D Muthu Prakash, Kanchipuram 💐
414 views
11 hours ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 10.03.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======= மாமோக ஆசையினால் மாசண்டை யாகிவரும் காமோக வெறியால் கனபழிக ளுண்டாகும் மாதாவைப் பிள்ளை வைப்பு நினைத்துநிற்கும் தாதாவை வேலை சந்ததிகள் கொண்டிடுவார் மாடாடு தன்வயிற்றில் மனிதர்போல் தான்பிறக்கும் கோடா னதுபெருத்துக் கொல்வார் சிலபேரை காணிக்கை வேண்டல் கைக்கூலி தான்மீறும் மாணிக்கத் தங்கம் வையிர மிகமறையும் நீணிலத்தில் பேய்கள் நிரந்துமிகக் கோட்டிசெய்யும் மாநிலத்தில் வேளாண்மை மழையில் மிகக்கேடுவரும் பேதையர்கள் பிள்ளை பிறக்கு மதிசயம்போல் கோதையர்கள் கொங்கை கூடாம லேவாழ்வார் கூடப் பிறப்பைக் கொடும்பகைபோ லெண்ணிடுவார் வான முறுமும் மழைகீழ்ச் சொரியாது தான மழியும் சாஸ்திரங்கள் பொய்யாகும் . விளக்கம் ======== பொன், பொருள், மண், பதவி, புகழ் போன்றவற்றில் ஏற்படும் மோகத்தாலும், பேராசையாலும் பெரும் பகைகளும், சண்டைச் சச்சரவுகளும் ஏற்படும். காமவெளியின் காரணமாக அதிக அளவில் பழிபாவங்கள் நடைபெறும். பெற்ற தாயை மகன் தன் ஆசை நாயகியாக்க எண்ணுவான். தந்தையைப் பிள்ளைகள் தம் வேலைகளைச் செய்யும்படி கட்டளையிட்டு வேலை வாங்குவர். . பசுமாட்டின் வயிற்றில் மனிதவடிவில் கன்று பிறக்கும், உலகில் வஞ்சகம் மலிந்துவிடும். அதனால் சிலர் கொலை செய்யப்படுவர். தெய்வங்களின் பெயரை முன்னிலைப்படுத்திக் காணிக்கை வாங்கலும் கையூட்டுப் பெறுதலும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும். . மாணிக்கம், தங்கம், வைரம் ஆகியவை பயன்படுத்தும் வகையில் இல்லாத அளவில் மறைந்து போகும். தொன்மை வாய்ந்த இந்த உலகில் மதிகேடர்களின் பிசாசப் பிதற்றல்கள் பரவலாகி துன்பங்களை உண்டாக்கி ஒற்றுமையைச் சிதைக்கும். . உலகில் மழையின்மையால் பயிரிடும் காலத்தில் பயிரிட முடியாமலும், மழை மிகுதியால் விளைந்த மகசூலைப் பயன்படுத்த முடியாமலும் வேளாண்மை நலிந்து போகும். ஏழுவயதுப் பெண்கள் குழந்தை பெறும் அதிசயம் நடைபெறுவதோடு அறிவிலிகளான தம்பதியருக்கு உலகமே அதிசயிக்கும் வகையிலான அறிவுத் திறனுடைய பிள்ளைகளும் பிறக்கும். . மங்கையர்கள் மார்பு கும்பிக்காமலே வாழ்வார்கள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் ஒருவருக் கொருவர் பெரும் பகைவர்களைப் போல் நினைத்துக் கொணடிருப்பார்கள். வானம் முழங்கும். அதனால் மழைவருவது போல் தோன்றும். ஆனால் மழை பெய்யாது. எவ்வித லாபத்தையும் பெயரையும், புகழையும் விளம்பரத்தையும் எதிர்பார்க்காமல் அதாவது, உள் நோக்கம் இல்லாமல் செய்யப்படும் தருமங்கள் மறைந்து போகும். சாஸ்திரங்கள் கூறுகின்ற நெறிமுறைகளை அனுசரிக்க மறுக்கப்படும். . . அகிலம் ======== ஈனருக்குக் காலம் ரெம்பரெம்ப வுண்டாகும் வீணர் பெருப்பார் வீடதனைக் கெடுப்பார் தாணருட வேதம் தலையழிய விட்டிடுவார் பொய்வேதம் பூமிதனில் பெருத்துமிக வுண்டாகும் மெய்வேதந் தன்னை விரும்பா திகழ்ச்சிசெய்வார் கள்ளர் பெருப்பார் கறியுப்பு மேமலியும் கொள்ளையாய்ச் சம்பை கோடாமுக் கோடியுமாய் நாணி யிறப்பார் நஞ்சித்தின் றேயிறப்பார் கேணிக்குள் ளேயிறப்பார் கீறிக்கொண் டேசாவார் வயிர முழுங்கி மாள்வார் சிலபேர்கள் துயரம் பொறுக்காமல் தோயமதி லேவிழுவார் ஈக்கள் பெருகும் எறும்பு மிகப்பெருகும் காய்கள் பெருகும் கஞ்சா அபின்பெருகும் சன்னாசி நிஷ்டை தவறி யலைவார்கள் ஒன்னாமது சாதி உலைமெழுகு போலலைவார் கட்டழிந்து பெண்கள் கற்பு மிகத்தவறும் சட்ட மழியும் சந்தியம்பல மிடியும் கூட்டங் குலையும் குடும்பம் பகையாகும் நாட்டை யரசாங்கம் நாலுரண்டு மூன்றாகும் கோட்டை யழியும் குச்சிக்கட் டைமதிலாம் சீவசெந் தெல்லாம் தீனில்லாத் தட்டழியும் சூவை பெருக்கும் சூறா வளிமீறும் அக்கினியால் தண்ணீரால் அநேக சீமையழியும் முக்கியமாய் லோகமதில் வாந்தி மிகமீறும் இப்படித்தா னல்லாமல் இன்னு மநேகவளம் செப்பத் தொலையாது செப்புவேன் பின்னுனக்கு நீகேட் டதற்கு நிலையாக இத்தனையும் நான்தேட் டமாக நாடியுன் னோடுரைத்தேன் உன்பேரால் நானும் உள்ளாசை கொண்டிருந்துன் தன்பேரா லென்றனக்குத் தலைச்சிறைதான் மாறுமென்று சொன்னே னுனக்குச் சொல்லுவே னின்னமுமே . விளக்கம் ========= கீழான புத்தியும் இழிவான செயலுமுள்ள ஈனர்களுக்கெல்லாம் மிக மிகச் சுதந்திரமான வாழ்க்கை அமைந்திருக்கும். அதாவது, கெட்டவர்களுக்கு மட்டுமே அது ஏற்ற காலமாக அமையும். பயனற்ற வீணர்கள் அதிகரிப்பர். அவர்கள் பல குடும்பங்களையும், கூட்டமைப்புகளையும் சிதைத்துச் சின்னா பின்னமாக்குவர். சிவ ஞானத்தைப் பெற்றுப் பேரானந்தம் அடைவதற்கான வேதங்கள் யாவையும் இகழ்ந்துரைத்து அவற்றை தலை நிமிராமல் செய்து விடுவர். பொய்யான செய்திகளை வேதம் இதுவே எனவாக்கி உலகமெல்லாம் பறைசாற்றிப் பரப்புவர். எங்கேனும் திருடர்களின் பெருக்கம் அதிகரித்திருக்கும். உப்பின் விலை மலியும். ஒரு விதமான நரகத்தை அனுபவிப்பதற்குரியோர் கோடானகோடி பேர் என்ற அளவில் எண்ணிக்கையில் உயர்வர். அவர்கள் கொள்ளை நோயிலும் நடைமுறை பேதத்தால் நாணமுற்றும், சஞ்சு தின்றும், கிணறுகளில் விழுந்தும், தன்னைத் தானே கத்தியால் கீறிக் கொண்டும் வயிரத்தைப் பொடித்து விழுங்கியும், தம் துயரத்தை பொறுக்க முடியாமல் நீர் நிலைகளில் விழுந்தும் இறப்பார்கள். . ஈக்களும். எறும்புகளும் பெருமளவில் உற்பத்தியாகும். சூது பெருகும். கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்த்துக்கள் பெருகும். சன்னாசிகளெல்லாம் ஆசை மயக்கத்தினால் தவநிலை தவறி அலைவார்கள். உயர்ந்த தன்மைகளை உடைய உத்தமர்களெல்லாம் உலையில் அகப்பட்ட மெழுகைப் போல் மனதாலும் உடலாலும் கரைந்து கொண்டே இருப்பர். . பெண்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கையால் கற்பு நிலை தவறுவர். சட்டதிட்ட ஒழுக்க முறைகளுக்கு அழிவு ஏற்படும். கிராமங்களில் அமைந்திருக்கும் சந்தி அம்பலங்களெல்லாம் பயன்படுத்துவோர் இல்லாமல் அழிந்து போகும். மக்களிடையே உண்டான ஒற்றுமை சிதையும். குடும்பத்திற்குள் பெரும் பகைகள் ஏற்படும். . ஆட்சி என்ற பெயரால் அரசாங்கம், நாட்டைப் பல கூறுகளாகப் பங்கிடும். பெரிய கூட்டத்தையே சிறப்போடு கட்டிக் காப்பாற்றுகின்ற கற்கோட்டை போன்றோரின் அரவணைப்புகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் குச்சிக்கட்டைப் போன்றோர் அமர்தப்படுவர். உயிரினங்களெல்லாம் உணவின்றி நிலை குலையும். வேசித்தனம் அதிகரிக்கும். சூழல் காற்றினால் பேரழிவு ஏற்படும். தீயினாலும். தண்ணீராலும் பல நாடுகள் அழியும். முக்கியமாக உலகில் பெருமளவில் வாந்தி நோய் உண்டாகும். . இப்படி மட்டுமின்றி இன்னும் பலவிதமான காரியங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் இப்போது சொல்லி முடிக்க இயலாது. பின்பு உனக்கு இன்னும் தெளிவாகச் சொல்லுகிறேன். நீ கேட்டதற்காக இத்தனை நிலைப்பாடுகளையும் சொல்லத் தோன்றியதால் சொல்லிவிட்டேன். உன்னிடம் நான் அகத்தளவில் அன்பு கொண்டுள்ளேன். உன் வாயிலாக எனக்கு பல்வேறு துன்பங்கள் மாறும் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இன்னும் சொல்லுவேன். . . தொடரும்... அய்யா உண்டு.