அண்ணே! இது பிளாக் மெயிலா? சர்வாதிகாரமா?
"வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு."
அப்படியானால்-
"எமது திறமையான ஊழலற்ற ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்" என்ற உங்களுடைய "காலங்களைக் கடந்த" வசனம் பொய்யாகிவிட்டதே!
இல்லை - தெரியாமல்தான் கேட்கிறோம், மேற்கண்ட வசனம் உண்மையாக இருந்தால், "தோற்றால் பதவி பறிப்பு" என்ற எச்சரிக்கை எதற்கு? உங்களின் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால் உங்களை மக்கள் எப்படி நம்புவார்கள்?
"சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும்" என்று சொல்லாடல் ஒன்று உண்டு. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, இப்போது உங்களுடைய செயலாளர்களின் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது துரதிருஷ்டம்!
"என்னத்த" கன்னய்யா:
வேறே என்னத்தைச் சொல்றது?
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு