🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
968 views
15 days ago
நிலவாத வீட்டிலே குழந்தைக்கு அமைதி இராது. கடுகடுப்பும் சினமும் வெறுப்பும் பொறாமையும் குடிகொண்ட வீட்டில், குழந்தைகள் அமைதியாக இரா. அன்பு மொழிகள் பேசா. இன்பமாக விளையாடா. அன்பு மறைந்த இடத்தில் பொறாமை நிறையும். அந்தப்பெறாமையைப் போக்காவிட்டால் இன்பம் குடிகொள்ளாது. அந்தப் பொறாமைப் பேயோடு, ஆறு குட்டிப் பேய்களும் சேர்ந்து கூத்தாடி இன்பத்தைப் பாழாக்கி விடும். அன்பை அழித்து ஒழித்துவிடும். ஆணவம், படபடப்பு, ஐயம், பழி, பேராசை, பகை என்ற ஆறு பேய்களும் பொறாமைப் பிசாசோடு குலாவத் தொடங்குமானால், பொன்னகரத்தையும் வென்னரகமாக்கிவிடும்! படபடப்பு என்ற பேயை அடக்கி விரட்டாவிட்டால் சிந்தனை ஓட்டம் செவ்வையாக நடைபெறாது. மனதைப் புட்டு விடும் இந்தப் பேய்! அறிவையும் தக்க ஞானத்தையும் உண்மைகளையும் தொலைவில் விரட்டி விடும். தொல்லை தரும் படபடப்பு இந்தப் பேய்! பழியும் பேராசையும் இரட்டைப் பேய்கள். பேராசைப் பிடித்துக் கொண்டால், பழியும் பற்றிக் கொள்ளும். பழி புகுந்துகொண்டால், பேராசை வளைத்துக் கொள்ளும். மனித மூளையை உருக்கிக் குழம்பாக்கித் தொலைத்து விடும். பேராசை என்ற பேய், எவரையும் நெருங்க விடாது. கொடுமை என்ற வேலி போட்டுவிடும். தனக்கும் பயன்படாத, தானும் பயன்படுத்தாத கோடிக்கணக்கான பொருளைக் குவித்து வைத்துக் குமைந்து சாகும்படி மனிதனைத் தூண்டுகிற கொடிய வனவிலங்கு இந்தப் பேராசை! தன்னைப் போன்ற மனிதனின் உடலில் மிஞ்சும் ஒரு சொட்டு இரத்தத்தையும் உறிஞ்சும் வன்நெஞ்சனாக மனிதனை மாற்றி விடும் மலைப்பாம்பு இந்தப் பேராசை ! இதனோடு இதன் இரட்டைப் பிறவியான பழியும் சேர்ந்து கொண்டால், மனிதனின் பொருளை மட்டுமல்ல, அருளையும் அழித்து விடும். பழியும் பேராசையும் புரிந்துள்ள சதிகளை அறிய வேண்டுமானால், சரிந்த பேரரசுகளின் சரித்திரங்கள் கழறுமே! வெட்டுண்ட தலைகள் விளக்கம் தருமே ! ஆணவமும் ஐயமும் மற்றொரு இரட்டைப் பேய்கள். 😊😊😊 #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #பொழுது போக்கு