இறை நம்பிக்கையாளர்களுக்கு
இறைவன் கூறும் அழகிய ஆறுதல் வார்த்தைகள்..!
தனிமையில் இருக்கும் போது!
நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான்
[அல்குர்ஆன் 57 : 4]
சோதிக்கப் படுவதாக உணரும் போது!
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை
[அல்குர்ஆன் 2 : 286]
பொறுமையை இழக்கும் போது!
பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்
[அல்குர்ஆன் 39 : 10]
கைவிடப்பட்டதாக உணரும் போது!
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் உம்மை வெறுக்கவுமில்லை.
[அல்குர்ஆன் 93:3]
உள ரீதியாக உள்ளம் சோர்வடையும் போது,!
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
[அல்குர்ஆன் 94 : 6]
எனக்கென எதுவும் இல்லை என்று என்னும் போது!
உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு உயர் பதவிகளைக் கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
[அல்குர்ஆன் 93 : 5]
கவலையில் இருக்கும் போது!
கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்
[அல்குர்ஆன் 9 : 40]
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்