்து விட்டோமே! அது பெரிய குற்றமாயிற்றே! திருமகளிடம் நாம் இழைத்த பிழைக்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்திட வேண்டும்!” எனத் தீர்மானித்தார். அதனால் ஹேமரிஷி என்ற பெயருடன் கும்பகோணத்தில் பிருகு மகரிஷி அவதரித்தார். தான் செய்த தவறை மன்னித்தருளும்படி மகாலட்சுமியிடம் வேண்டித் தவம் புரிந்தார். மேலும் தன்னை ஏற்று அங்கீகரித்ததற்கு அடையாளமாக மகாலட்சுமியே தனக்கு மகளாக வந்து அவதரிக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தார். அவரது தவத்துக்கும் பிரார்த்தனைக்கும் திருவுள்ளம் உகந்த மகாலட்சுமி, கும்பகோணத்திலுள்ள பொற்றாமரைக் குளத்தில் ஒரு தங்கத் தாமரையின் மேல் அவதரித்தாள். வடமொழியில் கோமளம் என்றால் தங்கம் என்று பொருள். தங்கத் தாமரையில் அவதரித்தபடியால் கோமளவல்லி என்று அவளுக்குப் பெயர் சூட்டினார் ஹேமரிஷி. மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியைத் திருவரங்கநாதனுக்கே திருக்கல்யாணம் செய்து வைக்க விழைந்த ஹேமரிஷி திருமாலைக் குறித்துத் தவம்புரிந்தார். கோமளவல்லியும் இணைந்து தவம் புரிந்தாள். திருவரங்கத்திலுள்ள பிரணவாகார விமானத்திலிருந்தே ஒரு தேரை உருவாக்கிய அரங்கநாதன், யானைகளும் குதிரைகளும் பூட்டப்பட்ட அந்தத் தேரில் கும்பகோணத்துக்கு வந்து கோமளவல்லியை மணம்புரிந்தான். இன்றும் சார்ங்கபாணி என்ற திருநாமத்துடன் கோமளவல்லி மணவாளனாகக் கும்பகோணத்தில் குதிரைகளும் யானைகளும் பூட்டிய தேர் வடிவிலுள்ள கர்ப்பக்கிரகத்திலே எழுந்தருளியுள்ளான். சார்ங்கபாணிப் பெருமாள் - கோமளவல்லித் தாயாரின் திருக்கல்யாணத்தைக் கண்டு மன நிறைவடைந்த ஹேமரிஷி, பத்ரிநாத்தை அடைந்தார். அங்கே வியாசரைச் சந்தித்துத் திருமால் தனக்குச் செய்த அனுக்கிரகத்தை விவரித்து மகிழ்ந்தார். மேலும், “வேத வியாசரே, எனக்கொரு சந்தேகம். அதை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்!” என வேண்டினார். “என்ன சந்தேகம்?” என்று கேட்டார் வியாசர். “திருமால் திருவரங்கத்திலிருந்து குடந்தைக்கு வருகையில், யானைகளும் குதிரைகளும் பூட்டப்பட்ட தேரில் வந்தார். அதெப்படி ஒரே தேரில் மெதுவாக நடக்கும் யானையையும் விரைந்து ஓடும் குதிரையையும் பூட்ட முடியும்? அவ்வாறு பூட்டினால் தேர் சீராக ஓடுமா?” என்று கேட்டார் பிருகு மகரிஷி. அதற்கு வியாசர், “வேதத்தில் சம்ஹிதை, சாகை என இரு பாகங்கள் உண்டு. சம்ஹிதை பாகத்தை ஓதினால் அது குதிரையின் ஓட்டத்தால் உண்டாகும் ஒலி போலத் தோன்றும். சாகை பாகத்தை ஓதினால் அது யானையின் நடையோசையைப் போலத் தோன்றும். இந்த ஒலிகளின் வடிவிலுள்ள வேதத்தையே திருமால் தனக்கு வாகனமாகக் கொண்டிருப்பதை உருவகப்படுத்திக் காட்டவே குதிரை, யானை இரண்டும் பூட்டப்பட்ட தேரோடு குடந்தைக்கு வந்து உமக்கு அருள்புரிந்தார்!” என விளக்கினார். கருடனும் வேத ஸ்வரூபியாகவே விளங்குகிறார். காயத்ரி மந்திரம் அவரது கண்கள், த்ரிவ்ருத் அவரது தலை, யஜுர்வேதம் அவரது திருநாமம், வேதசந்தங்கள் அவரது அங்கங்கள், திஷ்ண்யம் எனும் வேதப்பகுதி அவரது நகங்கள், வாமதேவ்யம் அவரது உடல், ஸ்தோமம் அவரது ஆத்மா, பிருஹத், ரதந்தரம் ஆகியவை அவரது இறக்கைகள், யஜ்ஞாயஜ்ஞம் அவரது வால். வேதமே தனக்கு வாகனமாக உள்ளதை உணர்த்தவே, வேத ஸ்வரூபியான கருடன் மீதேறி, கருடவாகனத்தில் திருமால் காட்சியளிக்கிறார். ‘வி’ என்றால் வடமொழியில் பறவை என்று பொருள். வேதஸ்வரூபியான கருடன் என்னும் பறவையைத் தனக்கு வாகனமாய்க் கொண்டபடியால் திருமால் ‘வி-க்ரம:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 79-வது திருநாமம்.“விக்ரமாய நமஹ” என்று தினமும் சொல்லி வருபவர்களுடைய அனைத்துப் பயணங்களிலும் திருமால் வழித்துணையாக உடன்வந்துக் காத்தருள்வார். ஆயிரம் நாமங்களால் அனந்தனைப் பணிவோம் 🟨🟨 💐 🟥🟥 *சர்வம்* *சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨 🙏 🟥🟥.
13 likes
13 shares
saravanan.
674 views 5 months ago
#theiveega kathay. பசியைப் போக்கிய சூரிய பகவான்.... அட்சயம் என்றால் வளருதல். முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் அளிக்கும் போது கூறப்படும் நல்ல வார்த்தை என்னவென்றால், நீ தொட்டதெல்லாம் அட்சயப் பாத்திரம் போல் வெற்றி பெறவேண்டும் என்பர். அட்சய பாத்திரம் அல்லது அமுதசுரபி எனப்படும் இந்த பாத்திரத்தில் உணவு இருந்து கொண்டே இருக்கும். இது நாம் அறிந்ததே. மகாபாரதத்தின் படி அட்சய பாத்திரம் தர்மனுக்கு சூரிய பகவான் தந்ததாகும். இந்தப் பாத்திரத்தில் உணவு இட்டால் எடுக்க எடுக்க கொடுக்கும் தன்மை உடையது. இந்த அட்சயப் பாத்திரம் முதன் முதலில் யாரிடம் இருந்து யாருக்கு வழங்கப்பட்டது என்பதைப் பார்ப்போம். இந்த அட்சயப் பாத்திரத்திற்கு பல கதைகள் உண்டு. அதில் முக்கியமானது பாண்டவர்களின் கதை. மகாபாரதத்தில் பிரபலமானது சூதாட்டம் தான். பாண்டவர்கள் ஏமாந்து நின்ற தருணம் அது. இப்படி சூதாட்டத்தில் நாட்டை இழந்துவிட்ட பாண்டவர்கள் திரௌபதியுடன் வனவாசத்திற்கு புறப்பட்டனர். பாண்டவர்களுடன் சில அந்தணர்களும், அவர்களது பத்தினிகளும் சென்றனர். அன்று இரவு கங்கை கரையில் இருந்த ஒரு ஆலமரத்தடியில் அனைவரும் தங்கினர். அப்போது தர்மர் மட்டும் மிகுந்த வேதனையுடன் இருந்தார். காரணம் அவர்களை நம்பி இத்தனை நபர்கள் இருக்க, அனைவரும் பட்டினியுடன் இருக்கின்றனரே என்ற கவலை அவருக்கு. தர்மர் கூறினார், அந்தணர்களே! செல்வத்தை இழந்த நாங்கள், காட்டில் கிடைக்கும் காய்கனி வகைகளை தான் சாப்பிட்டு வாழ போகிறோம். ஆனால் விலங்குகளும் அரக்கர்களும் வாழும் வனப்பகுதியில் உங்களால் எப்படி வாழ முடியும்? உங்களால் இங்கு வாழவே முடியாது. தயவு செய்து நாட்டுக்கு திரும்பி விடுங்கள், என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார். அதற்கு அந்தணர்கள், தர்மரே! எங்களுக்காக நீங்கள் மனம் வருந்த வேண்டாம். உங்களுக்கு பாரமாக நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம். தங்களின் நன்மைக்காக ஜெபம் மற்றும் தவம் செய்திடுவோம். எங்களுக்கு தேவையான உணவை நாங்களே தேடிக் கொள்வோம். மனதிற்கு இனிமை தரும் நல்ல விஷயங்களையும் கதைகளையும் பேசிக்கொண்டு பொழுதை நல்ல முறையில் உங்களுடன் கழிப்போம். அந்தணர்கள் இவ்வாறு கூறியவுடன், அவர்களின் அன்பை கண்டு மனம் நெகிழ்ந்தார் தருமர். நாளாக நாளாக அவர்கள் மிகுந்த வறுமையில் இருந்தனர். சரியான உணவு இல்லாமல் தவித்து வந்தனர். இவர்களின் வறுமையை கண்ட கிருஷ்ணர், அவர்களது பசியை போக்க எண்ணினார். பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் அட்சயப் பாத்திரத்தின் மகிமையையும், அது பெறுவதற்கு உண்டான வழிமுறைகளையும் போதித்தார். இராமாயணத்தில் அகத்திய முனிவர், சூரிய உபாசனை செய்யும் ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை ஸ்ரீராமனுக்கு உபதேசிப்பார். அதுபோல் சூரிய பகவானை நினைத்து ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை சொல்லுங்கள் என்று கிருஷ்ணர் பஞ்சபாண்டவர்களிடம் கூறினார். பஞ்சபாண்டவர்களும் பகவான் கிருஷ்ணரின் உபதேசத்தின் படி சூரிய பகவானை நினைத்து ஆதித்ய இருதயம் மந்திரத்தை உச்சரித்து கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தை மெச்சிய சூரிய பகவான் அவர்கள் முன்பு தோன்றினார். அட்சயப் பாத்திரத்தை கொடுத்தார். அட்சய பாத்திரத்தின் மகிமையையும் சொன்னார். இந்த பாத்திரத்தில் அன்னம், வேறு உணவு பதார்த்தங்களை நிரப்பினால் அப்பாத்திரம் அள்ள அள்ளக் குறையாமல் சுரந்து கொண்டே இருக்கும். உணவருந்திய பின்னர், எஞ்சியதை சூர்யார்ப்பணம் செய்து அட்சய பாத்திரத்தை கழுவி வைத்து விட வேண்டும். மறுநாள் சூரிய உதயத்துக்கு பிறகு தான் அது மீண்டும் உணவு அளிக்கும் என்று அதன் பலனை சொல்லி மறைந்தார் சூரிய பகவான். இதையடுத்து, தர்மர் திரௌபதியிடம் அதைக் கொடுத்தார். அதன் மூலம் அவள் அனைவருக்கும் உணவு பரிமாறினாள். அட்சய பாத்திரம் அள்ள அள்ள குறையாதது போல் உங்கள் வாழ்க்கையிலும் செல்வங்களும் வளமும் சேரட்டும். இந்த ஆசீர்வாதத்தை எல்லோருக்கும் கொடுங்கள். உங்கள் வாழ்வும் மகிழ்ச்சி என்றும் மலர்ச்சியோடு இருக்கட்டும். சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻
10 likes
10 shares
saravanan.
1K views 6 months ago
#theiveega sinthanay. சப்தமி விரத முறை (விஸ்வகர்ம சப்தஹ விரதம்) ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் ரத சப்தமி விரதம், நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களாலும் செய்யப்படும் சூரிய வழிபாடாக அறியப்படுகிறது. இருப்பினும், ஏழு நாள் விரத முறையில் சில வேத மக்கள் மட்டுமே இந்த விரதத்தைப் பின்பற்றுகிறார்கள். ரத சப்தமி என்று அழைக்கப்படும் திருவிழா, பொதுமக்களுக்கு சூரியனின் திருவிழா என்று அறியப்படுகிறது. #ரத_சப்தமி என்று அழைக்கப்படும் திருவிழா, வெறும் ஒரு நாள் திருவிழா அல்ல, ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு கடவுள் வழிபடும் #ஏழுநாள்_திருவிழா. இது மாசி மாதத்தின் பிரகாசமான பதினைந்து நாட்களில் ஏழாவது நாளில் ரத சப்தமி செய்வதன் மூலம் சூரிய வழிபாட்டுடன் தொடங்கி, மாசி மாதத்தின் பிரகாசமான பதினைந்து நாட்களில் த்ரயோதசி வரை தொடர்கிறது, ஒரு நேரத்தில் ஒரு தெய்வத்தை வணங்கி, கடைசி நாளான த்ரயோதசியில், உயர்ந்த கடவுள், பிரஜாபதி, கொடையாளர் மற்றும் படைப்பாளரான விராட் விஸ்வகர்மாவின் வழிபாடு, உண்ணாவிரதம் மற்றும் தியாகத்துடன் முடிவடைகிறது. மங்களகரமான மாசி மாதத்தில் வரும் இந்தப் பண்டிகை, அனைத்து இந்துக்களுக்கும், குறிப்பாக ஏழு நாட்கள் நீடிக்கும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். விஸ்வகர்ம சம்ஹிதையில், ஐந்து பிரம்மாக்கள் மற்றும் ஐந்து முனிவர்களுடன் கூடிய, முழுமுதற் கடவுளான விராட் விஸ்வகர்மாவை வழிபட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விழாவைக் கொண்டாடும் சடங்குகள் பின்வருமாறு: ஏழாம் நாளில், சூரியனை ஒரு வேலை அமைத்து வழிபட வேண்டும் (விஸ்வஞான பிரம்மம்), எட்டாம் நாளில், இந்திரனை அதன் அருகில் மற்றொரு வேலை அமைத்து வழிபட வேண்டும் (ஷில்பி பிரம்மம்), ஒன்பதாம் நாளில், பிரம்மனை மற்றொரு கலசத்தில் அழைத்து வழிபட வேண்டும் (த்வஷ்ட பிரம்மம்), பத்தாம் நாளில், விஷ்ணுவை ஒரு வேலை அமைத்து வழிபட வேண்டும் (மாயா பிரம்மம்), ஐந்தாம் நாளில், சிவனை ஐந்தாவது கலசத்தை அமைத்து வழிபட வேண்டும் (மனுபிரம்மம்), பன்னிரண்டாம் நாளில், பஞ்ச பிரம்மங்களுடன் வெளிப்படாத கடவுள்களும், அதாவது ஐந்து ரிஷிகள், அதாவது #சனக_பிரம்மர்ஷி, #சனாதன_பிரம்மர்ஷி, #அஹபூவன_பிரம்மர்ஷி, #பிரத்ன_பிரம்மர்ஷி மற்றும் #சுபர்ண_பிரம்மர்ஷி ஆகியோரும் கலசத்தில் அல்லது தனித்தனி தாம்பூலங்களில் வழிபடப்படுகிறார்கள். அதை வழிபட வேண்டும். கடைசி நாளான திரயோதசியில், பஞ்ச பிரம்மாக்கள், ஐந்து ரிஷிகளுடன் சேர்ந்து, படைப்பாளரான விராட விஸ்வகர்மாவின் கனவில் வழிபட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விஸ்வகர்ம சம்ஹிதையின்படி, கடைசி நாளான திரயோதசியில், சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன் மற்றும் சூரியன் ஆகிய அனைவரும், உயர்ந்த கடவுள், உயர்ந்த கடவுள் ஆகிய விராட விஸ்வகர்மாவின் பாதங்களைக் கழுவி வணங்குகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதங்களின் போதனைகளின்படி, நாம் வணங்கும் உயர்ந்த கடவுள், விஸ்வகர்மா, அனைத்து கடவுள்களுக்கும் தந்தை, யக்ஷர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்களின் தந்தை என்பதால், இந்தப் பண்டிகை பொதுவில் கொண்டாடப்படுகிறது. இந்த வழியில், ஐந்து வேதங்களும் படைப்பாளர், பிரஜாபதி மற்றும் உயர்ந்த கடவுள் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தந்தை என்று கூறுகின்றன. இறுதியில் அனைத்து செல்வங்களையும் இரட்சிப்பையும் அளிக்கும் ஒரே கடவுள் பகவான் விஸ்வகர்மா பரமாத்மா. ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளும் முக்தியை அடைவதே. எனவே, இந்தப் பண்டிகையை ஒரு பொது விழாவாகவும் கொண்டாட வேண்டும். பக்தியுடனும் நம்பிக்கையுடனும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுபவர்கள் எட்டு செல்வங்களையும் அடைந்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், இந்த உலகில் மகிழ்ச்சியையும் மறு உலகில் முக்தியையும் அடைவார்கள்- இதைத்தான் பிரஜாபதி த்வஷ்டவிஷ்வகர்மா தனது சீடர்களான ரிபுவிடம் கூறியுள்ளார். ஆனால் நமது அறியாமையால், நாம் நமது பண்டிகைகளை மறந்துவிட்டோம். இது ஒரு வேத விழா. இன்று, இந்தப் பண்டிகை மறைந்து வருகிறது. சில மாநிலங்களில், விஸ்வகர்மா வம்சாவளியைச் சேர்ந்த பிராமணர்கள் மட்டுமே இதைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் சனாதன இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் இந்தப் பண்டிகையின் பலன்களைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன். இது இப்போது வெளிச்சத்திற்கு வர வேண்டும், இது சிறந்த அறிஞர்கள் மற்றும் சுவாமிஜிகள் மூலம் மக்களுக்குச் சென்றடைய வேண்டும், ஆச்சாரியர்கள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இது நாட்காட்டியிலும் சேர்க்கப்பட வேண்டும், அதன் தகவல்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், அப்போதுதான் அதன் முக்கியத்துவம் புரியும். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும், அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும். 🌹🌹🌹
27 likes
18 shares