✍️ கதைகள்
60K Posts • 392M views
திரைபாரதி
849 views 2 months ago
எட்டப்பர்களும் எடப்பாடிகளும்... அதிமுகவில் MGR மற்றும் ஜெ விசுவாசிகளுக்கு இடமில்லை! எடப்பாடி தன்னை முன்னிலைப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் எந்த ஓர் அரசியல்வாதியும் செய்யக்கூடியதுதான். ஆனால், கடந்துவந்த பாலத்தை அடித்து நொறுக்கும் வேலையை அவர் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக செய்துகொண்டிருக்கிறார். அதற்குத் தேவையான தொண்டர் பலம் அவருக்கு நிச்சயமாக இல்லை என்ற நிலையில் இது அவர் தனது அடிகளை அளந்து வைக்கத் தவறிவிட்டார் என்பதைக் காட்டுகிறது. இந்த மேற்கோளைச் சுட்டிக்காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒரு சட்டசபைக்கூட்டத்தில் ""Your days are numbered" என்று அண்ணாவை எதிர்த்து TN அனந்தநாயகி முழக்கமிட்டார். இது ஷேக்ஸ்பியரிடம் கடன் வாங்கிய வசனமாகும். அண்ணா சற்றும் இடைவெளி கொடுக்காமல் "My steps are measured"என பதிலளித்தார். அதுவும் ஷேக்ஸ்பியரின் வாசகம் என்பதுதான் ஹைலைட்! ஆனால், "கம்ப ராமாயாணத்தை எழுதிய சேக்கிழார்" என்று எடப்பாடி திருவாய் மலர்ந்தருளியது தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு செய்தி. இதற்கு "எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்" என திரைப்படம் ஒன்றில் வந்த குவிஸ் புரோகிராம் காட்சி ஒன்றில் விவேக் போட்டியாளரிடம் கேட்ட கேள்வி மேலானது. காமராஜர் என்ன இலக்கியம் பேசியா பெருந்தலைவர் ஆனார்? எடப்பாடிக்கு ஏன் இந்த விபரீத ஆசை? விஷயத்திற்கு வருவோம். ஜெ விசுவாசிகள் என்று அழைக்கப் பட்டவர்களில் மூவர் முக்கியமானவர்கள். 1. சசிகலா, 2. செங்கோட்டையன் & 3. OPS. "Last but not least" என ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. பதவி வந்தால் பவிசு தானாகவே வந்துவிடும் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், முதலமைச்சர் ஆன பின்பும் ஜெ அமர்ந்த நாற்காலியில் அமர வேண்டும் என ஆசைப்படாமல் இருந்தவர் OPS. இந்த மூவரில் யாராவது ஒருவரையாவது தன்னுடன் தக்கவைத்துக் கொள்வது தனது அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என்ற அடிப்படை அரசியல் ஞானம்கூட இல்லாமல் எடப்பாடி செயல்பட்டார். எடப்பாடி உருண்டு புரண்டு ஆட்சிக்கு வந்தது ஓர் அரசியல் விபத்து. தமிழக அரசியல் வரலாற்றின் தீராத ஒரு களங்கம். அதாவது MGR மற்றும் ஜெ அவர்களை மீறிய சக்தியாக தன்னை நிலைநிறுத்த வேண்டும் என திட்டமிட்டு எடப்பாடியாகிய அந்த சாணவாக்கியர் (இது சாணக்கியர் என்பதை குறிக்க வைரமுத்து குறிப்பிட்ட வட்டார வழக்கு) செயல்பட்டார். கொங்கு மண்டலத்தின் தன்னிகரற்ற தலைவர் என தன்னைத்தானே (டீசன்டான பாலிடீஷியன் செங்கோட்டையனை மட்டம் தட்டி) மறைமுகமாக பிரகடனப் படுத்திக்கொண்டு கொங்கு வாழ் தமிழினத்திற்கே இழுக்கைத் தேடித் தந்தவர் எடப்பாடி. நெல்மணிகளை புறந்தள்ளி நெற்பதர்கள் நீண்டகாலம் குதிருக்குள் குளிர்காய முடியாது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது. எட்டப்பர்களும் எடப்பாடிகளும் ஒரு நாளும் தலை நிமிர்ந்து நிற்க முடியாது! அவர்களால் அணையாத தீபங்களை அணைக்க முடியாது. ஒரு வேளை, ஒருவேளை... சூது வென்றால் சோதனைக்கு முடிவில்லை - (அதாவது, அதிமுகவின் சோதனைகளுக்கு)! பி.கு. எடப்பாடி தனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட அரசியல் பாதை எது என்பதை "கலைஞரின் பாதையில் எடப்பாடி!" என்ற எமது முந்தைய பதிவினைப் படித்தால் புலனாகும். படித்துவிட்டீர்களா திரைபாரதியின் "திசைகெட்ட பயணங்கள்" @ அமேசான் KDP? #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
9 likes
16 shares
திரைபாரதி
809 views 2 months ago
Fire in the Belly Without Fear in Mind If you are determined to achieve something, you must start now—as if there is no tomorrow and no time to waste. Only then will your words, “I have no time,” truly carry meaning. In such a state, paradoxically, you actually have enough time — time to think, to act, to create, to accomplish— everything except perhaps to get married, even you are retired! The truth is, there is time for everything in life, provided you precognize when the right time is. Otherwise, every initiative turns into an untimely or inauspicious one. Yet, to awaken your mind and set it ablaze with purpose, the excuse of “no time” should never exist. Saying, “I’ll do it tomorrow,” is the surest way to bury your dreams under the dust of procrastination. That tomorrow never comes. The difference between “no time” and “I’ll do it tomorrow” defines the two sides of the same coin — time management. Knowing which side you are playing with decides the worth of your time. And then comes the real spark — the fire in the belly. It is that burning determination that makes you restless until you act. It is what transforms thought into motion and passion into performance. Fire in the belly does not ask for free hours on the clock — it creates them. It redefines time, bending it to one’s will. But that fire alone is not enough unless it burns free of fear. Fear clouds vision; fire clears it. Fear delays; fire drives. A fearless mind ignited by passion can turn any limitation into a ladder. That is why success belongs not to the intelligent or the privileged, but to those who combine fire in the belly with freedom from fear. Ultimately, the formula for achievement is simple: think as if there’s no tomorrow, act as if there’s no fear, and live as if every second counts. When you work with such intensity, you don’t just manage time — you master it. "You are the Brand" https://www.amazon.in/dp #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு /B089F5TT1P
14 likes
13 shares
திரைபாரதி
1K views 2 months ago
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? செய்தி: பொன்முடிக்கு மீண்டும் மணிமுடி! முந்நாள் அமைச்சர் பொன்முடி முந்தாநாள் பல்வேறு தளங்களில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் உள்ளன: வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழந்தார், இதனால் அமைச்சர் பதவி பறிபோனது. மேலும், சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் சென்ற ஏப்ரல் மாதம் அவர் நீக்கப்பட்டார்.  அதாவது குறிப்பாக, அவர் பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க முறையில் பேசியது தமிழகத்தில் பெரும் பிரச்சினையாக மாறியது. அவரது பேச்சுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பதவி நீக்கக் கோரியும் புகார்கள் அளிக்கப்பட்டன. அதன் காரணமாக, அவர் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது மீண்டும் திமுக துணைப் பொதுச் செயலாளராக பொன்முடி அவர்களை நியமித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் மக்களின் மனதில் இயற்கையாகவே பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இதற்கு முதலிலேயே பதவியில் இருந்து நீக்காமலேயே இருந்திருக்கலாமே என்று கேட்கிறீர்களா? ஒருவேளை பொன்முடி மக்களுக்காக சிலபல தன்னலமற்ற சேவைகளை செய்து இந்த இடைப்பட்ட காலத்தில் உத்தமராகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழவும் ஒரு வாய்ப்பு உள்ளது. என்னத்தைச் சொல்றது? அவர் பேசிய பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த மக்களை அப்போதைய சூழ்நிலையில் சமாதானப்படுத்தும் நோக்கிலேயே அந்த பதவி பறிப்பு நாடகம் நடந்தது என இப்போது வெட்டவெளிச்சம் ஆனது! இதுதான் ஆனானப்பட்ட திராவிட மாடல் என்னதான் சொல்லுங்கள், எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் எடுத்த முடிவுகளில் இருந்து ஜெயலலிதா எப்போதும் பின்வாங்கியதில்லை என்பது நினைவுக்கு வருகிறது. அப்படியே ஒருவேளை ஏதாவது நடந்திருந்தாலும், அது மன்னித்துவிட்ட நடவடிக்கையாக இருக்குமே தவிர, அழுத்தத்திற்கு அடிபணிந்த நடவடிக்கையாக இருந்திருக்காது! கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? "திசைகெட்ட பயணங்கள்" https://www.amazon.in/dp/B0CH12RHGR #அரசியல் #✍️ கதைகள் #✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு
6 likes
3 shares