திரைபாரதி
849 views • 2 months ago
எட்டப்பர்களும் எடப்பாடிகளும்...
அதிமுகவில் MGR மற்றும் ஜெ விசுவாசிகளுக்கு இடமில்லை!
எடப்பாடி தன்னை முன்னிலைப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் எந்த ஓர் அரசியல்வாதியும் செய்யக்கூடியதுதான். ஆனால், கடந்துவந்த பாலத்தை அடித்து நொறுக்கும் வேலையை அவர் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக செய்துகொண்டிருக்கிறார். அதற்குத் தேவையான தொண்டர் பலம் அவருக்கு நிச்சயமாக இல்லை என்ற நிலையில் இது அவர் தனது அடிகளை அளந்து வைக்கத் தவறிவிட்டார் என்பதைக் காட்டுகிறது.
இந்த மேற்கோளைச் சுட்டிக்காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒரு சட்டசபைக்கூட்டத்தில் ""Your days are numbered" என்று அண்ணாவை எதிர்த்து TN அனந்தநாயகி முழக்கமிட்டார். இது ஷேக்ஸ்பியரிடம் கடன் வாங்கிய வசனமாகும். அண்ணா சற்றும் இடைவெளி கொடுக்காமல் "My steps are measured"என பதிலளித்தார். அதுவும் ஷேக்ஸ்பியரின் வாசகம் என்பதுதான் ஹைலைட்!
ஆனால், "கம்ப ராமாயாணத்தை எழுதிய சேக்கிழார்" என்று எடப்பாடி திருவாய் மலர்ந்தருளியது தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு செய்தி. இதற்கு "எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்" என திரைப்படம் ஒன்றில் வந்த குவிஸ் புரோகிராம் காட்சி ஒன்றில் விவேக் போட்டியாளரிடம் கேட்ட கேள்வி மேலானது. காமராஜர் என்ன இலக்கியம் பேசியா பெருந்தலைவர் ஆனார்? எடப்பாடிக்கு ஏன் இந்த விபரீத ஆசை?
விஷயத்திற்கு வருவோம். ஜெ விசுவாசிகள் என்று அழைக்கப் பட்டவர்களில் மூவர் முக்கியமானவர்கள். 1. சசிகலா, 2. செங்கோட்டையன் & 3. OPS. "Last but not least" என ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. பதவி வந்தால் பவிசு தானாகவே வந்துவிடும் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், முதலமைச்சர் ஆன பின்பும் ஜெ அமர்ந்த நாற்காலியில் அமர வேண்டும் என ஆசைப்படாமல் இருந்தவர் OPS.
இந்த மூவரில் யாராவது ஒருவரையாவது தன்னுடன் தக்கவைத்துக் கொள்வது தனது அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என்ற அடிப்படை அரசியல் ஞானம்கூட இல்லாமல் எடப்பாடி செயல்பட்டார். எடப்பாடி உருண்டு புரண்டு ஆட்சிக்கு வந்தது ஓர் அரசியல் விபத்து. தமிழக அரசியல் வரலாற்றின் தீராத ஒரு களங்கம்.
அதாவது MGR மற்றும் ஜெ அவர்களை மீறிய சக்தியாக தன்னை நிலைநிறுத்த வேண்டும் என திட்டமிட்டு எடப்பாடியாகிய அந்த சாணவாக்கியர் (இது சாணக்கியர் என்பதை குறிக்க வைரமுத்து குறிப்பிட்ட வட்டார வழக்கு) செயல்பட்டார். கொங்கு மண்டலத்தின் தன்னிகரற்ற தலைவர் என தன்னைத்தானே (டீசன்டான பாலிடீஷியன் செங்கோட்டையனை மட்டம் தட்டி) மறைமுகமாக பிரகடனப் படுத்திக்கொண்டு கொங்கு வாழ் தமிழினத்திற்கே இழுக்கைத் தேடித் தந்தவர் எடப்பாடி.
நெல்மணிகளை புறந்தள்ளி நெற்பதர்கள் நீண்டகாலம் குதிருக்குள் குளிர்காய முடியாது.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது. எட்டப்பர்களும் எடப்பாடிகளும் ஒரு நாளும் தலை நிமிர்ந்து நிற்க முடியாது! அவர்களால் அணையாத தீபங்களை அணைக்க முடியாது. ஒரு வேளை, ஒருவேளை... சூது வென்றால் சோதனைக்கு முடிவில்லை - (அதாவது, அதிமுகவின் சோதனைகளுக்கு)!
பி.கு.
எடப்பாடி தனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட அரசியல் பாதை எது என்பதை "கலைஞரின் பாதையில் எடப்பாடி!" என்ற எமது முந்தைய பதிவினைப் படித்தால் புலனாகும்.
படித்துவிட்டீர்களா
திரைபாரதியின்
"திசைகெட்ட பயணங்கள்"
@ அமேசான் KDP?
#அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
9 likes
16 shares