D Muthu Prakash, Kanchipuram 💐
1.1K views
22 days ago
#Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 21.03.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======= திருநடன வெண்பா – 11. ====================== பாங்கலிய னேதுவினால் பண்டுண்டு செய்ததெல்லாம் மூங்கிக் கலியதனுள் மூடி - மூச்சுவிட்டு ஓங்குவ தோங்கி உறங்குவது தானுறங்கி மூங்கிக் குளிப்பதுநாள் முற்றுதோ . விளக்கம் ========= பாவிக் கலியின் போலித்தனமான மாயசாலச் செய்கைகளினால், பண்டு நாம் உண்டு பண்ணி வைத்தவை எல்லாம், ஆசை என்னும் அவலத்தில் வீழ்ந்து, தம் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகக் கலிமாயைக்குள் முற்றிலுமாக மூழ்கி, மேலும்மேலும் பாவச் செயல்களைச் செய்து, மகிழ்ச்சி அடைந்த மகா பாதகர்களெல்லாம், அவர்கள் செய்த பாவச் செயல்களாலேயே அழுத்தப்பட்டு அழிந்து நரகத்தில் சேரும் நாள் நெருங்கிவிட்டது. . . அகிலம் ======= திருநடன வெண்பா – 12. ====================== இலச்சைகெட்ட பாவி யென்றுவந்தா னன்றுமுதல் நற்சடலங்கள் நல்வகைகள் நாடிழந்து - நாணமுற்றுப் பட்சிமுதல் மாமிருகம் பால்நரிகள் கற்றாவும் அச்சமற்று வாழ்புவியொன் றாகுதோ . விளக்கம் ========= வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே இல்லாத கலி இந்த உலகத்திற்கு என்று வந்ததோ அன்று முதல், நல்லவர்களையும் நன்மை பயக்கும் செயல்களையும் இந்த உலகம் இழந்து விட்டது. அதனால் இயற்கையோடு எப்போது ஒன்றி வாழுகின்ற பச்சி பறவைகளும், பெரிய பெரிய மிருகங்களும், கபடமற்ற நரிகளும், இளங்கன்று பசுக்களும் அச்சத்தால் அதிர்ந்து போயின. அவை யாவும் எதிர்காலத்தில் அச்சமற்று வாழ்வதற்கான தர்மபூமி தோன்றும் நாள் வந்து விட்டது. . . அகிலம் ======== திருநடன வெண்பா – 13. ====================== பொல்லாத் துரங்கள்கொண்ட பேய்ச்செடிகள் தானொழிந்து கல்லாத புல்லர் கருவொழிந்து - எல்லாம் நல்லோராய்ச் சாகாமல்நாளும் நகரொன் றானதுக்குள் சொல்லொன்றாலாள சோதியொன்று தோணுதோ . விளக்கம் ========= தாங்கமுடியாத துயரங்களுக்குக் காரணமாகிய மதிகேடுகளும், அற்பமான பிசாசு புதர்களும் உலகத்தில் இல்லாமல் ஒழிந்து, கல்வி ஞானமே இல்லாமல் மூடச் செயல்களையே முதலீடாக் கொண்டு வாழும் அறிவிலிகளைக் கருவோடு அழித்துவிட்டு, நல்லவர்களாய், உலகிற்கு நலம் பயக்க வாழுவோரெல்லாம், என்றும் சாகா நிலைபெற்று வாழ்வாங்கு வாழுகின்ற தர்மயுக நிலத்தை, தம்முடைய சொல் ஒன்றுக்குள் வைத்தாள சோதி வைகுண்டர் தோன்றும் நாள் வந்துவிட்டது. . . அகிலம் ======== திருநடன வெண்பா – 14. ====================== தாணுமால் வேதன் தற்பொருளாய் முப்பொருளும் ஆணுவமா யொன்றி லடங்குதோ - அஞ்செழுத்தும் ஆனா அரியெழுத்தும் ஆங்கார மூன்றெழுத்தும் ஓநமோ வென்றதுக்குள் ளொடுங்குதோ . விளக்கம் ========= சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய திருநாமங்களுடன் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் மூன்று மூர்த்திகளும், திடமாக ஒன்றாய அமையப்போகிறது. ஆகவே, நமசிவாய என்னும் ஐந்தெழுத்து சிவநாம தோ்திரமும், ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து அரிநாம தோத்திரமும், அ-உ-ம்- என்னும் மூன்றெழுத்தும் ஓம் கார நாத ஒலித் தோத்திரமும், ஆகப் பொருள் மூன்றும் அடக்கம் ஒன்றாய்த் திரண்டு வரும் வைகுண்டத்திற்குள் ஐக்கியமாகப் போகிறது. . . அகிலம் ======= திருநடன வெண்பா – 15. ====================== ஆகாத்த வஸ்துவெல்லாம் அழித்துநர கத்திலிட்டு வாகாய்க் குழிமூட வந்துதோ - சாகாத சனங்கள்பல வஸ்துவையும் தர்மபதி ராச்சியத்தில் இனங்களொன்றாயாள ராசாவொன் றாகுதோ . விளக்கம் ========= தர்ம நெறிகளுக்குக் கேடு விளைவிக்கும் மனிதர்கள் உட்பட அனைத்தையும் வேரோடு அழித்து அவைகளுக்காககவே ஏற்பட்ட நரகத்தில் தள்ளி, வகையாக அந்த நரகப் படுகுழியை மூடுவதற்கு இந்த் தருணம் வாய்த்துள்ளது. இனிமேல் இறப்பில்லாப் பேறு பெறும் மக்களையும், அழிவே இல்லாத பொருட்களையும் தர்மபதியைத் தலைமைத் திருவிடமாகக் கொண்ட தர்ம யுகத்தில் வைத்து, ஏற்றத் தாழ்வுகளே இல்லாமல் ஆட்சி செலுத்துவதற்காக வைகுண்டப் பரம்பொருள் மாமன்னராக எழுந்தருளும் வேளை இதுவே ஆகும். . . தொடரும்... அய்யா உண்டு.