D Muthu Prakash, Kanchipuram 💐
546 views
14 hours ago
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 14.03.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் துவாபர யுக நிறைவின் போது கலைக்கோட்டு மாமுனிவரிடம் தாம் உரையாடியதை சிவபெருமானிடம் மகாவிஷ்ணு எடுத்துரைத்தல். ====================== அகிலம் ======= எண்ணமில்லை யென்று ஈசுரரு மாயவரும் கொண்டாடி ஈசுரரைக் கூறுவா ரச்சுதரும் கெண்டையக்கண் ணீசுரரே கேட்டீரோ யென்றனெண்ணம் திருமால் கலைமுனிக்கு அருளல் ================================ பஞ்சவர்க்கு அஞ்சல்செய்து பார்மீதில் நானிருக்க வஞ்சகநீ சக்கலியன் வந்ததுகண் டேபதறி நடுநடுங்கி நானோட நல்லகலைக் கோட்டுமுனி பொடுபொடென வந்தான் போற வழிதனிலே ஏன்காணும் மாயவரே எய்த்திளைத் தோடுவதேன் கண்காணாப் போறேனென கலைக்கோட்டு டனுரைத்தேன் என்ன விதத்தாலே என்றே யவனிசைய சொன்னதுறு கலியன் சூட்சியினா லென்றவுடன் அப்போ முனியும் அவனேது சொல்லலுற்றான் இப்போநீ ரோடுகிறீர் இவனை யழிப்பதற்கு எப்போ வருவீர் இசையுமென்றான் மாமுனிவன் . விளக்கம் ======== மகாவிஷ்ணுவின் உபாயமாயச் சரீரத்தை, அதாவது, தேவையின் நிமித்தம் காட்சியளிக்கும் உடலைப் பூலோகத்தில் பிறவி செய்த பின்பு சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் இனிமேல் கலியுக அவதாரத்தை எப்படி எடுக்கப்போகிறோம் என்ற கவலையே இல்லை என்று மகிழ்ச்சியோடு இருந்தனர். அப்போது சிவபெருமானிடம் மகாவிஷ்ணு சொல்லுகிறார், கெண்டை மீன் போன்ற கண்களையுடைய சிவபெருமானே ! எனக்கு இத்தகைய யோசனை எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி இப்போது சொல்லுகிறேன் கேளுங்கள். . நான் துவாபர யுகத்தில் கிருஷ்ண அவதாரமாகத் தோன்றி பாண்டவர்கள் தரப்பிலுள்ள நியாயத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்தபோது வஞ்சகம் மிகுந்த கலிநீசன் வருவது கண்டுணர்ந்து அதனால் பதற்றம் அடைந்து, என்னுடைய அவதாரச் சரீரத்தை உகுத்துவிட்டு இயல்பான சுட்சம சரீரம் எடுப்பதற்காக, கலக்கத்தோடு ஓடிக்கொண்டிருந்தேன். . அப்படி நான் போய்க் கொண்டிருந்த பாதையில் மிகவும் வேகமாக வந்து குறுக்கிட்ட கலைக்கோட்டு மாமுனிவன், மாயவா ! தாங்கள் இப்படி மூச்சு வாங்கும் அளவில் இளைத்து இளைத்து ஓடுகிறீர்களே அது எதற்காக என்று கேட்டோன். . அதற்கு நான், யார் கண்ணிலும் படாத இடம் தேடி ஓடுகிறேன் என்று சொன்னேன், கலைக்கோட்டு மாமுனியோ, என்ன காரணத்தால் யார் கண்ணிலும் படாமல் மறையப் போகிறீர்கள், அப்படி மறைய வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது என்று மேலும் வினவினான். . அதற்குப் பதிலளித்த நான், மாமுனியே ! நிகழும் இந்தத் துவாபர யுகம் நிறைவடையும் நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதுத்து கலியுகம் வரவேண்டும் என்பதே விதி. . கலியுகத்திற்கான அரக்கன் குறோணியின் ஆறாவது துண்டத்தின் மூலமாகப் பிறப்பதற்கான நேரமும் நெருங்கிவிட்டது. அந்தக் கலிநிசன் பிறக்கும் போதே, அவனோடு கலிமாயையும் பிறந்துவிடும். . உருவமே இல்லாத அந்த கலிமாயை உலகத்தில் உடலெடுத்த ஒருவரையும் விட்டு வைக்காது. எல்லாருடைய மனதிலும் வாது, சூது, வஞ்சகம், சூழ்ச்சி, பொறாமை, கள்ளம் கபடம், பொய், பித்தலாட்டம், சந்தேகம், பதவிமோகம், புகழ்வெறி போன்ற கெடுமதியை ஏற்படுத்தி விடும். . அகங்காரத்தின் உச்ச நிலையாகிய அந்தக் கலிக்குள் நானும் அகப்பட்டுவிடக்கூடாதே என்று தான் இப்படி ஓடுகிறேன் என்றேன். . அதைக் கேட்ட கலைக்கோட்டு மாமுனிவன், சுவாமி, கலியுகம் வருகிறது என்று இப்போது ஓடுகிறீர்களே, அந்த கலியுகத்தையும், அதில் உண்டாகும் நீசனையும், நீசக் செயல்களையும் தாங்கள்தானே அழித்தாக வேண்டும், அதற்கு எப்போது வருவீர் என்று கேட்டான். . . அகிலம் ======= அப்போ முனியோடு அருளினது நீர்கேளும் மாமுனியே நீகேளு வஞ்சகநீ சக்கலியை நாமுன்னின்று கொல்ல ஞாயமில்லை கேட்டிடுநீ கலியனுட கண்ணு கண்டால் பவஞ்சூடும் திலிய அவனுயிரைச் செயிக்கயெவ ரால்முடியும் முன்னின்று கொல்ல மூவரா லுமரிது பின்னின் றவனவனால் பேசாதே மாழவைப்பேன் வல்லமையுங் காட்டேன் மாநீசன் கண்ணின்முன்னே உற்பனமுங் கொடேன் ஒன்றறியா நின்றிடுவேன் வந்தேனெனச் சொல்வார் வரவில்லை யென்றிடுவார் என்றன்பே ரோகாணும் யாரோஎனச் சொல்வார் இதோவந்தா னென்பார் இவனில்லை யென்றிடுவார் அதோவந்தா னென்பார் அவனில்லை யென்றிடுவார் இப்படியே சூட்சமொன்று எடுப்போம்நாம் மாமுனியே . விளக்கம் ======== கலைக்கோட்டு மாமுனிவன் என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் அந்த முனிவனிடம் என்ன சொன்னென் என்பதையும் இப்போது விளக்கமாகச் சொல்லுகிறேன் கேளுங்கள். . மாமுனியே ! வர இருப்பது வஞ்சக நீசக் கலி, அந்தக் கபடமான கலியை நான் மட்டும் முதன்மையாக நின்று அழிப்பதற்கான நியாயமில்லை. கலியனுடைய கண்களில் எது பட்டாலும், அதற்கு அக்கணமே பாவம் பற்றிக் கொள்ளும். . தில்லு முல்லுகளைக் கையாளுவதற்கென்றே தோன்றும் கலியை எவரால் வெல்ல முடியும். அபத்தமான அந்தக் கலியை நேருக்கு நேர் நின்று சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளாலும் அழிக்க முடியாது. . ஆகையால் அந்தக் கலி அரக்கன் எம்மை யாரென்று இனங்காண இயலாத முறையில் வருவேன். கபடக் கலியனோ. என்னைச் சாதாரண மனிதன்தானே என்று நினைத்து அன்றொருகால் அவன் எனக்குச் செய்து தந்துள்ள சத்தியத்தை மறந்து எனக்கு இடுக்கண் பல செய்வான். பிறகு என்னுடைய நடுத்தீர்ப்பின்பொது எதுவுமே எம்மிடம் பேசமுடியாதவனாக்கி, மீளா நரகத்தில் வனாலேயே அவனை மூழ்கச் செய்வேன். . என்னுடைய வல்லமைகள் எதையுமே அந்தக் கலி நீசனிடம் காட்ட மாட்டேன். கலியனின் கண்ணெதிரே நில்லாமலே நின்று அந்தக் கலியனை அழிப்பேன். அவன் பரிந்துகொள்ளும் அளவில் எவ்விதமான அற்புதங்களையும் செய்யமாட்டேன். என்னுடைய இயல்பான தோற்றத்தையோ, உண்மையான நிலைப் பாடுகளையோ கலிநீசன் கண்டுகொள்ளும்படி காட்சி கொடுக்க மாட்டேன். எதுவுமே தெரியாதவனைப்போல் அவனுடைய கண்ணுக்கும், கருத்துக்கும் காட்சியளிப்பேன். . என்னுடைய கலியுக அவதார வருகையைப் பற்றிச் சிலர், கலிக்கு அவதாரம் வந்துவிட்டது என்பர், பலர் இன்னும் வரவில்லை என்பர். என்னுடைய பெயரை விடுத்து, சிலர் யாருடைய பெயரையோ என் பெயராக நினைத்துச் சொல்வர். . இதோ இவர் தான் கலியை முடிக்க வந்த சாமி என்பர். அடுத்த கணமே, இல்லை இல்லை இவர் சாமி இல்லை என்பர். அதோ அவதார நாயகன் வந்துவிட்டார் என்று ஆராதிப்பாரகள். மறு நொடியே அப்படி இல்லை அவர் மனிதன் என்பார்கள். இப்படி ஒருவரும் என்னை முழுமையாக உணர்ந்து கொள்ளமுடியாதபடி சூட்சமானதோர் அவதாரத்தை எடுத்துத்தான் கலியுகத்திற்கு வருவேன். . . தொடரும்... அய்யா உண்டு.