D Muthu Prakash, Kanchipuram 💐
718 views
5 days ago
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 31.03.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== ஏழு சமுத்திரத்திலே மூன்று சமுத்திரம் நீருள்வாங்கிப் போய்விடும். . விளக்கம் ========= மனித உடல் அமைந்துள்ள சக்தி மையங்கள் ஏழு, இவை ஆழத்தாலும் அகலத்தாலும் மட்டுமல்ல சுபாவத்தாலும் கடலுக்கு ஈடானது. ஆகவே, அவற்றின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்து ஒழுங்காக இயங்க வைத்து, நன்மைக்குப் பயன்படுத்தி நலன் பெறுங்கள் அதற்கு முடியாவிட்டால் இந்த சக்தி மையங்கள் ஏழிலும் மூன்றின் மூர்க்கச் செயல்களையாவது நீங்கள் வசப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். . உள்ளுறை மறைபொருள் விளக்கம் ================================= மனிதன் தம்மைத் தாமே நல்வழியல் இயக்கி ஈடேறுவதற்காக பகுத்தறிவையும் கொடுத்து, அதற்குரிய ஆதாரக் கருவிகளாக ஏழு சக்தி மையங்களையும் மனித உடலில் இறைவன் அமைத்துள்ளார். அவை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆஞ்ஞை, சகஜ்ராரம் என்பனவாகும். இவற்றில் சகஸ்ராரத்தைத் தளம் என்றும் மற்ற ஆறையும் ஆதாரம் என்றும் ஆதாரச் சக்கரம் என்றும் சொல்வர். . இந்த ஆறு ஆதாரங்களுக்கும் அடிப்படையாகவும் மூல காரணமாகவும் இருப்பது மூலாதாரம். அது மலத் துவாரத்துக்கும் பிறப்பு உறுப்புக்கும் இடைப்பட்ட இடத்தில் முதுகுத் தண்டின் கீழ் முக்கோண வடிவில் கீழ்நோக்கி அமைந்துள்ளது. . அங்கே தான் பாம்பைப் போன்ற வடிவத்தில் மூன்றரை அங்குல வட்டத்தில் சுருண்டு உறங்கிக்கொண்டிருப்பதைப் போல் குண்டலினி சக்தி அமைந்துள்ளது. இது மூலாதாரத்தின் முக்கியமான இருபத்து நான்கு நாடிகளின் கூட்டமைப்பாகும். இதை மகா சக்தி பொருந்திய மர்மஸ்தானம் என்று வர்மசாஸ்திரமும், கோணவட்டம் என்று உடற்கூறு சாஸ்திரமும் சொல்கிறது. . ஆகவேதான் சப்தமாதர்களின் தவத்திற்கு முக்தி கொடுக்க வந்த இறைவனைப் பார்த்து ”கோண வட்டத்துள்ளே குடியிருக்குங் கோனே - அகிலம் என்று சப்த மாதர்கள் இறைவனை வரவேற்று வணங்கி மகிழ்ந்தனர். . இத்தனை பெருமைக்குரிய குண்டலினி சக்தியை உச்சிமுகட்டில் உள்ள சகஸ்ரார தளத்தைச் சென்றடையச் செய்ய வேண்டும். அதற்கு தெளிந்த ஞானமும், பக்தி வைராக்கியமும், மனத்தை ஒருமுகப்படுத்தும் திறனும். சுயநலம் கருதாத சேவையும் ஒருங்கே அமைந்திருக்க வேண்டும். அத்தகையோருக்கு இந்த யோகசாதனை எளிதாக அனுகூலமாகும் என்பது ஆன்றோர்களின் தெளிவு. . இத்தகு யோக சாதனையால் முதுகுத் தண்டினுள்ளிருக்கும் சூட்சுமத் துவாரத்தின் வழியாக குண்டலினி சக்தி நகர்ந்து மேலெழுந்து சகஸ்ரார தளத்தைச் சென்றடையும். அப்படி சகஸ்ரார தளத்தை நோக்கிக் குண்டலினி சக்தி நகர்ந்து செல்லும்போது, முதுகுத் தண்டிற்குள் ஏதோ ஒரு நுட்பமான அணு ஊர்ந்து செல்வதைப் போன்ற உணர்ச்சியையும், ஓம் என்ற அதிநுட்பமான ஓர் ஒலி உடலினுள் உண்டாவதையும், அதனால் அக உறுப்புகளில் சிற்சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதையும் அனுபவிக்க முடியும். . குண்டலினி சக்தி சகஸ்ரார தளத்தில் ஏறிவிட்டால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். வேதம், உபநிடதம், இதிகாசங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள் போன்றவை யாவும் படித்தவுடன் பசைபோல் மனதில் ஒட்டிக் கொள்ளும். அதன் காரணமாக அஷ்டமா சித்திகள் எனப்படும் எட்டு வகையான நிலைப்பாடுகளும் சித்திக்கும். இது இறைநிலை அடைந்தோருக்குக் கிடைக்கும் பரிசு. . அவை யாதெனில் சூட்சம சரீரமாய் அணுவில் அணுவாய் நுழைவதற்கான அணிமா, விஸ்வரூபமாய்த் தோன்றுவதற்கான மகிமா, அதிக எடையாய் இருப்பதற்கான கரிமா, எடையின்றி லேசாவதற்கான லகிமா, சூரிய சந்திரனை வசப்படுத்துவதற்கான பிராப்தி, பிறரின் உடலில் நுழைந்து நினைத்தவரிடம் தோன்றுவதற்கான பிரகாமியம், பிரபஞ்சத் தொழில் ஐந்தையும் நடத்துவதற்கான ஈசத்துவம், அனைவரையும் தன்வயப்படுத்துவதற்கான வசித்துவம் ஆகியவையாகும். . மொத்தத்தில் உடலில் உள்ள இந்த ஏழு சக்தி மையங்களும் பூலோகத்தைச் சூழ்ந்திருக்கும் ஏழு கடல்களைப் போன்றதாகும். கடல் போன்ற அந்த ஏழு சக்தி மையங்களிலும் மூலாதாரம், கூவாதிஷ்டானம், மணிபூரகம் ஆகிய மூன்றும் இயல்பாக இயங்காமல் முடங்கினால் நன்மை செய்யும் அளவிற்குத் தீமையை இரட்டிப்பாகச் செய்யத் தூண்டும் இயல்புடையதாகும். அதாவது ஆணவம், மாயை, காமியம் ஆகிய முக்குற்றங்களும் இம்மூன்று ஆதாரங்களின் முடக்கத்தினால் தீவிரம் அடைவதாகும். ஆகவே, அம்மூன்று குற்றங்களுக்கும் மனிதனை ஆட்படுத்திவிடும். அதிலிருந்து விடுபடுவதற்காகவாவது அம்மூன்றின் முடக்கத்தால் மூர்க்கம் உண்டாகிக் கெடுதல் ஏற்பட்டுவிடாதபடி அம்மூன்று ஆதாரக் கடல்களையும் வசப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்பதை இந்த ஒரு திருவாசக வரியின் மூலம் மறைபொருளாக உத்தரவிடப்பட்டுள்ளது. . அகிலம் ======== ஒரு சேர்வை விபூதி ஆறு சக்கரத்திற்கு விற்கவும் . விளக்கம் ========= முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடிசாம்பல் ஆவர் என்பது ஆன்றோர் வாக்கு. மானிட பிறப்பு மகத்தான பிறப்புதான் என்றாலும், இறுதியில் அநத உடல் ஒரு சேர்வை, அதாவது இன்றைய எடையில் இருநூறு கிராம் சாம்பலே. எரித்தாலும் புதைத்தாலும் இதுவே இறுதி நிலை. எனவே, நீங்கள் வாழும் காலத்தில் செம்மைமிகு சேவை மனத்தோடு வாழுங்கள். அல்லது நலம் பெறுதல் வேண்டும் என்ற நாட்டத்தோடு பிராணயாமப் பயிற்சியால் உங்கள் உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்சை ஆகிய ஆறு ஆதாரச் சக்கரங்களிடமும் உங்கள் உடம்பை விலைப்படுத்திக் கொள்ளுங்கள். . உள்ளுறை மறைபொருள் விளக்கம் --------------------------------- இங்கே சக்கரம், வராகன் என்று வருவதை நாணயம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்தக் காரணம் எனப்படும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றில மனமே முதலிடமாகும். கண் மூக்கு, நாக்கு, செவி, மேனி ஆகிய பொறிகளைத் தூண்டி செயல்படுத்துவது மனதின் செயலே ஆகும். அது காற்றின் அம்சம் உடையது. எனவேதான், மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம், மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. மனத்தகத்து அழுக்கு அறாத மௌன ஞான யோகிகள் வனத்தகத்தில் இருப்பினும் மனத்தகத்து அழுக்கு அறாது என்றனர் ஆன்றோர். . செம்மை மிகு சேவை மனத்தோடு மக்களுக்குத் தொண்டு செய்வதையே தன் உயிர் மூச்சாகப் பாவித்துப் பணியாற்றும் பண்பாளர்களுக்கு, அவர்களின் புனிதமான மன ஒருமையின் காரணத்தினால் ஆறு ஆதாரங்களும் தாமாகவே சுத்த சித்தியாகிவிடும். எனவே, குண்டலினி சக்தி தாமாகவே சுத்த சித்தியாகிவிடும். எனவே, குண்டலினி சக்தி தாமாகவே சகஸ்ரார தளத்தைச் சென்றடைந்துவிடும். . . அகிலம் ======== ஒரு லிங்கம் மூன்று வராகனுக்கு விற்கவும், . விளக்கம் ========= ஆறு ஆதாரச் சக்கரங்களில் ஆங்ஞை இருக்கும் இடமே புருவ மத்தியாகும். அங்கேதான் மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண் உள்ளது. அதுவே முகத்து லிங்கம். அந்த ஒரு லிங்கத்தை, சந்திரகலை, சூரியகலை, சுழுமுனை ஆகிய மூன்று சுவாச நிலைகளிடமும் ஒட்டு உறவின்றி ஒப்படைத்துவிடுங்கள். . ஞானம் இல்லாதவர்கள் மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்ய முடியாது. ஆகவே ஞானம், அதாவது ஆழ்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ளுங்கள். . உள்ளுறை மறைபொருள் விளக்கம் -------------------------------------------------------- ஆரோக்கியமான மனிதனுக்கு ஒரு நாளைக்கு 21600 முறையும், ஒரு மணி நேரத்திற்கு 900 முறையும், ஒரு நிமிடத்திற்கு 15 முறையும், நான்கு நொடிக்கு 1 முறையும் மூச்சு நாசியின் வழியே வந்து செல்கிறது. இதயத்தின் வழியே ஊடுருவி இயங்கும் இந்த மூச்சு 16 அங்குல நீட்டளவு கொண்டது. அதில் 4 அங்குலம் பிராணசக்தி சிரசிலேயே தங்கிவிடுவதால் மீதமுள்ள 12 அங்குல பிராணசக்தி 6 ஆதாரங்களையும் வணங்கிவிட்டு நாசியின் இடது அல்லது வலது பக்கமாக வெளிவருகிறது. அதில் நான்கு அங்குல நீட்டளவு சக்தி வெளிக் காற்றுடன் கலந்துவிடுகிறது. மீதமுள்ள 8 அங்குல நீட்டளவு ஜீவசக்தி மீண்டும் உட்புகுகிறது. இவ்வாறு வெளிவரும் ஒவ்வொரு மூச்சிற்கும் நான்கு அங்குல நீட்டளவு சக்தி விரயமாகிறது. . இப்படி வெளிவரும் மூச்சு மனிதன் நடக்கும்போது 24 அங்குல நீட்டளவாகவும், ஓடும்போது 42 அங்குல நீட்டளவாகவும், மூச்சு வெளியெ வந்து ஜீவ சக்தி அதிக அளவில் விரயமாகிறது. அதனால் நோய்கள், கோபதாபங்கள், 8 வகையான வஞ்சகக் குணங்கள், நிம்மதியின்மை போன்ற அவலங்கள் உண்டாகும். எனவே, நாசியிலிருந்து வெளிவரும் மூச்சு வேகமாகவோ, மூன்று கலைகளும் தாறுமாறாகவோ வெளிவரக்கூடாது. ஒரே சீராக, நேராக, மெல்ல வெளிவர வேண்டும். ஆகவேதான் ஏதேனும் ஒரு மந்திர அட்சரத்தை நினைத்து மூச்சை வெளியே விடவேண்டும் என்று சித்தர்கள் சொல்லிவைத்தனர். . வெளியே வரும் மூச்சின் 12 அங்குல நீட்டளவில் 1 அங்குலம் குறைந்து வெளியே வந்தால் ஆசைகள் குறையும். 2 அங்குலம் குறைந்தால் மனம் திடமாகும். 3 அங்குலம் குறைந்தால் தெளிந்த புத்தியினால் விவேகம் உண்டாகும். 4 அங்குலம் குறைந்தால் தூரத்தில் நடப்பதைக் கூட மனக் கண்ணால் காணலாம். 5 அங்குலம் குறைந்தால் பஞ்ச பூதங்களும் அவருக்கு இணங்கும். 6 அங்குலம் குறைந்தால் ஆகாய ஒளியை அகத்திலே காணலாம். 7 அங்குலம் குறைந்தால் உடம்பு காயசித்தி பெறும். எப்போது எட்டு அங்குல நீட்டளவு குறைந்து நான்கு அங்குல நீட்டளவாக மூச்சு வெளிவருகிறதோ அப்போது எட்டு வகையான சித்திகளை அடைய முடியும். . 9 அங்குலம் குறைந்தால் 9 கண்டங்களும் சென்று வரலாம். 10 அங்குலம் குறைந்தால் நினைத்த உடலில் தோன்றலாம். 11 அங்குலம் குறைந்தால் ஆத்துமாவின் நிலையை அறியலாம். அவனே யோகியாகிறான். யோகியால் மட்டுமே ஆத்மாவைத் தரிசிக்க முடியும். . சுவாச நீட்டளவு 12 அங்குலமும் குறைந்து நாசிக்குள்ளேயே மூச்சு அடங்கும்போது, அன்ன ஆகாரமே தேவையில்லாமல் ஆரோக்கியமான பல சக்திகளுடன் நீடுழி வாழலாம் என்று சாங்கிய யோக நூல் விரிவாகச் சொல்கிறது. . இத்தகு சுவாச நிலையை, தவம் செய்யப் பயன்படுத்துவதற்கான வழிமுறை பற்றி அய்யா வைகுண்டப் பரம்பொருள் அருளிய அகிலத்திரட்டு என்ன சொல்கிறதென்றால்,.. நாசித் துவாரத்தின் வழியாக நடக்கின்ற, அதாவது இடது துவாரத்தில் நடக்கும் சந்திர கலை, வலது துவாரத்தில் நடக்கும் சூரிய கலை, இரு துவாரங்களிலும் சமமாக நடக்கும் சுழிமுனை ஆகிய மூன்று வகையான சுவாச இயக்கத்தையும் கண்டுணர்ந்து, சூரிய சந்திர கலைகளின் இயக்கங்களைக் கட்டுக்குள் வைத்து, அதைச் சுழுமுனையாக்கி, அதன் வாயிலாக உண்டாகும் உஷ்ணத்தின் மூலம் மூலாதாரத்தில் முடங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்து, மேல் எழுப்பி ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களையும் வெற்றி கண்டு, நிறைவாக சகஸ்ரார தளத்தில் நிலைபெறச் செய்தல் வேண்டும். இதற்குக் கருத்தை ஆக்ஞா சக்கரத்திலுள்ள புருவமத்தியிலும், பார்வையை உச்சி முகட்டிலுள்ள பரமானந்த ஞானப் பெருவெளியாகிய சகஸ்ரார தளத்திலும் வைக்கும் வைராக்கியம் வேண்டும் எனக் கட்டளையிடுகிறது. . மூக்குச் சுழியும் முச்சுளியும் முத்திமுத்தி நோக்குச் சுழியாய் நேர்நில்லு என்மகனே பரமான பட்டணத்தில் பார்வைகொண் டேநாட்டிச் சிரமானது விரித்துச் சிறையே யிருமகனே - அகிலம். . மேற்காணும் இத்தகு நிலைப்பாடும் வாய்ப்பும், இயல்பாகவே தர்ம நெறிமுறைகள் பிறழாமல் பக்தி வைராக்கியத்துடன் இறைவனையே குருவாகக் கொண்டு வாழ்வோருக்கு தாமாகவே கைகூடும். மற்றோர், மனத்தையும், வாழ்க்கை முறையையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு, ஆத்ம ஞான சாதனையில் பரிபக்குவம் பெற்ற குருவிடம் கற்றுத் தேற வேண்டும். . தொடரும்... அய்யா உண்டு.